Jump to content

தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் தலைமை மாற்றமடையுமா? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் தலைமை மாற்றமடையுமா? - யதீந்திரா

வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அதே வேளை பிறிதொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரனை துரத்த வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். விக்னேஸ்வரனை அரசியலிலிருந்து துரத்த வேண்டுமென்று முன்னரும் ஒருமுறை சுமந்திரன் கூறியிருந்தார். கூட்டமைப்பு வடக்கில், இம்முறையும் அதிக ஆசனங்களை வெற்றிகொள்ளுமென்று சுமந்திரன் உண்மையிலேயே நம்பினால், பிறகெதற்காக விக்னேஸ்வரன் பற்றி கவலைப்பட வேண்டும்? ஒரு வேளை விக்னேஸ்வரன் வெற்றிபெற்றால் அது தனது அரசியல் நிகழ்சிநிரலுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமென்று சுமந்திரன் கருதுகின்றாரா? அல்லது விக்னேஸ்வரனது வெற்றி உறுதியாகிவிட்டது எனவே, அதனை எவ்வகையிலாவது தடுத்துநிறுத்த வேண்டுமென்று கருதுகின்றாரா?

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள்தான் வெற்றிபெறுவோமென்று கூறுவது ஆச்சரியமான ஒன்றல்ல. அந்த வகையில் வடக்கில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வெற்றிக்கான பலவழிகளிலும் முயன்று வருகின்றன. சுமந்திரன் தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகின்றார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் இலகுவாக வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இம்முறை அவரது வெற்றி இலகுவாக இருக்காதென்று கூறப்படுகின்றது. உண்மையில் இதற்கு விக்கினேஸ்வரன் காரணமல்ல மாறாக, இலங்கை தமிரசு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பதவிப் போட்டிகளும் அதிகார மோகமுமே பிரதான காரணங்களாகும். அரசியலில் நண்பர்கள் எதிரிகளாவதும், எதிரிகள் நண்பர்களாவதும் சாதாரணமான விடயம். ஆனால் ஒரு கட்சிக்குள்ளேயே அவ்வாறான நிலைமை ஏற்படுவது அசாதாரணமானது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழரசு கட்சிக்குள் உள்மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்காக தனியான வியூகங்களை வகுத்து செயற்பட்டுவருகின்றனர். சதிகளைச் செய்கின்றனர். ஆரம்பத்தில் சுமந்திரனோடு இணைந்து செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சிலரோ, தற்போது சுமந்திரனுக்கு எதிராக நிற்கின்றனர். சுமந்திரனோடு இணைந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபவதை பலரும் தவிர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் சுமந்திரனோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்னோல்ட் கூட, இன்று சுமந்திரனோடு இல்லை. இதனை எதிர்கொள்ளுவதற்கு சுமந்திரன் வகுத்திருக்கும் புதிய வியூகம்தான் சிறிரன் உடன்பாடு. சிறிதரன் – சுமந்திரன் கூட்டு சுவார்ச்சியமான ஒன்று. சிறிதரன் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தன்னை காண்பித்துக் கொள்பவர் ஆனால் சுமந்திரனோ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் ஒருவர். இவ்வாறான இருவரும் இணைந்து செயற்படுவதானது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான். மேலும் சிறிதரன் மட்டுமல்ல பலரும் தேர்தல் காலத்தில் பேசும் பிரபாகரன் விசுவாசம் போலியானது என்பதும் தற்போது தெட்டத்தெளிவாகிவிட்டது.

ITAK

வடக்குத் தேர்தல் களத்தை பொறுத்தவரையில் தமிழரசு கட்சியில் – கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும், செல்வாக்கு மிக்க நபர்கள் அனைவரும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்தான் போட்டியிடுகின்றனர். யாழ் தேர்தல் மாவட்டம் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரியது. கடந்த தேர்தலின்போது, கூட்டமைப்பு இதில் 5 ஆசனங்களை வெற்றிகொண்டது. இதில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், எம்.ஏ,சுமந்திரன், சிறிதரன் மற்றும் வர்த்தகர் சரவணபவன் ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர். இம்முறை இதில் எவரெல்லாம் வெற்றியை சுவைப்பர் என்பதை இப்போதைக்கு கூற முடியாவிட்டாலும் கூட. நிச்சயமாக அனைவரும் வெற்றியை சுவைக்கப் போவதில்லை என்றே தெரிகின்றது. ஏனெனில் கடந்த தேர்தலின்போது காணப்பட்ட அரசியல் சூழல் இப்போது இல்லை. 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் கூட, சர்வதேசத் தலையீட்டினால், ஏதும் அதிசயங்கள் நடந்துவிடலாமென்று நம்பினர். இதன் காரணமாகவே கண்ணை மூடிக்கொண்டு கூட்டமைப்பை ஆதரித்தனர். ஆனால் இன்றைய நிலைமை அப்படியில்லை. மக்கள் அரசியல் தொடர்பில் அதிருப்தியடைந்திருக்கின்றனர். ஏனெனில் கூட்டமைப்பு கூறிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. இதற்கிடையில் கொரோனா விவகாரம், சூழலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. அத்தோடு, கட்சிகளுக்கிடையிலான போட்டியின் தன்மையும் முன்னரைப் போல் இல்லை. தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று கட்சிகள் வடக்கில் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக, இம்முறை மக்கள் மத்தியில் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன.

