Jump to content

கொண்டைக்கடலை சேர்த்த சில சலாட் வகைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

large.051C63C3-8708-435C-A159-9DC5D6DC95B3.jpeg.12e06f123e1edf91b789d2f65341203a.jpeg

தேவையான பொருட்கள்:
1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்)
2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
2 - சிறிய தக்காளி, நறுக்கியது
2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது
1 - பச்சை மிளகாய், நறுக்கியது
2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு
2 தேக்கரண்டி - Chaat மசாலா

செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார்

சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

******postimage link மூலம் படத்தை இணைக்கமுடியதமையால் விம்பகத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

large.051C63C3-8708-435C-A159-9DC5D6DC95B3.jpeg.12e06f123e1edf91b789d2f65341203a.jpeg

தேவையான பொருட்கள்:
1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்)
2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
2 - சிறிய தக்காளி, நறுக்கியது
2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது
1 - பச்சை மிளகாய், நறுக்கியது
2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு
2 தேக்கரண்டி - Chaat மசாலா

செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார்

சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

******postimage link மூலம் படத்தை இணைக்கமுடியதமையால் விம்பகத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று..

இந்த salad செய்முறையை நான் இணைத்தபொழுது, இதைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத மறந்துவிட்டேன்.. postimage linkம் வேலை செய்யவில்லை.

பொதுவாக, நாங்கள் வெங்காயம் சேர்க்காமல் கறியோ, அல்லது salad செய்வது குறைவாக இருக்கும். ஆனால் இந்த salad வெங்காயம் இல்லாத salad. வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தமையால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த salad செய்முறையை நான் இணைத்தபொழுது, இதைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத மறந்துவிட்டேன்.. postimage linkம் வேலை செய்யவில்லை.

பொதுவாக, நாங்கள் வெங்காயம் சேர்க்காமல் கறியோ, அல்லது salad செய்வது குறைவாக இருக்கும். இந்த saladம் அப்படியான ஒன்று. வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தமையால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

பார்க்க நன்றாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா சிதம்பரநாதன்,  அவர்களே....
வெள்ளிக் கிழமைகளில்....  எனக்கு, கொண்டல்  கடலை  தான் முக்கியம்.
அதற்காக...  வியாழக் கிழமையே...  அந்தக் கடலையை ஊற வைத்து,
பதமாக அவித்து.... சாப்பிடும்,  சுவையோ... சுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

large.051C63C3-8708-435C-A159-9DC5D6DC95B3.jpeg.12e06f123e1edf91b789d2f65341203a.jpeg

தேவையான பொருட்கள்:
1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்)
2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
2 - சிறிய தக்காளி, நறுக்கியது
2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது
1 - பச்சை மிளகாய், நறுக்கியது
2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு
2 தேக்கரண்டி - Chaat மசாலா

செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார்

சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

******postimage link மூலம் படத்தை இணைக்கமுடியதமையால் விம்பகத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று..

புது சலாட்டுக்கும் செய்முறைக்கும் நன்றி.
ஒரு கேள்வி. 
கட்டாயம் ஹிமாலயன் பிங்க் உப்புத்தான்  பாவிக்க வேண்டுமா?😎

38 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நன்றாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி.

இனி இவருக்கு இருப்பு கொள்ளாது. செய்து சாப்பிடும் வரைக்கும் நித்திரையும் வராது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

புது சலாட்டுக்கும் செய்முறைக்கும் நன்றி.
ஒரு கேள்வி. 
கட்டாயம் ஹிமாலயன் பிங்க் உப்புத்தான்  பாவிக்க வேண்டுமா?😎

ம்ம்ம் 
அப்ப திண்ட மாதிரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

புது சலாட்டுக்கும் செய்முறைக்கும் நன்றி.
ஒரு கேள்வி

கட்டாயம் ஹிமாலயன் பிங்க் உப்புத்தான்  பாவிக்க வேண்டுமா

நன்றி.

இல்லை, சாதாரன உப்பும் பாவிக்கலாம். ஆனால் கூடுதலாக ஹிமாலயன் பிங்க் உப்பைத்தான் salad வகைகளுக்கு பாவிப்பது வழமை என்பதால் அப்படியே எழுதிவிட்டேன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நன்றாக இருக்கிறது.
இணைப்புக்கு நன்றி.

.நன்றி.

