Jump to content

அழகே அழகே தமிழ் அழகே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும்

 

ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களின் மனதும் கணப்பொழுதில் தமிழகத்தில் சங்கமித்து விடுகிறது. இந்தச் சூழலில்தான் தமிழக சினிமாப்பாடல் வரலாற்றில் ஒரு பாடல் பூத்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இது தனித்துவம் என்பதை நிராகரிக்க முடியாதுதானே. தமிழில் இடையின எழுத்தாக தன்னை காட்டிக்கொள்ளும் “ள” கரந்தான் இதற்கு காரணம் “ள” செய்த சாதனையை பார்த்தீர்களா? ஆனால் இந்த பாடற்தாவரம் உற்பத்தியாகும் முன்பே இதே பாடற் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பாடற்தாவரம் உற்பத்தியாகும் முன்பே இதே பாடற் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பாடற்தாவரம் அதே தமிழகத்தில் உற்பத்தியாகியது. இது பலருக்குத் தெரியாது. இந்தப்பாடலிலும் தமிழின் இடையின எழுத்தாகிய “ழ”கரம் ஆட்சி செய்கின்றது. ஏந்தப்பாடலில் தனித்துவம் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே. “ழ” கரம் என்பது தமிழ் மொழிக்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பான எழுத்து என்பது தமிழறிஞர்கள் கருத்து. இரண்டு பாடல்களையும் ஒவ்வொரு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓன்று தமிழக சினிபாப் பாடல் மற்றையது தமிழீழ விடுதலைப்பாடல். இரு கவிஞர்களும் தமிழக சினிமாவிலும் தமிழிலும் அறியப்பட்டவர்கள்தான்.

 

இனியவளே இளையவளே

ள…ள…ள…ள………….

அறிந்தவளே தெரிந்தவளே

தள்ளித்தள்ளி இருந்தவளே

எள்ளி எள்ளி சிரித்தவளே

துள்ளித் துள்ளி நடந்தவளே

கள்ளி கள்ளி அவளிவளே

 

அட ளகரத்தில் இன்னும் எத்தனை அழகுச்சொற்கள் உண்டு என்றும் சிலர் அங்கலாய்ப்பீர்கள். இதுதான் அந்தப்பாடலின் பல்லவி. இப்படி பல்லவியை தொடங்கயவர் யார்? கவிஞர் பா. விஜய் அவர்கள்தான். சாதனைப்பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் எப்படியோ ளகரத்தை உச்சரித்து சாதனை படைத்து விட்டார். தற்கால சினிமாப்பாடல்களில் சினிமாவில் இலக்கணம் இறந்துவிடவில்லை என்று இந்தப்பாடல் ஆறுதல் வேறு சொல்கிறது. நிச்சயமாக பலரும் இந்தப்பாடலை கேட்டு இருப்பார்கள். பா.விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள்

 

(சரணத்தைப்பார்க்க முன்பு ) இப்போது மறுபக்கம் திருப்புங்கள். இதைக் கேட்டிருக்கின்றீர்களா? இல்லையேல் வாசியுங்கள்.

 

அழகே அழகே தமிழ் அழகே

பழகிட ழகரம் எளிதழகே

அழகே அழகே அழகே

அழகு அழகு அழகு அழகு

 

இப்படி அந்தத் தமிழீழப் பாடல் பல்லவியுடன் தன் பயணத்தை தொடர்கிறது. இதில் முக்கிய விடயம் பா.விஜய் அவர்களின் ளகரம் பாடல் வெளிவருவதற்கு சில வருடங்களுக்கு முன்பே இந்தப்பாடல் வெளிவந்து விட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல தமிழ் இரத்தம் ஓடும் தமிழர்கள் மனங்களில் வேரூன்றி நிற்கும் தனித்துவமான கவிஞர்தான் அறிவுமதி. அந்த மதிக்குள் (நிலவுக்குள்) இருந்து வெளிவந்த அறிவின் வெளிப்பாடுதான் இது. “கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை” என்று சொல்லி புகழடைந்த நித்தியஸ்ரீ அவர்களின் குரலிலும் “ தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணியவிட்டு” பொம்மை செய்த கிருஸ்ணராஜ் அவர்களும் இணைந்துதான் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். ஆயுத எழுத்தும் (ஃ) ழகரமும் தமிழ் மொழிக்கு மட்டும் சிறப்பான எழுத்துக்கள் அல்லவா? பா.விஜய் பாடலின் சரணத்தைக் கேட்க முன்பு அறிவுமதி அவர்களின் பாடலின் முதற் சரணத்தைக் கேட்போமா?