2018இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நோக்கினால், இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் மாற்றுத் தரப்பினர் ஒப்பீட்டடிப்படையில் பலமாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் முட்டிமோதாமல், பிரதான எதிரியை இலக்கு வைத்து செயற்படுவது முக்கியமானது. ஒரு வேளை அவர்கள் தங்களுக்குள் அடிபட்டால், அதனை சுமந்திரன் போன்றவர்களே அறுவடை செய்வர். அதே வேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஒரு சவாலாகும். கிளிநொச்சியை தளமாகக் கொண்டிருக்கும் மேற்படி கட்சி, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தனித்து கணிசமான வாக்குபலத்தை நிரூபித்திருந்தது. இதன் மூலம் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி முன்னரைப் போன்று மிகவும் இலகுவானதாக இருக்கப் போவதில்லை.

இவ்வாறான நிலைமைதான் மறுபுறமாக தமிழரசு கட்சிக்குள் (கூட்டமைப்புக்குள்) பதவிப் போட்டியையும், உள்ளக சதிகளையும் தோற்றுவித்திருக்கின்றது. கிடைக்கும் தகவல்களின்படி இம்முறை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோனாதியின் வெற்றி ஊசலாடுவதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் கடந்த முறை வெற்றி பெற்ற ஜவரில் யாரோ ஒரு சிலர் வெளியேறலாம். ஏற்கனவே பழையவர்கள் தேர்தலிலிருந்து ஓதுங்க வேண்டுமென்று சுமந்திரன் பகிரங்கமாகவே கூறியிருந்தார். அவர் பழையவர்கள் என்று குறிப்பிட்டது மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் மற்றும் சரவணபவன் போன்றவர்களைத்தான். வேட்பாளர் நியமனத்தின் போது, சுமந்திரன் சில புதியவர்களை கட்சிக்குள் உள்நுழைக்க முற்பட்டார் எனினும் அவர் எதிர்பார்த்தது போன்று, அது இலகுவானதாக இருக்கவில்லை. ஓதுங்க மறுக்கும் பழையவர்களை, புதியவர்களைக்கொண்டு வெளியேற்றலாமென்பதே சுமந்திரன் வகுத்த திட்டம். ஆனாலும் ஒரு கட்டத்தில் மாவை விழித்துக் கொண்டார். அப்போது விழித்துக் கொண்ட மாவை இன்னும் தூங்கவில்லை. ஆனாலும் மாவை விழித்துக் கொள்ள வேண்டிய காலத்திலெல்லாம், தூங்கிக் கொண்டிருந்ததால் இப்போது நிலைமை கைமீறிவிட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் யாழ் தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கின்றது. கிடைக்கும் தகவல்களின்படி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியும் சில ஆசனங்களை வெற்றிகொண்டால், கூட்டமைப்பில் சிலர் தோல்வியடைவது நிச்சயம். 2015 தேர்தலின் போது, ஜக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் ஒப்பீட்டடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்றபோதிலும்கூட, அவரால் ஒரு ஆசனத்தை வெற்றிகொள்ள முடிந்தது. அவ்வாறானதொரு நிலைமை இந்தத் தேர்தலின்போதும் ஏற்படாதென்று கூறிவிட முடியாது. ஒரு வேளை சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் அவ்வாறானதொரு வெற்றியை பெறக் கூடும். நிலைமையை எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும், தமிழரசு கட்சி நெருக்கடிக்குள்தான் இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

மாவை சேனாதிராஜாவின் தலைமையை கைப்பற்றுவதற்கான திட்டங்களும் இப்போதே தீட்டப்படுவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. அவ்வாறானதொரு திட்டத்தின் ஒரு அங்கம்தான் சிறிதரன் – சுமந்திரன் கூட்டு என்றும் கூறப்படுகின்றது. இந்தத் தேர்தலில் மாவை பின்னடைவைச் சந்தித்தால், அதன் பின்னர் தமிழரசு கட்சியென்பது சுமந்திரனின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாது. தமிழசு கட்சி எவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதோ அவரே கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பார். மாவை தனது வெற்றிக்கான வியூகங்களை வகுப்பதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை. விமர்சனங்கள் இருந்தாலும் கூட, மாவை சோனாதிராஜா, தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றின் வழியாக அரசியலுக்கு வந்த ஒருவர் என்பதை எவருமே மறுக்க முடியாது.
 

http://www.samakalam.com/செய்திகள்/தேர்தலுக்கு-பின்னர்-தமிழ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.