Jump to content

அழகே அழகே தமிழ் அழகே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயே! தமிழே! | மொழிவணக்கப் பாடல் - யாழ்ப்பாண நிலக்காட்சிகளுடன் | உலகத் தாய்மொழி தினம்

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் இனிமை.

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !


புதுவை புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அமுது பாடல்

அ.காஜா முகைதீன் ( இடைநிலை ஆசிரியர்)

ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி வடகிழக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா தமிழா தமிழ் பேசு தமிழா
தமிழா தமிழா தமிழ் பேசு தமிழா

தமிழே எங்கள் மொழி
தமிழே எங்கள் உயிர்
தமிழே எங்கள் இல்லம்
தமிழே எங்கள் சுகம்

மொழியே மொழியே தமிழ் மொழியே
முத்தமிழ் கண்ட தனிமொழியே
மொழியே மொழியே தமிழ் மொழியே
முத்தமிழ் கண்ட தனிமொழியே

தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

தமிழராய் வாழ்ந்திடுவோம்
தமிழே தலைநிமிர்வோம்

தமிழ் வாழ தமிழ் மொழியே
வாழு வாழ வை

தமிழ் பேசு
தமிழா தமிழா
தமிழா தமிழா

தமிழனாய் நாம் வாழ்ந்திடுவோம்
தமிழாலே தமிழ் நிமிர்ந்திடுவோம்
தமிழோடு நாம் வழர்ந்திடுவோம்

தமிழனாய் நாம் வாழ்ந்திடுவோம்
தமிழாலே தலை நிமிர்ந்திடுவோம்
தமிழோடு நாம் வளர்ந்திடுவோம்

தமிழை நேசிப்போம்
தமிழில் பேசுவோம்
தமிழை நேசிப்போம்
தமிழில் பேசுவோம்

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு
தமிழா தமிழா தமிழ் பேசு
தடைகள் கடந்து தமிழ் பேசு

நன்றி: வசந்தம் மீடியாகார்ப்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து' - மறத்தல் தகுமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழிக்கிணையேது... தரணிக்கெல்லாம் இதை நீ எடுத்தோது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களினால் ஒளி வடிவம் கொடுக்கப்பட்டு வெளிவருகிறது  எங்கள் தமிழ் மொழியின் பெருமை கூறும் புத்தம் புதிய பாடல் தமிழே எம் தாய்மொழியே இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கலாபூஷணம் கீழ்கரவை கீ . குலசேகரனின் வரிகளில் தேன்மதுர குரலோன் கந்தப்பு ஜெயரூபனின் குரலில் இப்பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது பாடலை பாருங்கள் பகிருங்கள் கருத்திடுங்கள் நன்றி 

இசை -கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -கலா பூஷணம் கீழ்கரவை குலசேகரன் 
குரல் -கந்தப்பு ஜெயரூபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே உன்னால் நான் அடையும்

