Jump to content

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித்

IMG-7444-960x720.jpg?189db0&189db0

மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதன்படி சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார்.

  • IMG-7468-1024x768.jpg?189db0&189db0
 
 

https://newuthayan.com/யாழில்-தேர்தல்-பிரச்சாரத/

 
 
Link to comment
Share on other sites

ஐயோ எவ்வளவு சனம். மாலை எல்லாம் போட்டிருக்கிறார்கள். கருணாவை விடமாட்டேன் என்று சொல்லித்தான் சனத்தைக் கூட்டினவரோ தெரியவில்லை.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு – யாழில் சஜித்

Sajith-Premadasa.jpg?189db0&189db0

ஒருமித்த நாட்டிற்குள் அரசியலமைப்பை தாண்டிய அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன்.

அதேபோன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன். கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தமது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையிலான திட்டத்தை உருவாக்குவேன்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13வது அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும்” – என்றார்.

 

https://newuthayan.com/ஒருமித்த-நாட்டுக்குள்-அத/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்கட விஜைகலா ஆரோட என்டதப் பொறுத்து தான் உங்கடை வாக்கு வேட்டை யாழில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகாெலை குறித்து விசாரணை வேண்டும் – சஜித்

DSC0871-960x640.jpg?189db0&189db0

 

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, அவர்கள் கொலை செய்யப்படுவது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அது தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் வடக்கு, கிழக்கு மற்றும் தொற்கு என்ற பாகுபாடுகள் இல்லாது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர் பலி ஏற்படாத நிலை உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வந்தால் இவற்றை நான் செய்வேன். நான் சொல்வதைத்தான் செய்வேன்” – என்றார்.

https://newuthayan.com/தமிழ்-ஊடகவியலாளர்கள்-படு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பந்தடித்து விளையாடிய சஜித்

15d9f899-85ec-43d6-9be1-f43effd5a48c-960x443.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் – நெல்லியடி, இராஜ கிராமத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டத்தின் நினைவு கல்லினை சஜித் பிரேமதாச இன்று (02) தந்தையின் நினைவாக திரைநீக்கம் செய்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து இராஜ கிராம மக்களை சஜித் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் இராஜ கிராமத்தில் உள்ள கரவை சுடர் உதைப்பந்தாட்ட வீரர்களுடன் இணைந்து உதைப்பந்து விளையாடிலும் அவர் ஈடுபட்டார்.

  • IMG-2863-1024x768.jpg?189db0&189db0
  • IMG-2873-1024x768.jpg?189db0&189db0
  • f6bdcedb-6c82-4d61-b6f2-007bc4236be1-102
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தம் யாழ். மக்களின் மகிழ்ச்சியான காலத்தை உருவாகும் – சஜித்

July 4, 2020

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதாகவும் யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான காலத்தை உருவாக்கித் தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,

 

என்னுடைய யோசனை என்னவென்றால், இலங்கைக்குள் பிரிக்கப்பட்ட சத்தியாக 13 ஆவது திருத்தம் ஒரு ஒற்றையாட்சி இலங்கையில் பகிர்ந்தளிக்கப்பட்டதைப் போலவே இருக்க வேண்டும்.

13 ஆவது திருத்தம் மாகாண சபைகளுக்கு ஊடாக வழங்கப்படும் சேவை திறம்படச் செயற்படும் அத்தோடு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.

 

இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தில் நாங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

இது தவிர நாங்கள் அரசாங்கத்தை அமைத்து அபிவிருத்தி பணிக் குழுவை ஆரம்பித்த ஐந்தாவது நாளுக்குப் பிறகு கிராமப்புறம், நகர்ப்புறம் , வடக்கு மாகாணம் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் நடவடிக்கைகளைத் திறம்படச் செயற்படுத்துவதில் நான் முன்னிலை வகிப்பேன் என அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு யாழ்ப்பாணத்தின் நெல்லியடி பேரணியில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

sajith-jaffna.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல பேரணிகளில் கலந்துகொண்டேன் அவர்களின் முகங்களைப் பார்க்கும்போது மக்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்பதை என்னால் அவதானிக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை விட அதிகமாக மகிழ்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

 

அத்துடன், எனக்குப் பூட்டான் தான் நினைவுக்கு வருகிறது. அந்நாட்டின் மக்கள் மகிழ்ச்சி மட்டுமே அரசின் இலக்கு. ஆனால் உங்களின் முகங்களில் அது தென்படவில்லை.

இதனால் எதிர்வரும் 5 ஆம் திகதிக்குப் பின்னர் இந்நாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் உங்களுக்குத் திருப்திகரமான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தர நாங்கள் நிச்சயமாக வழியமைத்துத் தருவோம் என அவர் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/51499

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வெல்ல வைத்தால் கிளிநொச்சிக்கு அபிவிருத்தி – சஜித்

Sajith-Premadasa.jpg?189db0&189db0

 

கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (03) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“கிளிநொச்சியில் கடற்றொழிலை நம்பி வாழ்பவர்களாக பெரும்பாலானோர் இருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் சிறந்த திட்டங்களை நிச்சயம் நான் முன்னெடுப்பேன்.

என்னை வெற்றியடைய செய்தால் எதிர்வரும் காலங்களிலும் காணி மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை வழங்க செயற்றிட்டங்களை நிச்சயம் முன்னெடுப்பேன்.

கிளிநொச்சி – யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு எமது கட்சியை சார்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அதனூடாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

கிளிநொச்சியில் 95 கிராம சேவகர் பிரிவில் 397 கிராமங்கள் உள்ளன. இவைகளுக்கு சிறந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பேன். தொழிலற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை வறுமைக்கோட்டிலுள்ள அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் வழங்குவேன்.

2011ம் ஆண்டு உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக இலங்கையின் சிறந்த வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தினால் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள்.

இந்த வீரர்கள், நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். ஆனால் தற்போதைய அரசாங்கம் அவர்களின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்றது. ஆகவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கௌரவத்தை பாதுகாப்போம்.

அத்துடன் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பாக சிந்திக்காமல் வீணாக இந்த விவகாரத்தில் நேரத்தை செலவிடுகிறது.” – என்றார்.

 

https://newuthayan.com/என்னை-வெல்ல-வைத்தால்-கிள/

Link to comment
Share on other sites

ரணில் விசுவாசியா இருந்த சுமந்திரன் இப்ப ரணில் விசுவாசியா சஜித் விசுவாசியா அல்லது ராஜபக்ச விசுவாசியா? மோடி விசுவாசியா? ஆள் அப்பப்ப பிரளக்கூடியவர் என்கிறதால ஒரே குழப்பம் தான். 

ஆனா சுமந்திரன் ஒருநாளும் தமிழ் மக்களுக்கு மட்டும் விசுவாசமா இருக்கவேமாட்டார் என்கிறது 100% தெரிஞ்சு போச்சு.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.