Jump to content

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த முடிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் பிள்ளை இறந்து விட்டதாகவும். தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் பல தமிழர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். ஆனால் இதனை வெளியே சொல்ல எவரும் தயாரா இல்லை அண்மையிலும் மன அழுத்தத்தினால் ஒரு கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

பொலிசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் தேடவில்லை, யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையின் மரணம் மற்றும் பெண்ணின் காயங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

http://jaffnaboys.com/2020/07/01/15765/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் பகுதியில் ஒரு பெண்,தன்  நான்கு வயசு பெண் பிள்ளையை கொலை செய்து விட்டு,தற் கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறார் ...அங்கால இருக்கும் உறவுகள் இன்னும் கேள்விப் படேல்லையோ 

 
 
 

 

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளை கொலைசெய்த இலங்கைத் தாய் - லண்டனில் நடந்தது என்ன..? (முழு விபரம்)

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

நேற்றைய தினம் 30.06.2020 பிரித்தானியா மிட்சம் பகுதியில் தனது மகளை கத்தியால் குத்தி தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த பெண் முல்லைத்தீவு நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

 

இச் சம்பவம் தொடர்பிலும் அந்தத் தாய் தொடர்பிலும் உறவினர்கள் தெரிவித்த தகவலின்படி,

 

சுதா என எல்லோராலும் அழைக்க்ப்படும் நெடுங்கேணியைச் சேர்ந்த குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் என்னும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார் . தன் உயிருக்கு ஏதும் நடப்பின் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இறந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.

 

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) நெடுங்கேணியைச் சேர்ந்த சுதா தம்பதியினருக்கு சுடர்ணனன்(10), சயனிகா(4) என்னும் இரு பிள்ளைகள்.

 

சம்பவத்தன்று , தினமும் 4 மணிக்கு குளிக்கப் போகும் மகனை 3 மணிக்கு குளிக்கப்போகும்படி தாயார் வற்புறுத்தியதை அடுத்து குளிக்கச்சென்ற மகன் முடித்துவந்து பார்க்கையில் தாயார் இரத்தம் சொட்டச் சொட்ட படுத்திருந்ததைக் கண்டு அயலவர்களின் உதவியை நாடியதாகவும், பின்னர் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தகவலை தெரிவித்துள்ளான்.

 

உடன் அங்கு வந்த அயலவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியதையடுத்து அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் கத்தியால் குத்தப்பட்ட 4 வயது சிறுமி சயனிகாவையும், 35 வயது நிரம்பிய சுதாவையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கையில் சிறுமி சயனிகா உயிரிழந்துள்ளார். தாயார் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் அயலவர் தெரிவிக்கையில்,

 

பதற்றத்தோடு உதவி கேட்ட சிறுவனின் நான் பிளாட்டுக்குள் சென்றேன். படுக்கையறையில், எல்லா இடங்களிலும் ரத்தம் இருந்தது. தாயின் உடலில் ஒரு காயம் இருந்தது. அவள் இன்னும் பதிலளித்தாள், ஏதோ முணுமுணுத்தாள். பின்னர் நான் படுக்கையைப் பார்த்தேன், அவளுடைய மகள் அவள் பக்கத்தில் இருந்தாள். நான் மருத்துவ பயிற்சி பெற்றவள், அவள் போய்விட்டாள் என்று எனக்குத் தெரியும்.. உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன் என்றார்.

 

மேலும் அவர்கள் மிகவும் அருமையான குடும்பத்தினர். ஆனாலும் தாய் ஏதோ மனவருத்தத்தில் இருந்தாள் எனவும் அயலவர் தெரிவித்திருந்தார்.

 

நாங்கள் மிகவும் சோகமாக இருக்கின்றோம். இவ்வாறு நடந்திருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. சுதா மன வருத்தத்தில் இருந்தார். தற்போது இத் துயர்ச் சம்பவம் தொடர்பாக கருணாநிதி சிவானந்தம் மிகவும் குழப்பத்திலேயே இருக்கின்றார் என உறவினரான தினேஷ் சிவானந்தம் தெரிவித்திருந்தார்.

