Jump to content

சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பிரபல சட்டத்தரணி திருமதி.மனோன்மணி சதாசிவம், சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமதி.மனோன்மணி சதாசிவம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் ஏன் பதவி விலகவேண்டும் என்ற தனது நியாயப்பாட்டை திருமதி.மனோன்மணி சதாசிவம் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:

ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும், பதவிகளுக்கும் விலை போகும், சொந்த இனத்தையே சேரந்த துரோகிகளால்தொடர்ந்தும் துரோகத்துககு உள்ளாகின்றோம்.

நாங்கள் இந்த துரோகிகளின் ஈனத்தனமான செயல்களால் இனியும் தொடர்ந்து பாதிக்கப்பட முடியாது. 2009 வரை தமிழீழத்தில் இடம்பெற்ற மாபெரும் தியாகங்களுக்கு பின்னரும் இடம்பெறும் இந்த துரோக செயல்களின் தொடர்ச்சியினால் எங்களுடைய சகிப்புத்தன்மை எல்லை கடந்து விட்டது.

ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் தனது சொந்த கருத்தை தவிர்த்து, மக்களின் குரலாக, மக்களின் கருத்தை பொது அரங்குகளில் தெரிவிக்கும் பக்குவம் உடையவராக இருக்க வேண்டும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுமந்திரன் தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துக்கள் தமிழர்களாகிய எங்கள் மனங்களை நோகடிக்கும் விதமாக அமைகின்றன.

அவரிடத்தில் கொஞ்சமாவது கண்ணியம் எஞ்சி இருந்தால், அவர்உடனடியாக தானாக முன்வந்து பதவி விலகவேண்டும். அவர் தனது சொந்த விருப்பப்படி அதை செய்யத் தவறினால், தமிழ் மக்களாகிய எங்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

மக்களாகிய நாங்கள் சுமந்திரனின் கருத்துச் சுதந்திரத்தையும், அவர் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் மதிக்கும் அதேவேளை, அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தனது சொந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த அவர்அனுமதிக்கப்படக்கூடாது என்பதை நாம் தெளிவாகக்கூற விரும்புகிறோம்.

அவரிடம் துணிவு இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சுதந்திரமான ஒரு கட்சியை அமைத்து, தமதுசொந்த கருத்தை தாராளமாக போதித்து வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் குளிர்காய்வதை நிறுத்த வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறு என்பது எப்போதும் விடுதலைப் புலிகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, விடுதலைப் புலிகளின் முயற்சியில் 2001 ஆண்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி, இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து உருவாக்கபட்டது.

அப்போதைய TULF பொதுச்செயலாளர் சம்பந்தன், "ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு (புலிகள்) முழு அரசியல் ஆதரவையும் அளிக்க வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் ஒரே பதாதையின் கீழ் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்து விட்டது" என்று அறிவித்திருந்தார்.

2006ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடட் அறிக்கை ஒன்றில், 'இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடையே புலிகளுக்கு கிடைத்த பெரும் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகளாக நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் ஆணையையே மக்கள் தேர்தல் மூலமாகவும் கூட்டமைப்புக்கு வாக்களித்ததனூடாகவும் நிரூபித்துள்ளனர்" என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், "இலங்கை நாடாளுமன்றத்தில், வடக்கு - கிழக்கில் உள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததாகவும், புலிகள் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகளை மக்கள் இன்றும் ஆதரிப்பதாகவும், அடங்கிக்கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பிய பிரபாகரன் தமிழர் வரலாற்றில் சிறந்த தலைவர்" எனவும் தெரிவித்துள்ளார்.

"புலிகளின் பங்களிப்புடன் எங்கள் மக்களின் சக்தியாக உருவான தமிழ் தேசிய கூட்டணியை யாராலும் உடைக்கமுடியாது" என்று 2019 ஆம் ஆண்டில் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளின் பங்களிப்பு குறித்து பேசிய போது தெரிவித்திருந்தார்.

2010இல் சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்படாமல் தேசிய பட்டியல் மூலமாகதான் முதன் முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகினார். கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியோ அல்லது அதன் ஆரம்பகால வரலாற்றைப் பற்றயோ அறிந்திருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்ளும் நாங்கள் அவரை அவ்வரலாற்றை எங்காவது தேடிக் கற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.

சுமந்திரன் உண்மையில் ஒரு மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை அவர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொதுநலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை.

உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்டு பணத்துக்காக வழக்காடும் ஒரு சராசரி அப்புக்காத்தாகவே வாழ்ந்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை.

ஒரு வழக்கறிஞருக்கு உரிய அடிப்படை ஒழுக்க விதிமுறைகளை கூட சுமந்திரன் என்றும் பின்பற்றியதில்லை.

இதற்கு சிறந்த உதாரணமாக 2006 இல் வடக்கு கிழக்கை இலங்கை அரசு பிரித்ததை எதிர்த்து டெலோ சார்பாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவாளராக நியமிக்கப்பட்ட, அந்த வழக்கை மனுதாரர்களின் அனுமதியின்றியே மீள பெற்றுக்கொண்டார். இது பாரதூரமான குற்றம் மட்டுமன்றி, அவர் ஒரு சட்டத்தரணியாக கடமையாற்ற தகுதியற்றவர் என்பதையும் நிரூபிக்கின்றது.

ஒரு வழக்கறிஞர், தனக்கு பரிச்சயம் இல்லாத துறையில் தன்னை நிபுணர் என பாசாங்கு செய்வதும், எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் சட்ட ஆலோசனைகளை வழங்க முயற்சிப்பதும் கீழ்தரமான ஒரு தொழில்சார்ந்த தந்திரமாகும். இவ்வாறாகவே, சுமந்திரன் தன்னை ஒரு மனித உரிமை வழக்கறிஞராகக் காட்டி, சர்வதேச சட்டம் தொடர்பான விடயங்களில் தவறான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் கேவலமான செயலை செய்து வருகிறார்.

எடுத்துக்காட்டாக , வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2015 நவம்பரில் நடைபெற்ற ஒரு விழாவில் சுமந்திரன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் ஊடகவியலாளரிடம், "1990களில் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை கட்டாயமாக வெளியேற்றியது ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கை ( Ethnic Cleansing )" என்று தெரிவித்தது மட்டுமன்றி, அதை தமிழர்கள் காலம் காலமாக அனுபவித்துவரும் இனப்படுகொலையுடன் ஒப்பிட்டும் பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்து,அவர் சரவ்தேச சட்டம் பற்றி அறியாதவர் மட்டுமல்ல அவருக்கு வரலாறு குறித்த அறிவும் மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கின்றது.

