Jump to content

போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனி – மின்னல் யுத்தம் – Blitzkrieg - உலகப்போர் 2 - பகுதி 5


Recommended Posts

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegசெப்ரெம்பர் 1, 1939 அதிகாலை நான்கு நாற்பதுக்கு ஜேர்மனி தனது தாக்குதலை ஆரம்பித்தது. திடீரென்று போர்  தொடுக்க  முடியாதே! அதற்காக ஒரு காரணத்தையும் ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். சமீப காலமாக, போலந்து சரியில்லை. எப்போதும் போர் குரோதத்துடன்  இருக்கிறது. எல்லைப்புறத்தில் இருந்த அப்பாவி ஜேர்மனிய வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் நாங்கள் அவர்களை எதிர்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். கவனிக்கவும் இது எதிர்த்தாக்குதல் மட்டுமே இது

எதிர் தாக்குதல் மட்டுமே என்று காட்டுவதற்காக நாசிகளின் பிரச்சாரப்பிரிவு சிறப்பான முன்னேற்பாடுகளை ஓகஸ்ட் 31 திகதி இரவே செய்திருந்தது. ஓகஸ்ட்  31 மதியமே போலந்து மீதான தாக்குதலுக்கு ஹிட்லரால் கட்டளையிடப்பட்டுவிட்டது. அதற்கான காரணமாக  ஜேர்மனியின் வதைமுகாம்களில் (Concentration Camps) இருந்த கைதிகளுக்கு போலந்து ராணுவ சீருடை அணிவித்து ஒரு போலித்தாக்குதலை ஏற்பாடு செய்திருந்தனர். படையெடுப்புக்கு மேலதிக ஆதாரமாக காட்டுவதற்காக போலந்து சீருடையில் இறந்த சில செறிவு முகாம் கைதிகளையும் அவர்கள் விட்டுச்சென்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் ஜேர்மன் துருப்புக்கள் 2800 கி மீ நீளமான போலந்து எல்லையை கடந்து போலந்து மீது  தாக்குதலை நடத்த அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிட்லரை பொறுத்தவரை அவர் நம்பியபடி  உலகில் இனரீதியாக உயர்ந்த குடிமக்களாக வாழும் (racially superior Germans - rassisch Überlegenen Deutschen) ஜேர்மன் குடிமக்கள் வாழ்வதற்கு விசாலமான அகன்ற பாதுகாப்பான பிரதேசத்தை பெற்றுக்கொள்வார்கள்.

 

முதலாவது விமான தாக்குதல்

திட்டமிட்டபடி அதிகாலை நான்கு நாற்பது மணிக்கு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. பீல்ட் மார்ஷல் Walther von Brauchitsch கட்டளைத்தளபதியாக கடமையாற்றினார்.   Wielun என்னும் நகரத்தை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். பாதி உறக்கத்திலும் பாதி விழிப்பிலும் இருந்த போலந்து மக்கள் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார்கள். ஆபத்து என்பதை உணர்வதற்கு முன் சிதறி வெடிக்க ஆரம்பித்தார்கள். போர் பற்றிய எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. கட்டடங்கள் பொடிபொடியாக உதிர ஆரம்பித்தன. வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து தப்ப முயன்றார்கள். சில நிமிடங்களில் அருகில் இருந்த கட்டங்கள் அவர்கள் மீது சாய்ந்தன. வீடுகள் தீப்பிடித்து எரிய, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உள்ளேயே கருகிக் கரியாக உதிர்ந்தனர்.

