Jump to content

குறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…

aysha.png

இலக்கியங்கள் எப்போதும், அதன் இயலுகின்ற முறையால், சம்பவங்களை கண்முன்னே காண்பியங்களாக, காட்சிவிம்பங்களாகப் படம்பிடித்துகாட்டும் இயல்புடையன. எனினும், வாசிப்பின் வழி தோன்றிடும் காட்சிவிம்பங்கள் எப்போதும், அவரவர் அனுபவ அறிவிற்கு ஏற்றாற்போலவும், கற்பனாநிலைக்கு ஏற்றாற் போலவும் வேறுபடுதல் இயல்பு. ஆயினும் கதை என்னவோ ஒன்றாகவே இருந்திருக்கும். இந்நிலை என்பது எல்லாவகையான புதின இலக்கியங்களுக்கும் பொருந்தும். அப்படித்தான், ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுத்து வழி குறுநாவலாகக் கருக்கொண்டு, இரா.புவனா இயக்கத்தில், இரா.சந்திரசேகரன் இசையில், சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவில் குறும்படமாக ‘ஆயிஷா’ எனும் பெயரிலேயே, உருவாகியுள்ளது.

விஜயபுவனேஸ்வரி பிலிம்ஸ் வழங்கும் குறித்த குறும்படத்தில், கதை, வசனம் இரா.நடராசனும், படத்தொகுப்புஃஒலிவடிவமைப்பு சுரேஸ் அர்ஸ்சும், திரைக்கதை பா.சிவகுமாரும் செய்திருக்கின்றனர். ஊர்வசி அர்ச்சனா- விஞ்ஞானப்பாட ஆசிரியராகவும், கலைராணி-ஆயிஷாவின் சித்தியாகவும், ஸ்வேதா- ஆயிஷாவாகவும் நடிப்பினூடாக, நாவலுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். கல்வி சூழலின் யதார்த்த நிலையை வெளிப்படுத்துவதாக, பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்களாகிவிட்ட கசப்பான உண்மையை தெளிவுப்படுத்துவதாக அமைந்த குறுநாவலின் கதையை இசகாமல்,பிசகாமல் படமாக்கியிருக்கின்றனர் படக்குழுமத்தினர்.

http://globaltamilnews.net/2020/143514/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அருமையான குறும் படம். அர்ச்சனாவின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு அழகான நெறியாள்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.