கவலை கொஞ்சமா

என் கவலை கொஞ்சமா
ஆண் : அதை கண்டு சும்மா இருக்க உனக்கு

கல்லு நெஞ்சமா

கண்டு சும்மா இருக்க உனக்கு

கல்லு நெஞ்சமா
பெண் : ஏய்…
ஆண் : ஏ உ ஏய்………ஆஹ ஏ

ஏய் ஆ ஏய் ஆ ஏய் ஏய் ஏய் ஏ ஓ
பெண் : ஏன்ய்யா என்னது கண்ணே

கிண்ணே சொல்றீங்க
ஆண் : அட உன்ன இல்லம்மா

என் கண்ண பத்தி பாடுறேன்

ரெண்டு நாளா தூக்கமே இல்ல

சதா அரிக்குது வெந்நீரா கொட்டுது

அதுதான் வேற ஒண்ணும் இல்ல
பெண் : ஓஹோ அப்ப பாடு
ஆண் : தங்கமே தங்கமே…

தங்கமே உன் தயவை

நான் பெறுவேனோ

என்று தான் பெறுவேனோ
ஆண் : என் அங்கம் குளிர

வாரி அணைத்து

அகம் மகிழ்வேனோ

என் அங்கம் குளிர

வாரி அணைத்து

அகம் மகிழ்வேனோ
பெண் : தா

ஆண் : தா… ன்தா…. ஐயோ ன்தா அட ன்தா

ஐயோ இன்தா இன்தா த… மத தா வ தா
பெண் : இந்தாங்கையா

இப்போ தங்கமேன்னு சொன்னது

என்ன தானே
ஆண் : ஐயையோ ஐயையோ ஐயையோ

இது என்னடா இது இத பாரும்மா

இத இந்த பாட்டு பாடுறேன் பாரு

அதுல பித்தள காசு

வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு

தங்கம் கிடைக்கல

அப்படி தங்கம் வந்திருச்சின்னா

தங்கமே அதான்
பெண் : ம்… ம்… ம்…

பாடுங்க பாடுங்க
ஆண் : தேனே தேனே……..

தேனே உன்னே தேடித் தேடி

நான் அலைந்தேனே

நான் அலைந்தேனே

நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும்

தொடப் பயந்தேனே

நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும்

தொடப் பயந்தேனே
பெண் : மொகரையப் பாரு

ஆண் : ஐயையோ மொகரையப் பாரா

மொகரையப் பாரு

ஆஹா மொகரையப் பாரு

ஓஹோ மொகரையப் பாரு

மொகம மொகம மொகரையப் பாரு

சரி ஓ சரி
பெண் : இந்தாங்கைய்யா

இன்னமே ஒண்ணும் மாத்த முடியாது

சத்தியமா சொல்லுங்க

இப்ப தேனேன்னு என்ன தானே சொன்னீங்க
ஆண் : அது உன்னையில்லமா இந்த

எனக்கு ஒடம்பு சரியில்ல

வைத்தியரு ஒரு பஸ்பம் குடுத்திருக்காரு

அத கொளச்சி சாப்படரதுக்கு

தேன் வேணும்
பெண் : அது சரி எதிரில் இருந்தும்

தொடப் பயந்தேன்னு

சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமா
ஆண் : எதிர்ல இருக்கு தொட முடியல அதான்
பெண் : என்னது
ஆண் : இங்க இல்ல

தோட்டத்துல ஒரு மரத்துல

உச்சீல இருக்கு தேன் கூடு

அது தொட போனா அடிக்குமோ

இல்ல இல்ல கொத்துமோ

அப்படினு பயமா இருக்கு
பெண் : ஆஹா ஆஹா ஆஹா

ஆஹா என்னா மூளை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காத்திதில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
மின்னும் உலக மேட
தங்க தமிழ பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்...

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்


ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

நாள் நகர மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பார் இளைய தமிழனும் வருவான்

தாய்ததமிழ் தூக்கி நிப்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கு சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் ஏழையும் உன்  நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: 17-9-2004

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: 17-9-2004

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004ஆம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் தமிழ் மொழிக்கு உலக அரங்கிலும் தேசிய அளவிலும் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

செம்மொழி தகுதியை அடைந்ததன் தொடர்ச்சியாக ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஐந்து நாள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆய்வு மன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

 


மாநாட்டினை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் தொடங்கி வைத்தார். மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல உலக நாடுகளில் இருந்து தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். உலகில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் மிகவும் பழமையான இலக்கியங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழி என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2013/09/16204034/Classical-Tamil-promulgated-da.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உயிர் தமிழே"தமிழ் மொழியின் பெருமை கூறும் பாடல்