முதலாவதாக, சுமந்திரன், இன சுத்திகரிப்பு என்பதன் சட்டரீதியான வரைவிலக்கணத்தை அவர் புரிந்து கொளள் வேண்டும். இரண்டாவதாக, இன சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கான வித்தியாசத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

யூகோசிலாவியாவில், நடைபெற்ற சர்வதேச மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கபட்ட ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஆணையம், அதன் இடைக்கால அறிக்கையில் (S/25274) இனச்சுத்திகரிப்பு என்றால் "மரபுவழியாக வாழ்ந்த இடத்திலிருந்து ஒரு இன மக்களை பலத்தை பயன்படுத்தி கட்டாயமாக வெளியேற்றுதல் " என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கையில் (S/1994/674;) " ஏதாவது ஒரு இனத்தை அல்லது ஒரு மதத்தை சேர்ந்தவர்களால், இன்னொரு இனத்தை அல்லது மதத்தை சேரந்த மக்களை, குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் இருந்து, வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் நிரந்தரமாக வெளியேற்றுதற்காக, திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட கொள்கையே இனசுத்திகரிப்பு" என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முஸ்லிம்களை முழுமையாக அகற்றி தமிழிருக்கு மட்டுமான தமிழீழத்தை உருவாக்கும் எந்தவிதமான "திட்டமோ" அல்லது ஒரு கொள்கையோ " புலிகளிடம் என்றும் இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

சிங்கள ஆட்சியாளரின் சதியால், முஸ்லீம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த, ஜிஹாத் என்ற ஆயுத குழு உருவாக்கபட்டது, மதக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உளள் சில முஸ்லீம் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு நடைபெறவிருந்த பெரும் மதக்கலவரத்தை தடுப்பதற்காவே முஸ்லீம்கள் தற்காலிகமாக வெளியேற்றபட்டனர்.

அந்த சூழ்நிலையில், அவ்வாறான ஒரு தந்திரோபாயமான முடிவை எடுக்கபுலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.இந்த சமயோசித முடிவால் பெரும்தொகையான உயிர் மற்றும் உடமை சேதங்கள் தவிர்க்கப்பட்டன என்பதை அறிவாளிகள் மட்டுமே உணர்வார்கள்.

டாக்டர் ஞான சங்கரலிங்கம் தனது கட்டுரையில் சரியாக சுட்டிக்காட்டியபடி, முஸ்லீம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கவோ அல்லது பயன்படுத்தவோ புலிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவை யுத்த நிறுத்தத்தின்போது திரும்பி வந்த முஸ்லீம் உரிமையாளர்களிடம் புலிகளால் பாதுகாப்பாக திருப்பி கையளிக்கபட்டன.

13 ஏப்ரல் 2002 அன்று, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் ஒரு கூட்டத்தை நடத்தினர். இந்த சந்திப்பு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உடன்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, உத்துமலேபே, மொஹிதீன் அப்துல் கேடர், பஸீர் சேகு தாவூத், மசூர் நூர்தீன் மற்றும் மசூர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலிகளின் சார்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைத் தலைவர் சு.ப தமிழ்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் மாவட்டத் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக நான் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட வேண்டும். அவர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் " என்று குறிப்பிடது மட்டுமல்லமல், வடக்கில் முஸ்லீம்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் "என்று உறுதியளித்தனர்.

இது மட்டுமன்றி,"தமிழ் தாயகமும் வட- கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களும் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது" என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் தலைவர் ஹக்கீம், முஸ்லீம் மக்கள் புலிகளை மன்னிக்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

இது புலிகள் எந்த விதத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும், அவர்களின் பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், தனது சொந்த சுயநல காரணங்களுக்காக பழைய காயங்களை கிளறி, தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே மீண்டும் வெறுப்பைத் தூண்டுவது சுமந்திரனின் கடைகெட்ட செயற்பாடு அல்லவா?

சுமந்திரனுக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய இம்மியளவு அறிவு இருந்திருந்தால் கூட, 1990இல் இடம்பெற்ற முஸ்லீம் வெளியேற்றம் எந்த வகையிலும் "இன சுத்திகரிப்பு" என்ற வரையறையில் அடங்காது என்பதை அவர் உணர்ந்திருப்பார். மேலும் முஸ்லிம் தலைவர்கள் கூட நடந்தவற்றை மறந்து முன்னேற முடிவுசெய்துளள் போதும், சுமந்திரன் முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக, அவர்களை தவறாக வழிநடத்த முயல்வது மிகவும் அருவருப்பானது.

2015 டிசம்பர்இல் சுமந்திரன் ஜெனீவாவுக்குச் சென்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, "இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் அரசபடைகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகளின்படியே நடந்துகொண்டன என்றும் அங்கு தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை” என்றும் தெரிவித்ததாக டாக்டர் எஸ். ஐ. கீதபொன்கலன் Colombotelgraph பத்திரிகையில் எழுதியுள்ளார்.

இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலைதான் என்பதை முதல்முதலாக, டிசம்பர் 1997; இல் லண்டனில் இயங்கும் தமிழர் தகவல் மையம் பிரகடனம் செய்திருந்தது. Dr Lutz Oette என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தற்போது SOAS University of London இல் விரிவுரையாற்றும், பிரபல சட்ட வல்லுநர்; மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையிலேயே தமிழர் தகவல் மையம் “The International Crime of Genocide: The case of the Tamil People in Sri Lanka” என்ற இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதுமட்டுமின்றி 2009க்கு பின்னர் Professor Francis A Boyle, Professor Ramu Manivannan, Professor M Sornaraja, Bruce Fei, LeeRhiannon, DeirdreMcConell Permanent Peoples Tribunal Stephen Rapp போன்ற உலகின் தலை சிறந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் கிடைத்த ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து, தமது ஆய்வறிக்கைகள் மூலம் இது இனப்படுகொலை தான் என உறுதியாக தெரிவித்துள்ளார்கள் .