 

அப் பகுதியில் உள்ள தமிழ்க் கடை ஒன்றின் உரிமையாளர் பத்மநாதன் அரியரட்னம் தெரிவிக்கையில், மிகவும் அற்புதமான குடும்பம். அடிக்கடி கடைக்கு வருவார்கள். ஆனால் அந்த குறித்த தாய் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் அவர் ஆயுர்வேத வைத்தியத்தை (மூலிகை சிகிச்சை) நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

 

அயலவரான தபேகா துரைரட்ணேஸ்வரன் தெரிவிக்கையில் சிறுமி சயனிகா மிகவும் அழகானவள். அடிக்கடி இங்கு விளையாட வருவாள். அவளுக்கு இப்படி நடந்தது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மிகவும் கவலையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

 

மேலும் கருணாநிதி சிவானந்தம் சூப்பர்மார்க்கெட் செயின்ஸ்பெரியில் பணிபுரிபவர்.

 

இதுதொடர்பில் மேலும் சில உறவினர்கள் தெரிவிக்கையில், என்ன நடந்திருக்கும் என்பதனை சித்தரித்துக்கூட பார்க்கமுடியவில்லை ஆனால் திட்டமிட்டு செயற்படிருக்கின்றாள் சுதா என தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் செயின்ஸ்பெரியில் வேலைமுடித்து கணவன் 5 மணிக்கு வருவார் என தெரிந்தும் வழமையாக 4 மணிக்கு குளிக்க போகும் மகனை 3 மணிக்கு குளிக்க அனுப்பிவிட்டு தனது மகளையும் மாய்த்து, தன்னையும் மாய்க்க நினைத்துள்ளார். ஏனோ பாவம் குழந்தை உடனேயே உயிரைவிட சுதாவோ உயிர்தப்பியுள்ளார்.

 

மகன் சுடர்ணனனனோடு ஏதுமறியாத கருணாநிதி சிவானந்தம் என்ன நடந்தது, எவ்வாறு இதுந் அடந்தது எப்படி இது சாத்தியமாகும் என்ற மனக்குழப்பத்தில் செய்வதறியாது நிலைதடுமாறியுள்ளார்.

 

இந்நிலையில் இன்றைய தினமும் சுதா மருத்துவ அப்பொயிண்ட்மெண்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்த உறவினர்கள் இப்படி செய்துவிட்டாளே என கவலை தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் இக் கொலை தொடர்பில் வேறு யாரும் தொடர்புபடவில்லை என தெரித்துள்ளனர்.

 

குழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

 

குழந்தையின் தந்தையான கருணாநிதி சிவானந்தம் என்பவர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான சுடர்ணனன் அவர்களின் சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_23.html

Link to comment
Share on other sites

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. தனது மகளின்மீது அந்தத் தாய்கொண்ட அளவுக்கு மீறிய அன்பும், பாசமுமே இத்தகைய கொடூரத்தைச் செய்யவைத்துள்ளது. 

சயனிக்காவின் ஆத்மா இறவனடிசேர வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவினர் நண்பர்களிடம் தனது கவலைகள் பிரச்சனைகளை சொல்லாமல் அல்லது சொல்லமுடியாமல் தானே எடுத்த விபரீத முடிவு. தனக்கு கான்சர் என்றாலும் தகப்பனும் தமையனும் மகளை பார்த்துக்கொள்வார்கள் தானே. இன்னொரு உயிரை  மாய்ப்பதற்கு எமக்கு உரிமை இல்லை என்று  இந்த தாய்க்கு தோன்றவில்லை. மிகவும் கவலையான விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்..🙏

.தாயார் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை.இவ்வாறன செயல்பாடுகளை விவாதிக்க பட வேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

உறவினர் நண்பர்களிடம் தனது கவலைகள் பிரச்சனைகளை சொல்லாமல் அல்லது சொல்லமுடியாமல் தானே எடுத்த விபரீத முடிவு. தனக்கு கான்சர் என்றாலும் தகப்பனும் தமையனும் மகளை பார்த்துக்கொள்வார்கள் தானே. இன்னொரு உயிரை  மாய்ப்பதற்கு எமக்கு உரிமை இல்லை என்று  இந்த தாய்க்கு தோன்றவில்லை. மிகவும் கவலையான விடயம். 

