Jump to content

விக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்?

காரை துர்க்கா   / 2020 ஜூன் 30 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பை விமர்சிக்கலாம்; அதை விடுத்து, தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்” எனத் தெரிவித்து உள்ளார்.  

“விக்னேஸ்வரனை, நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில், அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால், அவர் தற்போது என்ன செய்கின்றார்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், யாரையும் நாம் விலக்கவில்லை; சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை, அவர்கள் இன்றுவரை கூறவில்லை” என, இரா. சம்பந்தன் மேலும் கூறியிருக்கின்றார்.  

தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்த (மே, 2009) பின்னர், விடுதலைக்கான போராட்டத்தை,  விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஜனநாயக ரீதியாகத் தொடர வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு, கூட்டமைப்பின் வசம் சென்றது. அதனூடாகத் தமிழ் மக்களது தலைமைத்துவம், சம்பந்தனிடம் சென்றது.  

நடைபெற்ற தேர்தல்களில், தமிழ் மக்களும் தங்களது ஆணையையும் ஆதரவையும் கூட்டமைப்புக்கே தொடர்ச்சியாக வழங்கி வந்தார்கள். ஆகவே, யார் என்ன சொன்னால் என்ன, எப்படிச் சொன்னால் என்ன, தமிழ் மக்களது தலைமை என்றால் அது, கூட்டமைப்புத்தான் என்ற நிலைமையே இன்று வரை தொடர்கின்றது.  

ஆனாலும், தமிழ் மக்களால் ஒப்படைக்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் கடமையையும் கணிசமான அளவில் கூட, கூட்டமைப்பினர் நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்பதே, தமிழ் மக்களின் ஆதங்கமும் ஆத்திரமும் ஆகும்.   

விக்னேஸ்வரனால், தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று, சம்பந்தன் கேட்டுள்ளதை, மறுவளமாக, ‘சம்பந்தனால் கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது’ என்ற கேள்வியைத் தொடுக்க முடியும்.   

அதாவது, இந்தக் கேள்வியை, சி.வி. விக்னேஸ்வரனின் அணியில் (தமிழ் மக்கள் தேசிய கூட்டணி) போட்டியிடுகின்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சுரேஸ் பிரேமசந்திரன் கேட்டுள்ளார்.  

இதுவும் நியாயமான கேள்விதானே? வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, சம்பந்தன் அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம்; அவரை வெல்லவும் வைத்திருக்கலாம். ஆனால், விக்னேஸ்வரனைத் தன்னுடன் (கூட்டமைப்புடன்) தொடர்ந்து இணைத்து வைத்திருக்க, சம்பந்தன் தவறி விட்டார்.   

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, யாரையும் நாம் விலக்கவில்லை; சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை, அவர்கள் இதுவரை கூறவில்லை” எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருக்கின்றார்.   

கூட்டமைப்பிலிருந்து யாரையும் விலக்கவில்லை என்பது, சரியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தாமாகவே விலகுவதற்கான நெருக்குவாரங்களை, கூட்டமைப்பு சிலவேளைகளில் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லலா? தற்போது கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்பவர்கள் கூட, தங்களது இருக்கைகளைத் தக்க வைப்பதற்காக, சகிப்புத் தன்மையுடன் இருக்கலாம் அல்லவா?   

இந்நிலையில், சி.வி. விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்தது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால், தனிக்கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளை அண்மிக்கப் போகின்றது. புதிதாக அரசியலுக்கு வருவோரும், புதிதாக அரசியல் கட்சிகள் தொடங்குவோரும், தமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றே வருகின்றார்கள்.   

ஆகவே, “தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்” என, வேறு யாராவது விமர்சித்திருக்கலாம். ஆனால், சம்பந்தன் கேட்கக் கூடாது. ஏனெனில், இப்படிக் கேட்பது, இன்னமும் தமிழ் மக்களால் மதிக்கப்படும் சம்பந்தனின் கனவான் அரசியலுக்கு இழுக்காகலாம்.   

ஆனால், அதற்காக விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்தது சரி என்றோ, அதன் ஊடாக அவர் நாடாளுமன்றம் சென்று (தனிநபராக அல்லது ஒரு சிலராக) தமிழ் மக்களுக்கான விடுதலையைக் பெற்றுக் கொடுப்பார் என்றோ கூற வரவில்லை.   

ஏனெனில், பல தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன், சம தரப்பாக, சம படை பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடைய முடியாத சுயநிர்ணய உரிமையை, கடந்த முறை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் பெற முடியாத தீர்வுத் திட்டத்தை (புதிய அரசியல் யாப்பை) வெறும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, செய்ய முடியுமா என்பதும் வினாக்குறியே.   

வடக்கு மாகாண சபையில், விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில், ஒன்றுமே உருப்படியாகச் செய்யவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், விக்னேஸ்வரன் உருப்படியாகச் செய்ய, கூடவே இருந்தவர்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் ஆக்கபூர்வமாக வழங்கவில்லை என்ற எண்ணமும் தமிழ் மக்களின் மத்தியில் உள்ளது.   