 

 

கொஞ்சம் spicyயக் இருக்கும்.. ஆனால் இந்த salad பற்றி எனக்கு கூறியவர் என்னுடன் வேலை பார்க்கும் மராத்திய பெண். அவர்கள் வெங்காயம் சேர்ப்பதில்லை என்பதால் எல்லோருக்கும் பிடிக்குமோ தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடலை நல்ல சத்துள்ள உணவு, கிழமையில் இரு தடவை அவித்து கொடுப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

பிரபா சிதம்பரநாதன்,  அவர்களே....
வெள்ளிக் கிழமைகளில்....  எனக்கு, கொண்டல்  கடலை  தான் முக்கியம்.
அதற்காக...  வியாழக் கிழமையே...  அந்தக் கடலையை ஊற வைத்து,
பதமாக அவித்து.... சாப்பிடும்,  சுவையோ... சுவை.

உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.  

நாங்கள் இந்த கடலையை அவித்து, அதை வெங்காயம், செத்தல்மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து சாப்பிடுவோம்.

எனது Fiji நண்பி, பச்சைமிளகாய், வெங்காயம், ஒரு உள்ளி பல், கரம் மசாலா போட்டு செய்வதாக கூறுவா. 

நான் இந்த 3 முறைகளிலும் செய்வது வழமை.

1 hour ago, உடையார் said:

இந்த கடலை நல்ல சத்துள்ள உணவு, கிழமையில் இரு தடவை அவித்து கொடுப்போம்

உங்கள் எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டல் கடலை (chick peas) உடன் சேர்த்து சாலட் செய்வதற்கு, பாவிக்க கூடிய மரக்கறிகளும், பொருட்களும்.

இவை எல்லாம் பாவிக்க வேண்டியதிலை. இதில் ஓர் முறை என்று இல்லை.

உங்களிடம் உள்ளவற்றை வைத்து, எது எவற்றுடன் ஒத்து வரும், மற்றும் கண்மட்ட அளவு என்று பார்த்து செய்வது.   இருப்பவற்றை வைத்து உடனடி salad இற்கு கொண்டல்  கடலை (tinned) உகந்தது. அவித்தும் செய்யலாம்.

இது சுவைக்கும், texture இற்குமான சாலட்.  ஒவொரு தரமும் வெவ்வேறு சுவையும், texture உம் தரும்.  

1) கொண்டல் கடலை 

 2) bell பேப்பர் (1 cm துண்டுகள்). நேரம் இருந்தால் முழுமையாக நெருப்பில் அல்லது grill இல் நேரடியாக சுட்டு, கருகிய தோலை நீக்கி விட்டு, ஓரளவு   நீளமான தூண்டுகைகளாக.   

3) தயிர் 

4) cheese ( விருப்புக்கு ஏற்ப) 

5) carrots, சிறு துண்டுகளாக  

6) தக்காளி (plum அல்லது baby tomato). Flame grill If big (beef) tomato. 

7) முள்ளங்கி (சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் பாக்கு அளவில் இருப்பது. சிலவேளைகளில் ஓர் சுனைப்பு தன்மை இருக்கும், கொதி நீரில்  .1 நிமிடம் போட்டு மூடி விட்டு பாவிக்கவும்)  

😎 பச்சை மிளகாய் அல்லது எந்த மிளகாயும் உறைப்புக்கு ஏற்ற படி 

9) Avacado 

10) tinned tuna அல்லது salmon (இதை பாவித்தால் cheese, தயிரை தவிர்க்கவும்), slightly spiced, grilled, ovened or shallow fried chicken pieces or even any other meat or fish as you wish 

11) salt, எலுமிச்சம் புளி, சாலட் ட்ரெஸ்ஸிங், ஒலிவ் ஆயில், மிளகு (dressing, தேவைக்கும், இருப்புக்கும் ஏற்றபடி)

12) வேறு எதாவது மரக்கறி- spring onion, salad onion 

13) சிறிதளவு மிகவும் மெலிதாக அரிந்த உள்ளி மெலிதாக அரிந்த carrot உடன், brown sugar, எலுமிச்சபுளியுடன் ம்  
   
14) chat மசாலா, மல்லி இலை அல்லது வேறு parsely, thyme, chives, oregano, காய்ந்தது என்றால் வேறு சுவை.   