 

மொழி அழகு வழி அழகு

அழகு அழகு அழகு

தமிழ் மொழி அழகு புலி விழி அழகு

அழகு அழகு அழகு

அழகே அழகே அழகே

 

ஆகா எத்தனை அழகு. தமிழ் மொழிக்குத்தான் எத்தனை அழகு. தமிழ் இனத்திற்குத்தான் எத்தனை அழகு. அந்த தமிழ் மொழியை காத்தல்தானே தமிழருக்கு அழகு. இல்லையேல் எமக்கு பெரும் இழிவு. இல்லையேல் எம்மொழிக்கும் அழிவு. இப்படியெல்லாம் கணப்பொழுதில் சிந்தனை வரவேண்டுமே.

 

இனி இதைக் கேளுங்கள். (பாருங்கள்) இது பா.விஜய் அவர்களின் “இனியவளே இளையவளே” பாடலின் சரணம் (ஏற்கனவே பல்லவியை பார்த்து விட்டோம்) மேலும் ளகர அலைகள் அடிப்பதை அவதானியுங்கள்.

 

உள்ளம் உள்ளம் உள்ளம் -அது

துள்ளும் துள்ளும் துள்ளும்

வெள்ளம் வெள்ளம் வெள்ளம் -உயிர்

அள்ளும் அள்ளும் அள்ளும்

வெள்ளை வெள்ளை நிலவு –அதில்

கொள்ளை கொள்ளை கனவு

பிள்ளை பிள்ளை மனது எனக்குள்ளே

கள்ளம் கள்ளம் ஏது – சிறு

பள்ளம் பள்ளம் ஏது

குள்ளம் குள்ளம் ஏது எனக்குள்ளே

மேளம் கொட்டும் நன்னாள்

தாளம் கேட்கும் பொன்னாள்

அந்த நாளும் எந்நாள் நமக்குள்ளே.

 

ஏத்தனை ளகரம் ஆட்சி செய்கிறது என்பது தெரிகிறதுதானே. இந்த ளகர சொற்கள் புதுமையான சொற்களா? ஏற்கனவே அடிக்கடி தினமும் எப்டியோ உச்சரிக்கும் அல்லது கேட்கும் சொற்கள்தான். ஆனால் பாடல் வடிவில் தனித்துவமான ளகரமாக வந்ததால் பாடற் சந்தையில் இதற்கு கிராக்கி ஏற்பட்டது ஏன்னவோ உண்மைதான். பா.விஜய் இப்படி முடிக்கின்றார்.

 

ளகரம் இது போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?

 

சரி இன்னும் கொஞ்சம் ளகரம் தேவையெனில் புதுமை ளகர சொற்களை அள்ளிக்கொடுக்கும் கவிவள்ளளா பா.விஜய். (வள்ளல்) பா.விஜய் தனது கவியிலே பல சந்தர்ப்பங்களில் எப்படியோ தனித்துவத்தை வெளிப்படுத்தியவர் இந்தப்பாடல் “பொய்” என்ற பெயரில் வெளிவந்த ஒரு தமிழக திரைப்படத்தில் இடம்பெற்றது. படத்தின் பெயர்தான் பொய். பாடல் பொய்யல்ல. உண்மைத்தமிழ.; வித்தகக் கவிஞரின் வரிகளுக்கு வித்தியாசாகர் இசை வழங்கியுள்ளார்.

