Jump to content

ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

July 1, 2020

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் பதிவு பொறி முறைமையைத் துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாகப் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

 

காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக நேற்று 30 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

gotha.jpg

ஈ – காணி (இலத்திரனில் முறைமை) பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணினிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை பெற்றுக்கொள்ளும்போது கணினிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு இணையவழி மூலம் காணி பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு ஈ – காணி (இலத்திரனில் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர் ஷனி, நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி. பெரேரா இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
 

http://thinakkural.lk/article/50733

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மோசமான பேர்வழிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தில் கை வைப்பார்கள். ☹️

தேச வழமைச் சட்டம் தொடர்பாக விளக்கம் தருவதற்கு எங்கள் கோசான் சே இருந்தால் உதவியாக இருந்திருக்கும்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கெதியா யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தில் கை வைப்பார்கள். ☹️

தேச வழமைச் சட்டம் தொடர்பாக விளக்கம் தருவதற்கு எங்கள் கோசான் சே இருந்தால் உதவியாக இருந்திருக்கும்.🙂

தேசவழமை சட்டம் இலங்கையின் சட்டத்தினுள் இடம் பிடித்துள்ள ஒன்று. அது ஒரு common sense இணை அடிப்படையாக கொண்டதாலேயே டச்சு காரர்கள் அதனை சட்டமாக்கினார்கள்.

அதாவது உங்களுக்கு ஒரு காணி, உங்கள் பரம்பரை சொத்து, உள்ளது. நீங்கள் அதனை விற்க முடிவு செய்தால், தேசவழமை சட்டப்படி, முதலில் உங்கள் சகோதரங்களுக்கோ, வாங்கக்கூடிய உறவினர்களுக்கோதான் முதலில் offer பண்ணனும். பரம்பரை சொத்து, குடும்பத்தின் கையினை விட்டு போகக்கூடாது என்று ஒரு உறவு நினைத்தால் அதில் தவறு இல்லை என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை.

யாரும் வாங்க முன்வராவிடில் வெளியே விற்பீர்கள்.

அப்படி ஒருத்தருக்கும் சொல்லாமல் விற்பனை செய்தால், உங்கள் உறவு கோர்ட்டுக்கு போய், உங்களுக்கு வந்த பணத்தினை நான் தருகிறேன். தேசவழமை சட்டப்படி எனக்கு அந்த சொத்து வரவேண்டும் என்றால், நீங்கள் என்ன விலைக்கு வித்தீர்களோ, அந்த அளவு பணம் உங்களிடம் வாங்கியவருக்கு போக, ஆதனம் உங்கள் உறவுக்கு போகும். இது நீங்கள் நீதிமன்று போகாமலே நடக்கும்.

இதில நடைமுறை சிக்கல் என்னவெண்டால், முத்திரை வரியை குறைக்க, நீங்கள், 100 ரூபாவுக்கு வித்ததை, 40 ரூபா என்று சொல்லி பதிந்து இருப்பியள்.

வாங்கினர்.... திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி... வந்து உங்களிடம் நிற்பார்... மிச்சக்காசை வை என்று.

நீங்கள் தான் காசை இழந்தவராக முடியும். ஆகவே இந்த வேலையினை, உறவுக்குள் கொடுப்பதன் மூலம், கச்சிதமாக செய்து முடிக்கலாம். கோட்டு பிரச்னையும் வராது.

இந்த சட்டத்தில் கை வைக்காமல் இருப்பதன் காரணம், சட்டம் மாத்தினாலும், நீங்கள் உங்கள் உறவுக்கு தான் விக்கபோகிறீர்கள் என்பதனை எப்படி தடுப்பது?

சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீங்கள் யாருக்கு விற்கப்போகிறீர்கள் என்பது உங்கள் முடிவு.

சட்டம் இருப்பதால், உங்கள் உறவுகள் இடையே யாருக்கு வியாபாரம் செய்வது என்பதும் உங்கள் முடிவு தான். 

ஆனாலும், வெளியில் கொடுத்தால் கூடுதலான பணம் வரும் என்றால், நீங்கள் உறவுகளுடன் சமரசம் செய்து கொள்வீர்கள். அவர்களும் ஒத்துழைப்பார்கள். இதுதான் நிதர்சனம்.

சட்டம் மாத்தினால், ஒரு முஸ்லீமுக்கோ, சிங்களவருக்கோ விற்பனை செய் என்று சொல்ல முடியாதல்லவா. 

அதிலும் பார்க்க முக்கியமாக, ஒரு குறித்த சமூகம், தம்மிடையே வேறு சமூகத்தவர் வந்து இருப்பதனை விரும்புவதில்லை. ஆகவே அவர்கள், எப்படியாவது அந்த ஆதனம், வெளியே போகக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி, தமக்குள் வாங்கிக் கொள்வர். ஆகவே சட்டத்தினை மாத்தினாலும் பிரயோசனம் இல்லை என்பதாலேயே, அதில் கை வைக்காமல் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தேசவழமை சட்டம் இலங்கையின் சட்டத்தினுள் இடம் பிடித்துள்ள ஒன்று. அது ஒரு common sense இணை அடிப்படையாக கொண்டதாலேயே டச்சு காரர்கள் அதனை சட்டமாக்கினார்கள்.

