Jump to content

வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் ; கஜேந்திரகுமார் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் ; கஜேந்திரகுமார் நேர்காணல்

June 30, 2020
  • நேர்கண்டவர்; ரொஷான் நாகலிங்கம்

“தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்” என்றும் கூறுகின்றார்.

gajen-00.pngஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேர்காணலின் விபரம் வருமாறு:

 

கேள்வி:- எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட- கிழக்கில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றமை தொடர்பாக தமிழ் மக்களின் பார்வை எவ்வாறுள்ளதாக கருதுகிறீர்கள்? 

பதில்:- தேசியத் தலைவர் காட்டிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களைச் சரியாக வழிநடாத்தி அரசியல் அபிலாசைகளுக்காகவும் பாடுபடுவார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக ஏமாந்து மாற்று அணியைத் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடம்புரண்டு தமிழ் அரசியல் ஒரு பிழையான திசைக்கு கொண்டு செல்லப் போகின்றார்கள் என்ற விடயத்தை நாங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி எங்கள் மக்களுக்குத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம்.

 

இவ்வாறான சூழலில் எங்கள் தரப்பை எமது மக்கள் ஏற்று அங்கீகரிக்கின்ற நிலை உருவாகியுள்ள நிலையில், அதனைக் குழப்புவதற்காகப் பல்வேறு தரப்புக்களை சிறிலங்கா அரசு மற்றும் தமிழ் அரசியலைப் பாவிக்க விரும்பும் வல்லரசுகள் சேர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறக்கியுள்ளார்கள்.

 

தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்.

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களுக்குத் தலைமைத்துவம் வழங்கக் கூடிய வகையில் மிகப் பலமான ஆணையைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்குவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. நாங்களும் தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு தற்போது நிலவும் பூகோளப் போட்டித் தன்மைகளைப் பயன்படுத்தி, வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் நலன்களுக்காகப் பேரம் பேசி தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம். இதன்மூலம் தமிழ்மக்கள் கணிசமான முன்னேற்றத்தை எதிர்வரும் ஐந்து வருடங்களில் அடைவார்கள் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

கேள்வி:- இந்த முறை பொதுத் தேர்தலில் வட- கிழக்குப் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் அதிகமாகப் போட்டியிடுவதற்கான காரணம் என்னவெனக் கருதுகிறீர்கள்?

பதில்:- தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த அரசியல் மோசடி நடவடிக்கைகளால் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அந்த மாற்றுத் தரப்பைத் தமிழ்மக்கள் தேடுகின்ற நிலையில் தென்னிலங்கை கட்சிகள் கூட மக்களுக்கு சலுகைகளை காட்டி, கோடிக் கணக்கில் பணம் கொட்டுவதற்குத் தயாரென போலி நம்பிக்கைகளை மக்களுக்கு கொடுத்து, சரியான தேர்வைச் செய்ய விடாது குழப்புவதற்காக வேறு தெரிவுகளை அடையாளப்படுத்தித் தாங்களும் இலாபம் பெறலாமென நினைக்கிறார்கள்.
எனினும், பொதுத் தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு எந்தவிதமான அங்கீகாரத்தையும் தமிழ்மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இந்த விடயத்தில் தமிழ்மக்கள் மிகத் தெளிவாகவிருக்கிறார்கள்.

கேள்வி:- கொரோனாவின் பின்னரான சூழ்நிலையில் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளமையால் தேர்தலில் அவர்களின் ஆர்வம் எவ்வாறு காணப்படுகிறது? 

பதில்:- கொரோனா எனும் ஆபத்தான நிலைமை காணப்படும் சூழலில் இந்த அச்சநிலையையும் தாண்டித் தமிழ்மக்கள் சரியானதொரு முடிவை எடுத்து, சரியானதொரு தலைமைத்துவத்தைத் தேர்வு செய்ய வேண்டுமென்ற ஆர்வம் நிச்சயம் அவர்களிடம் காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக நம்பிய நிலையில் தமிழ்மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் எமது இனத்தை அழித்த கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்து வரும் நிலையில் இனியும் தமிழ்மக்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.

தமிழ் மக்கள் கடந்த-11 ஆண்டுகளாக கூட்டமைப்பை நம்பி வாக்களித்தது போன்று இனியும் தமிழ்மக்கள் வாக்களிப்பார்களேயானால் அதனுடைய விளைவுகள் மிகவும் பாரதூரமாகவிருக்கும் என்பதில் தமிழ்மக்கள் மிகத் தெளிவாகவிருக்கிறார்கள்.

ஆகவே, எங்கள் மக்கள் கொரோனா வைரஸ் நோயையும் தாண்டி, சுகாதார விதிமுறைகளைப் பேணித் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள். அந்தளவுக்கு ஓர் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக எதிர்வரும் பொதுத் தேர்தல் காணப்படுகிறது.

கேள்வி:- கொரோனாத் தொற்றின் தாக்கம் காரணமாக வட- கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்கு உதவிகள் சரிவரச் சென்றடைந்தது எனக் கருதுகின்றீர்களா? 

பதில்:- இலங்கைத் தீவில் சிங்களக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் காணப்படும் நிலையில் அவர்கள் எவரும் கொரோனா காலத்தில் தமிழ்மக்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே 30, 35 வருட காலமாகப் போரால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைந்து காணப்படும் எமது இனம் கொரோனா காரணமாக மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கொரோனா காரணமாகப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு தமிழ்மக்களைத் தவிர வேறு எவரும் உதவி செய்ய முன்வரவில்லை.