15) 15) உங்களிடமுள்ள உடனடியாக, பச்சையாக சாப்பிடக் கூடிய மரக்கறி. உ.ம். courgets (small pieces), மிகவும் சிறிய,  இளமையான broccoli (விரல்களால் நுள்ளி எடுக்க கூடிய அளவு).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

23 minutes ago, Kadancha said:

கொண்டல் கடலை (chick peas) உடன் சேர்த்து சாலட் செய்வதற்கு, பாவிக்க கூடிய மரக்கறிகளும், பொருட்களும்.

இவை எல்லாம் பாவிக்க வேண்டியதிலை. இதில் ஓர் முறை என்று இல்லை.

உங்களிடம் உள்ளவற்றை வைத்து, எது எவற்றுடன் ஒத்து வரும், மற்றும் கண்மட்ட அளவு என்று பார்த்து செய்வது.   இருப்பவற்றை வைத்து உடனடி salad இற்கு கொண்டல்  கடலை (tinned) உகந்தது. அவித்தும் செய்யலாம்

மிக்க நன்றி. 

மிகவும் பயனுள்ள தகவல்.

நான் பொதுவாக, ஒரு சிறிய மர உரலில் உள்ளி மற்றும் மிளகை நன்றாக குற்றி பின் அதை சிறிதளவு ஓலிவ் ஓயிலில், ஊறவைத்து, அதை salad dressingஆக பாவிப்பது வழமை.அந்த உள்ளியின் வாசனை மிகவும் பிடிக்கும்.

 

Link to comment
Share on other sites

யூனியில் படிக்கும் போது ஒரு தடவை    சைடு டிஷ் க்கு  கொண்டல் கடலையுடன் நெத்தலி பொறித்து போட்டு மிளகாய் வெங்காயம் 
போன்றவற்றை அதிகம் போட்டு ஒரு விதமாக செய்து  இருந்தார்கள் சூப்பர் ஆக இருந்திச்சு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

யூனியில் படிக்கும் போது ஒரு தடவை    சைடு டிஷ் க்கு  கொண்டல் கடலையுடன் நெத்தலி பொறித்து போட்டு மிளகாய் வெங்காயம் 
போன்றவற்றை அதிகம் போட்டு ஒரு விதமாக செய்து  இருந்தார்கள் சூப்பர் ஆக இருந்திச்சு  

தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சத்தான கெத்தான சாலட் ......செய்து சாப்பிடத்தான் வேண்டும்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 03:30, suvy said:

ஒரு சத்தான கெத்தான சாலட் ......செய்து சாப்பிடத்தான் வேண்டும்......!   👍

 

On 5/7/2020 at 05:19, Nathamuni said:

👍

 

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 12:28, பிரபா சிதம்பரநாதன் said:

 ஹிமாலயன்/பிங்க உப்பு

ஹிமாலயன் உப்பில் ஏதாவது வேறுபட்ட குணங்கள் இருக்கின்றதா? ஒவ்வொருத்தொரும் வெவ்வேறு காரணங்கள் சொல்கின்றனர். பெரும்பாலானோர் உப்பு என்றால் எல்லாம் உப்புத்தான் என் மொட்டையாக முடிக்கின்றனர்.
இந்த ஹிமாலயன் உப்பை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஹிமாலயன் உப்பில் ஏதாவது வேறுபட்ட குணங்கள் இருக்கின்றதா? ஒவ்வொருத்தொரும் வெவ்வேறு காரணங்கள் சொல்கின்றனர். பெரும்பாலானோர் உப்பு என்றால் எல்லாம் உப்புத்தான் என் மொட்டையாக முடிக்கின்றனர்.
இந்த ஹிமாலயன் உப்பை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஹிமாலயன் பிங்க உப்பு, கடல் உப்பு, போன்றவற்றில் ஓப்பீட்டளவில் அதிக minerals உள்ளதாக கூறுவார்கள்.. ஆனால் கடல் உப்பில் iodine குறைவு என கூறுவார்கள். அதற்காகத்தான் iodine கலந்த தூள் உப்பை அறிமுகப்படுத்தினர்கள்.இப்படி பல தகவல்கள். ஆனால் அதிகளவு மாற்றங்கள்/வேறுபட்ட குணங்கள் உள்ளதா என தெரியவில்லை. 

“ஹிமாலயன்” உப்பு, “கடல்” உப்பு என்பன அவை உருவாகும் இடங்கள் இயற்கையாக இருப்பதால், உங்களை அவை இயற்கையான ஒன்று என அதிகம் கவரலாம்.

