Jump to content

குற்றம் 1


Recommended Posts

Saturday, July 4, 2020

குற்றம் 1

----------+-++----

அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
 
24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது.
 
 திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார்.
 
அதனால் கோபமுற்ற அவரது கணவர் அவரை விசாரித்தார். அவர்கள் இருவரும் கோவிலுக்குப் போய் வந்ததை நானும் பார்த்தேன். அன்று கணவர் திருமதி.ஆனந்தா அவர்களை அடிக்கவில்லை. எதுவும் துன்புறுத்தவில்லை.
 
அன்று பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை. முற்கூட்டியே பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு திருமதி.ஆனந்தா பிள்ளைகளை அனுப்பி விட்டிருந்தார்.
 
சாட்சியாளர்
பா.மோ.ராணி.
 
பா.மோ.ராணியின் கையெழுடுத்தோடு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அச் சாட்சிக் கடதாசியை நீதிபதியிடம் கையளித்தார். 
 
பா.மோ.ராணியின் சாட்சிக் கடிதத்தை என்னிடம் தந்தார் எனது சட்டத்தரணி. 
 
எனது பதிலை நீதிபதி எதிர்பார்த்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  கோபம் தான் வந்தது. இரண்டு சட்டத்தரணிகள் நீதிபதி நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் அவமானத்தால் குறுகிப்போனேன்.
 
இல்லாத ஒரு காதலனை எனக்கு உருவாக்கி அவனும் அவனது காதலியும் என்னைப் பழிவாங்குவதை எப்படி மறுப்பதெனத் தெரியாமல் திண்டாடினேன்.
 
பா.மோ.ராணி யார் ? எனது சட்டத்தரணி கேள்வியெழுப்பினார். எதிரில் இருந்தவன் என்னைப் பார்த்ததை கவனித்தேன்.
மறுபடியும் எனது சட்டத்தரணி கேட்ட போது அவன் சொன்னான். 
அவ எனது தோழி.
தோழியென்றால் ?
 
அவன் அதற்கான பதிலை சரியாகச் சொல்ல மறுத்து தன் கதையை வேறுபக்கம் திருப்பினான்.
 
பிள்ளைகளுக்கு இவளைப் பற்றித் தெரியாது இவள் ஒரு நடத்தை கெட்டவள். பிள்ளைகளை கூப்பிடுங்கோ நீதிமன்றம். நான் இவளது உண்மையான குணத்தை பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும்.
 
இவளுக்கு கனக்க கள்ளக்காதல்கள் இருக்கு. எனக்குத் தெரியும். நான் ஒரு ஊடகவியலாளன். 
 
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு பணம் செலுத்தி பெற்ற ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து மேசையில் வைத்தான்.
 
ஐநா சபைக்கு போயிருந்த பலர் அந்த ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொழுவியிருந்ததை கண்டிருக்கிறேன். 
 
வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண மக்கள் அந்த அடையாள அட்டையை பெரும் தகுதியாகவும் அதை கொழுவியிருப்போரை தகுதி மிக்கவர்களாகவும் நினைப்பார்கள்.
 
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் யாரும் ஊடகவியலாளர் என விண்ணப்ப படிவத்தை நிரப்பியனுப்பினால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அடையாள அட்டையை வழங்கும்.
 
அவர்கள் குறிப்பிடும் பணத்தை அனுப்பி வைத்தால் அழகான வடிவமைப்பில் ஊடகர் அடையாள அட்டை கிடைக்கும்.
 
ஊடகரா ? என்பதற்கான எந்த தகுதியையும் அந்த நிறுவனம் ஆராய்ந்ததை நான் அறியவில்லை.
 
அவன் எடுத்துக் காட்டிய அந்த அடையாள அட்டையை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.
 
அவன் தனது முறிந்த டொச்சில் சொல்லிக் கொண்டு வந்தான்.
நான் 8மணிநேரம் வேலை செய்கிறேன்.
 
6மணித்தியாலம் தான் வேலை செய்யிறாள். என்ர உழைப்பில தான் வாழ்ந்து கொண்டு எனக்கு பிரச்சனை தாறாள்.
 
நீதிபதி தனது குரலை உயர்த்தினார். பிள்ளைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலை தாருங்கள்.
 
பா.மோ.ராணி எனது தோழி. அது எனது தனிப்பட்ட விடயம். அதைத்தவிர அவன் எதையும் சொல்லவில்லை.
 
பா.மோ.ராணியும் அவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். 
ஒரே ஒரே அறையில் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பயணங்கள் போவார்கள். 
 
21.12.2015 அன்று 130கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தன் காதலியை அவரது வீட்டுக்குப் போய் கூட்டி வந்திருந்தார்.
 
