Jump to content

மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு!

14-Secrets-Lawyers-Will-Never-Tell-You-8-960x640.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர்.

அந்த காரை செலுத்திச் சென்றவர், தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொலிஸார், சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கோரியுள்ளனர்.

இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரமும் அந்த இளம் சட்டத்தரணியிடம் இல்லை. அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நாளை சட்டத்தரணிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் மன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

https://newuthayan.com/மது-போதையில்-பயணித்த-இளம/

 

 

Link to comment
Share on other sites

யாழிலுள்ள நிறைய சட்டத்தரணிகளின் நிலை படுமோசமான இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம்.... பொது வெளியில், தண்ணி 🍺 அடிக்க கூச்சப்பட்டு, அலுமாரிக்குள் ஒளித்து வைத்து அடிப்பார்கள்.

இப்போ கூச்சம் இல்லாமல்.... எல்லாம் மரத்துப் போய் விட்டது போலுள்ளது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Gowin said:

யாழிலுள்ள நிறைய சட்டத்தரணிகளின் நிலை படுமோசமான இருக்கு.

நான் ஒரு லண்டனிலுள்ள நண்பருக்கு, யாழ்ப்பாணத்தில் அலுவலகம் போட்டு தொழில் ஆரம்பித்த ஒரு இளம் புரகிராசியாரை அறிமுகம் செய்தேன்.

பெரும் ஆரவாரத்துடன் அப்பொய்ட்மென்ட் எல்லாம் கொடுத்து, ஸ்கேய்பில் பேசினார்.

பிறகு டோட்ஜ் பண்ண தொடங்கி விட்டார். எனது அழைப்புகளுக்கும் பதில் இல்லை. நல்ல காலம் அட்வான்ஸ் வாங்கவில்லை.

பிறகுதான் தெரிய வந்தது. அவர் ஒரு சீனியர்களுக்கு கீழ வேலை செய்யாததால், கோர்ட்டில் பேச அனுபவம் இல்லையாம். உறுதி தயாரிப்பது தான் மெயின் வேலையாம். உண்மையில், ஒரு சீனியர்களும் இவரை தமக்கு கீழே எடுத்து பயிற்சி கொடுக்க முடியாதவாறு, இவரது ட்ராக் ரெகார்ட் இருந்திருக்கிறது. இதைத்தான் சொல்லுறது அட்வான்ஸ் லெவல் படிக்கும்போது, கண்ணா, பின்னா எண்டு திரியக்கூடாது.

இதை முதலிலேயே சொல்ல தைரியம் இல்லை. நண்பர் தப்பினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி என்றில்லை, ஆசிரியர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். ஆனால் அதை உணரும் நிலையில் யாருமே இல்லை. தமிழ் சமூகம் மிக பெரிய சீரளிவிலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

சட்டத்தரணி என்றில்லை, ஆசிரியர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். ஆனால் அதை உணரும் நிலையில் யாருமே இல்லை. தமிழ் சமூகம் மிக பெரிய சீரளிவிலுள்ளது.

கவலையான விடயம், இது வெளிநாட்டிலிருந்து போகின்றவர்களும் இதற்கு ஒரு காரணம், பாட்டில் பாட்டிலா வாங்கி கொண்டு போகின்றார்கள் ஊரில் உள்ளவர்களுக்க என,

சிங்களத்திற்கு நல்ல வருமான இதனால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

கவலையான விடயம், இது வெளிநாட்டிலிருந்து போகின்றவர்களும் இதற்கு ஒரு காரணம், பாட்டில் பாட்டிலா வாங்கி கொண்டு போகின்றார்கள் ஊரில் உள்ளவர்களுக்க என,

சிங்களத்திற்கு நல்ல வருமான இதனால்...

வருமானம் மட்டுமல்ல, அவர்களின் வேலையை இலகுவாக்குகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது போதையில் இருப்பதை முகத் தோற்றளவில் அறிந்துகொண்ட பொலிசார் ...

எல்லாம் லஞ்சம் குடுக்கயில்ல எண்ட கோபம்தான். 😂😂

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.