சில மணி நேரங்களில் ஜேர்மன் வீரர்கள் விமானத்தில் இருந்தபடி ஒரு சுற்று சுற்றி வந்து நோட்டமிட்டனர். கரும்புகை ஒரு சுற்று சுற்றி வந்து நோட்டமிட்டனர். கரும்புகை மேலே கிழம்பி அவர்களை நோக்கி நகர ஆரம்பித்தது. புன்னகை செய்துகொண்டார்கள். இது முதல் வெற்றி. ஹிட்லருக்கு சொல்லவேண்டும். நகரத்தின் எழுபத்தைந்து சதவிகிதம் சேதம். இறப்பு எண்ணிக்கை தோராயமாக ஆயிரத்து இருநூறு. பெரும்பாலானவர்கள் சிவிலியன்கள். இரண்டாம் உலகப்போரின் தொடக்கச் சம்பவம் இது என்று இதனைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

large.1996415199_JU87Stukadive-Bomber.jpg.bab9a52820317c6c7b3edf2026de2dea.jpg

டான்ஷிக் மீதான தாக்குதல்

வீலூன் நகர் தாக்கபட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் டான்சிக் தாக்கப்பட்டது. இது ஒரு துறைமுக நகரம் இங்கு ஜேர்மனியர்களே பெரும்பான்மையினர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் ஒரு பகுதியாக இருந்தது டான்ஸிக். வெர்ஸைல்ஸ் ஒப்பந்தம் ஜேர்மனியிடம் இருந்து டான்ஸிக்கை பிரித்திருந்தது. டான்ஸிக்கை விடுவித்தே தீருவேன் என்று 1938 ல் இருந்தே பிரசாரம் செய்ய ஆரம்பித்திருந்தார் ஹிட்லர்.

டான்ஸிக்கில் உள்ள வெஸ்ரர்பிலாற் (Westerplatte) என்னும் பகுதியை தாக்க ஆரம்பித்தது ஜேர்மனி. கடல் வழித் தாக்குதல். காலை எட்டு மணிக்கு மோக்ரா என்னும் பகுதியில் ஒரு நகரம் தாக்கப்ட்டது... படைபலம் என்று பார்த்தால், 37 டிவிஷன் , 12 பிரிகேட், 900 போர்விமானங்கள். ஜேர்மனியின் பிரமாண்டமான அணிவகுப்புக்கு முன்னால் இது குட்டி சுண்டைக்காய்.

படைபலத்தோடுகூட தெளிவான போர்த்தந்திரத்தையும் உபயோகித்தது ஜேர்மனி. மேற்கு, தெற்கு என்று சகல திசைகளிலும் சுற்றிவளைக்க ஆரம்பித்தார்கள். தெளிவாக்த திட்டமிட்டு தொடுக்கபட்ட தாக்குதல், மின்னல் வேகத்தில் புகுந்து, வேண்டியதை அழித்துவிட்டு, கைப்பற்றிக் கொண்டார்கள்.

வான் வழி, கடல் வழி, தரை வழி மூன்றும் அடுத்தடுத்து நடந்தன. ஒன்று முடிந்தால், மற்றொன்று. அது தீர்ந்தால் இன்னொன்று. சுதாகரிப்பதற்கு அவகாசம் சுத்தமாக இல்லை. விமானநிலையங்கள், ராணுவத்தளங்கள், தகவல் தொடர்பு மையங்கள், ரயில் பாதைகள், வணிக கட்டடங்கள், அரசாங்க அலுவலகங்கள், வீடுகள், கடைகள் எதையும் விட்டுவைக்கவில்லை. இறுதி இலக்கு, தலைநகரம் வார்சோ.

ஜேர்மனியை எதிர்கொண்டு தாக்கி முடியறித்துவிட முடியும் என்னும் நம்பிக்கை போலந்துக்கு நிச்சயமாக இல்லை. அசுரவேகத்தில் வரும் ஜேர்மனிப்படைகளை எதிர்நோக்க தோதான ராணுவத்தலைமை அங்கே இல்லை. முனைப்பும் ஊக்குவிப்பும் இல்லை என்னும் நிலையில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? நிஜத்தில், தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது அவர்களுக்கு.

செப்ரெம்பர் மாதம் 3 ம் திகதி ஜேர்மனிக்கு எதிரான போர் அறிவிப்பை வெளியிட்டன பிரிட்டனும் பிரான்ஸும். போலந்துக்கு இதில் பெரிய ஏமாற்றம். ஜேர்மனி தாக்க ஆரம்பித்தவுடன் வந்திருக்க வேண்டாமா? நேசம் என்றால் இதுவா பொருள்? அடிபட்டு கீழே விழுந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறோம் இப்போது வந்து சாகவாசமாக கேட்கிறார்கள், என்ன ஆச்சு நண்பா என்று. என்னவென்று சொல்ல.

