Jump to content

காதலர் தினத்தில் எழுதிய கவிதை...


Recommended Posts

இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை ....

பெண்ணென்று பிறந்து

கண் முன்னே

அங்கம் அங்காங்கே

காட்டி நடந்து

கொல்லாமல் கொல்கின்றார்

அம்மா

கொழும்பில்

எம் குலத் தமிழ்க்

கிளிகள்!

பிரான்ஸ்,

ஜேர்மன்,

சுவிஸ் என்று

பறந்து

கொட்டும்

பனியில் கொட்டாவி

விடக்கூட மறந்து

அண்ணனுடன்

அப்பா சேர்த்து

அனுப்பும் பணம்

கையில்லாச் சட்டை

வாங்கவும்

அங்கம் கொப்பளிக்கும்

ஆடை வாங்கவும்

உதட்டுக்குச்

சாயம் அடிக்கவும்

இன்னும் பலப்... பல...

செய்யவும்

வீணாகக்

கரைகின்றது.

இந்த 'மேக்கப்' பின்

பின்னால் உள்ள

உண்மை

உருவம் அறியாது

நீண்ட

'கியூ' வில் நிற்கின்றாரம்மா

பாவம் எம்

இளைஞர்!

சில நாள்

பின்தொடர

'சீ பாவம்' என

அவளும் புன்னகைக்க

பரிதாபத்தில்

தொடங்கியது

காதல்

பிறகென்ன

கையோடு கை

சேர்ந்து நடக்குமளவு

நெருக்கம் வந்தது.

பஸ்சில் ஏறினால்

அருகருகே

உரசி இருத்தல்

கிசு கிசுப்பாய்

காதல் வசனம்

இன்னும் சில

சொல்ல முடியாத

சங்கதிகள்

பாவம்

பக்கத்தில்

இருப்பவர்

கூச்சத்தில் நெளிவார்.

காதலுக்கு

கண்ணில்லை என்பது

சரிதான்!

கோல்பேஸ்

வந்ததும்

கையில் குடை

விரியும்

ஒதுக்குப் புறமாய்

அமர்ந்து

கொள்வார்கள்

என்ன செய்வார்களோ

யாம் அறியோம்!

அது

மட்டுமா?

திரையரங்கில்

நுழைந்து பாருங்கள்

வரிசையாய்

இளஞ்ஜோடிகள்!

மனம் படமா

பார்க்கும்?

எது காதல்

என்றறியாது

ஏதேதோ

செய்கின்றார்

ஐயகோ

மோகத்தில்

அவிகின்றார்.

கண்டதும்

கை அணைப்பது தான்

காதலா?

வாய் நிறைய

பொய் உரைப்பது தான்

காதலா?

கை நிறைய

காசு கேட்பது தான்

காதலா?

கட்டி அணைத்து

முத்தம் தருவது தான்

காதலா?

கறுப்பென்றும்

வெள்ளையென்றும்

நிறம் பார்த்து

வருவது தான்

காதலா?

எது காதல்?

இன்று நாம்

செய்வதெல்லாம்

உண்மைக்

காதலா?

சத்தியமாய் இல்லை

இன்றைய காதல்

காமத்தின்

கருக்கட்டல்!

பின்

எது தான்

காதல்?

அன்பெனும் கயிறு

திரித்து?

இரு இதயம் கட்டி

இணைத்து?

வெண்பனி போல

மெல்ல நெஞ்சம்

உருகி,

கடலென பரந்து

வருவதே காதல்!

Link to comment
Share on other sites

கவிதை நன்று

காவியக் காதலை ஐயா

இக் கழுதைகளிடம் எதிர்பார்க்கலாமோ.. :lol:

விகடகவி உங்கள் விகடம் நன்று. கழுதைகள் என்ற சொல்லிவிட்டீர்கள்.... காலால் அடி வாங்க நான் தயாரில்லை... :rolleyes:

Link to comment
Share on other sites

அந்த கழுதைகளில் நானும் ஒருவன்..

கழுதையினம் ஒன்றை ஒன்று உதைக்காதென்று சொல்லிவிட்டேன்..

