Jump to content

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த முடிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஜரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உதவி செய்வர். ஆனால் லண்டனில் தமிழருக்கு அந்த பழக்கம் இல்லை ...போட்டி ,பொறாமை ,எரிச்சல் இங்குள்ளவர்களுக்கு அதிகம்.

நானும் கவனிச்சிருக்கிறன். சொந்தங்களுக்குள்ளையே எரிச்சல் பொறாமை வெட்டுக்கொத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 23:42, தமிழ் சிறி said:

 

மிகவும் வேதனையாக... உள்ளது.
இது, வேறு ஒரு திரியில்...  பல,  தமிழ் குடும்பத்தினரை..
சென்று அடையக் கூடிய வகையில்... உரையாட வேண்டும்.

சிறித்தம்பி! என்ன பிரச்சனையெண்டாலும் மனம் விட்டு கதைச்சாலே அரைவாசி வருத்தங்கள் பறந்துடும். வெட்கம், மரியாதைக்குறைவு எண்டு மனதுக்கையே அடக்கி அடக்கி  வைச்சிருக்கிறதாலை தான் கன வருத்தங்களுக்கு முக்கிய காரணம்.

உதாரணத்துக்கு எனக்கு கோபம் வந்தாலோ இல்லாட்டி ஒரு விசயம் பிடிக்காட்டிலோ அந்த இடத்திலையே வைச்சு கொட்டி தீர்த்துடுவன். அது ஆரெண்டாலும் பரவாயில்லை.ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.எனக்கு இருக்கிற வருத்தங்களை கூட வெளியிலை சொல்ல நான் வெட்க்கப்படுறதில்லை.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஜரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உதவி செய்வர். ஆனால் லண்டனில் தமிழருக்கு அந்த பழக்கம் இல்லை ...போட்டி ,பொறாமை ,எரிச்சல் இங்குள்ளவர்களுக்கு அதிகம்.

 

On 3/7/2020 at 10:32, பெருமாள் said:

இந்த செய்தியின் பின்னணியில் எழும் விளைவுகளை யாருமே எண்ணிப்பார்க்க விரும்புகினம் இல்லை .

 

21 hours ago, nilmini said:

நிச்சயம் உரையாடி இதற்கு என்ன தீர்வு, என்ன வழி என்றும் பார்க்கவேண்டும் 

ஐரோப்பாவில் உள்ளவர்கள் ஏறத்தாழ சமூகத்தில் ஒரே மட்டத்தில் உள்ளவர்கள். 

UK அதற்கு எதிர்மாறானது.  

இதில் UK இல் உழைத்து உயர்ந்தவர்களுடன், வெளியில், ஐரோப்பாவில் இருந்து கூட பல முறையற்ற வழிகளில் உழைத்து,   பணத்தை கொண்டு வந்து முதலிட்டு இருப்பவர்களும் உள்ளார்கள்.

எனவே, மனிதருக்கு இருக்கும் உண்மையான குணங்கள் இயற்றக்கையாகவே வெளிப்படக் கூடிய சமூக வெளியை UK இல் இருக்கிறது.   

ஆனால், இந்த நிகழ்வு நடந்தது, இந்த பெண்ணின், கணவரின்  தனது சமூகம் தவிர்ந்து உதவி பெற தயங்கியது.

மற்றது, தான் இறந்தாலும் தனது சந்ததி  பிழைப்பது (எப்படி என்றாலும்) என்பதை யோசிக்காமல், தனது பிள்ளை எப்படி வாழுமோ என நினைப்பது.  இந்த பெண் இப்படியாக தனது மகனை யோசிக்காமல் விட்டது நலம். 

இப்படியான சிந்தனை, எமது மரபணுவில் பதிந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். எமது சமூக சிந்தனை மற்றும் வளர்ப்பிலும் இப்படியான மனநிலை வருவதற்கு ஓர் காரணம். 

1) இந்த பெண் செய்தது.

2) கிழக்கு London இல்  கடையில் வேலை செய்தவர் செய்தது.

இது ஒப்பீட்டளவில் சாதாரண நிலையில் இருந்தவர்கள்.

3) 3-4 கிழமைக்கு முதல் whatsapp இல் வந்தது. தமிழ் நாட்டில் மிகவும் உயர் திறமை சித்தி அடைந்து, US இற்கு வந்து, வசதியாக வாழ்ந்த ஒருவர், வேலை இழந்து, சிரமத்தின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை.

4)  2009 - 2010, இந்தியாவில் இருந்து US வந்து, மிகவும் வசதியாக வாழ்ந்தவர், 2009 stock market விழுந்து, பணத்தை இழந்து, தனது 16 வயது மகன், மனைவி, 14 வயது மக்கள் மற்றும் மாமியாருடன் தற்கொலை.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.