ஹிமாலயன் உப்பு( pink and black) சலாட் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும். விலையும் கொஞ்சம் அதிகம் என்பதால் அன்றாட சமையலுக்கு அதிகம் பாவிப்பார்களோ தெரியாது. 

ஆனால் என்னைப்பொறுத்தவரையில், உங்களது மனதிற்கும் உடல்நலத்திற்கும் எது நல்லது என நினைக்கிறீர்களோ அந்த உப்பை பாவியுங்கள். உப்பை அதிகம் பாவிக்காதுவிட்டால் இன்னமும் நல்லது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் Sumac என்று அழைக்கப்படும்  middle eastern spice ஐ அறிந்தேன். இது chick peas உடன் மிகவும் ருசியாகவும், fragrance ஆகவும் இருக்கும் என்றும் அறிந்தேன்.

Sumac roasted chick peas என்ற சமையல் முறையும் உள்ளதாக அறிந்தேன்.

Sumac  oven, grill, barbecue, shallow fry முறையில்  சமைக்கப்பட்ட  அசைவ உணவுகளுக்கும், பல சலாட் வகைகளுக்கும்  தூக்கி கொடுக்கும் என்றும்  அறிந்தேன்.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல Sumac தனியாக பாவித்தது இல்லை ஆனால் லெபனீஸின் Zaatar எனும் spice mixesல் dried sumac உள்ளது..

இந்த Zaatar வாசனையும் ருசியும் மிகவும் பிடிக்கும்.. புளிப்பு, உறைப்பு என நன்றாக இருக்கும்

4-FF58000-1-A56-4208-8-C11-951-C56-C9726

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 13:17, பிரபா சிதம்பரநாதன் said:

Zaatar

புளிப்பு தன்மை,மற்றும் fragrance ஐ தருவது Sumac. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 14:17, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் சொல்வது போல Sumac தனியாக பாவித்தது இல்லை ஆனால் லெபனீஸின் Zaatar எனும் spice mixesல் dried sumac உள்ளது..

இந்த Zaatar வாசனையும் ருசியும் மிகவும் பிடிக்கும்.. புளிப்பு, உறைப்பு என நன்றாக இருக்கும்

4-FF58000-1-A56-4208-8-C11-951-C56-C9726

 

 

12 minutes ago, Kadancha said:

புளிப்பு தன்மை,மற்றும் fragrance ஐ தருவது Sumac. 

புளிப்புக்கு... எமது, தேசிக்காய் ஊறுகாய் இருக்க,
லெபனான் புளிப்பு... நமக்கு எதற்கு?😜 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

புளிப்புக்கு... எமது, தேசிக்காய் ஊறுகாய் இருக்க,
லெபனான் புளிப்பு... நமக்கு எதற்கு?

கயர்ப்பு தன்மையான புளிப்பு.  Zesty.

Sumac, நான் இன்னும் அதை பாவிக்கவில்லை. 

ஆனால் மிளகு பச்சையான நிறத்தில் இருக்கும் போது ஓர் புளிப்பு தன்மை மிகவும் சாடையான சாயலுடன்  இருக்கும். அப்படி sumac இல் கூடுதலாக இருக்கிறதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

கயர்ப்பு தன்மையான புளிப்பு.  Zesty.

Sumac, நான் இன்னும் அதை பாவிக்கவில்லை. 

ஆனால் மிளகு பச்சையான நிறத்தில் இருக்கும் போது ஓர் புளிப்பு தன்மை மிகவும் சாடையான சாயலுடன்  இருக்கும். அப்படி sumac இல் கூடுதலாக இருக்கிறதோ தெரியவில்லை.

Marten Salami 1A mit grünem Pfeffer gefüllt ca. 1,7kg: Amazon.de ...

கடைஞ்சா.... நான்  50 % பகிடியாகவும்,  50 % வெற்றியாகவும் எழுதியதை...
நீங்கள்,  100 %   கருத்தில் கொண்டு...  எனக்கு, விளங்கும்படி  எழுதியமைக்கு நன்றி.

ஜேர்மனியில்  விற்கும், சில சலாமிகளில்... 
பச்சை மிளகு,  கலந்திருக்கும். 