எனக்கு காதலர்கள் யாரும் இல்லை. பிள்ளைகள் இருவரும் மட்டுமே என் உறவுகள். நான் எனது காதலருடன் மலைக்கோட்டை தேவாலயம் போய் வந்தேன் என்பது பொய்.
 
24.12.2015 அன்று மகன் வீட்டில் இருந்தான். மகள் வருடாவருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு அவளது தோழியின் வீட்டுக்குச் செல்வது வளமை. அன்று அவளை நானே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன். 
 
அன்று இரவு ஏழுமணி போல் குசினியில் மகனுக்காக சமைத்துக் கொண்டிருந்தேன். தனியே நிற்கும் போது வாசல் கதவைப் பூட்டிவிட்டு நிற்பேன். பிள்ளைகள் நின்றால் கதவைப் பூட்டுவதில்லை. அன்று நான் வாசல் கதவைப் பூட்டவில்லை.
 
அவன் என்றும் போல அன்றும் குடித்திருந்தான். திடீரென எனது வாசல் கதவு அடித்து சத்தம் கேட்டது. அதற்கிடையில் அவன் குசினிக்குள் வந்திருந்தான். பின்னால் அவரது காதலியும் நின்றிருந்தார். 
 
குசினிக்கதவை அவன் அடித்த சத்தம் என்னால் நிதானிக்க முதல் என்மீது அடிவிழுந்தது.
 
நான் அவனைத் திருப்பியடித்தேன். 
விடு வா வா... என அவனை அவனது காதலா அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போனாள்.
 
உவளை இண்டைக்கு கொல்லாமல் விடுறேல்ல. அவன் காதலியின் சமாதானத்தைக் கேட்காமல் என்னைத் தாக்க எத்தனித்துக் கொண்டு இருந்தான்.
 
மகன் பயந்து போய் நின்றான். ஓண்டுமில்லை செல்லம் நீங்க போய் படியுங்கோ. 
 
நீங்களும் வாங்கோ மேல. 
 
மகன் என்னையும் அழைத்தான். மகனோடு நானும் மேலே போய் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தோம்.
 
சற்று நேரத்தில் அவரது காதலியின் அழுகைச் சத்தம் கேட்டது. எனது பெயரைச் சொல்லி அவள் அழைத்தான். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது. நான் கீழிறங்கிப் போனேன்.
 
அவனது வீட்டுக் கதவின் மேற்பகுதியின் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்திருந்தது. அவனது கை காயமாகியிருந்தது. தானே தனது வீட்டு வாசல் கதவின் கண்ணாடியை உடைத்ததில் அக்காயம் ஏற்பட்டிருந்தது. அவன் என்னைத் தூசண வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.
 
அவன் என்னைத் தாக்க உன்னிக் கொண்டு வந்தான். காவல்துறையை அழைத்து நானே தன்னைக் காயப்படுத்தியதாக சொல்லப் போவதாகக் கத்தினான். அவனது காதலி அவனது கையிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவளது அழுகை பாவமாயிருந்தது.
 
அவனது காயத்திற்கு துணியொன்றை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
 
மருத்துவமனை அழைத்துப் போகிறேன் என அவனது காதலியிடம் கேட்டேன். அவன் வருமறுத்தான். என்னை கொன்று விடுகிறேன் என சத்தமிட்டான். அதற்கு மேல் நான் அவ்விடத்தைவிட்டு விலகி மேலேயுள்ள எனது வீட்டுக்குள் போயிருந்தேன்.
 
யாரின் முன்னாலும் அழாமல் இருக்கும் என்னால் அந்த நேரம் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். 
 
சட்டத்தரணி என் கைகளைப்  பிடித்தார். அழாதை. அதுதான் முதல்முதலாக அன்னியர்கள் முன்னால் நான் அழுத முதல் கண்ணீர்.
 
வீட்டுவேலைகள் செய்வது பிள்ளைகளை பராமரிப்பது எல்லாம் நீங்களா வீட்டில் செய்வீர்கள் ? 
நீதிபதி அவனைக் கேட்டார்.
 
அது என்ர வேலையில்லையே அது அவவின்ன கடமைதானே? நளினமாகச் சிரித்தான் அவன்.
 
அதுக்கு நீ சம்பளம் எவ்வளவு மாதம் குடுக்கின்றாய் ? எனது சட்டத்தரணி குறுக்கிட்டார்.
 
வீட்டுவேலைக்கு என்ன சம்பளம் ? எதிர்வாதி சட்டத்தரணி அவனை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
 
உனது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எத்தனையாம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரியுமா ? 
 
எனது சட்டத்தரணி கேள்விகளைக் கேட்க அவன் பதில் சொல்ல முடியாது திணறத் தொடங்கினான்.
 