உதைக்கும்? :rolleyes:

Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் என்னையும் கழுதை என்று சூசகமாக (நாசுக்காக) சொல்கிறீர்களா விகடகவி? சரி இருந்திட்டுப் போவம்.... உதைக்காது தான் இப்ப... (திருப்பி உதைத்தாலும் என்ற பயத்தில.... ) :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது கவிதை...நீங்கள் சொல்வது நடக்கிறது...உண்மையை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள்...யாரி

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக உள்ளது. ஆனால்

அதை விட

கவிக்கும்---- விகடகவிக்கும்

இடையில் நடக்கும் வார்த்தைகள்

இன்னும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

என்ன மருமகன் நீங்க.... விலக்கு தீர்பீங்க என்று பார்த்தால் உசுப்பேத்தி விடுறீங்க... பிறகு நாங்கள் உண்மையாகவே உதைச்சுக் கொண்டாலும் கொள்ளலாம்.... நாங்க பேசினது உங்களுக்கும் கேட்டுவிட்டதா? (விகடகவி அப்ப இவரும் எமக்கு தெரிஞ்சவரோ? )

Link to comment
Share on other sites

காதல் இதயக்கனம் கேட்டால்

காவியக்காதல்..

கையிருப்பின் கனம் கேட்டால் கழுதைக்காதல்..

உடல்க்குறை காணாத காதல் காவியக்காதல்..

உடல்க்குறையை சொல்லும் காதல் கழுதைக்காதல்..

காவியக்காதலைச் செய்பவர்கள்..

நாயகர்கள்..

கழுதைக்காதலைச் செய்பவர்கள்

கழுதைகள்..

மெய் சொன்னால்..

நானனும் ஒரு கழுதை..

நீங்கள் மெய் சொல்லுங்கள் எத்தனை நாயகர்..

எத்தனை கழுதைகள்.. :D

Link to comment
Share on other sites

விகடகவி,

உங்க எண்ணங்களுடன் நான் நிறையவே உடன்படுறன்....

ஆரோக்கியமான சொல்லாடலுக்கு நன்றி...

//உங்க கவிதை அழகு. எது காதல் எண்டு தான் தெரியல //

காபி...

காதல்

எதுவென தெரியாதவரை

காப்பியம்

தெரிந்தபின் வெறும்

காகிதம்!

அழகான விசயங்கள், ரசனைக்குரிய விசயங்கள் எல்லாம் எட்ட இருந்து ஆகா ... என்று வியக்்குறவரை...

அருகே போனாலோ அசிங்கமாகி 'சீ...' என்று சினக்க வைக்கலாம்....

ஆகவே எது காதல் என்று தெரியாதவரை அது அருமந்த பொருள்.... தெரியமாலே இருக்கட்டுமன்....

Link to comment
Share on other sites

இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை ....

அன்பெனும் கயிறு

திரித்து?

இரு இதயம் கட்டி

இணைத்து?

வெண்பனி போல

மெல்ல நெஞ்சம்

உருகி,

கடலென பரந்து

வருவதே காதல்!

நல்ல கவி ரூபன் அண்ணா நீங்கள் சொன்ன காதலுக்காக தான் நான் காத்திருக்கிறேன்

:D

Link to comment
Share on other sites

காத்திருப்பதற்கு ஒரு கால எல்லை வைச்சுக்கொண்டு காத்திருங்கள் ஜமுனா.... வாழ்த்்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிருபன் உங்கள் கவி நன்றாக இருக்கிறது.

ஆனால் நானும் என் கருத்தைச் சொல்கிறேனே!

காதலிக்கும்போது கொஞ்சம் அப்படி யிப்படி இருப்பது சகஜமானதே!