இது மட்டுமன்றி, ஜேர்மனியில் நடைபெற்ற இலங்கையின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பெரும் புகழ்வாயந்த பன்னிரு நீதிபதிகள் கொண்ட குழு, ஆதாரங்களையும் சாட்சிகளையும் பலநாட்களாக கேட்டு ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில், இலங்கையில் நடைபெற்றது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என்று ஐயம் தெளிவுற தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பாயம் சர்வதேச உரிமைகள் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு உதவியுடன் நடத்தபடுகிறது. இவ் அமைப்பு 1979 இல் இத்தாலியில்உருவாக்கபட்டது. இதில் ஐந்து நோபல்பரிசு பெற்ற அறிஞர்கள் உட்பட 31 நாட்டு சமூக தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த அமைப்பு வியட்நாம் மீதான தீர்ப்பாயம்(1966- 67)மற்றும்இலத்தீன்அமெரிக்கா சர்வாதிகாரம் (1974-1976) போன்ற விடயங்களை கையாண்டுள்ளது.

இவை தொடர்பாக சுமந்திரன் அறியவில்லை போலும். இறுதி யுத்தத்தில் நடந்த இனப்படுகொலைக்கான போதிய ஆதாரங்களுடன் வணபிதா. இராயப்பு யோசப்பு ஆண்டகை Stephen rap என்ற அமெரிக்க தூதருக்கு புரியவைத்தார். அதனைக்கூட சுமந்திரன்அறியவில்லையா?

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று முன்பு வாதிட்டு வந்த சுமந்திரன், தற்போது, சற்று நழுவி, தற்போது "இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என சர்வதேசத்திடம் உறுதிப்படுத்த எம்மிடம் இன்று போதிய சாட்சிகள் இல்லை எனவே எதிர்காலத்தில் அதை நிரூபிக்கும் வரை அதை இனப்படுகொலை என்று கூறக்கூடாது” என்று புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கதைவிட்டு வருகிறார்.

வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்த போது தான் எதிர்த்ததற்கான காரணம், அந்த கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் அல்லது யு.என்.எச்.ஆர்.சி நிராகரிபப்தை தான் விரும்பவில்லை என்பதுதான் எனக் கூறிவருகிறார்.

2015 செப்டம்பர் இல் ஜெனீவாவில் லதன் சுந்தரலிங்கம் இவரை பேட்டி கண்டபோது, சுமந்திரன் வடக்கு மாகாண சபை தீர்மானம் " ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை” என்றும் கூறினார். முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஆலோசனையை எதிர்த்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி இனப்படுகொலை விசாரணைக்கான கதவை மூடிவிட்டதாக மேலும் தெரிவித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னைவிட சட்டத்துறையில் எத்தனைபடி சிறந்தவர் என்பதைக்கூட சுமந்திரனின் மறந்துவிட்டார்.

DAN தொலைக்காட்சி நேர்காணலில் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, சுமந்திரன், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், 16 நவம்பர் 2015 அன்று ஜெனீவாவில் வெளியிட்ட 251 பக்க அறிக்கை ஒரு முழுமையான மற்றும் விரிவான ஆவணமாகும் என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

முதலாவதாக, இந்த அறிக்கை முழுமையயானது அல்ல என்பதை திரு சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது பெப்ரவரி 2002 முதல் நவம்பர் 2011 வரை மட்டுமான விடயங்களையே உள்ளடக்கியுள்ளது .

இரண்டாவதாக, இவர் கூறுவது போல இந்த அறிக்கையானது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதி செய்கின்ற போதிலும், நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை.

இது போலவே, ஐ.நா. மனித உரிமை சபையின் முன்னாள் ஆணையாளர், இளவரசர் சாயிட் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவரும் நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று பதிலளித்ததாக சொல்வது முற்றிலும் பொய்யானது. இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதற்கான பதிவுகள் எங்கும இல்லை.

அதே நேர்காணலில், சுமந்திரன், தான் தமிழர்களை ஆதரிக்கும் பல சட்ட நிபுணர்களுடன் பேசியதாகவும், "அவர்கள் அனைவரும்” இனப்படுகொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிவுறுத்தினர் என்றும் கூறினார்.

ஆனால் எந்தவொரு நிபுணரையும் அவரால் பெயர் குறிப்பிட முடியவில்லை என்பது அவரது கூற்றில் எநத் உண்மைத்தன்மையும் இல்லை என்பதையே காட்டுகிறது. அவரது நேர்மையற்ற தன்மையையும், தமிழ் சமூகத்தை முட்டாளாக்கும் திறனையும் நிரூபிக்க இந்த உண்மைகள் போதுமானவை.

விடுதலைப்புலிகள் போர்க்குற்றங்களைச் செய்ததை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக 2019 ஜனவரியில் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் இரண்டும் போர்க்குற்றங்களைச்செய்ததாகஅனைத்து சர்வதேச அறிக்கைகளும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன” என்றும் அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஆனால், ஐ.நா.வின் OISL அறிக்கையில் ; "இலங்கை அரசபடைகளால் தமிழ் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் மிகக்கொடுரமான பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதனை இந்த விசாரணை உறுதிப்படுத்தியிருப்பது மிகவும் வருத்தமானது. அத்துடன் பாலியல் தொடர்ந்து வருவது மிகவும் அதிர்ச்சி தருகிறது. விடுதலைப்புலிகள் பாலியல் சித்திரவதைகளில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான தகவலும் எமக்கு கிடைகக் வில்லை” என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தான் நன்கு அறிந்திருப்பதாக கூறிவரும் சுமந்திரன், மேலே உள்ள முக்கிய தகவலை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவருவது அவர் தனது சொந்த தமிழ் சமூகத்திற்கே செய்யும் துரோகம் அல்லாமல் வேறு எதுவாக முடியும்.

சுமந்திரன் தன்னை மீண்டும் மீண்டும் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவரோ அல்லது தனது சொந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவரோ இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். ஒரு தலைவராக அல்லது மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கான மிக அடிப்படையான தகமை,தனதுசொந்தகருத்துக்களை ஒதுக்கிவைத்து, தன்னையோ தான் சாரந்த கட்சியையோ நம்பி வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்துவதே ஆகும்.

எது எப்படி இருப்பினும் சுமந்திரன் தனக்கு வாக்களித்த மக்களின் கருத்துகக்ளை பற்றி எள்ளளவு கூட கவலைப்படாமல், தனது தவறான சொந்த கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருவதுடன், அதனை மக்களிடம் திணிக்க முற்படுவதும் சகிக்க முடியாதது.

