Jump to content

அனகொண்டா பாம்புடன் வேடிக்கை - வந்த வினை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீரசாகசம் புரிவதாக நினைத்து, வீடியோ போடுவதால் பல வித பிரச்சினைகள் வரும், அதில் இது ஒருவகை. 

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வழியில் ஒரு அனகொண்டா பாம்பு எதிர்பட்டது. அதுபாட்டுக்கு இரை தேடி போய் கொண்டிருந்தது.

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் அனகோண்டா பாம்பை பார்த்து பீதியில் ஓட்டம் எடுக்காமல் அதைப் பிடிக்க முயன்று இருக்கிறார் இந்த புத்திசாலி கணவர். 

வாலை பிடித்து இழுத்த கணவரின் வினோதமான செயலை கண்ட அவரின் மனைவி அனகோண்டா பாம்பை விட்டுவிடும் படி அலறி குதிக்கும் ஸ்மார்ட்போன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. இதனால் நடந்த எதிர்பாராத விபரீதம் என்ன தெரியுமா?

அனகோண்டா வகை பாம்பு 

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர்

அனகோண்டா வகை பாம்புகளை தெரியாதவர்களே இருக்க முடியாது, நிறையத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் பார்க்க விரும்பினால் நீங்கள் இவற்றை தெற்கு அமெரிக்க பகுதிகளில் அதிகளவில் பார்க்கலாம். மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் வகையைச் சேர்ந்த இந்த பாம்புகள் பெரிய உருவத்துடன், வேட்டையாடும் திறன் கொண்டது.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர் நீர் நிலைகளிலேயே அதிகளவில் வாழும் இந்த இராட்சச பாம்பு வகை தன் இரையைப் பிடியில் இறுக்கி பிடித்து, கொன்று அதை உட்கொண்டு தரையிலும் வாழ்கிறது. இத்தகைய ஆபத்தான அனகோண்டா பாம்பை பார்த்ததும் விலகிச் செல்லாமல் படகிலிருந்தபடி அதைக் கையில் பிடித்து இழுக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது

17 அடி நீளமுள்ள அனகோண்டா 

இவர்களுக்கு நடந்த விபரீதம்

இவர்கள் படகில் சென்று கொண்டிருக்கும் போழுது, இவர்களின் கண்ணில் சுமார் 17 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பு தென்பட்டுள்ளது. சிர்லேய் ஒலிவிரியாவின் கணவர் பெட்டினோ போர்க்ஸ் அதன் வாலைப் பிடித்து இழுத்துள்ளார். இதை பார்த்த மனைவி பயத்தில் கத்தி கூக்குரலிட்டு அலறி இருக்கிறார். அனகோண்டாவைப் கணவர் இறுக்கிப் பிடிக்க, பாம்பு தப்பிக்க முயன்ற போது படகு தடுமாறியது. இதனால் கணவர் தனது பிடியை விட்டுக்கொடுத்திருக்கிறார்.

இவர்களுக்கு நடந்த விபரீதம் 

போர்க்ஸின் மனைவி ஒலிவிரியா பாம்பை விட்டுவிடுமாறு வீடியோவில் கதறுகிறார். இதனால் ஒரு கட்டத்தில் போர்க்ஸ் தனது பிடியை விட்டுவிட, அனகோண்டா நழுவி கரை நோக்கி நீருக்குள் சென்றுவிடுகிறது. 

இதில் விபரீதம் என்னவென்றால், சாதுவாகச் சுற்றித் திரிந்த பாம்பைப் பிடிக்க முயன்ற குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா 600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பீலாவுக்கு, விடியோவை போட்டு, அதிகாரிகளிடம் மாட்டி, $2,400 தெண்டப்பணம் கட்டி, பாம்பே கடித்தது போல அரண்டு போய் இருக்கிறார்கள் மூவரும்.


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.