கடற்கரைக்குப் போவதும், சனமில்லாத தியேட்டருக்குப் படம் பார்க்கப் போவதும் கொஞ்சம் குறும்பு பண்ணத்தான் என இருவருக்குமே தெரிந்துதான் போகிறார்கள். இவையெல்லாம் மரங்களில் பொய்ப்பூக்கள் பூக்குமே அதைப் போன்றதே. பின் இதைக் கடந்து கலியாணம் செய்து ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பு வைத்து, பிள்ளைகள் கண்டு பாசம் பொழிந்து வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு முகங்கொடுத்து அப்போதும் அன்பு மாறாமல் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து அவர்கள் சுயமாக நிற்கும்போது இவர்கள் மனதில் ஓர் நிம்மதி வருமே அப்போதுதான் அவர்களது காதல் பூவின் நிஜமான மொட்டு கருக்கட்டுகிறது. பிறகென்ன காதல் நந்தவனம்தான். :D:D

Link to comment
Share on other sites

Suvy உங்கள் கருத்துக்கு முதல்ல நன்றி .... என் வருத்தமெல்லாம் அப்படி இருந்தபின்னும் மாறுகிற சிலர் பற்றியது....

Link to comment
Share on other sites

அன்பெனும் கயிறு

திரித்து?

இரு இதயம் கட்டி

இணைத்து?

வெண்பனி போல

மெல்ல நெஞ்சம்

உருகி,

கடலென பரந்து

வருவதே காதல்!

ஆஹா இதுதான் காதலா ? ஹிஹி நன்னாயிருக்கு உங்க கவிதை...!

வாய் நிறைய

பொய் உரைப்பது தான்

காதலா?

உஹும் இதுதான் இப்ப கூட நடக்குது :lol: B)

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் கவிரூபன்!

உங்கள் கவிதை ஒரு சினிமாப் படத்தைப் பார்தமாதிரி உள்ளது.

அது சரி இந்தக் கவிதையில் உங்கள் பாத்திரம் என்னவோ?

ரொம்ப அனுபவித்து எழுதியமாதிரியுள்ளது.

கொட்டும்

பனியில் கொட்டாவி

விடக்கூட மறந்து

அண்ணனுடன்

அப்பா சேர்த்து

அனுப்பும் பணம்

கையில்லாச் சட்டை

வாங்கவும்

அங்கம் கொப்பளிக்கும்

ஆடை வாங்கவும்

உதட்டுக்குச்

சாயம் அடிக்கவும்

இன்னும் பலப்... பல...

செய்யவும்

வீணாகக்

கரைகின்றது

நிஷமான வரிகள்.

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன் (உங்கள் பேரில எனக்கு ஒரு மயக்கம் உண்டு... கவர்ச்சியான பேர்.... ) அது இருக்க... பாராட்டுக்கு நன்றி.... பார்க்கிற விசயத்தை பதிவு செய்தனே தவிர வேறொன்றுமில்லை... (ரசிக்கவும் செய்தன் என்பதை மறந்துவிடுங்கள்.... அட எனக்கு கிடைக்கலையே என்ற ஆதங்கம் வேற.... அதையெல்லாம் மறந்து விடுங்கள்..... ஹா.......ஹா.......... ) என் பாத்திரம் என்ன என்றால் எப்படிச் சொல்ல.... ரசிகன் (ஆகா ரசிகன்... என்ற பாட்டு நினைவுக்கு வந்தால் என் தப்பில்லை.... )

Link to comment
Share on other sites

என்ன மருமகன் நீங்க.... விலக்கு தீர்பீங்க என்று பார்த்தால் உசுப்பேத்தி விடுறீங்க... பிறகு நாங்கள் உண்மையாகவே உதைச்சுக் கொண்டாலும் கொள்ளலாம்.... நாங்க பேசினது உங்களுக்கும் கேட்டுவிட்டதா? (விகடகவி அப்ப இவரும் எமக்கு தெரிஞ்சவரோ? )

அப்படி இல்லை கவி உங்களுக்கும்

விகடகவிக்கும் இடையே இடம் பெறும்

சொல்லாடல்கள் மிகவும் ரசிக்கத்தக்கது.

எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

(அதுக்காக சண்டை பிடிக்காதிங்கோ

இது என்னுடைய அன்புக் கட்டளை

மீறினால் தெரியும் தானே???? )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.