சரி வந்தது தான் வந்தார்கள். உறுதியான முறையில் எதிர்க்கவாவது செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஜேர்மன், பிரான்ஸ் எல்லையில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஒப்பந்தத்தை மீறி எப்படி போலந்தைத் தாக்கலாம் என்று பிரான்ஸ் திமிறிக்கொண்டு வரவில்லை. என் அணியில் கைவைத்த உன் கையை உடைக்காமல் விடமாட்டேன் என்று சூளுரைக்கவில்லை. ஒப்புக்கு சிலரை அனுப்பினார்கள். மோதல் அல்ல. கிட்டத்தட்ட தெருச்சண்டை போல் எதோவொன்று நடந்தது. அதுவும் பெயரளவுக்கு தான். நாளை யாராவது கேள்வி கேட்டால் கிடையாதே நானும் ஜேர்மனியை எதிர்த்து சண்டை போட்டேனே என்று சொல்லிக் காட்டுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு அது. ஒரு வேளை பிரான்ஸ் முனைப்புடன் ஜேர்மனி மீது போர் தொடுத்திருந்தால் ஜேர்மனி நிச்சயம் தள்ளாடியிருக்கும். காரணம் எண்பத்துஐந்து சதவீத படைகளை ஜேர்மனி போலந்துக்குத் திருப்பிவிட்டிருந்தது. ஜேர்மனியை பாதுகாக்க பதினைந்து சதவீத படையே எஞ்சியிருந்தது.

போலந்தில், ஜேர்மன் படைகளின் முன்னேறின.  "மின்னல் போர்" என்று அழைக்கப்படும் ஒரு ராணுவ மூலோபாயத்தைப் பயன்படுத்தி, கவசப் பிரிவுகள் எதிரிகளின் கோடுகள் மற்றும் எதிரிகளின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வழியாக அடித்து நொறுக்கப்பட்டன, அவை மோட்டார் பொருத்தப்பட்ட ஜேர்மன் காலாட்படையால் சூழப்பட்டு கைப்பற்றப்பட்டன, அதே நேரத்தில் டாங்கிகள் மீண்டும் மீண்டும் முன்னேற விரைந்தன. இதற்கிடையில், அதி நவீன ஜேர்மன் விமானப்படை – Luftwaffe  - போலந்து விமானத் திறனை அழித்தது,  விமான ஆதரவை வழங்கியது, மேலும் எதிரிகளை மேலும் அச்சுறுத்தும் முயற்சியில் போலந்து நகரங்களில் கண்மூடித்தனமாக குண்டுவீச்சு நடத்தியது.

 ஒரு வலுவான தற்காப்பு நிலைப்பாட்டை எடுப்பதற்கு பதிலாக, ஜேர்மனியர்களை எதிர்கொள்ள துருப்புக்கள் முன்னால் விரைந்து செல்லப்பட்டன, அவை முறையாக கைப்பற்றப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. செப்டம்பர் 8 க்குள், ஜேர்மன் படைகள் வார்சோவின் புறநகர்ப் பகுதியை அடைந்தன, படையெடுப்பின் முதல் வாரத்தில் 225 கிலோமீற்றர் முன்னேறியது

இதற்கிடையில் செப்ரெம்பர் 6 ம் திகதியே போலந்தின் பிரதமர் Ignacy Moscicki, உயர் ராணுவ மார்ஷல் மற்றும் அவரது அமைச்சர்கள் வார்சோவில் இருந்து அவசரமாக வெளியேறிவிட்டனர். போலந்து பின்வாங்க ஆரம்பித்திருந்தது. வார்சோவுக்கு மேற்கே இருந்த Bzura கடல் பகுதியில் நடைபெற்ற மோதல் செப்ரெம்பர் 9 முதல் 19 வரை நீடித்தது. இருந்த கொஞ்சநஞ்ச எதிர்ப்பும் நசுக்கப்ட்டது. முதலில் பாலங்களை குண்டுகள் வீசி தாக்கினார்கள். எதிர்தாக்குதல் தொடுப்பதற்காக ராணுவத்தினர் ஒரிடத்தில் கூடியபோது அடுத்தடுத்து அலையலையாக, வான்வெளித்தாக்குதல்கள் தொடுக்கபட்டன. ஐம்பது கிலோ எடையுள்ள லைட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலான சேதத்தை ஏற்படுத்தின இந்த குண்டுகள்.