தென்னிலங்கை தரப்புக்களைச் சேர்ந்த எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்தாலும் கூட தமது ஆட்சியதிகாரத்தை ஓர் இனவாத நோக்குடன் மாத்திரம் தான் பயன்படுத்துவார்கள் என்பது கடந்த காலங்களில் நிரூபணமாகியுள்ளது. கொரோனா காலத்திலும் அவர்கள் தமிழ்மக்களுக்கு உதவிகள் எதனையும் செய்யாதது மூலம் அவர்கள் தங்களை யாரென மீண்டும் உணர வைத்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கூட கோரோனா காலமான கடந்த மூன்று மாதங்களாக உழைக்க முடியாத நிலையில் பரிதவித்ததுடன், பட்டினியாலும் வாடிய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் தமிழ்மக்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இத்தகைய சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் களத்தில் மக்களை நேரில் சென்று சந்திக்க முடியாதளவுக்கு அவர்களின் வெறுப்பைச் சந்தித்துள்ளனர்.

புலம்பெயர் மக்களும் கொரோனாப் பேரிடர் காரணமாக அந்தந்த நாடுகளில் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும், அவர்கள் தாயகத்திலுள்ள மக்களின் அவல நிலையை நன்கு விளங்கிக் கொண்டு எங்கள் ஊடாக உதவிகள் செய்வதற்கு முன்வந்தனர். இந்நிலையில் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எங்கள் புலம்பெயர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு- கிழக்கு முழுவதும் எங்கள் மக்களுக்கான உதவிகளை வழங்கியிருந்தோம். இது எங்கள் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆகவே, கொரோனா அசாதாரண நிலை எங்கள் மக்களுக்கு இன்னும் தெளிவை, ஓர் கூர்மையான பார்வையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. தமிழ்மக்களை உண்மையில் யார் நேசிக்கிறார்கள்? என்பதும் இதன்மூலம் தெளிவாகியுள்ளது.

கேள்வி:- தேர்தல் காலங்களில் பலரும் வாக்குறுதிகள் வழங்குகின்றார்கள். அந்த வாக்குறுதிகள் வழங்கும் படலம் தொடர்கின்றமை தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன? 

பதில்:- ஓர் கொள்கை இல்லாத, ஓர் தெளிவான இலக்கினைக் கொண்டிராத தரப்புக்கள் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற வேண்டுமாகவிருந்தால் ஏதோவொரு வகையில் மக்களை ஏமாற்றவே குறியாகவிருப்பார்கள்.
கடந்த- 11 வருடங்களாகத் தமிழ்மக்களை ஏமாற்றியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் என்பது ஒருபுறமிருக்க கூட்டமைப்புத் தவிர்ந்த ஏனைய தரப்புக்களாகவிருப்பவர்களும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ, தமிழ்மக்களுக்கு மிகவும் தேவையாகவிருக்கக் கூடிய இனப் படுகொலைக்கான ஓர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அதனைக் கொண்டு வருவதற்கு ஓர் திட்டமில்லாதவர்களாக காணப்படும் நிலையில் பலவிதமான பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி வாக்களிக்க வைப்பது தான் அவர்களின் நோக்கமாகவிருக்கிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிழையான பாதையில் செல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டுத் தமிழ்மக்களிடம் நேரடியாகச் சென்று தமிழ்மக்களுக்கு வரப் போகும் ஆபத்துக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

எனவே, பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கக் கூடிய ஏனைய தரப்புக்களுக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நேர்மையான அரசியலுக்குமிடையில் காணப்படும் வித்தியாசத்தையும் எமது மக்கள் நன்கு விளங்கிக் கொண்டு செயற்படுவார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.

கேள்வி:- தேர்தலுக்குப் பின்னர் தென்னிலங்கை நிலைமை வட- கிழக்கில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கருதுகின்றீர்கள்? 

பதில்:- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அணி தென்னிலங்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுப் புதியதொரு அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான அனைத்துச் செயற்பாடுகளும் திட்டமிட்டுத் தமிழ்த் தேசியத்தை இல்லாமல் செய்கின்ற நோக்கத்துடன் தான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

பாராளுமன்ற அரசியலை அல்லது இலங்கையிலுள்ள ஜனநாயக அரசியலை எடுத்து நோக்கினால் சிங்களக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் தனித் தரப்பாகப் பெறும் வாய்ப்பிருந்தால் தமிழ்மக்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இலங்கையிலுள்ள அரசியல் நிலைமையில் கிடையாது.
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த நிலையில் பேரம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருந்தது. மாதம் தோறும் புதுப் புதுச் சட்டங்கள் நிறைவேற்றவும் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டது.

அதுமாத்திரமன்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, நான்கரை வருடங்களாகப் பல விடயங்களுக்காக அரசாங்கத்துடன் பேரம் பேசிக் கணிசமான முன்னேற்றங்களைக் கூட்டமைப்புத் தமிழ்மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

எனினும், தற்போதைய நிலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற இலக்கை கோட்டாபய ராஜபக்ச பெறுவாரெனத் தென்னிலங்கையில் பரவலாகப் பேசப்படும் நிலையில் பாராளுமன்றத்தை வைத்துக் கொண்டு நாம் எங்களுக்குரிய பலத்தை ஏற்படுத்த முடியாது.

கோட்டாபய ராஜபக்ச ஓர் இனப்படுகொலையாளி, அவர் தான் எங்கள் இனத்தை அழித்தார் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேசக் குற்றவியல் தீப்பாயத்திலோ முன்னிலைப்படுத்திப் பொறுப்புக் கூற வைப்பது தான் பேரம் பேசுவதற்கான முக்கிய கருவியாகவுள்ளது.

எனவே, பொறுப்புக் கூறல் தொடர்பில் சர்வதேச அரங்கைச் சரியாக கையாளக் கூடிய தரப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான் காணப்படுகிறது.
 

http://thinakkural.lk/article/50505

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.