Jump to content

பன்மைத்துவ கற்றலும் கற்பித்தலும் – இரா.சுலக்ஷனா…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பன்மைத்துவ கற்றலும் கற்பித்தலும் – இரா.சுலக்ஷன.

Belmont.jpg

மனிதர் அவர்தம் உடல் இயக்கமும், வாழ்வியல் இயக்கமும் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்வு தான் என்பது, தூண்டலுக்கு ஏற்ப துலங்கல் என்ற மனிதரின் அடிப்படை உடலியக்க செயற்பாட்டின் ஊடாக வெளிப்பட்டு நிற்கும் உண்மை நிலைப்பாடாகும். இந்த அடிப்படையில் நோக்கும்போது தூண்டல் – துலங்கல் என்ற இயல்பொத்த செயற்பாட்டில் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயல்முறைகளின் செல்வாக்கு நிலையினை அவதானிக்கலாம்.
தூண்டல் காரணி ஒன்றாக அமைகின்ற போதும், துலங்கல் என்பது அவரவர் அனுபவம் சார்ந்து, இயல்பு நிலை சார்ந்து, சூழல் சார்ந்து, பிறப்புரிமை சார்ந்து மாறுபட்டு அல்லது வேறுபட்டு அமையும் என்பதும் இயல்பான நிலைப்பாடாகும்.

ஆக மனிதரின் உடல் இயக்க அடிப்படையே, அதன் துலங்கல் முறையில் அல்லது செயற்பாட்டில் பன்மைத்துவத்தை ஏற்கின்ற நிலையில், உடல் இயக்க நிலையின் சாரமாக அல்லது மையமாக தொழிற்படும் கற்றல் – கற்பித்தல் என்பதும் பன்மைத்துவத்தை ஏற்கின்ற பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகின்ற செயல் ஒழுங்காக அமைதலும், அமையப் பெறுதலும் தேவைப்பாடுடையதாகிறது.

கற்றல் என்ற செயற்பாடு அதன் அடிப்படை நிலையில், நூலறிவு, அனுபவ அறிவு, சமகால நிகழ்வுகளை புரிந்து கொள்ளலும், புரிதலுக்கு ஏற்ப செயற்படும் சமயோசித நிலையும் என இன்னபிற விடயங்களோடு தொடர்புடைய ஒழுங்கு என்ற நிலைப்பாட்டில் நின்றும் சிந்திக்கின்ற பட்சத்தில், இயல்பு நிலையிலேயே கற்றல் என்பது பன்மைத்துவ கூறுகளை உள்ளடக்கிய செயல் ஒழுங்கு என்பது தெளிவாகிறது.

ஆக, கற்றல் என்ற பன்மைத்துவ செயலொழுங்கு, கற்பித்தல் என்ற இன்னொரு நிலையில் பிரயோகிக்கப்படும் போது பன்மைத்துவத்தை ஏற்றலும், அங்கீகரித்தலும் இயல்பாக இடம்பெற வேண்டிய நிகழ்வுகளே. ஆயினும், சமகால சூழல் என்பது கற்றல் – கற்பித்தல் என்ற இயல்பாகவே பன்மைத்துவத்தை ஏற்கின்ற செயலொழுங்குகளை நூலறிவு அதாவது பரீட்சையோடு மட்டிட்டு நிற்கின்ற அறிவு என்ற ஒற்றைக் குவிமையமாகவே வடிவமைத்திருக்கின்ற நிலையையே அவதானிக்க முடிகிறது.

விளக்கி சொல்லப்போனால், இன்றைய நிலையில் கல்வி என்பது வியாபாரமாக மாறி போன அவலச் சூழலில், ஏற்கனவே காலனியக்காரர்கள் வடிவமைத்து தந்ததை வைத்துக் கொண்டு, இன்றளவில் உரு கொண்டு நிற்கின்ற கல்வித் திட்ட செயலொழுங்கில் கற்றலும் – கற்பித்தலும் பரீட்சை சார்ந்தும், புள்ளிகள் சார்ந்தும் மட்டிட்டு நிற்கின்ற நிலையின் வெளிப்பாடு என்பதாகும்.

உண்மையில், கற்றல் என்பது அதன் பிறப்பிலே பன்மைத்துவக் கூறுகளை உடையது எனினும், சமகாலத்தில், அத்தகைய பன்மைத்துவங்களை மறுதலித்து, பரீட்சார்த்தம் அல்லது சான்றிதழ் மையப்பட்ட கற்றல் என்ற ஒற்றை குவிமையமாகவே, கற்றல் என்ற பன்மைத்துவ செயலொழுங்கு வடிவமைக்கப்பட்டு நிற்கின்ற நிலையை பரந்தளவில் அவதானிக்க முடிகிறது.

இத்தகைய ஒற்றை குவிமையப் பார்வையில் கற்றலினுடைய அடிப்படை இயல்பு மறுதலிக்கப்படுவதோடு, சமூகம்சார் எதிர்வினையாற்ற வேண்டிய தேவையை அல்லது சிந்தனையை பாழ்படுத்திவிட்ட நிலையையே அவதானிக்க முடிகிறது.