மிக சமீபத்தில், 08 மே 2020 அன்று, சுமந்திரன், முன்னாள் ஊடக இயக்குநராக இருந்த சமர விக்ரமவுடனான சிங்கள பேட்டியில் கூறிய கருத்துக்களால்அவரது சொந்தக் கட்சியினர் உட்பட தமிழ் அரசியல் வட்டாரம் முழுவதும் கொதிப்படைந்துளள்து யாவரும் அறிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்து அவர் அப்பட்டமாக பொய் சொன்னார், மேலும் தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைபடுத்தினார். மேலும் வட- கிழக்கு முழுவதும் தமிழர்களிடையே பரவலான கோபத்தையும் சீற்றத்தையும் தூண்டிய இலங்கையின் சிங்கக்கொடி மற்றும் தேசிய கீதத்தை தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதானது அவரது சொந்தக் கட்சியில் உள்ள சக சட்ட மன்ற உறுப்பினர்களிடமிருந்து கூட விமர்சனங்கள் ஏற்பட காரணமாகியது.

இதுபோலவே,2015ஆம் ஆண்டில் அவர் சண்டேலீடரில் ஆங்கிலத்தில், "தனது கட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் இல்லை என்றும் அவர்களின் சித்தாந்தத்திற்கு உடன்படவில்லை" என்றும் கூறியிருந்தார்.

மேலும் தமது கட்சி "பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தில்லை" என்று தெரிவித்தன் மூலம், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற கருத்தை மறைமுகமாக வழங்கியிருந்தார். சுமந்திரன் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டதாக காட்டிக்கொண்டு, "புலி ஆதரவு புலம்பெயர்ந்தோருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறியது புலம்பெயர்ந்த தமிழரை கடுமையாக புண்படுத்தியது.

சுமந்திரனுக்கு கடுமையான எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டார். நான் சுமந்திரனின் சிங்கள் நேர்காணலை முழுமையாக பார்க்கவில்லை.

எனினும் "இது அவரது தனிப்பட்ட கருத்து தமிழ் தேசிய கூட்டணியின் அல்லது இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடாக கருதப்படக்கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சம்பந்தனின் சொந்தக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூத்த உறுப்பினர்கள்,பிற தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சுமந்திரனைப்போலல்லாமல், தமிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான காரணங்களுடன் நீண்டகால தொடர்பினைக் கொண்டவர்கள்.

அவர்கள் சுமந்திரனின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துகக்ளுக்கு எதிராக தங்கள் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கும் சுமந்திரனின் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்தாக கருதி விட்டுவிடக்கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா "புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சுமந்திரன் கூறிய கருத்துகக்ளை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கோபத்துடன் தெரிவித்தார்.

சக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரபதம் சரவணபவன், "மனிதகுலத்திற்கு எதிரான செயல்களில் பங்கேற்கவோ அல்லது ஈழப்போராட்டத்தை கேலி செய்யவோ ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.

அவர் சம்பந்தனிடம் சுமந்திரனை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணியும், புகழ்பெற்ற வழக்கறிஞரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவருமான கே.வி. தவரசா கூறுகையில்,"சுமந்திரனுக்கு ஆயுதப் போராட்டத்தை கொச்சைபடுத்த அதிகாரம் இல்லை. சுமந்திரன் அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவது குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கி தமிழ் மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தியுள்ளது" என மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் சம்பந்தனிடம் "சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிலையிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்க அனுமதிக்க கூடாது" என கேட்டுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை அமைப்பின் (டெலோ) தலைவர் திரு செல்வம் அடைக்கலநாதன், " சுமந்திரனின் கருத்துக்கள் முற்றிலும் மன்னிக்க முடியாதவை, முழு ஆயுத தமிழ் போராட்டமும் தவறானது என்று சொல்வது முற்றிலும் மன்னிக்க முடியாதது" என்றார்.

மற்றொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் " சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார்"என்றார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஞானமுத்து சிறினேசன்," சுமந்திரனின் கருத்துக்களுக்கு தீர்வு காணும் பொறுப்பான நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை வலியுறுத்தினார். அவர்களின் ஊடக செய்தித் தொடர்பாளரான சுமந்திரனின் கருத்துக்களுக்குதமிழ்த் தேசியக் கட்சி பொறுப்பு, சிங்கள பேரினவாதிகளை மகிழ்விப்பதற்கான சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்காகஅவர் தண்டிக்கப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் தமிழரசுக்கட்சி இளைஞர் பிரிவு தலைவரும், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தற்போதைய தலைவருமான வி. சிவகரன் கூறுகையில், "சுமந்திரன், வடக்கில் ஒரு கதையையும், தெற்கில் மற்றொரு கதையையும், தமிழில் ஒரு கதையையும், சிங்கள மொழியில் மற்றொரு கதையையும் சொல்லி அரசியலை வணிகமயமயமாக்கியுள்ளார். அவ்வப்போது சந்தர்ப்பவாதிகள் தமிழ் தரப்பில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டணியைவிட்டு பலர் விலகி செல்ல சுமந்திரனே காரணமாக இருந்துள்ளார். மக்களுக்காக கட்சியா?அல்லது கட்சிக்காக மக்களா? என்பதுதொடர்பில் தமிழ்தேசிய கூட்டணி உறுதியான நிலை எடுக்கவேண்டிய காலம் வந்து விட்டது.

சட்டத்தரணி மற்றும் தமிழரசுகட்சி இளைஞர் பிரிவின் துணைத்தலைவரான எஸ்.தினேசன், "வடக்கு மற்றும் கிழக்கில் உளள் தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டணி பெற்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக செய்தித் தொடர்பாளர், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இது போன்ற கருத்துகக்ளை நான் முழுமையாக கண்டிக்கிறேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிச்சயமாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர் டி. ரவிகரன், "தமிழ் மக்கள் சுமந்திரனின் கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது விடுதலைப்போராட்டத்தையும் அதில் பங்கு பற்றி மடிந்த மற்றும் அங்கவீனமானவர்களையும் ஏன் தலைவர் பிரபாகரனைக்கூட அவமதிக்கும் செயலாகும்" என கூறினார்.