large.670925293_DeutscherEinmarschinPolen.jpg.15653ccc691a1fc4c62de38a9db78202.jpg

சோவியத்தின் எதிர்வினை

இந்த பின்னணியில் செப்ரெம்பர் 17, 1939 அன்று சோவியத் அயலுறவுத்துறை அமைச்சர் லோலோடோவ் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது.

ஜேர்மனிக்கும் போலந்துக்கும் இடையில் நடைபெறும் இந்த யுத்தம் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறது. போலந்து  அரசு செயலிழந்துவிட்டது. ஆளும் வர்க்கத்தினர் திவாலாகிவிட்டனர். போலந்தின் தலைநகரம் என்று அழைக்கமுடியாத நிலையில் வார்சோ இருக்கிறது. அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களின் எதிர்காலத்தை இனி விதி தான் தீர்மானிக்கவேண்டும் என்று விட்டுவிட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சோவியத்யூனியனுக்கும் போலந்துக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. போலந்தை காக்கும் அதி முக்கிய பணி சோவியத்திடம் வந்து சேர்ந்துள்ளது. எந்த விதமான விபத்தும் எப்போதும் நேரலாம் என்னும் நிலையில் இருக்கிறது போலந்து. இப்படி போலந்து இருப்பதால் சோவியத்துக்கும் தொந்தரவு தான். தவிரவும், போலந்தில் உள்ள உக்கிரேனியர்களையும் பைலோரஷ்யர்களையும் சோவியத்தால் கைவிட முடியாது. அவர்கள் சோவியத்துடன் ரத்த உறவு கொண்டவர்கள். அவர்களுக்கு கை கொடுப்பது சோவியத்தின் கடமை.

போலந்துக்குள் சோவியத் காலடி எடுத்து வைக்கப்போவதன் முன்ன்றிவிப்பாக இந்த உரை அமைந்திருந்தது.

அக்டோபர் முதலாம் திகதி போர் முடிவுக்கு வந்தபோது போலந்து சின்னாபின்னமாகி இருந்தது. சாகாமல் எஞ்சியிருந்த ராணுவத்தினர் (காலாட்படை மற்றும் விமானப்படை பக்கத்து தேசங்களான ரூமேனியாவுக்கும் ஹங்கேரிக்கும் பிரித்தளிக்ப்பட்டனர். வார்சோ, கேலட்ஸ், சிலேஸியா, போரானியா, லோட்ஸ் ஆகிய மாகணங்கள் உடனடியாக ஜேர்மனின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

சோவியத் ஜேர்மன் ஒப்பந்தத்தையும், சோவியத் போலந்தின் பகுதிகளை மீட்டெடுத்ததையும் அமெரிக்கா இன்றுவரை குறை சொல்லிக்கொண்டிருக்கிறது. போலந்தை பங்கிட்டுக் கொள்ளுவதற்காக ஹிட்லரும் ஸ்டாலினும் ரகசியமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் அதன்படி இரு நாடுகளும் போலந்து மீது போரிட்டு உனக்கு அது, எனக்கு இது என்று பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா.

அக்ரோபர் 1 ம் திகதி வின்ஸ்டல் சேர்ச்சில் ரேடியோவில் உரையாடினார். கிழக்கு போலந்தில் நாசிகளை தடுத்து நிறுத்திவிட்டது சோவியத். நாம் முன்னரே சோவியத்துடன் கூட்டு சேர்ந்திருக்கவேண்டும். லண்டன் ரைம்ஸில் ஜார்ஜ் பேர்னாட் ஷா இப்படி எழுதினார்.ஸ்டாலினுக்கு மூன்று சியர்ஸ்! ஹிட்லரை முதல் முறையாக வெற்றிகரமாக முடக்கிக்காட்டினர் ஸ்டாலின்.சாம்பர்லைனும் தயங்கி தயங்கி அக்டோபர் 26 ம் திகதி ஒப்புக்கொண்டார். ஜேர்மனியிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக செம்படை போலந்தின் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டியிருந்தது.