GK-Q-A-Top.jpg

இந்நிலையில்தான் பரீட்சை – புள்ளி என்ற பாதையில் பன்மைத்துவ இயல்புடைய மாணாக்கரும் அடையாளமற்றுப்போய்விடுகின்றனர். குறிப்பாக, எவ்வாறு கற்றல் என்ற பன்மைத்துவ செயலொழுங்கு பரீட்சையோடு மட்டிட்டு நிற்கின்ற அறிவாக மாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அவ்வாறுதான் கற்பித்தல் என்ற செயலொழுங்கும் போட்டிப்பரீட்சை அல்லது புள்ளியை மையப்படுத்தியதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய ஒற்றை குவிமையப் பார்வை, பன்மைத்துவ இயல்புடையவர் வெளிப்பாட்டிற்கு தடையாக இருப்பதோடு, பன்மைத்துவ இயல்புடையவரை பரீட்சை – புள்ளி என்ற அடிப்படையில் மட்டிட்டு, படித்தவர், பாமரர் என்ற பிரிவினையையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஆக இத்தகைய சமகால வெளியீடுகள், கற்றல் என்ற செயலொழுங்கின் பன்மைத்துவ நிலையின் புரியாமையினது நிலைப்பாடு என்பது தெளிவாகிறது. பன்மைத்துவக் கற்றல் என்பது எவ்வாறு மறுதலிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்வாறே பன்மைத்துவக் கற்பித்தல் என்பதும் மறுதலிக்கப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது. எப்படி, எதை ஃஎன்ன என்ற இரு வினாக்களை முன்னிறுத்தி செயற்படவேண்டிய கல்வியியல் – கற்பித்தல் செயல்பாடு, பரீட்சை – புள்ளி என்ற ஒற்றை குவிமைய நோக்குடையதாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு இடமின்றி தகவல் வழங்கலும் பெறலும் என்ற முறையில் கற்பித்தல் செயன்முறை இடம் பெறுவதோடு, அசாதாரண சூழல் ஒன்றிலும் அவரவர் சுயம் சார்ந்து செயற்படுகின்ற நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல, கற்றல் என்பது நூலறிவு, சமயோசித சிந்தனை, சமகால அறிவு, சூழல்சார் அறிவு, அனுபவ அறிவு என இன்னபிற விடயங்களோடு தொடர்புற்று, பன்மைத்துவமுடையதாக இருக்கிறதோ, அதேபோல் இத்தகைய பன்மைத்துவங்களை விளங்குவதற்கும், புரிவதற்குமான செயலொழுங்காக கற்பித்தல் முறையும் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தகைய பன்மைத்துவ கற்பித்தல் முறைமை தான், பன்மைத்துவ இயல்புடையோர் வெளிப்படுகைக்கும் களமாக அமையும். ஆனால் நடைமுறை கற்பித்தல் என்பது, பரீட்சைக்குத் தயார்படுத்தல் என்ற குறுகிய நோக்கோடு மட்டிட்டு நிற்கின்ற நிலையையே அவதானிக்க முடிகிறது.

கற்றல் – கற்பித்தல் என்பவற்றின் இறுதி நோக்கு என்பது, பரீட்சை சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இயல்பாகவே பன்மைத்துவ இயல்புடையோர் வெளிப்படுகைக்கு இடமில்லாது போவதுடன், சிறந்த பெறுபேறு அல்லது புள்ளி பெறுபவர் கற்றவர் அல்லது படித்தவர் என அங்கீகரிக்கப்படுதலும், மற்றவர் நிராகரிக்கப்படுதலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறுகிறது. குறிப்பாக கற்றவர் அல்லது படித்தவர் என்ற அளவீடு ‘சான்றிதழ்’ என்ற ஒன்றை வைத்து மட்டிடப்படுவதும், இதனடிப்படையில் ஏனைய அறிவுடைமையாளர்கள் அல்லது திறனுடையவர்கள் புறக்கணிக்கப்படுதலும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
சான்றிதழ் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அறிவுடைமை என்பது அளவிடப்படுகின்ற நிலையில், பன்மைத்துவ இயல்பிற்கும், இயல்புடையோருக்கும் வாய்பற்றுப் போகிறது. ஆக கற்றல் சூழலில் ‘சான்றிதழ்’ கற்றவர் என்ற வகையீட்டை நிர்ணயிப்பதில் பிரதான நிலை பெறுகின்றமை தெளிவாகிறது. இந்த அடிப்படையில், போட்டிப்பரீட்சையில் தோல்வியுற்றவர் படிக்காதவர் என்ற வகையீட்டுக்குள் தள்ளப்படுதலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாகவே, ஏனைய ஆளுமைகள் புறக்கணிப்படுதலும், சூழல் சார் அறிவு உட்பட ஏனையவை அறிவுடைமை அல்லது கற்றலாகக் கருதப்படாமையும் நிகழ்ந்தேறுகிறது.

எழுத்தறிவு அல்லது பெறுபேறு என்பது கற்றலின் ஒரு பகுதியே தவிர. அதுவே முழுமையான கற்றல் எனக் கொள்ளப்படுதல் என்பது பொருத்தப்படாற்ற சிந்தனையின் வெளிப்பாடு என்ற தெளிவுநிலை ஏற்படுகின்ற பட்சத்தில், கற்றலும் கற்பித்தலும் பன்மைத்துவத்தை ஏற்கின்ற அல்லது கற்பிக்கின்ற செயற்பாடு என்பது தெளிவாகும். இத்தகைய தெளிவு நிலை பிறக்கையில், சான்றிதழ் மையப்பட்டு, அறிவுடைமையை நிர்ணயித்தல் என்ற செயன்முறை கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு ஏனைய அறிவுடைமைகளை அங்கிகரித்துக் கொள்ளலும் இயல்பாக இடம்பெறும். இத்தகைய இயல்பு நிலை, பண்மைத்துவ கற்றலுக்கும் கற்பித்தலுக்குமான தேவையை வலுவாக உணர்த்தி நிற்கும். இந்நிலையில் படித்தவர் பாமர் என்ற காலனிய மனோபாவம், சமுகத்திலிருந்து களைத்தெறியப்படும்.

இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.

http://globaltamilnews.net/2020/145833/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.