Jump to content

குற்றம் 1


Recommended Posts

Saturday, July 4, 2020

குற்றம் 1

----------+-++----

அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
 
24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது.
 
 திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார்.
 
அதனால் கோபமுற்ற அவரது கணவர் அவரை விசாரித்தார். அவர்கள் இருவரும் கோவிலுக்குப் போய் வந்ததை நானும் பார்த்தேன். அன்று கணவர் திருமதி.ஆனந்தா அவர்களை அடிக்கவில்லை. எதுவும் துன்புறுத்தவில்லை.
 
அன்று பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை. முற்கூட்டியே பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு திருமதி.ஆனந்தா பிள்ளைகளை அனுப்பி விட்டிருந்தார்.
 
சாட்சியாளர்
பா.மோ.ராணி.
 
பா.மோ.ராணியின் கையெழுடுத்தோடு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அச் சாட்சிக் கடதாசியை நீதிபதியிடம் கையளித்தார். 
 
பா.மோ.ராணியின் சாட்சிக் கடிதத்தை என்னிடம் தந்தார் எனது சட்டத்தரணி. 
 
எனது பதிலை நீதிபதி எதிர்பார்த்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  கோபம் தான் வந்தது. இரண்டு சட்டத்தரணிகள் நீதிபதி நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் அவமானத்தால் குறுகிப்போனேன்.
 
இல்லாத ஒரு காதலனை எனக்கு உருவாக்கி அவனும் அவனது காதலியும் என்னைப் பழிவாங்குவதை எப்படி மறுப்பதெனத் தெரியாமல் திண்டாடினேன்.
 
பா.மோ.ராணி யார் ? எனது சட்டத்தரணி கேள்வியெழுப்பினார். எதிரில் இருந்தவன் என்னைப் பார்த்ததை கவனித்தேன்.
மறுபடியும் எனது சட்டத்தரணி கேட்ட போது அவன் சொன்னான். 
அவ எனது தோழி.
தோழியென்றால் ?
 
அவன் அதற்கான பதிலை சரியாகச் சொல்ல மறுத்து தன் கதையை வேறுபக்கம் திருப்பினான்.
 
பிள்ளைகளுக்கு இவளைப் பற்றித் தெரியாது இவள் ஒரு நடத்தை கெட்டவள். பிள்ளைகளை கூப்பிடுங்கோ நீதிமன்றம். நான் இவளது உண்மையான குணத்தை பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும்.
 
இவளுக்கு கனக்க கள்ளக்காதல்கள் இருக்கு. எனக்குத் தெரியும். நான் ஒரு ஊடகவியலாளன். 
 
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு பணம் செலுத்தி பெற்ற ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து மேசையில் வைத்தான்.
 
ஐநா சபைக்கு போயிருந்த பலர் அந்த ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொழுவியிருந்ததை கண்டிருக்கிறேன். 
 
வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண மக்கள் அந்த அடையாள அட்டையை பெரும் தகுதியாகவும் அதை கொழுவியிருப்போரை தகுதி மிக்கவர்களாகவும் நினைப்பார்கள்.
 
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் யாரும் ஊடகவியலாளர் என விண்ணப்ப படிவத்தை நிரப்பியனுப்பினால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அடையாள அட்டையை வழங்கும்.
 
அவர்கள் குறிப்பிடும் பணத்தை அனுப்பி வைத்தால் அழகான வடிவமைப்பில் ஊடகர் அடையாள அட்டை கிடைக்கும்.
 
ஊடகரா ? என்பதற்கான எந்த தகுதியையும் அந்த நிறுவனம் ஆராய்ந்ததை நான் அறியவில்லை.
 
அவன் எடுத்துக் காட்டிய அந்த அடையாள அட்டையை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.
 
அவன் தனது முறிந்த டொச்சில் சொல்லிக் கொண்டு வந்தான்.
நான் 8மணிநேரம் வேலை செய்கிறேன்.
 
6மணித்தியாலம் தான் வேலை செய்யிறாள். என்ர உழைப்பில தான் வாழ்ந்து கொண்டு எனக்கு பிரச்சனை தாறாள்.
 
நீதிபதி தனது குரலை உயர்த்தினார். பிள்ளைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலை தாருங்கள்.
 
பா.மோ.ராணி எனது தோழி. அது எனது தனிப்பட்ட விடயம். அதைத்தவிர அவன் எதையும் சொல்லவில்லை.
 
பா.மோ.ராணியும் அவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். 
ஒரே ஒரே அறையில் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பயணங்கள் போவார்கள். 
 
21.12.2015 அன்று 130கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தன் காதலியை அவரது வீட்டுக்குப் போய் கூட்டி வந்திருந்தார்.
 