வீட்டில் இருந்து, கட்டிக் கொண்டு போன  பாணுக்கு 
வேலைக் களைப்பிலும், பசி அவதியிலும்...
அந்தச் சலாமியில் உள்ள.. பச்சை  மிளகு கடிபடும் போது... 
வித்தியாசமான சுவை... டக்கென்று, மின்னலைப் போல் வந்து,
புத்துணர்ச் சியை தருவது போல்... 
மூளையில்..  ஒரு பிரகாசம் அடிப்பதை போல, இருப்பதை   உணர்ந்துள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MARTERN Salami ஐ தேடிப்பார்த்தேன், இங்கு UK இல் முன்பு விற்கப்பட்டது. நானும் உண்டதாக நினைவு.

ஆனால், இப்பொது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2020 at 23:00, Kadancha said:

 

கொண்டல் கடலை (chick peas) உடன் சேர்த்து சாலட் செய்வதற்கு, பாவிக்க கூடிய மரக்கறிகளும், பொருட்களும்.

இவை எல்லாம் பாவிக்க வேண்டியதிலை. இதில் ஓர் முறை என்று இல்லை.

உங்களிடம் உள்ளவற்றை வைத்து, எது எவற்றுடன் ஒத்து வரும், மற்றும் கண்மட்ட அளவு என்று பார்த்து செய்வது.   இருப்பவற்றை வைத்து உடனடி salad இற்கு கொண்டல்  கடலை (tinned) உகந்தது. அவித்தும் செய்யலாம்

 

95118-B2-F-786-D-4378-A45-C-0-AC9-C98-C3


நான் மேலே நீங்கள் கூறியவற்றில், சிலவற்றை போட்டு இந்த saladஐ இன்று செய்திருந்தேன். எனக்கு நான் சேர்த்தவற்றின் கலப்பு பிடித்திருந்தது..

தேவையான பொருட்கள்:-
வேகவைத்த கொண்டைக்கடலை 1/2 cup
Zucchini -  1/2
Baby capsicum -1
Mini Roma tomatoes -1
Small Red radish -1
மிளகாய் -1
Cabanossi ( dry pork sausage) - 1/2 ( இதை சேர்ப்பது meaty textureக்காக)
Salad dressing - ஒலிவ் எண்ணெய்யில் ஊற வைத்த, உள்ளி(1), இஞ்சி(மிகவும் சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக சிறிய துண்டு) fresh mixed herbs. 

0653-B4-AB-3-FE4-40-A7-B2-B5-2-DF9-CCB7-


1- முதலில் salad dressing
உள்ளி(1), இஞ்சி(மிக மிக சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக மிக சிறிய துண்டு) ஆகிய மூன்றையும் உரலில் போட்டு நன்றாக குற்றி எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போடவும். அதனுள் fresh mixed herbs, உப்பு, மிளகு போட்டு சிறதளவு(1/2 தேக்கரண்டி) ஒலிவ் எண்ணெயை ஊற்றி ஊற வைக்கவும். 

2- அடுத்ததாக Baby capsicum நீளவாக்கில் வெட்டவும்.

3- Zucchini மெல்லிய வட்டமாக வெட்டவும். 

4- வெட்டிய Zucchini, Capsicum வேண்டுமாயின் ovenல் போட்டு அதிக நேரம் வாட்டாமல் எடுத்து வைக்கவும். 

5- சிவப்பு முள்ளங்கியை மெல்லிய வட்டமாக வெட்டி ஒரு நிமிடம் கொதித்த நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.( அதிக நிமிடங்களுக்கு விட்டால் முள்ளங்கியின் சிவப்பு நிறம் போய்விடும்).

6- Cabanossi சிறிய வட்டங்களாக வெட்டி ovenல் போட்டு எடுத்து வைக்கவும் 

7- தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

8- மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும்

9- பின்பு ஒரு கிண்ணத்தில், வேக வைத்த கொண்டைக்கடலை, Capsicum, Zucchini, முள்ளங்கி, Cabanossi, தக்காளி, மிளகாய் போட்டு கலந்தபின்பு, முன்பே ஊறவைத்த salad dressing இந்த saladன் மேல் ஊற்றவும்.

இது முதற்தடவை என்பதால் பொருட்களின் அளவை அண்ணளவாக பார்த்து பார்த்து போட்டேன். ஆனாலும் இந்த மரக்கறிகளின் இயல்பான தன்மை வித்தியாசமான சுவையை தந்தது. விரும்பினால் செய்து பாருங்கள்.

89-E915-B4-A40-E-4324-94-DE-DF685-B24109

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.