அதாவது உங்களுக்கு ஒரு காணி, உங்கள் பரம்பரை சொத்து, உள்ளது. நீங்கள் அதனை விற்க முடிவு செய்தால், தேசவழமை சட்டப்படி, முதலில் உங்கள் சகோதரங்களுக்கோ, வாங்கக்கூடிய உறவினர்களுக்கோதான் முதலில் offer பண்ணனும். பரம்பரை சொத்து, குடும்பத்தின் கையினை விட்டு போகக்கூடாது என்று ஒரு உறவு நினைத்தால் அதில் தவறு இல்லை என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை.

யாரும் வாங்க முன்வராவிடில் வெளியே விற்பீர்கள்.

அப்படி ஒருத்தருக்கும் சொல்லாமல் விற்பனை செய்தால், உங்கள் உறவு கோர்ட்டுக்கு போய், உங்களுக்கு வந்த பணத்தினை நான் தருகிறேன். தேசவழமை சட்டப்படி எனக்கு அந்த சொத்து வரவேண்டும் என்றால், நீங்கள் என்ன விலைக்கு வித்தீர்களோ, அந்த அளவு பணம் உங்களிடம் வாங்கியவருக்கு போக, ஆதனம் உங்கள் உறவுக்கு போகும். இது நீங்கள் நீதிமன்று போகாமலே நடக்கும்.

இதில நடைமுறை சிக்கல் என்னவெண்டால், முத்திரை வரியை குறைக்க, நீங்கள், 100 ரூபாவுக்கு வித்ததை, 40 ரூபா என்று சொல்லி பதிந்து இருப்பியள்.

வாங்கினர்.... திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி... வந்து உங்களிடம் நிற்பார்... மிச்சக்காசை வை என்று.

நீங்கள் தான் காசை இழந்தவராக முடியும். ஆகவே இந்த வேலையினை, உறவுக்குள் கொடுப்பதன் மூலம், கச்சிதமாக செய்து முடிக்கலாம். கோட்டு பிரச்னையும் வராது.

இந்த சட்டத்தில் கை வைக்காமல் இருப்பதன் காரணம், சட்டம் மாத்தினாலும், நீங்கள் உங்கள் உறவுக்கு தான் விக்கபோகிறீர்கள் என்பதனை எப்படி தடுப்பது?

சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீங்கள் யாருக்கு விற்கப்போகிறீர்கள் என்பது உங்கள் முடிவு.

சட்டம் இருப்பதால், உங்கள் உறவுகள் இடையே யாருக்கு வியாபாரம் செய்வது என்பதும் உங்கள் முடிவு தான். 

ஆனாலும், வெளியில் கொடுத்தால் கூடுதலான பணம் வரும் என்றால், நீங்கள் உறவுகளுடன் சமரசம் செய்து கொள்வீர்கள். அவர்களும் ஒத்துழைப்பார்கள். இதுதான் நிதர்சனம்.

சட்டம் மாத்தினால், ஒரு முஸ்லீமுக்கோ, சிங்களவருக்கோ விற்பனை செய் என்று சொல்ல முடியாதல்லவா. 

அதிலும் பார்க்க முக்கியமாக, ஒரு குறித்த சமூகம், தம்மிடையே வேறு சமூகத்தவர் வந்து இருப்பதனை விரும்புவதில்லை. ஆகவே அவர்கள், எப்படியாவது அந்த ஆதனம், வெளியே போகக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி, தமக்குள் வாங்கிக் கொள்வர். ஆகவே சட்டத்தினை மாத்தினாலும் பிரயோசனம் இல்லை என்பதாலேயே, அதில் கை வைக்காமல் இருக்கிறார்கள்.

அதனை இல்லாமல் செய்யும் முயற்சிகள் ஆரம்பமாகி பல காலமாகிவிட்டது  நாதர்ஸ். என்ன வேகம் கொஞ்சம் மட்டு. அவ்வளவும்தான். சம்பிக்கதான் இதன் பின்ணணியில் என்று கொழும்பை மையமாகக் கொண்ட சிரேஸ்ர சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதனை இல்லாமல் செய்யும் முயற்சிகள் ஆரம்பமாகி பல காலமாகிவிட்டது  நாதர்ஸ். என்ன வேகம் கொஞ்சம் மட்டு. அவ்வளவும்தான். சம்பிக்கதான் இதன் பின்ணணியில் என்று கொழும்பை மையமாகக் கொண்ட சிரேஸ்ர சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார். ☹️

அது தான் சொன்னேன். ஆரம்பித்து, அதிலுள்ள பிரயோசனமின்மை புரிந்து கைவிடப்பட்டது.

செய்யவேண்டியதாக இருந்தால் பண்டா, டட்லி, சிறிமா, ஜேஆர் செய்யாமல் சும்மா பாட்டாலியிடம் விட்டு இருந்திருப்பார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.