 

38 minutes ago, யாயினி said:

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்..🙏

.தாயார் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை.இவ்வாறன செயல்பாடுகளை விவாதிக்க பட வேண்டிய அவசியம் இல்லை.

கொரோனா கொடுமை தான்...

ஆறுதல், தைரியம் சொல்ல உறவினர்களோ, நண்பர்களோ வரமுடியாத சூழல். டாக்டர்களும் போனில் தான் பேச்சு.

மனஉளைச்சல்..... மூலையினை குழப்பி விட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை என்ன பாவம் செய்தது? குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

கொரோனா கொடுமை தான்...

ஆறுதல், தைரியம் சொல்ல உறவினர்களோ, நண்பர்களோ வரமுடியாத சூழல். டாக்டர்களும் போனில் தான் பேச்சு.

மனஉளைச்சல்..... மூலையினை குழப்பி விட்டுள்ளது. 

அப்படி என்றில்லை.. எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடந்து விட்டால் உடன் சொல்வது மன உளைச்சல்,இது வழக்கமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு..இப்போ பத்தாததிற்கு கொரோனா சாட்டு..ஒரு நோய் என்று வந்துவிட்டால் அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்க வேண்டுமா..அந்தப் பிள்ளை பெண்ணாய் பிறந்ததை விட என்ன பாவம் செய்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

உறவினர் நண்பர்களிடம் தனது கவலைகள் பிரச்சனைகளை சொல்லாமல் அல்லது சொல்லமுடியாமல் தானே எடுத்த விபரீத முடிவு. தனக்கு கான்சர் என்றாலும் தகப்பனும் தமையனும் மகளை பார்த்துக்கொள்வார்கள் தானே. இன்னொரு உயிரை  மாய்ப்பதற்கு எமக்கு உரிமை இல்லை என்று  இந்த தாய்க்கு தோன்றவில்லை. மிகவும் கவலையான விடயம். 

 

11 hours ago, Nathamuni said:

 

கொரோனா கொடுமை தான்...

ஆறுதல், தைரியம் சொல்ல உறவினர்களோ, நண்பர்களோ வரமுடியாத சூழல். டாக்டர்களும் போனில் தான் பேச்சு.

மனஉளைச்சல்..... மூலையினை குழப்பி விட்டுள்ளது. 

 

9 hours ago, யாயினி said:

அப்படி என்றில்லை.. எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடந்து விட்டால் உடன் சொல்வது மன உளைச்சல்,இது வழக்கமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு..இப்போ பத்தாததிற்கு கொரோனா சாட்டு..ஒரு நோய் என்று வந்துவிட்டால் அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்க வேண்டுமா..அந்தப் பிள்ளை பெண்ணாய் பிறந்ததை விட என்ன பாவம் செய்தது...

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

அந்தப் பிஞ்சுக்  குழந்தையின்.... முகத்தைப் பார்க்க, கண்கள் கலங்குகின்றது.

பொதுவாக பெரும்பாலான....  பெண்களுக்கு,
40 வயதிற்கு மேல்... மாதவிடாய் நிற்கும் காலங்களில்...
மன அழுத்தம் ஏற்படும், என்று பல உளவியலாளர்கள் கூறியுள்ளது வாசித்துள்ளேன்.

அந்த நேரம் அவர்களுக்கு... மனதில் எவரோ ஒருவர்.. கட்டளை இடுவது போல், 
ஒரு செயலை சொல்லிக் கொண்டே இருப்பது மாதிரி... ஒரு பிரமை ஏற்படுமாம்.
சிறிது காலத்தில்... அந்தக் கட்டளைக்கு அவர்கள் பயந்து, 
அதனை நிறைவேற்றி விடுவார்களாம்.