அவர் மேலும் "தமிழ் தலைவர்களுக்கு எதிரான அட்டூழியங்களை எதிர்த்து தமிழ் தலைவர்கள் பல வழிகளில் போராடினர். தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அகிம்சை வழிமுறைகளால் தீர்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்க தொடங்கியதையடுத்து புலிகள் இயக்கம்உருவாகக்ப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்ட நிலைமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுவ உதவியது எனவே ஆயுதப் போராட்டத்தையோ அல்லது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையோ யாராவது இழிவுபடுத்தும்போது தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

சிறீசார்பு டெலோவின் பொதுச்செயலாளர் பரராஜசிங்கம் உதயராசா, சுமந்திரன் முழு ஆயுதப் போராட்டத்தையும் நிராகரித்த கருத்துக்களை" கண்டித்ததுடன், "சுமந்திரனின் கருத்துக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர் மீது நடவடிக்கை எடுக்குமா?"என்று கேட்டுள்ளார்.

"புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத வழிமுறைகளை நிராகரித்த, சுமந்திரனின் கருத்துக்களால் நான் ஆச்சரியப்பட்டேன்" என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் தலைமை நீதிபதி சி.வி விக்னேஸ்வரன் கூறினார்."தம்பி பிரபாகரனால் உருவாகக்ப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எம்.பி.யாக அவர் எப்படி இருக்க முடியும்? "என்னுடைய முன்னாள் மாணவர் என்ற முறையில், அவரது கருத்துக்கள் எனக்கு பெரும் அவமானத்தைத் தருகின்றன", தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் நன்கு அறிந்ததே" எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் "தமிழர்களுக்கு சுயாதீனமான ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான அபிலாசைகளுடன் உருவாகக்ப்பட்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியற்றதன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது. சுமந்திரனுக்கு கட்சியைச் சுற்றியுள்ள வரலாறு தெரியாது! அல்லது அவர் தெரியாது என்று பாசாங்கு செய்கிறாரா? அவர் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்படட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும்.

சுமந்திரன் ஒரு ஊழியரைப் போல நடத்தப்படுவதில் பெருமிதம் கொள்ளலாம், ஆனால் தமிழர்கள் சார்பாக பேசும்போது அவருக்கு அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை இல்லை. கொழும்பில் வசதியாக வாழ்ந்தபின், தமிழ் மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி திரும்புவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை" என தெரிவித்தார்.

நீதியரசர் மேலும் கூறுகையில், " தமிழ் மக்களின் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கேட்டு, அவர்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பது முக்கியம். இல்லையென்றால், அவர் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது சிங்கள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும்.

நாங்கள் எமது விடுதலைப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிங்கள மக்களுக்கு எங்கள் தேவைகளை உணர்த்த வேண்டும். தம்பி பிரபாகரன் ஆயுதமேந்தி பேராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் பல சிங்கள மக்கள் உள்ளனர்.தெற்கில் சிங்கள தலைவர்கள் போராட்டங்கள் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான தேவை பற்றி பேசுகிறார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும், இதுவரை செய்த தியாகங்களையும் குறைக்கும் எந்த முயற்சிகளையும் நாம் அகற்ற வேண்டும். சிங்கள மொழியில் என்னிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தால்,பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்பட்டது என்பதை நான் தெளிவாகக் கூறியிருப்பேன்" என தொடர்ந்தார்.

"சில நாட்களுக்கு முன்பு ஒரு சிங்கள நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமது கட்சி ஆயுதபேராட்டத்தை எப்போதும் குறைகூறியே வந்துள்ளது என்றும் தான் இலங்கை கொடியை ஏற்று சிங்களத்தில தேசிய கீதம் பாட தாயராக உள்ளேன் " என தெரிவித்திருக்கிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது ட்வீட்டரில் பதிவுசெய்திருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், "சுமந்திரன் தமிழ் தேசிய வாதத்தை மறந்துவிட்டார். அதனால்தான் தமிழ் போராட்டத்திற்கான ஆயுத போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொளள்வில்லை"என்றுஅவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இலங்கை சிங்கக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எங்கள் வலி பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 11 ஆண்டுகளாக அவர்களின் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் கட்சியின் அடிப்படை அபிலாசைகளிலிருந்து விலகிச் செல்கின்றன என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை உள்நாட்டுப் போரில் அவர்கள் வகித்த பங்கிற்கு சுமந்திரன் பாராட்டியுள்ளார் " என கூறினார்.

முன்னாள் புலிகளை உறுப்பினராக கொண்டுள்ள கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமந்திரனை கடுமையாக சாடியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தாங்கள் வழங்கிவரும் ஆதரவை விலக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்தும் உள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளரைக் கண்டித்ததுள்ளன. "சுமந்திரன் கொழும்புக்கு விசுவாசமானவர், கொழும்பை விரும்புகிறார். அவர் தமிழ் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. சிங்கள மக்கள் அவரை சேர் பொன்னம்பலம் ராமநாதனுக்கு ஒத்த நபராகவே பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் செயல்படுகிறார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பைப் பாதுகாக்க அவர் பணியாற்றுகிறார்" என்று தெரிவித்தன.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது 715 வது நாளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் "சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை தமிழ் அரசியலில் இருந்து நீக்கிய பின்னர் தமிழர்களுக்கு முதலில் சுதந்திரம் கிடைக்கும்"என்றுஎ ழுதப்பட்ட ஒரு பெரிய பதாகையை ஏந்தி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

உலகெங்கிலும் உள்ளபுலம்பெயர் தமிழர்களை, சுமந்திரன் "புலம்பெயர் புலிகள்" என்று குறிப்பிடுவது மிகவும் புண்படுத்தக்கூடியது மற்றும் மன்னிக்க முடியாதது.

இது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் குறித்து இலங்கை உளவுத்துறையின் அதே கருத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார் என்ற உண்மையை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இது போலவே பெப்ரவரி 2017 இல் தன்னை கொலை செய்யும் முயற்சிக்கான திட்டமிடல் வெளிநாட்டில் நடந்துள்ளது என்று ஒரு போலியான குற்றச்சாட்டையும் அவர் புலம் பெயர் தமிழ் மக்கள் மீது சுமத்தியிருந்தார்.

புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இவ்வாறு புலி முத்திரை குத்துவதானது, அவர்கள் இலங்கை திரும்பும்போது கைது செய்யயப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகுவதற்கு வழிகோலியுள்ளது.

தமக்கு பாதுகாப்பை பெறுவதற்காக சுமந்திரனால் அரங்கேற்றப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி நாடகம் தான் இந்த கொலைமுயற்சி என்பதற்கான நம்பகமான தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்குவந்துள்ளன.