 

இனி இந்த வரிகளை சுவைப்போம். அறிவுமதி என்றால் அவரது உணர்வுக்கவிகளில் (அதாவது வியாபாரம் சாராத)தமிழ் வாசம் வீசுவது தவிர்க்க முடியாதது என்பது வெளிப்படைக்கருத்து. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழகம் இ தமிழீழம் இ பிற சர்வதேச நாடுகளில் வெளிவந்த விடுதலைப் போராட்ட பாடல்களுள் இந்தப்பாடல் ஒரு புரட்சிசெய்தது என்றால் மிகையாகாது.

 

யாழழகு குழழழகு

அழகு அழகு அழகு

வரும் யாழ் அழகு

சுடும் குழல் அழகு

அழகு அழகு அழகு

 

என்று இரண்டாவது சரணம் ஒலிக்க மூன்றாவது சரணம் இப்படி ஒலிக்கின்றது.

 

சூழல் அழகு ஈழம் அழகு

அழகு அழகு அழகு

போர்ச்சூழல் அழகு

தமிழீழம் அழகு

அழகு அழகு அழகு

அழகே அழகே அழகே

அறிவுமதி என்ற மரத்தில் இருந்து உதிர்ந்த கவிதைப்பூக்கள் எத்தனை அழகு அந்த அழகுப்பாடல். “ஒளிமுகம் தோறும் புலி முகம்” என்ற இசைத் தொகுப்பில் உலாவரும் பாடல். கவி இசையமைக்க நித்தியஸ்ரீ கிருஸ்ணராஜ் இணைந்து பாடலைப் பாடினாhகள்;. யாழழகு என்றும் வரும் யாழ் அழகு. ஏன்றும் அறிவுமதி அசத்தும் இரண்டு யாழும் எதுவென்று புரிந்ததா? “துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை” என்பார்கள். இங்கு பார்த்தீர்களா? இந்தப்பாடலை வைத்து இப்படி ஒரு பொன்மொழி உருவாக்கலாமா? “துணிந்த கவிஞனுக்கு சுடும் குழலும் அழகாம்” சரி புல்லாங்குழல் பற்றி அவர் பேசவில்லையா?

 

எது அழகு? ஈழம் அழகு. ஈழத்தின் சூழல் அழகு. இ எம்மொழி அழகு. இ தமிழின் வழியும் தமிழனின் வழியும் அழகு. அறிவுமதி அவர்களுக்கும் அழகை கூட்டி இருக்கின்றது. இந்தப் பாடல். நிச்சயம் இதைக் கேளுங்கள். உச்சரிப்பு பிரமாதம். உணர்வும் பெருவானம். ஏங்கள் இனிய வாழ்வு தொடுவானம். தமிழ் காக்க கொடுப்போம் உயிர்த்தானம். இனி போகாது மொழி மானம். அதற்கு சாட்சி இந்தக்கானம்.

 

- புரட்சி -

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் "ல கரம்" கவிஞர்  கண்ணதாசன்,   m . s . விஸ்வநாதன், s . b . பாலசுப்பிரமணியம்........!

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
 
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
 
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
 
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா
 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா........!

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்……

தீதும் நன்றும் பிறர் தர வாராயெனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப்புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே…
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஆ…..ஆ….ஆ…..ஆ….
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்…..
ஆ…..ஆ….ஆ…..

செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..தமிழ் மொழியாம்)

கம்பன் நாட்டாழ்வாரும் கவி அரசி ஔவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஆ…ஆ….ஆ..ஆ…
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம்மொழி நம் மொழி…அதுவே……

செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்….
செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ…ஆ…)
செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ..ஆ…..)
செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ்மொழியாம்…தமிழ்மொழியாம்..)
செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழியாம்…)
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் (ஆ…ஆ….ஆ…)
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Saravanan A
9 months ago
மலையாளத்திலும் "ழ" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் "ழகரம்" மற்றும் "ற" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி "ஹளெ கன்னட" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில்  இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த "ப" (pa) "ஹ" (ha) வாக "வ" (va) "ப" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli),  புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu). 

தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர.  தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை)  இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார். 

முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் "ழ" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைத் தமிழுக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே  
நீயும் பெண்தானே  - அடி  
நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு  
கேட்டால் சொல்வேனே  - நீ  
கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு  
எழுந்தால் அருவி  
நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி  
மணந்தால் மனைவி  
பெற்றால் தாயல்லோ  


சிறு நதிகளே  
நதியிடும் கரைகளே  
கரைதொடும் நுரைகளே  
நுரைகளில் இவள் முகமே 



தினம் மோதும் கரை தோறும்  
அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும்  
வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும்  
அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும்  
வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
.
காதலி அருமை பிரிவில்  
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும்  
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே  


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே  
வட்டமிடும் நதியே  
வளைவுகள் அழகு  - உங்கள்  
வளைவுகள் அழகு

ஹோ  
மெல்லிசைகள் படித்தல்  
மேடு பள்ளம் மறைத்தல்  
நதிகளின் குணமே  - அது  
நங்கையின் குணமே 
.

சிறு நதிகளே  
நதியிடும் கரைகளே  
கரைதொடும் நுரைகளே  
நுரைகளில் இவள் முகமே 

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி  
பூக்களிலே தேனாகி  
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி  
தலைவனிடம் பாயாகி  
சேயருகே தாயாகும் பெண்ணே  


பூங்குயிலே பூங்குயிலே  
பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால், பெண் நினைத்தால்  
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்
.
நதியே நதியே காதல் நதியே  
நீயும் பெண்தானே  - அடி  
நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு  
கேட்டால் சொல்வேனே  - நீ  
கேட்டால் சொல்வேனே


தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயே தமிழே வணங்குகிறோம்' - தமிழ்தாய்க்கு ஒரு புது வாழ்த்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2)
சுகம் பல தரும் தமிழ்ப் பா  (2)
சுவையொடு கவிதைகள் தா  (2)
தமிழே நாளும் நீபாடு  (2)
{அப்படி இல்லப்பா, தம்பி எப்படி அழகா பாடினான் நீ பாத்தியா}
தமிழே நாளும் நீபாடு
தமிழே நாளும் நீபாடு

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊண்மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

பொன்னல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணம் ஏது
என் மனதில் தேன்பாய தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீபாடு
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ ..சொல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

 

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

எங்கள் தமிழ்மொழி! ...

எங்கள் தமிழ்மொழி! ...

என்றென்றும் வாழிய வே!

  

மகாகவி  சுப்பிரமணிய பாரதியார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகப் பாரதிதாசன் இயற்றிய “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்று தொடங்கும் பாடல் 1971-ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! 
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! 
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே 
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! 

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? 
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? 
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் 
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? 

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! 
செயலினை மூச்சினை உனக்களித்தேனே! 
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு 
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! 

முந்திய நாளினில் அறிவும் இலாது 
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது 
செந்தாமரைக் காடு பூத்தது போலே 
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் - நாட்டுப்பண்

வான்முட்டும் எழில்கொண்டு
வளமாகவும் - இன்பத்
தேன்சொட்டும் தமிழ்சேர்ந்து
 நலமாகவும்

யாழ்ப்பாண நகரோடு 
பெரும்கல்வியும் - எம்மை
வாழ்விக்க உணவூட்டும்
திருவன்னியும்

மட்டு வாவிக்குள் மீன்பாடும்
இசை சந்தமும் - வெற்றி
மேவும் வெண் தீவெங்கும்
 உயிர் சொந்தமும்

கிளிநொச்சி வளமுல்லை
அம்பாறையும், தெள்ளத்
தெளிந்தோடும் பொன்னருவி
ஆற்றோரமும்

சூழ்கொண்ட மன்னாரின்
முத்தாரமும் - எங்கும்
சுடரேற்றும் திருகோண
மலை மொத்தமும்

நாளும் நிலை உயர்வாக
செயலாற்றுவோம் - எங்கள்
ஈழத்தமிழ் திருநாட்டின்
புகழ்போற்றுவோம்

வாழிய வாழிய வாழியவே
எங்கள் ஈழத் தமிழ்த்
திருநாடு வாழியவே!

  ராகம் : மத்தியமாவதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் சிறப்பு கவிதை | Tamil mozhiyin sirappu kavithai speech | தமிழ் கவிதைகள் | Vishnoo

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.