எனக்கு காதலர்கள் யாரும் இல்லை. பிள்ளைகள் இருவரும் மட்டுமே என் உறவுகள். நான் எனது காதலருடன் மலைக்கோட்டை தேவாலயம் போய் வந்தேன் என்பது பொய்.
 
24.12.2015 அன்று மகன் வீட்டில் இருந்தான். மகள் வருடாவருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு அவளது தோழியின் வீட்டுக்குச் செல்வது வளமை. அன்று அவளை நானே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன். 
 
அன்று இரவு ஏழுமணி போல் குசினியில் மகனுக்காக சமைத்துக் கொண்டிருந்தேன். தனியே நிற்கும் போது வாசல் கதவைப் பூட்டிவிட்டு நிற்பேன். பிள்ளைகள் நின்றால் கதவைப் பூட்டுவதில்லை. அன்று நான் வாசல் கதவைப் பூட்டவில்லை.
 
அவன் என்றும் போல அன்றும் குடித்திருந்தான். திடீரென எனது வாசல் கதவு அடித்து சத்தம் கேட்டது. அதற்கிடையில் அவன் குசினிக்குள் வந்திருந்தான். பின்னால் அவரது காதலியும் நின்றிருந்தார். 
 
குசினிக்கதவை அவன் அடித்த சத்தம் என்னால் நிதானிக்க முதல் என்மீது அடிவிழுந்தது.
 
நான் அவனைத் திருப்பியடித்தேன். 
விடு வா வா... என அவனை அவனது காதலா அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போனாள்.
 
உவளை இண்டைக்கு கொல்லாமல் விடுறேல்ல. அவன் காதலியின் சமாதானத்தைக் கேட்காமல் என்னைத் தாக்க எத்தனித்துக் கொண்டு இருந்தான்.
 
மகன் பயந்து போய் நின்றான். ஓண்டுமில்லை செல்லம் நீங்க போய் படியுங்கோ. 
 
நீங்களும் வாங்கோ மேல. 
 
மகன் என்னையும் அழைத்தான். மகனோடு நானும் மேலே போய் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தோம்.
 
சற்று நேரத்தில் அவரது காதலியின் அழுகைச் சத்தம் கேட்டது. எனது பெயரைச் சொல்லி அவள் அழைத்தான். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது. நான் கீழிறங்கிப் போனேன்.
 
அவனது வீட்டுக் கதவின் மேற்பகுதியின் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்திருந்தது. அவனது கை காயமாகியிருந்தது. தானே தனது வீட்டு வாசல் கதவின் கண்ணாடியை உடைத்ததில் அக்காயம் ஏற்பட்டிருந்தது. அவன் என்னைத் தூசண வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.
 
அவன் என்னைத் தாக்க உன்னிக் கொண்டு வந்தான். காவல்துறையை அழைத்து நானே தன்னைக் காயப்படுத்தியதாக சொல்லப் போவதாகக் கத்தினான். அவனது காதலி அவனது கையிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவளது அழுகை பாவமாயிருந்தது.
 
அவனது காயத்திற்கு துணியொன்றை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
 
மருத்துவமனை அழைத்துப் போகிறேன் என அவனது காதலியிடம் கேட்டேன். அவன் வருமறுத்தான். என்னை கொன்று விடுகிறேன் என சத்தமிட்டான். அதற்கு மேல் நான் அவ்விடத்தைவிட்டு விலகி மேலேயுள்ள எனது வீட்டுக்குள் போயிருந்தேன்.
 
யாரின் முன்னாலும் அழாமல் இருக்கும் என்னால் அந்த நேரம் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். 
 
சட்டத்தரணி என் கைகளைப்  பிடித்தார். அழாதை. அதுதான் முதல்முதலாக அன்னியர்கள் முன்னால் நான் அழுத முதல் கண்ணீர்.
 
வீட்டுவேலைகள் செய்வது பிள்ளைகளை பராமரிப்பது எல்லாம் நீங்களா வீட்டில் செய்வீர்கள் ? 
நீதிபதி அவனைக் கேட்டார்.
 
அது என்ர வேலையில்லையே அது அவவின்ன கடமைதானே? நளினமாகச் சிரித்தான் அவன்.
 
அதுக்கு நீ சம்பளம் எவ்வளவு மாதம் குடுக்கின்றாய் ? எனது சட்டத்தரணி குறுக்கிட்டார்.
 
வீட்டுவேலைக்கு என்ன சம்பளம் ? எதிர்வாதி சட்டத்தரணி அவனை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
 
உனது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எத்தனையாம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரியுமா ? 
 
எனது சட்டத்தரணி கேள்விகளைக் கேட்க அவன் பதில் சொல்ல முடியாது திணறத் தொடங்கினான்.
 