நீதிபதி மார்ச் மாதம் அடுத்த தவணையைக் குறித்துக் கொண்டார். எழுத்து மூலம் அடுத்த தவணைக்கான அறிவிப்பு வருமெனச் சொன்னதோடு அன்றைய விசாரணை முடிந்தது. 
 
எனது சட்டத்தரணி தன்னை சந்திக்க வருமாறு அடுத்து வந்த திங்கட்கிழமை நேரமொன்றைக் குறித்துத் தந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார்.
 
3வது மாடியிலிருந்து கீழிறங்கும் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன். அங்கங்கே படிகளில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். எல்லா முகங்களும் என்னையே பார்ப்பது போல அவமானத்தின் மனவுளைவை மென்றபடி இறங்கி வாசலுக்கு வந்தேன்.
 
வெளிச்செல்லும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. கண்ணாடி அறையில் இருந்த பாதுகாப்பு காவல்துறையிருக்கு சைகையால் கதவு திறக்குமாறு கேட்ட போது அவர்கள் கதவைத் திறக்கும் தானியங்கி பட்டினை அழுத்தினார்கள்.
 
வெளியில் வந்தேன். அவனும் அவனது சட்டத்தரணியும் காருக்குள்ளிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். எனது காருக்குள் ஏறியிருந்து அவர்களைப் பார்த்தேன் அவர்கள் என்னைப் பார்ப்பது தெரிந்தது.
 
வீட்டுக்கு போகப் பிடிக்கவில்லை. 5கிலோமீற்றர் தொலைவில் இருந்த மக்டொனால்ஸ் ஒன்றுக்குப் போனேன். கோப்பியொன்றை வாங்கிக் கொண்டு போய் இருவர் அமரும் இடத்தில் போயிருந்தேன். காலையுணவு நிறைவுக்கு வர 10 நிமிடங்கள் இருந்தது.
 
கோப்பியை ஒவ்வொரு மிடறாகக் குடித்தபடி என்மீது புனையப்பட்ட பொய் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவனது காதலிக்கு தொலைபேசியெடுத்தேன்.
 
எனக்கு காதலன் ஒருத்தன் இருக்கெண்டு சாட்சிக் கடிதம் குடுத்திருக்கிறாயெல்லோ ? அவன் யாரெண்டு சொல்றியா ?
 
உன்னோடை எனக்கு கதைக்க விருப்பமில்லை வையடி ரெலிபோனை. அவள் எனது அழைப்பை நிராகரித்துவிட்டாள்.
 
மீண்டும் அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. இதுக்காக ஒருநாள் நீ அழுவாய். என குறுஞ்செய்தியனுப்பினேன்.
 
அடுத்து வந்த நாட்கள் ஒவ்வொன்றும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்னைக் கடந்து போகின்ற போது அவன் திமிராக என்னை வென்ற மிதப்பில் கடந்து போவதைப் பார்க்கும் நேரமெல்லாம் காதைப்பொத்தி குடுக்க வேணும் போலிருந்தது.
 
காலம் என்னை ஏமாற்றிவிட்ட கோபம். ஒரு பொய்யை நீதிமன்றில் கொண்டு வந்து என்னை அவமதித்த அந்த அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பியாரம்.
 
என் மீதான பொய்யை நிரூபிக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தேன். நித்திரையிலும் அந்த விசாரணைகள் பற்றிய கேள்விகளே என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.
 
ஒரு இரவு மகளோடு கதைத்துக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை தேவாலயம் மற்றும் நிலக்கீழ் கண்காட்சிசாலை பற்றிய கதை வந்தது. 
 
2015ம் ஆண்டு கோடை காலத்தில் மகள் நிலக்கீழ் கண்காட்சி சாலையில் பகுதிநேர வழிகாட்டியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
 
அப்போது தான் எனக்கும் பொறிதட்டியது. மலைக்கோட்டை தேவாயலயமும் நிலக்கீழ் அருங்காட்சியகமும் மார்ச்மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் நவம்பர் மாதம் முதல்வாரம் வரையுமே திறக்கப்படும். 
 
நவம்பர் தொடக்கம் மார்ச்மாதம் வரை மலைக்கோட்டை தேவாலயத்துக்கோ நிலக்கீழ் அருங்காட்சியகத்திற்கோ போகமுடியாது. ஏனெனில் இவ்விரண்டு இடங்களையும் சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் மாதங்களை ஏற்கனவே பிள்ளை வேலை செய்யத் தொடங்கிய போதுதான் நானும் அறிந்திருந்தேன்.
 
மறுநாள் எனது சட்டத்தரணியை அழைத்து சந்திப்பு நேரம் கேட்டேன். அன்று பின்னேரமே வருமாறு பதில் வந்தது.
 
