Jump to content

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானா

veteran-choreographer-saroj-khan-dies-of-cardiac-arrest

 

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் : கோப்புப்படம்


பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71.

பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நடிகை மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்தின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார்

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் சுவாசக்குறைபாடு பிரச்சினையால் கடந்த சனிக்கிழமை சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையிலும் கரோனா இல்லை எனத் தெரியவந்தது

 

1593748608756.jpg

இதனால் சுவாசக் கோளாறுக்கான சிகிச்சை மட்டும் சரோஜ் கானுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார் என்று மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை சரோஜ் கானின் உறவினர் மணிஷ் ஜக்வானியும் பிடிஐ நிருபரிடம் உறுதி செய்துள்ளார்.

சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகையான கான் என்ற மகளும் உள்ளன. சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இவரின் நினைவஞ்சலி கூட்டம் 3 நாட்களுக்குப்பின் நடைபெறும் என்று சரோஜ் கானின் மகள் சுகைனா கான் தெரிவி்த்தார்

சரோஜ் கான் தனது 13-வயதில், நடன இயக்குநர் சோஹன்லாலைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது சோஹன் லாலுக்கு 41 வயதாகி இருந்தது. அவரிடம் இருந்து நடனத்தைக் கற்றுக்கொண்ட சரோஜ் கான் திரைப்படங்களில் நடன உதவி இயக்குனராக பணியாற்றினார்

சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு சரோஜ்கானின் பெற்றோர் குடிவந்தனர். தனது 3 சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ் கான் பின்னர் நடனக்குழுவில் பணியாற்றினார்.

கடந்த 1980களிலும், 1990களிலும் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனராக சரோஜ்கான் விளங்கினார். இதுவரை 2ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக நடன இயக்குனராக சரோஜ்கான் பணியாற்றியுள்ளார். பாலிவுட் நடிகர்கள், நடிகர்கள் மத்தியில் “மாஸ்டர்ஜி” என்ற அடைமொழியுடன் சரோஜ் கான் அழைக்கப்பட்டார்

கடந்த 1974-ம் ஆண்டு கீதா மேரா நாம் எனும் திரைப்படத்துக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் அறிமுகமாகினார். ஆனால் அந்த திரைப்படமும், அதன்பி்ன் இவர் பணியாற்றிய திரைப்படங்களும் இவருக்கு பெயரைப் பெற்றுத் தரவில்லை.

கடந்த 1987-ம் ஆண்டு வெளியாகிய "மிஸ்டர் இந்தியா" திரைப்படத்தில் வரும்" ஹவா ஹவாய்" பாடலின் நடனம் இவரை நாடுமுழுவதும் புகழ்பெறச் செய்தது. அதன் பின் வெற்றிகரமான நடன இயக்குனராக பல படங்களில் சரோஜ் கான் பணியாற்றினார்

குறிப்பாக ஸ்ரீதேவி நடித்து பாலிவுட்டில் சக்கைபோடு போட்ட "நாகினா", "சாந்தினி" திரைப்படங்களுக்கு சரோஜ் கான் நடன இயக்குனராக இருந்தார். "தேஜாப்" திரைப்படத்தில் வரும் "ஏக் தோ தீன்" பாடல், மாதுரி தீக்சித்தின் "தானேதார்" திரைப்படத்தில் வரும் "தம்மா தம்மா" பாடல், "பேட்டா" திரைப்படத்தில் வரும் "தாக் தாக் கர்னே" ஆகியவை சரோஜ் கானுக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தன.

சமீபத்தில் சஞ்சீய் லீலா பன்சாலியின் "தேவதாஸ்" திரைப்படத்தில் "தோலா ரே தோலா" பாடலுக்கும் சரோஜ் கான் நடன இயக்குனராக இருந்தார், கரீனா கபூர் நடித்த "ஏ இஸ்க் ஹயே" பாடலிலும் சரோஜ்கான் பணியாற்றினார்.

கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் கரண் ஜோகர் தயாரிப்பில் கலங்க் திரைப்படத்தில் "தபா ஹோயேகே" பாடலுக்கு நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
சரோஜ் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் ட்டிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

https://www.hindutamil.in/news/cinema/bollywood/562438-veteran-choreographer-saroj-khan-dies-of-cardiac-arrest-3.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.