அதே... பிரச்சினைதான்... இந்தத் தாய்க்கும், ஏற்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.

அந்த வயதுள்ள பெண்களில் ஏற்படும் மாற்றங்களை ... 
உறவினர்கள் நன்கு அவதானித்து, வைத்திய வசதியை நாடினால்...
உடனே  மறைந்து விடக் கூடிய, தற்காலிக மன அழுத்தம் தான் இது.
ஆனால்... இதனைப் பற்றிய விழிப்புணர்வு.. எமது சமூகத்தில் இல்லை என்பதே வேதனையானது.

நில்மினி, இதனைப் பற்றி.... "நலமோடு வாழ பகுதியில்"
விரிவாக விளக்கம் கூறினால்... நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையின் ஆத்மா சாந்தியடையட்டும்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....!

அந்தக் குடும்பத்தின் உள் விவகாரங்கள் தெரியாத வரை இதைப்பற்றி என்ன சொல்வது......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2019  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நடைபெற்ற ஊர்வலத்தில் சிறிய பிள்ளைகள் உள்ள மூன்று குடும்பங்களை முன்வரிசையில் விட்டோம். அப்ப கொடியைப் பிடித்துக்கொண்டு  உணர்வுபூர்வமாக  கத்தியபடிசென்றாள் இச்  சிறுமி.

Image may contain: 5 people, shoes and outdoor

இச் சிறுமியின் ஆத்மா சாந்தியடையட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது ஒரு குடும்பவிவகாரம் ஆகையால் அதைப்பற்றி எதுவும் எழுத எனக்கு விருப்பம் இல்லை, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

2019  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நடைபெற்ற ஊர்வலத்தில் சிறிய பிள்ளைகள் உள்ள மூன்று குடும்பங்களை முன்வரிசையில் விட்டோம். அப்ப கொடியைப் பிடித்துக்கொண்டு  உணர்வுபூர்வமாக  கத்தியபடிசென்றாள் இச்  சிறுமி.

Image may contain: 5 people, shoes and outdoor

இச் சிறுமியின் ஆத்மா சாந்தியடையட்டும் .

இதன் படி அவருக்கு இப்போ வயது 15 ஆக அல்லவா இருக்கவேண்டும்?
4 வயது சிறுமி என்று செய்தி சொல்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

இதன் படி அவருக்கு இப்போ வயது 15 ஆக அல்லவா இருக்கவேண்டும்?
4 வயது சிறுமி என்று செய்தி சொல்கிறது? 

மருதர் 2009 இல்லை 2019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லாத.... சம்மந்தம் ஒன்று உண்டு என்பதால் எழுதுகிறேன்.

இன்னொரு திரியில் துல்பன் கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் எழுதவில்லை 
வேலை நிமித்தம் நேரமின்னமையால் எழுத முடியவில்லை விரிவாக எழுத வேண்டும் என்பதால்.

எமது கலாச்சாரம் சார்ந்த தலைப்பு ஒன்று.

எந்த கலாச்சாரம் மனித வாழ்வை முழுமை காண வழி சமைக்கிறது? என்பதே நான் முன்வைத்த கேள்வி.
வாழ்வின் முழுமை 
மகிச்சியான வாழ்வு 
நிம்மதியான குடும்பம் 
நித்தியாமான நம்பிக்கை 

இவற்றை உலகில் எந்த கலாச்சார பின்னணி கொண்டுள்ளது?
தற்கொலைகள் .... விவாகரத்துகள் .... விவாகமின்னமை 
போன்றவை சுதந்திரம் எனும் மாயைக்குள் மறைக்க முடியுமா?

இந்த பெண்மணியின் விரக்தி நிலை எங்கு உருவானது?
இந்த முடிவை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்?
போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ஒற்றை வரிகள் அல்ல 
நாம் அலசி ஆராய நிறைய உண்டு.

