Jump to content

வேடிக்கை பார்ப்பதன் விபரிதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை பார்ப்பதன் விபரிதங்கள்

image_e839352399.jpg
இலங்கை, இன்று மெதுமெதுவாக இராணுவ ரீதியிலான ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸை  ஒழித்தல் என்ற போர்வையும் ‘ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்’ என்ற கருத்துருவாக்கம் நிலைபெற்ற நிலைமையும் சிங்கள, பௌத்த பெருந்தேசிய அகங்காரத்தின் அப்பட்டமான வெளிப்பாடும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன. இதில், இலங்கையர்கள் கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. இது இருபுறமும் கூரான கத்தி போன்றது. இன்று இந்த அடக்குமுறையை நோக்கிய நகர்வுக்கு, தேசியவாதத்தின் பேரால் ஆதரவளிக்கும் பலர், இந்த ஆபத்தை உணரவில்லை.   

அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்ற போது, இன்னாரைத் தண்டிக்கவும் இன்னென்ன வகையான குற்றங்களைத் தடுக்கவும் என்றுதான் சொல்லப்படுகிறது. இதனால் அது, தங்களைப் பாதிக்காது என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஓர் அடக்குமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு, அது யார் மீது பிரயோகிக்கப்படலாம் என்பதற்கு ஒரு வரையறை இல்லை. சில சமயங்களில், அது யாரைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்பட்டதோ, அவர்களுக்கு எதிராகவும் பயன்படலாம்; பயன்படுத்தப்பட்டும் இருக்கிறது.   

பொலிஸ் என்பது சட்டவிரோதச் செயல்களையும் சமூக விரோதச் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கட்டமைப்பு என்று தான் நம்பப்பட்டு வந்துள்ளது. ஆனால், சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்க, மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அச்சமூட்டும் என்றால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, பொலிஸ் தாக்குதல் தொடுக்கும். 

பொதுவாகவே, பொலிஸ் வன்முறையை நியாயப்படுத்துகின்ற விதமாகவே, அரசாங்கமும் ஊடகங்களும் நடந்து கொள்வதை நாம் அறிவோம். அதை அண்மையில் கண்டோம். 

பொலிஸ் படையின் அத்துமீறல்கள் பற்றி, பொதுமக்களிடையே கொதிப்பு அதிகமாயிருந்தால், ஒரு சில தனிப்பட்ட அதிகாரிகளின் தவறு என்று கூறப்பட்டு, அவர்களை இடம்மாற்றி அல்லது, ஆக மிஞ்சினால் சிலகாலம் இடைநிறுத்தி அல்லது, ஓய்வில் அனுப்பி பொலிஸ் படையின் நற்பெயரைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை, எல்லா நாடுகளிலும் காணக் கூடியவைதான்.  

இராணுவம் என்பது, முதன்மையாக நாட்டின் மீதான வெளித்தாக்குதல்களில் இருந்தும் உள்நாட்டுப் போரின் போதும் நாட்டைப் பாதுகாப்பதற்கான ஓர் ஆயுதப்படை என்று சொல்லப்படுகிறது. எனினும், இன்று நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத போதும், ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவும் வேலை நிறுத்தங்களை முறியடிக்கவும் இராணுவம் பயன்படுவதைக் காணுகிறோம். கொரோனா வைரஸ் பேரிடர், அவர்களுக்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது.   

ஒரு ஜனநாயக நாட்டின் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள பொலிஸ், இராணுவ அதிகாரங்களை விடவும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதற்காகப் பலவாறான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட காலத்துக்கு உரியனவாய், குறிப்பிட்ட தேவைகளுக்காக உருவாக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்  பிறகு அவற்றுக்கான தேவை இல்லாமற்போகிறது. எனினும், வெகு அரிதாகவே, அவ்வாறான சட்டங்கள் செல்லாமல் ஆக்கப்படுகின்றன.   

மக்கள் ஒன்று திரண்டு போராடாத போது, நீண்ட வரலாற்றுக் காலத்தில் போராடி, வென்றெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மெல்ல மெல்லப் பறிக்கப்படுகின்றன. எந்த அரசாங்கமும் தோற்றப்பாடான ஜனநாயகத்துக்கு மேலாக, எந்தச் ஜனநாயக உரிமையையும் பேண விரும்புவதில்லை.

எனவேதான், வாய்ப்புக் கிடைக்கின்ற போது, பிரிவினைவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன போன்று பல வேறு அடக்குமுறைச் சட்டங்களையும் அவற்றையொட்டிய அரச அதிகாரங்களையும் அது உருவாக்குகிறது. எந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு அடக்கு முறைச் சட்டம் உருவாக்கப்பட்டாலும் எந்தக் காரணத்தைக் காட்டி, பொலிஸ் படையும் இராணுவமும் வலுப்படுத்தப்பட்டாலும் அந்தச் சட்டமும் அரசாங்கத்தின் ஆயுத வலிமையும் அவற்றுக்கான குறிப்பிட்ட தேவையுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை.  

இச்சட்டம், நமக்கெதிரானதில்லை என்று கூறி, மௌனமாக இருப்பவர்களே வெகுவிரைவில் அச்சட்டத்தால் பாதிக்கப்பட்டதை, 1988-1989இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் வலுப்படுத்தப்பட்ட ஆயுதப் படையினரும் சிங்கள மக்களுக்கு எதிராகப் பயன்பட்ட போது கண்டோம்.

பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரானவை என்று சொல்லி, கட்டியெழுப்பப்பட்ட ஆயுத வலிமையும் அரச அதிகாரங்களும் அரசாங்கத்தின் அனைத்து எதிரிகளுக்கும் எதிராக மட்டுமன்றி, நியாயத்துக்காகப்  போராடுகிற தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராகப் பயன்பட்டன; இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன.   

அண்மைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சட்டம், ஒழுங்கு நடவடிக்கையாகச் சிலாகிப்போர், இலங்கையின் அடக்குமுறைச்  சட்டங்களையும் அரசாங்கங்களின் நடத்தைகளையும் கொஞ்சம் யோசிப்பது நலம்.   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வேடிக்கை-பார்ப்பதன்-விபரிதங்கள்/91-252707

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.