இந்த சதியில் பலிக்கடாவாக்கப்பட்ட அப்பாவியான 5 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, இன்னும் சிறையில் சித்திரவதை அனுபவித்து வருவதற்கான முழுப்பொறுப்பையும் சுமந்திரன் ஏற்க வேண்டும்.

இந்த 5 முன்னாள் புலி உறுப்பினர்களை மட்டுமல்லாமல் இலங்கைக்கு திரும்பியதும் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் ஆர்வலர்களையும் சித்திரவதை செயய் ப்படுவதற்கும் இவரே உடந்தையாகிறார்.

சுருக்கமாக சொல்வதானால், சுமந்திரன் எப்போதுமே தனக்கும் அவரது தமிழ்த் தேசியக்கட்சிக்கும் வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையானது. தனது சமீபத்திய நேர்காணலின் மூலம்,ஏற்கனவே இழப்பின் வேதனையால் பாதிக்கப்பட்டு,நீதி இல்லாமல் விடப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் இதயங்களில் ஆறாத காயத்தையும் வலியையும் அவர் உருவாக்கியுள்ளார்.

தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரும், அவரது கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மக்களின் கருத்துகக்ளை மதிக்கத் தவறிவிட்டார்.

தனது சொந்த கருத்துக்களை ஒதுக்கிவைக்க இயலாமையை நிரூபிப்பதன் மூலம், அவர் தனது சொந்த மக்களை ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

தனது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும் கருத்துக்களையும்விற்கும் ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்ப்படுத்த அவர்அனுமதிக்கப்படக்கூடாது.

சுயேட்சையாக நிற்கவோஅல்லது தனது சொந்தக்கருத்துக்கள்அடிப்படையில் தனது சொந்தக்கட்சியை உருவாக்கவோ அவருக்கு முழு சுதந்திரமும் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழர்களின் ஆணையை அவர் மதிக்க முடியாததால், அவர் உடனடியாக தனது பதவியை துறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டும்.

அவரிடம் சுயகௌரவம் கொஞ்சமாவது எஞ்சியிருந்தால் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை நீக்குவதற்கு முன்பு அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணைப்படி செயல்பட வேண்டும்.

அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் அல்லது தமிழர்களிடமிருந்து அனைத்து ஆதரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழக்க நேரிடும்.

http://www.namathueelanadu.com/?p=16701

https://www.colombotelegraph.com/index.php/tna-spokesperson-sumanthiran-should-resign-from-the-tna-immediately/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, kumara23 said:

மனோன்மணிக்கும் சுமத்திரனுக்கும் ஏனிந்த சண்டை ?

தேர்தலில் வென்று விடுவார் என்ற பீதி தான் காரணம்! 😎

நேர்மையான வழி சுமந்திரனுக்கு மாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று வாக்காளர்களுக்குச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kumara23 said:

மனோன்மணிக்கும் சுமத்திரனுக்கும் ஏனிந்த சண்டை ?

பின்னால் RAWதான். வேறென்ன 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பிரிக்கேக்குள்ள அவவுக்கும் ஒரு பங்கு கொடுத்திருந்தால் இப்ப இந்த பிரச்சனை வந்திருக்காது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நேர்மையான வழி சுமந்திரனுக்கு மாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று வாக்காளர்களுக்குச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்! 

என்ன நேர்மையான வழி  சுமத்திரன் செய்துவிட்டார் ?

அறிய வெகு ஆவல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

என்ன நேர்மையான வழி  சுமத்திரன் செய்துவிட்டார் ?

அறிய வெகு ஆவல் 

பின் கதவாலை போனால்.........அவையளுக்கு நேர்மையான வழி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பங்கு பிரிக்கேக்குள்ள அவவுக்கும் ஒரு பங்கு கொடுத்திருந்தால் இப்ப இந்த பிரச்சனை வந்திருக்காது 
 

அவ மனோன்மணி எழுதியதில் பிழையான எதுவும் உண்டா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

என்ன நேர்மையான வழி  சுமத்திரன் செய்துவிட்டார் ?

அறிய வெகு ஆவல் 

உங்கள் "ஆவல்" பலமாக இருந்தால் நீங்களே தேடிப் பார்க்க வேண்டும்! மற்றவர் வாழைப் பழத்தை உரித்து வாயில் தருவார்கள் என்று சும்மா இருக்கக் கூடாதல்லோ?😎

மேலும், நான் நேரம் செலவழித்து சுட்டிக் காட்டி விட்டாலும் ஏற்றுக் கொள்ளவா போகிறீர்கள்? நைசாகக் கடந்து போய் விட்டு இன்னொரு திரியில் இதே கேள்வியோடு வருவீர்கள். 

எனவே தான், சுமந்திரன் என்ன மாதிரியும் இருந்து விட்டுப் போகட்டும், வாக்காளர்கள் பதில் தருவர், சுமந்திரன் போட்டியிடவே கூடாதென்போர் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றனர் என்று சொல்லட்டும்! 

2 hours ago, குமாரசாமி said:

பின் கதவாலை போனால்.........அவையளுக்கு நேர்மையான வழி 😎

 தேர்தலில் வென்ற போது நீங்கள் கோமாவிலா? கொட்டிலிலா? 

இனி அடுத்த முறையும் வெல்லப் போகிறார், எதனால் முகத்தை மூடிக் கொள்வதாய் திட்டம் அண்ணை? 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

உங்கள் "ஆவல்" பலமாக இருந்தால் நீங்களே தேடிப் பார்க்க வேண்டும்! மற்றவர் வாழைப் பழத்தை உரித்து வாயில் தருவார்கள் என்று சும்மா இருக்கக் கூடாதல்லோ?😎

மேலும், நான் நேரம் செலவழித்து சுட்டிக் காட்டி விட்டாலும் ஏற்றுக் கொள்ளவா போகிறீர்கள்? நைசாகக் கடந்து போய் விட்டு இன்னொரு திரியில் இதே கேள்வியோடு வருவீர்கள். 

எனவே தான், சுமந்திரன் என்ன மாதிரியும் இருந்து விட்டுப் போகட்டும், வாக்காளர்கள் பதில் தருவர், சுமந்திரன் போட்டியிடவே கூடாதென்போர் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றனர் என்று சொல்லட்டும்! 

 தேர்தலில் வென்ற போது நீங்கள் கோமாவிலா? கொட்டிலிலா? 

