Jump to content

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 

இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎

வந்தப்போச்சு, இப்படியொரு அன்பு அழைப்பை மறுக்கு முடியுமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 22:08, suvy said:

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

நெஞ்சார்ந்த நன்றிகள் என்னை மென்மேலும் வளர்க்கும் உங்கள் பாராட்டுக்கள் 

On 2/7/2020 at 01:05, நிலாமதி said:

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

நன்றிகள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 02:21, உடையார் said:

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 

அருமை உங்களின் அந்தக்காலத்தின் நினைவுகள் எனது கவிதையுடன் சேர்ந்து இனிக்கிறது. உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 

Link to comment
Share on other sites

30 minutes ago, கிருபன் said:

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 

நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, tulpen said:

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

கவிதைக்கு பொய் அழகு..   

நன்றிகள்tulpen 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நன்றிகள் யாயினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 13:02, பசுவூர்க்கோபி said:

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

 

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

உங்கள் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் nilmini கட்டாயம் தொடருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராம வாழக்கை எப்பவும் அழகு தான் உடல் உள ரீதியாக.சந்தரப்ப வசத்தாலோ அல்லது விரும்பியோ நகர வாழ்க்கைக்கு மாறியவர்கள் கிராமத்தை கொஞ்சம் குறைத்து தாங்கள் திருப்த்திப்பட்டுக் கொள்வார்கள்.இரு கோட்டுத் தத்துவம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவைப்பிரியன் அண்னா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 17:22, பெருமாள் said:

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

On 1/7/2020 at 19:02, பசுவூர்க்கோபி said:

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எங்கள் பழைய காலத்து உணவுகளில் இருந்த இயற்கையான சத்துக்களும் அவற்றின் மருத்துவ குணாதிசயங்களும் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ?  அருமையான கவிதையும் பொருளும் !
தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் தோழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

உண்மையாகச் சொன்னீர்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் சுமேரியர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.