நீதிபதி மார்ச் மாதம் அடுத்த தவணையைக் குறித்துக் கொண்டார். எழுத்து மூலம் அடுத்த தவணைக்கான அறிவிப்பு வருமெனச் சொன்னதோடு அன்றைய விசாரணை முடிந்தது. 
 
எனது சட்டத்தரணி தன்னை சந்திக்க வருமாறு அடுத்து வந்த திங்கட்கிழமை நேரமொன்றைக் குறித்துத் தந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார்.
 
3வது மாடியிலிருந்து கீழிறங்கும் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன். அங்கங்கே படிகளில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். எல்லா முகங்களும் என்னையே பார்ப்பது போல அவமானத்தின் மனவுளைவை மென்றபடி இறங்கி வாசலுக்கு வந்தேன்.
 
வெளிச்செல்லும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. கண்ணாடி அறையில் இருந்த பாதுகாப்பு காவல்துறையிருக்கு சைகையால் கதவு திறக்குமாறு கேட்ட போது அவர்கள் கதவைத் திறக்கும் தானியங்கி பட்டினை அழுத்தினார்கள்.
 
வெளியில் வந்தேன். அவனும் அவனது சட்டத்தரணியும் காருக்குள்ளிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். எனது காருக்குள் ஏறியிருந்து அவர்களைப் பார்த்தேன் அவர்கள் என்னைப் பார்ப்பது தெரிந்தது.
 
வீட்டுக்கு போகப் பிடிக்கவில்லை. 5கிலோமீற்றர் தொலைவில் இருந்த மக்டொனால்ஸ் ஒன்றுக்குப் போனேன். கோப்பியொன்றை வாங்கிக் கொண்டு போய் இருவர் அமரும் இடத்தில் போயிருந்தேன். காலையுணவு நிறைவுக்கு வர 10 நிமிடங்கள் இருந்தது.
 
கோப்பியை ஒவ்வொரு மிடறாகக் குடித்தபடி என்மீது புனையப்பட்ட பொய் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவனது காதலிக்கு தொலைபேசியெடுத்தேன்.
 
எனக்கு காதலன் ஒருத்தன் இருக்கெண்டு சாட்சிக் கடிதம் குடுத்திருக்கிறாயெல்லோ ? அவன் யாரெண்டு சொல்றியா ?
 
உன்னோடை எனக்கு கதைக்க விருப்பமில்லை வையடி ரெலிபோனை. அவள் எனது அழைப்பை நிராகரித்துவிட்டாள்.
 
மீண்டும் அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. இதுக்காக ஒருநாள் நீ அழுவாய். என குறுஞ்செய்தியனுப்பினேன்.
 
அடுத்து வந்த நாட்கள் ஒவ்வொன்றும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்னைக் கடந்து போகின்ற போது அவன் திமிராக என்னை வென்ற மிதப்பில் கடந்து போவதைப் பார்க்கும் நேரமெல்லாம் காதைப்பொத்தி குடுக்க வேணும் போலிருந்தது.
 
காலம் என்னை ஏமாற்றிவிட்ட கோபம். ஒரு பொய்யை நீதிமன்றில் கொண்டு வந்து என்னை அவமதித்த அந்த அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பியாரம்.
 
என் மீதான பொய்யை நிரூபிக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தேன். நித்திரையிலும் அந்த விசாரணைகள் பற்றிய கேள்விகளே என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.
 
ஒரு இரவு மகளோடு கதைத்துக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை தேவாலயம் மற்றும் நிலக்கீழ் கண்காட்சிசாலை பற்றிய கதை வந்தது. 
 
2015ம் ஆண்டு கோடை காலத்தில் மகள் நிலக்கீழ் கண்காட்சி சாலையில் பகுதிநேர வழிகாட்டியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
 
அப்போது தான் எனக்கும் பொறிதட்டியது. மலைக்கோட்டை தேவாயலயமும் நிலக்கீழ் அருங்காட்சியகமும் மார்ச்மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் நவம்பர் மாதம் முதல்வாரம் வரையுமே திறக்கப்படும். 
 
நவம்பர் தொடக்கம் மார்ச்மாதம் வரை மலைக்கோட்டை தேவாலயத்துக்கோ நிலக்கீழ் அருங்காட்சியகத்திற்கோ போகமுடியாது. ஏனெனில் இவ்விரண்டு இடங்களையும் சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் மாதங்களை ஏற்கனவே பிள்ளை வேலை செய்யத் தொடங்கிய போதுதான் நானும் அறிந்திருந்தேன்.
 
மறுநாள் எனது சட்டத்தரணியை அழைத்து சந்திப்பு நேரம் கேட்டேன். அன்று பின்னேரமே வருமாறு பதில் வந்தது.
 