இனி அடுத்த முறையும் வெல்லப் போகிறார், எதனால் முகத்தை மூடிக் கொள்வதாய் திட்டம் அண்ணை? 😋

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம். அது போல் தான் கூட்டமைப்பின் நிலமையும். தமிழ் மக்களுக்கும் வேறு வழியில்லை. சுதந்திர உரிமை தாகத்தில் இருக்கும் மக்களுக்கு இன்னும் ஒரு ஒழுங்கான தமிழ்த்தலைமை இல்லை என்பது உண்மைதான். இது தெரிந்து கொண்டுதான் அவர்களும் குத்துக்கரண அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.அது மட்டுமல்லாமல் சர்வதேசத்திற்கு தமிழர் பிரச்சனை எனும் வரும்போது சிங்கள தலைவர்களும் சம்சும் கொம்பனியைத்தான் சாட்சிக்கு வைக்கின்றார்கள்.விடுதலைப்புலிகளாலும் அரசியல் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை சம்பந்தனுக்கு உண்டு.எல்லாவற்றையும் விதைத்தவர்கள் யாரோ....எதுவுமே செய்யாமல் வெறுமனே அறுவடை செய்து வீர வசனம் பேசுபவர்கள் இவர்கள்.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் எனும் ரீதியில் கூட  கூட்டமைப்பிற்கு பலமான எதிர் இல்லை என்பதே யதார்த்தம். இதை வைத்து நீங்களும் நீங்கள் சார்ந்த ஜாம்பவான்களும் துள்ளிக்குதிப்பது நன்றாகவே எமக்கும் விளங்குகின்றது.
ஆனாலும் ஒன்று கூட்டமைப்பால் ஈழத்தமிழினத்திற்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்பது உறுதியானது. முப்பது வருடத்திற்கு முந்திய முப்பது வருடங்களும் இறுதி  முப்பது வருடத்திற்கு பிந்திய பத்து வருடங்களும் நல்ல உதாரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்கள் "ஆவல்" பலமாக இருந்தால் நீங்களே தேடிப் பார்க்க வேண்டும்! மற்றவர் வாழைப் பழத்தை உரித்து வாயில் தருவார்கள் என்று சும்மா இருக்கக் கூடாதல்லோ?😎

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் சுமத்திரன் தமிழருக்கு தீங்குதான் இதுவரை செய்தது வேறென்றுமில்லை  சிறு உதாரணம் மனோன்மணி என்ன எழுதினவ  என்று படிக்காமலே கருத்துக்களத்தில் கம்பு சுத்துவது தவறு பாஸ் 

8 hours ago, பெருமாள் said:

2015 செப்டம்பர் இல் ஜெனீவாவில் லதன் சுந்தரலிங்கம் இவரை பேட்டி கண்டபோது, சுமந்திரன் வடக்கு மாகாண சபை தீர்மானம் " ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை” என்றும் கூறினார். முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஆலோசனையை எதிர்த்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி இனப்படுகொலை விசாரணைக்கான கதவை மூடிவிட்டதாக மேலும் தெரிவித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னைவிட சட்டத்துறையில் எத்தனைபடி சிறந்தவர் என்பதைக்கூட சுமந்திரனின் மறந்துவிட்டார்.

 

8 hours ago, பெருமாள் said:

1990களில் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை கட்டாயமாக வெளியேற்றியது ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கை ( Ethnic Cleansing )"

Ethnic Cleansing என்று சட்டம் படிக்காதவனுக்கு கூட விளங்கியது உங்க ஆளுக்கு விளங்கவில்லை இப்ப மனோன்மணி வந்து மணிகட்ட  வாயையும் பின்பக்கத்தையும் பொத்திக்கொண்டு இருக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் உண்மையில் ஒரு மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை அவர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொதுநலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை.

கறுப்பில்  இருக்கும் எழுத்துக்களுக்கு விடை இருந்தால் செம்புகள் கம்பு சுத்தலாம் அல்லது நேரடியா சுமத்திரனே வந்து கம்பு சுத்தலாம் தில்  இருந்தால் ..............

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

தமிழ் மக்களுக்கும் வேறு வழியில்லை. சுதந்திர உரிமை தாகத்தில் இருக்கும் மக்களுக்கு இன்னும் ஒரு ஒழுங்கான தமிழ்த்தலைமை இல்லை என்பது உண்மைதான்.

 ம் .... ஒருவருமே இல்லையா… ? இனி ஒரு போதும் இல்லையா...? ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

தேர்தலில் வென்று விடுவார் என்ற பீதி தான் காரணம்! 😎

நேர்மையான வழி சுமந்திரனுக்கு மாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று வாக்காளர்களுக்குச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்! 

திருமதி.மனோன்மணி சதாசிவம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தேர்தலில் வேட்பாளராக இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

திருமதி.மனோன்மணி சதாசிவம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தேர்தலில் வேட்பாளராக இல்லை என்று நினைக்கிறேன்.

இவர் வேட்பாளரில்லை என்பதை நான் அறிவேன்! ஆனால், சுமந்திரன் வென்று விடுவார் என்ற பீதியில் இவையெல்லாம் வருகின்றன என்றே சொன்னேன்! நன்கு கண் திறந்து பாருங்கள்: ஒரு தனி நபராகவா மனோன்மணி இதை எழுதியிருக்கிறார்? இவரும் ஒரு அரசியல் குழுவின் பக்கம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஏராளன் said:

 

உண்மையில் நல்ல Editing 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இவர் வேட்பாளரில்லை என்பதை நான் அறிவேன்! ஆனால், சுமந்திரன் வென்று விடுவார் என்ற பீதியில் இவையெல்லாம் வருகின்றன என்றே சொன்னேன்! நன்கு கண் திறந்து பாருங்கள்: ஒரு தனி நபராகவா மனோன்மணி இதை எழுதியிருக்கிறார்? இவரும் ஒரு அரசியல் குழுவின் பக்கம் தான்!

நன்றாக உற்று பார்த்ததில் இது வரை ஐயாவின் பொதுச்சேவையை நன்கு விளக்கியுள்ளார். 
சுமந்திரன் ஐயா வெல்லக்கூடாது என்பது சாதரண பொது மகனாகிய எனது விருப்பமும் கூட. அவர் வெல்ல வேண்டும் என விரும்புவோர் தாயகத்தில் குறைவு. அவர் மீது மிகுந்த கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். விகிதாசார தேர்தல் முறையால்(மாவட்டம் முழுவதும் விருப்பு வாக்கு பெற்று) வெல்ல வாய்ப்பிருக்கலாம். போனதடவை எடுத்த 58000 வாக்கு இம்முறை எடுப்பது சிரமம்.
தொகுதிவாரி தேர்தல் எனில் அமிர்தலிங்கத்தை தோற்கடித்தது போல் நடந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2020 at 19:42, பெருமாள் said:

அவ மனோன்மணி எழுதியதில் பிழையான எதுவும் உண்டா ?