நான் இந்துமதம் பற்றி காழ்ப்புணர்வு கொள்ளவும் எழுதவும் நிறைய காரணம் உண்டு 
தமிழரின் மொழியை காலச்சாரத்தை உள்ளிருந்தே ஒரு கிருமி போல அழித்து தமிழரை 
வெறும் மூடர் ஆக்குவதில் பெரும்பங்கு திட்டமிடுதலுடன் அதில் இருக்கிறது. 
அதை புரியும் நிலையில் கூட தமிழர்கள் இல்லை.

அருமைகளை தொலைத்து அசிங்கல்களை விலைகொடுத்து வாங்கியவர்கள் தமிழர்கள். 
வினோதமான விளம்பரங்களுக்கு மயங்கி இன்னமும் இது தொடர்கிறது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பெண்மணியின் மனநிலை குறித்து நாம் எழுதிவிட முடியாது 
இப்படியொரு முடிவை வெறும் கோமாளி தனமாக அவர் எடுத்திருக்க மாட்டார் 
நாம் ஆத்மா சாந்தியடையட்டும் என்று வெறும் வார்த்தை மட்டுமே எழுத முடியும் 
தாயின் வலியும் உணர்வும் அவரால் மட்டுமே உணர கூடியது. 

முடிந்த அளவுக்கு பிறரிடத்த்தில் அன்பாய் இருப்போம் 
ஒரு புன்னகை கூட சிலருக்கு உற்சாகம் கொடுக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

இதன் படி அவருக்கு இப்போ வயது 15 ஆக அல்லவா இருக்கவேண்டும்?
4 வயது சிறுமி என்று செய்தி சொல்கிறது? 

2019 தொடக்கம் 2020 வரை 15 ஆண்டுகளா ????? ஒன்றுமே புரியவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழரசு said:

 

இது ஒரு குடும்பவிவகாரம் ஆகையால் அதைப்பற்றி எதுவும் எழுத எனக்கு விருப்பம் இல்லை, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 

இந்த செய்தியின் பின்னணியில் எழும் விளைவுகளை யாருமே எண்ணிப்பார்க்க விரும்புகினம் இல்லை .

நமக்கோ இந்த கொலைதான் கடைசியாக புலம்பெயர் தமிழ் மக்களில் மன அழுத்த இழப்பாய் இருக்கனும் இனி ஒரு மனஅழுத்த கொலையோ தற்கொலையோ வேண்டாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடைக்காமல் குறைந்தது ஒரு நாள் அல்லது இரு நாளாவது வேலைக்கு போக வேண்டும் அல்லது சரட்டி[தொண்டு ] வேலைக்காவது போக வேண்டும்...அந்த பெண் தனக்கு கான்சர் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு இருக்கிறா அதை உறவினர்களுக்கும் சொல்லி இருக்கிறா...உறவினர்கள் அந்த பெண்ணோடு போய் அக்கறையாய் ,அன்பாய் கதைத்திருந்தால் அந்த பெண் இப்படி செய்திருப்பாவா ?...கணவருக்கும் அவவின் நிலை தெரியும் ....அப்படியிருந்தும் உரிய  நேரத்தில் சிகிச்சைக்கு கூட்டிப் போகாததால் அந்த பெண் தனது மகளை கொல்லும் அளவிற்கு  போயிருக்கிறார் [எவ்வளவு மனா அழுத்தம் இருந்திருக்கும்]...வீட்டில் கணவர் இல்லாத  நேரம் 5 வயசு மகளை கொடூரமாய் கொலை செய்து அதை 10  மகனை பார்க்க /தவிர்க்க விட்ட கொடூரத்தை என்ன என்று சொல்வது ...இவ்வளவு போர் ,இறப்புக்களை தாண்டி வந்த எங்கள் சமூகம் இவ்வளவு கோழையாய் இருப்பது வேதனையானது .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இந்த செய்தியின் பின்னணியில் எழும் விளைவுகளை யாருமே எண்ணிப்பார்க்க விரும்புகினம் இல்லை .

நமக்கோ இந்த கொலைதான் கடைசியாக புலம்பெயர் தமிழ் மக்களில் மன அழுத்த இழப்பாய் இருக்கனும் இனி ஒரு மனஅழுத்த கொலையோ தற்கொலையோ வேண்டாம்.