எப்பிடியிருக்கிறாய் ? பிள்ளையள் படிப்பெல்லாம் என்னமாதிரி போகுது ? மகன் என்னமாதிரி பரீட்சையெல்லாம் எழுதினார் ? நல விசாரிப்புகள் முடிய நான் சந்திக்க விரும்பிய காரணத்தை வினவினார் சட்டத்தரணி.
 
எனக்கு வேளைக்கு விவாகரத்து வேணும். அவர் தொடர்ந்து தவணைகளைத் தள்ளிப் போடுவது என்னை உலைப்பதாக நினைக்கிறார். எனக்கு அமைதி வேணும். 
 
இன்னும் இரண்டு தவணைகள் மட்டுமே தான் அவருக்கு நீதிமன்றம் கொடுக்கும் அதையும் தள்ளிப் போட முயன்றால் பிடியாணை மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நீதிமன்றம்.
 
உனக்கு யாரிலயும் காதல் இருக்கிறதோ அதெல்லாம் பிரச்சனையில்லை அது உனது சொந்த விருப்பம். அதையெல்லாம் சட்டம் கேள்வி கேட்காது. அது தனிமனித சுதந்திரம். 
 
என்னுடைய ஆலோசனை நீ இந்த நகரத்தைவிட்டு எங்காவது தூரப்போ. கொஞ்ச நாள் கரைச்சலா இருக்கும். புது இடம் புது மனிதர்கள் புது வாழ்வு உன்னைப் புதுப்பிக்கும். எனக்கும் ரெண்டு மகள்கள் இருக்கினம் எனக்கு அப்பாவாக பிள்ளைகளை எப்பிடி பாதிக்குமெண்டது தெரியும்.
 
என் அப்பாவின வயதில் இருந்த சட்டத்தரணி எனக்கான ஆலோசனைகளைக் கூறிக் கொண்டு வந்த இடையில் எனது விடயத்துக்கு வந்தேன்.
 
நீங்கள் பிறந்தது இங்க தானே ?
ஓம்.
போனமுறை என்னில அவரும் அவரது காதலியின்ரை சாட்சியோடை ஒரு குற்றச்சாட்டு வைச்சவை தானே. அதைப்பற்றி நீங்கள் அடுத்த விசாரணையில என்ன சொல்லப் போறீங்கள் ?
 
அதெல்லம் நீ யோசிக்காதை நான் உனக்கான நீதியைப் பெற்றுத் தருவேன் உறுதியாகச் சொன்னார் சட்டத்தரணி. 
 
அவனும் அவனது காதலியும் வாழும் வாழ்க்கை பற்றி அன்று தான் முதல் முதலாக ஒரு மூன்றாம் நபருக்குச் சொன்னேன்.
 
நீயென்ன ஒரு விசித்திரமான ஆளாயிருக்கிறாய் ? அவர் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது.
 
அவரவர் தனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழீனம் இதுக்கை நானென்ன போராடுறது ? நான் உண்மையா அவரை நேசிச்ச ஒரு காலமிருக்கு. 
 
சிலவேளை நினைக்கிறனான். நான் எவ்வளவு முட்டாளாயிருந்திருக்கிறேனெண்டு. எவ்வளவு பொய் எவ்வளவு நம்பிக்கைத் துரோகம். சொல்லிக் கொண்டிருந்தேன். கண்ணீர்ச் சுரப்பி ஊறுவதை உணர்கிறேன். அத்தோடு அந்த விடயங்களுக்கு முற்று வைத்துக் கொண்டேன்.
 
அன்றைக்கு அவை நான் காதலனோடை மலைக்கோட்டை தேவாலயம் போனதெண்டு சொன்ன பொய்யை நிரூபிக்க சாட்சியிருக்கு என்னட்டை. 
 
சட்டத்தரணி முன்னால் இருந்த தண்ணீர் கிளாசில் தண்ணீரை ஊற்றினார்.
 
மலைக்கோட்டை தேவாலயம் நவம்பர் தொடக்கம் மார்ச் மாதம் வரை திறக்கிறேல்ல. அப்ப நான் எப்பிடி அந்த நாள் இரவு அங்கை போயிருப்பேன்.
 
யா யா யா யா  நான் அதைப்பற்றி யோசிக்கேல்ல பாரன். சட்டத்தரணி எனது வாக்கு மூலத்தை தனது ஒலிவாங்கியில் பதிவு செய்து கொண்டார். நகரத்தின் விபரங்கள் தாங்கிய வெப்சைற்றில் போய் அந்தத் தரவுகளைப் பதிவெடுத்துக் கொண்டார்.
 
 நட்போடு விடைதந்து வாசல் வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டார். அங்கிருந்து வெளியேறி வெளியில் வந்த போது எனக்குள்ளே வெற்றியின் சங்கீதம் முன்னாலிருந்து சைனீஸ் உணவகத்திலிருந்து ஒலித்த பாடலில் கேட்பது போலிருந்தது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.