large.Warschau.jpg.f53f44fa4a13806c391e1c1d9a9ed2ac.jpg

ரூமேனியா மீதான வழியாக தப்பிச்சென்ற போலந்து அரசாங்க குழு பின்னர் லண்டன் வந்தபோது, போலந்து பற்றி கருத்து தெரிவித்திருந்தது. அப்போதும் சோவியத்தை ஆக்கிரமிப்பு அரசாக அவர்கள் குறிப்பிடவில்லை. ஹிட்லர், ஸடாலினை விட தேவலை என்பது தான் அவர்களது முந்தைய எண்ணம் என்பதை இங்கே கவனிக்கவேண்டும். செம்படை வீரர்கள் உள்ளே நுழைந்தபோது, பைலோ ரஷ்யர்களும் உக்கிரேனியர்களும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். உக்கிரேனிய பெண்கள் சோவியத் டாங்கிகளுக்கு மாலை அணிவிப்பதை அமெரிக்க நிருபர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

லித்துவேனியாவின் முந்தைய தலைநகரமான வில்னாவை (Vilna) அதனிடமே திருப்பித்தந்தது சோவியத். போலந்து இதனை முன்னர் கைப்பற்றியிருந்தது. லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் மொஸ்கோவுக்கு வரவழைத்த சோவியத், ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. சோவியத் போலந்துக்குள் காலடி எடுத்து வைத்து ஒரு மாதம் ஆவதற்கு முன்னால், அக்டோபர் 10 திகதி இந்த மூன்று நாடுகளுடனும் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தப் பிரதேசங்களில் (பால்டிக் நகரங்கள்) இருந்த ஐந்து லட்சம் ஜேர்மனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஹிட்லருக்கு இதில் பெரும் அதிருப்தி. பால்டிக் ஜேர்மனியர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த பகுதிகள் இவை. நூற்றண்டுகணக்கில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள்.

தனது எல்லைகளையும் பக்கத்து நாடுகளின் எல்லைகளையும் பாதுகாப்பதற்காக சோவியத் யூனியனால் நடத்தப்பட்ட போராகவே சோவியத் அந்தப் போரை அறிவித்தது. அந்த வகையில், சோவியத்யூனியன் இப்போரில் பெற்ற வெற்றி முக்கியமானது.

சரணடைந்தது போலந்து.

 ஜேர்மனிக்கு எதிராக எதிர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அளவிற்கு போலந்து ஆயுதப்படைகள் அங்கு தரித்து வைத்திருக்க முடியும் என்று நம்பின, ஆனால் செப்டம்பர் 17 அன்று சோவியத் படைகள் கிழக்கிலிருந்து படையெடுத்ததன் பின்னர், போலந்து  எல்லா நம்பிக்கையும் இழந்தது. அடுத்த நாள், போலந்தின் அரசாங்கமும் இராணுவத் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். செப்டம்பர் 28 அன்று, வார்சோ பாதுகாப்பு அரண் இடைவிடாத ஜெர்மன் முற்றுகைக்கு சரணடைந்தது. அந்த நாளில், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்கள் ஆக்கிரமிப்பு மண்டலங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு ஒப்பந்தத்தை முடித்தன. அதன் வரலாற்றில் நான்காவது முறையாக, போலந்து அதன் சக்திவாய்ந்த அண்டை நாடுகளால் பிரிக்கப்பட்டது.

போலந்து தரப்பில் 60000 க்கு மேற்பட்ட ராணுவத்தினர் இப்போரில் கொல்லபட்ட. 600000 க்கும் அதிகமானோர் யுத்த கைதிகளாக ஜேர்மன் படைகளால் பிடிக்கப்பட்டனர்.

large.977414622_Polndmap.jpg.884b99ec88a3391f2b3c8b546026e97b.jpg

 (தொடரும்)

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.