 

சரி,பிழைகளுக்கு அப்பால் அம்மணியின் தற்போதைய அறிக்கைக்கு பின்னால் ஏதோ சூட்சுமம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 19:49, ரதி said:

சரி,பிழைகளுக்கு அப்பால் அம்மணியின் தற்போதைய அறிக்கைக்கு பின்னால் ஏதோ சூட்சுமம் உள்ளது.

103798475_168803474617251_1717896636837784558_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=dsLpxROQL6QAX-Mxagv&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=4d683f0cda7aabbe41ac352c235d2c00&oe=5F26821B

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

103798475_168803474617251_1717896636837784558_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=dsLpxROQL6QAX-Mxagv&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=4d683f0cda7aabbe41ac352c235d2c00&oe=5F26821B

சுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன ? 😂

அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும்தானே 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

சுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன ? 😂

கேள்வியே பிழை  நான் மாத்திரம் அல்ல தமிழ் தேசியம் சிதைவுற  கூடாது என்னும் எல்லோருமே விரும்புகிறார்கள் கடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்களை முட்டாள்கள் கூட்டம் என்பதுபோல் அவர்நடந்துகொண்ட விதம் தன்னிஷ்டப்படி பலவிடயங்களில் கட்சியின் அனுமதி இல்லாமல் நடந்துகொண்ட விதம் முக்கியம் போர்க்குற்ற விசாரணை விடயத்தில் விட்டு கொடுப்புக்கள் இல்லாமல் அரசியல் இல்லை அதுக்காக கோவணத்தையும் கழட்டி  விட்டுக்கொடுப்பதுக்கும் உள்ள வித்தியாசம் அறியமுடியாதவர் இந்த பத்து வருடத்தில் சுமத்திரனால் பயன் பெற்ற இனம் சிங்களம் மட்டுமே தமிழர்கள் இன்னும் காணமல் போனவர்களை தேடிக்கொண்டு இருக்கினம் .அற்ப காரணம்களுக்கு அரசியல் கைதிகளா உள்ளே போனவர்கள் இன்னும் உள்ளேயே இருக்கிறார்கள் அதைவிட கைகால்கள் இல்லாத முன்னாள் போராளிகளை  தனக்கு கிளைமர் வைக்க வந்தவர்கள் எனும் பொய் குற்ற சாட்டில் ஜெயில் வைத்து தனக்கு போலீஸ் பாதுகாப்பை ஏட்படுத்தி  கொண்டவர் இப்படி 1000 காரணம் இருக்கு .

நீங்கள்  ஏன் அவர் வரணும் என்பதை விரும்புகிறீர்கள்? அதையும்  சொல்லிவிடுங்க .

25 minutes ago, Kapithan said:

அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும்தானே

இங்கு சமயத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?

நேற்று யாரோ ஒரு முக்கியமான படத்தை சமய சம்பந்தமான சுமத்திரன் சம்பந்தப்பட்ட இங்கு இணைத்தார்கள் அது வந்த வேகத்திலே தூக்க பட்டது ஏன் என்று புரியவில்லை ஆனால் இன்று அந்த படம் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது .

tna க்கு இறுக்கிய  ஆப்பு சுமத்திரன் எனும் ஆப்பு இன்று அவர்களால் கூட பிடுங்கி எறிய முடியாமல் உள்ளது என்கிறார்கள் உண்மையுமதுதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 212 இலக்கத்திலிருந்து எப்படி 21 கோடி உருவானது என்று நுணா இணைத்திருக்கிற சி.எம்.ஆர் நேர்காணலில் இருக்கிறது! "காகம் காகமாக சத்தியெடுத்தான்!" என்ற கதை பிசு பிசுத்துப் போனதால் இப்ப இந்தக் கோணத்தில தொடங்கியிருக்கீனம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 13:05, ஏராளன் said:

நன்றாக உற்று பார்த்ததில் இது வரை ஐயாவின் பொதுச்சேவையை நன்கு விளக்கியுள்ளார். 
சுமந்திரன் ஐயா வெல்லக்கூடாது என்பது சாதரண பொது மகனாகிய எனது விருப்பமும் கூட. அவர் வெல்ல வேண்டும் என விரும்புவோர் தாயகத்தில் குறைவு. அவர் மீது மிகுந்த கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். விகிதாசார தேர்தல் முறையால்(மாவட்டம் முழுவதும் விருப்பு வாக்கு பெற்று) வெல்ல வாய்ப்பிருக்கலாம். போனதடவை எடுத்த 58000 வாக்கு இம்முறை எடுப்பது சிரமம்.
தொகுதிவாரி தேர்தல் எனில் அமிர்தலிங்கத்தை தோற்கடித்தது போல் நடந்திருக்கும்.

உங்களது உட்பட வாக்காளர்களின் அபிப்பிராயத்தை நான் குறை கூறப் போவதில்லை! (சுமந்திரனே தன் கருத்தை ஏற்காதோர் தனக்கு வாக்களியுங்கள் என்று கோரவில்லை!).

ஆனால் மனோன்மணி சொல்லியிருக்கும் சில தகவல்கள் கடந்த தேர்தல் காலத்திலேயே பொய் என நிரூபிக்கப் பட்டவை. உதாரணம்: "இனப் படுகொலை நடந்தது என்று நான் நம்புகிறேன், அதை நிரூபிக்க சட்டரீதியில் முடியாது என்று தான் நான் கருதுகிறேன்" இது தான் சுமந்திரன் மீள மீளச் சொல்லி வருவது! இவரோ சுமந்திரன் இனப்படுகொலையை மறுக்கிறார் என்கிறார்! தமிழ் கிரகிப்புப் பிரச்சினையா அல்லது அதெல்லாம் பொருட்டில்லை, இவரை மிதித்து விட்டால் போதும் என்ற மனநிலையா?

போட்டியிடாமல் தடுக்க முனைவதும் பொய்யான செய்திகளை பல்கிப் பெருகச் செய்வதும் தான் எனது எதிர்ப்புக்குரியது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.