இசை :- கந்தப்பு ஜெயந்தன் (Kandappu Jeyanthan)
பாடல் வரிகள் :- கு.நித்திலன்(Nithilan Kugarajah)
ஒலி ஒளி வடிவமைப்பு :- இ.வினோத்(Vinoth Rm)
இயக்கம் :- இ.கஜானன்(Rajendran Kajanan)�ஒழுங்கமைப்பு :- கெ.அருன்பிரசாத்(Àrunprashath Gangatharan)�பாடியவர்கள் :- கந்தப்பு ஜெயந்தன், பிரதா கந்தப்பு
நாதஸ்வரம் -ஐங்கரன் �அனுசரணை:-�கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரி கனடா.�திரு.கனகேந்திரம் குகேந்திரன்�திருமதி வனிதா குகேந்திரன்.�விசேட நன்றிகள் பா.நிருஜன்(Nirujan Balasubramaniam)�மலைத்தென்றல் நிகழ்வில் பாடலை வெளியிட்டு வைத்தவர்�இ.சர்வேஸ்வரா (Ratnasingam Sharveswara) (சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் )

https://www.youtube.com/watch?v=haKaOkOCNXw

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எம் தாய் மொழியாம்

பாடகர்கள்: தனுஷ், தனுஸ்ரீ , கே. எம். மிதுஸ்ரீ மற்றும் தேஜ்பானவ்
பாடலாசிரியர்: கவிஞர் கவின்மொழி வர்மன்(மறைவு)
புரோகிராமிங்: வானவில் பாலா (புதுச்சேரி)
வயலின்: பாலாஜி (சென்னை)
ஸ்டுடியோ: டெக்னோ மியூசிக் புரொடக்சன்
ஒளிப்பதிவு: ராம்குமார் (சென்னை) மற்றும் கந்தன் (மலேசியா)
எடிட்டிங்: கந்தன்(மலேசியா)
ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்: திரு. இல்மீ உமர்
நன்றி: பி.சி.ராஜா, திரு.சந்தோஷ் (தமிழ் மீடியம்), திரு.மலேசியா கலை உலகம், திருமதி. கவிதா உதயகுமார், திருமதி. தீபலட்சுமி, கவிதா மற்றும் கிருபாகரன். 
இசை: இசைவாணன் (எ) சரவணன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?

நல் அன்பிலா நெஞ்சில்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா?

கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?

 

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வில் உணர்வு சேர்க்க

எம் வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ 

அன்றை நற்றமிழ்க் கூற்றின் முறையினால்

ஆடிக்காட்ட மாட்டாயா?
கண்ணே ஆடிக்காட்ட மாட்டாயா?               

கண்ணே ஆடிக்காட்ட மாட்டாயா?

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது

யாம் அருகி லாத போது
தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

இறைவ னாரின் திருக்குறளிலே
தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே

ஒருசொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?
நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?


புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின்

தமிழ்ப் புலவர் கண்ட நூலின்

தமிழ் இறைவ னாரின் திருக்குறளிலே

ஒருசொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?
கண்ணே இயம்பிக் காட்ட மாட்டாயா?

நல் திறமை காட்டிஉன்னை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா?

தமிழ் செல்வம் ஆக மாட்டாயா?

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு : தமிழ்நாட்டின் கொடி | அந்த கொடியின் பாடல் |

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் பெருமை | மிகவும் தொன்மையான மொழி தமிழ்

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

 247 எழுத்துக்களை கொண்ட மொழி பாடல்

 

உண்மையா உடையார் இந்தப்பாட்டுக்கு ஆஸ்கார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

உண்மையா உடையார் இந்தப்பாட்டுக்கு ஆஸ்கார் ?

அதுதான் எனக்கும் கேள்வி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

 247 எழுத்துக்களை கொண்ட மொழி பாடல்

 

 

9 hours ago, பெருமாள் said:

உண்மையா உடையார் இந்தப்பாட்டுக்கு ஆஸ்கார் ?

இந்தத் தமிழ்ப் பாடலுக்கு... ஆஸ்கார் விருது கிடைத்ததைப் பற்றி, எந்த ஊடகங்களிலும் வரவில்லையே.

தமிழ் என்ற படியால்... இருட்டடிப்பு செய்து விட்டார்களா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.