 

14 minutes ago, ரதி said:

பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடைக்காமல் குறைந்தது ஒரு நாள் அல்லது இரு நாளாவது வேலைக்கு போக வேண்டும் அல்லது சரட்டி[தொண்டு ] வேலைக்காவது போக வேண்டும்...அந்த பெண் தனக்கு கான்சர் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு இருக்கிறா அதை உறவினர்களுக்கும் சொல்லி இருக்கிறா...உறவினர்கள் அந்த பெண்ணோடு போய் அக்கறையாய் ,அன்பாய் கதைத்திருந்தால் அந்த பெண் இப்படி செய்திருப்பாவா ?...கணவருக்கும் அவவின் நிலை தெரியும் ....அப்படியிருந்தும் உரிய  நேரத்தில் சிகிச்சைக்கு கூட்டிப் போகாததால் அந்த பெண் தனது மகளை கொல்லும் அளவிற்கு  போயிருக்கிறார் [எவ்வளவு மனா அழுத்தம் இருந்திருக்கும்]...வீட்டில் கணவர் இல்லாத  நேரம் 5 வயசு மகளை கொடூரமாய் கொலை செய்து அதை 10  மகனை பார்க்க /தவிர்க்க விட்ட கொடூரத்தை என்ன என்று சொல்வது ...இவ்வளவு போர் ,இறப்புக்களை தாண்டி வந்த எங்கள் சமூகம் இவ்வளவு கோழையாய் இருப்பது வேதனையானது .

மிகவும் வேதனையாக... உள்ளது.
இது, வேறு ஒரு திரியில்...  பல,  தமிழ் குடும்பத்தினரை..
சென்று அடையக் கூடிய வகையில்... உரையாட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

மிகவும் வேதனையாக... உள்ளது.
இது, வேறு ஒரு திரியில்...  பல,  தமிழ் குடும்பத்தினரை..
சென்று அடையக் கூடிய வகையில்... உரையாட வேண்டும்.

நிச்சயம் உரையாடி இதற்கு என்ன தீர்வு, என்ன வழி என்றும் பார்க்கவேண்டும் 

16 hours ago, ரதி said:

வீட்டில் கணவர் இல்லாத  நேரம் 5 வயசு மகளை கொடூரமாய் கொலை செய்து அதை 10  மகனை பார்க்க /தவிர்க்க விட்ட கொடூரத்தை என்ன என்று சொல்வது ...இவ்வளவு போர் ,இறப்புக்களை தாண்டி வந்த எங்கள் சமூகம் இவ்வளவு கோழையாய் இருப்பது வேதனையானது .
 

மிகவும் உண்மை. 

On 1/7/2020 at 23:15, தமிழ் சிறி said:


ஆனால்... இதனைப் பற்றிய விழிப்புணர்வு.. எமது சமூகத்தில் இல்லை என்பதே வேதனையானது.

நில்மினி, இதனைப் பற்றி.... "நலமோடு வாழ பகுதியில்"
விரிவாக விளக்கம் கூறினால்... நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

நிச்சயம் தொடங்க வேண்டும் சிறி. மற்றும் இந்த அறிவுரைகள் சம்பந்தப்பட்டோருக்கு சென்றடையவும் வேணும் . உங்கள் செல் போன் சம்பந்தமான கேள்விக்கு இன்று பதிவு போடுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கோலை என்பது வேறு ஒருவரை அழித்துவிட்டு
தானும்  தற்கொலை செய்வது  என்பது வேறு

அதிலும்  பெற்ற பிள்ளையை  கொன்று தன்னுடன்  எடுத்துச்செல்வதாக கொலை செய்வது

மூடநம்பிக்கையின்  உச்ச  மனநோய்

பச்சிளம்  குருத்துக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை ஜரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உதவி செய்வர். ஆனால் லண்டனில் தமிழருக்கு அந்த பழக்கம் இல்லை ...போட்டி ,பொறாமை ,எரிச்சல் இங்குள்ளவர்களுக்கு அதிகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.