எப்பிடியிருக்கிறாய் ? பிள்ளையள் படிப்பெல்லாம் என்னமாதிரி போகுது ? மகன் என்னமாதிரி பரீட்சையெல்லாம் எழுதினார் ? நல விசாரிப்புகள் முடிய நான் சந்திக்க விரும்பிய காரணத்தை வினவினார் சட்டத்தரணி.
 
எனக்கு வேளைக்கு விவாகரத்து வேணும். அவர் தொடர்ந்து தவணைகளைத் தள்ளிப் போடுவது என்னை உலைப்பதாக நினைக்கிறார். எனக்கு அமைதி வேணும். 
 
இன்னும் இரண்டு தவணைகள் மட்டுமே தான் அவருக்கு நீதிமன்றம் கொடுக்கும் அதையும் தள்ளிப் போட முயன்றால் பிடியாணை மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நீதிமன்றம்.
 
உனக்கு யாரிலயும் காதல் இருக்கிறதோ அதெல்லாம் பிரச்சனையில்லை அது உனது சொந்த விருப்பம். அதையெல்லாம் சட்டம் கேள்வி கேட்காது. அது தனிமனித சுதந்திரம். 
 
என்னுடைய ஆலோசனை நீ இந்த நகரத்தைவிட்டு எங்காவது தூரப்போ. கொஞ்ச நாள் கரைச்சலா இருக்கும். புது இடம் புது மனிதர்கள் புது வாழ்வு உன்னைப் புதுப்பிக்கும். எனக்கும் ரெண்டு மகள்கள் இருக்கினம் எனக்கு அப்பாவாக பிள்ளைகளை எப்பிடி பாதிக்குமெண்டது தெரியும்.
 
என் அப்பாவின வயதில் இருந்த சட்டத்தரணி எனக்கான ஆலோசனைகளைக் கூறிக் கொண்டு வந்த இடையில் எனது விடயத்துக்கு வந்தேன்.
 
நீங்கள் பிறந்தது இங்க தானே ?
ஓம்.
போனமுறை என்னில அவரும் அவரது காதலியின்ரை சாட்சியோடை ஒரு குற்றச்சாட்டு வைச்சவை தானே. அதைப்பற்றி நீங்கள் அடுத்த விசாரணையில என்ன சொல்லப் போறீங்கள் ?
 
அதெல்லம் நீ யோசிக்காதை நான் உனக்கான நீதியைப் பெற்றுத் தருவேன் உறுதியாகச் சொன்னார் சட்டத்தரணி. 
 
அவனும் அவனது காதலியும் வாழும் வாழ்க்கை பற்றி அன்று தான் முதல் முதலாக ஒரு மூன்றாம் நபருக்குச் சொன்னேன்.
 
நீயென்ன ஒரு விசித்திரமான ஆளாயிருக்கிறாய் ? அவர் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது.
 
அவரவர் தனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழீனம் இதுக்கை நானென்ன போராடுறது ? நான் உண்மையா அவரை நேசிச்ச ஒரு காலமிருக்கு. 
 
சிலவேளை நினைக்கிறனான். நான் எவ்வளவு முட்டாளாயிருந்திருக்கிறேனெண்டு. எவ்வளவு பொய் எவ்வளவு நம்பிக்கைத் துரோகம். சொல்லிக் கொண்டிருந்தேன். கண்ணீர்ச் சுரப்பி ஊறுவதை உணர்கிறேன். அத்தோடு அந்த விடயங்களுக்கு முற்று வைத்துக் கொண்டேன்.
 
அன்றைக்கு அவை நான் காதலனோடை மலைக்கோட்டை தேவாலயம் போனதெண்டு சொன்ன பொய்யை நிரூபிக்க சாட்சியிருக்கு என்னட்டை. 
 
சட்டத்தரணி முன்னால் இருந்த தண்ணீர் கிளாசில் தண்ணீரை ஊற்றினார்.
 
மலைக்கோட்டை தேவாலயம் நவம்பர் தொடக்கம் மார்ச் மாதம் வரை திறக்கிறேல்ல. அப்ப நான் எப்பிடி அந்த நாள் இரவு அங்கை போயிருப்பேன்.
 
யா யா யா யா  நான் அதைப்பற்றி யோசிக்கேல்ல பாரன். சட்டத்தரணி எனது வாக்கு மூலத்தை தனது ஒலிவாங்கியில் பதிவு செய்து கொண்டார். நகரத்தின் விபரங்கள் தாங்கிய வெப்சைற்றில் போய் அந்தத் தரவுகளைப் பதிவெடுத்துக் கொண்டார்.
 
 நட்போடு விடைதந்து வாசல் வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டார். அங்கிருந்து வெளியேறி வெளியில் வந்த போது எனக்குள்ளே வெற்றியின் சங்கீதம் முன்னாலிருந்து சைனீஸ் உணவகத்திலிருந்து ஒலித்த பாடலில் கேட்பது போலிருந்தது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.