ஐந்து ஆண்டுகளாக, வடக்கு அரசியலில் இருந்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும் என்றால், அண்ணளவாக 40 ஆண்டுகளாக அரசியலிலும் பத்து ஆண்டுகளாகத் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்திலும் இருக்கும் சம்பந்தனால், அவர் சார்ந்த கட்சியால், தமிழ் மக்களுக்குப் பெரிதாகவும் குறிப்பிட்டுத் கூறும்படியாகவும் என்ன செய்ய முடிந்தது?   

ஆகவே, அவர் என்ன செய்தார், அவரால் என்ன செய்ய முடியும், இவர் என்ன செய்தார், இவரால் என்ன செய்ய முடியும்? என்பதெல்லாம் வீண் பேச்சு. நிஜத்தில் எவராலும் (தமிழ் அரசியல் தலைவர்கள்) ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலேயே, இலங்கையின் அரசியல் களம் உள்ளது.   

உண்மையில், தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ் மக்கள் கூடுதல் தேசப் பற்றுக் கொண்டவர்களாக உள்ளார்கள். தனிப்பட்ட நலன்களுக்காக, கட்சி (கொள்கை) மாறும் அரசியல்வாதிகள் உள்ள ஊரில், தனிப்பட்ட நலன்களைக் காட்டிலும் தேசியத்தின் மீது கொண்ட பற்றுதலால், என்றைக்கும் கட்சி மாறாத (மறவாத) தேசாபிமானிகள் எம்மவர்கள்.   

இன்று கூட, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர்,  தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை, கூட்டமைப்புத்தான்  தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்; விரும்புகின்றார்கள். இந்நிலையில்தான், கூட்டமைப்பின் உடைவை, ‘கொழும்பு’ விரும்புகின்றது.   

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில், தமிழ் மக்கள் ஒன்றாக, ஓர் அணியாகத் திரள்வதை, ‘கொழும்பு’ என்றைக்கும் விரும்பாது. ஏனெனில், அதன் ஊடாகத் தமிழ் மக்களது அரசியல் கோரிக்கைகளுக்கான பலம் கிடைத்து விடும் என, உள்ளூரக் கருதுகின்றது.   

கூட்டமைப்பு 20 ஆசனங்ளைக் கைப்பற்றும் (கைப்பற்ற வேண்டும்) என்ற சம்பந்தனின் அறைகூவலுக்கு ஏற்ப, இன்றைய களநிலைவரங்கள் இல்லை. தமிழ்க் கட்சிகள் சிதைந்து, பல துண்டுகளாகத் தேர்தலில் இறங்குகையில், தமிழ் மக்களது வாக்குச் சிதறலையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.   

தற்போதைய உத்தேச கள மதிப்பீடுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், கடந்த முறை கிடைத்தது போல, ஐந்து ஆசனங்ளைப் பெறுவது, கூட்டமைப்புக்கு கடினமான காரியமாகவே இருக்கப்போகின்றது.    

அது போலவே, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்ளை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், கடந்த முறை போல, கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப் பெறுவது கடினமான காரியமே ஆகும்.   

வன்னி மாவட்டத்தில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சார்பில் விக்கினேஸ்வரனின் அணியில் போட்டியிடுகின்ற நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்கள் செல்வாக்கு உள்ளவராக உள்ளார்.   

தற்போது தேர்தல் கதைகள், சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள வேளை, யாழ்ப்பாண பஸ் நிலையத்தில், பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஐயா ஒருவரை, “என்ன மாதிரி, யாருக்கு வாக்களிக்க உத்தேசம்” எனக் கேட்டேன்.   

“இதுவரை காலமும், எங்கட தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோட, இவைக்கு (கூட்டமைப்பு) வாக்களித்தனான். உவர், விக்னேஸ்வரன் நீதியரசர் தானே; ஒரு நீதியரசர் எங்களுக்கு நீதி கிடைக்க, நாடாளுமன்றத்திலையும் சர்வதேசத்திலையும் கதைத்தா என்னவெண்டு யோசிக்கின்றேன்” என்றார்.   

சம்பந்தனோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனைக் கொழும்பு விரும்புவதில்லை. இலங்கையில் இனப்பிணக்குத் தீர, தீர்வு ஒன்று வருகின்றது என்றால், அது நிச்சயமாக, சர்வதேச அனுசரனை, அழுத்தம் இன்றி நடைபெறப் போவதில்லை. 

இந்நிலையில், சர்வதேசத்தின் செவிகளுக்கு, தமிழர் பிரச்சினை செல்வதற்காக, விக்னேஸ்வரன் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும்  என்பதே, மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியால்-தமிழருக்கு-என்ன-செய்ய-முடியும்/91-252625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி என்ன, யாராலுமே எதுவும் செய்துவிட முடியாது. கோட்டாபய பார்த்து ஏதாவது பிச்சை போட்டால்தான் உண்டு. ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.