Jump to content

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

phone.jpg

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை.

கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன்.

எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இதற்கு கிருபனின் பதில் என்ன???? 

இறந்தவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்திருக்கலாம். அது மனைவி கேம் விளையாடுவதை நிறுத்துமாறு கூறியபோது இன்னமும் கூடியிருக்கலாம். இப்படிப் பல காரணங்கள் இருக்க தொலைபேசியில் கேம் விளையாடியதால் இறந்தார் என்று எளிமையாகச் சொல்லமுடியாது. 

ஒருபேச்சுக்கு இறந்தவர் யாழில் நடக்கும் கருத்தாடல்களை வாசித்து இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு இறந்திருந்தால் யாழ்தான் காரணம் என்றும் சொல்லலாம் என்றிருக்கின்றது இந்த வாதம்!

மேலும் இந்தச் செய்தியில் வைத்திய அறிக்கை எதுவுமே ஆதாரமாகத் தரப்படவில்லை. இறந்தவரின் மனைவி சொன்னார் என்றுதான் செய்தியிலேயே உள்ளது.

Quote

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

ஒருபேச்சுக்கு இறந்தவர் யாழில் நடக்கும் கருத்தாடல்களை வாசித்து இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு இறந்திருந்தால் யாழ்தான் காரணம் என்றும் சொல்லலாம் என்றிருக்கின்றது இந்த வாதம்!

மேலும் இந்தச் செய்தியில் வைத்திய அறிக்கை எதுவுமே ஆதாரமாகத் தரப்படவில்லை. இறந்தவரின் மனைவி சொன்னார் என்றுதான் செய்தியிலேயே உள்ளது.

 

இதற்குள் ஏன் யாழ்களத்தை இழுக்கின்றீர்கள். இது முழுக்க முழுக்க உங்களை பின் தொடருபவர்களின் முடிவு, உங்கள் பதிவுகளை பார்த்து. கிருபன் சொன்னார் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படவில்லை என, எனவே அவர்கள் உங்கள் கருத்தை வேத வாக்காக எடுத்து பின் தொடர்கின்றார்கள் உங்கள் கருத்தின் படி😎 , எங்களுக்கு இப்படி ஒரு கூட்டமில்லையே🤔

மனைவி சொல்வது கூட உண்மையில்லை என்றால் வேறு யார் கூறுவது உண்மை😡, இதையும் விஞ்ஞான ரீதியாக நிருபிக்க வேண்டுமா?

 பிள்ளைகள் மனைவிமாரின் அன்புகளையும் விஞ்ஞான ரீதியாக நிருபித்துவிட்டுதான் அவர்கள் உங்களில் அன்பு செலுத்துகின்றார்கள் என ஏற்பீர்களா? 🙃

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் சாமியோ. எல்லாத்துக்கும் விஞ்ஞான ரீதியாகதான் நிருபிக்க வேண்டுமா? அத்துடன் கலாச்சாரமே அற்றவர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்கு வாயில் இரத்தம் என்றால் அனேகமாக உயர் குருதி அழுத்தத்தினால் ஏற்பட்ட அறி குறி தான்! ஆனால், கேம் விளையாடியதால் ஏற்பட்டதா எனக் கூற முடியாது! அப்படியெல்லாம் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிட மாட்டார்கள் என நினைக்கிறேன்! 

மேலே வேறெதுவோ விவாதம் போய் கொண்டிருக்குப் போல! விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படும் விடயங்கள் தான் அதிகம் மனிதர்களுக்குப் பயன்படுகின்றன! இந்த கொரனாவைரஸ் பரவும் காலத்திலும் விஞ்ஞான தரவுக்கும் வெற்று நம்பிக்கைகளுக்கும் இடையேயான வேறு பாட்டை விளங்க முடியாவிட்டால், இனி எப்போதுமே விளங்காது என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில், இங்கிலாந்தின் மத்திய பகுதியில், கடந்த நூறாண்டில் ஒருவர், மிகசிறந்த முறையில் காட்ஸ் விளையாடுவார். இவர் பந்தயம் கட்டி விளையாடினால், நிச்சயம் வெல்லுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. 

ஆனால், அவர் எப்படி வெல்கிறார் என்பதனை கணிக்க முடியவில்லை. அவர் ஏதோ ஒரு கணித பொறிமுறை வைத்துள்ளார், அதனை பயன்படுத்தி வெல்லுகிறார்.... ஆனால் அதனை யாருக்கும் சொல்லித்தர மறுக்கிறார் என்று எல்லோரும் கருதினர்.

அவர் விளையாடும் போது, பக்கத்தில் பீர் கிளாசும், பொரித்த கோழி கால்களும் இருக்கும். 

ஒரு நாள் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, பெரும் மாரடைப்பு வந்து இறந்து போனார், அவருடன் அவரது நிபுணத்துவ ரகசியமும் புதைந்து போனது.

பிபிசி இந்து குறித்து ஒரு டாக்குமெண்டரி போட்டிருந்தது. 

அதிலே இன்னுமொரு நிபுணரை கருத்துக்கூற கேட்க, அவர் சொன்னார். நான் அவர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன், நான் பிறப்பதற்கு முன்னரே வாழ்ந்து, இறந்துவிட்டார்.. எனக்கு தோன்றுவது என்னவென்றால், இவர் தினமும் வந்து விளையாட, அவரினால் அந்த பப் பெரும் இழப்பினை சந்தித்துக் கொண்டிருந்தது. தனது வெற்றி ரகசியத்தினை வேறு சொல்ல மறுத்துக் கொண்டிருந்தார். ஆகவே, அவரது மரணம், வியாபாரத்துடன் தொடர்பானதாக (கொலை) இருக்கலாம், யாருக்கு தெரியும், என்றார்.

ஒவொரு விசித்திர மரணத்தின் பின்னாலும் ஏதாவது காரணம் இருக்கலாம். போலீஸ்க்காரரின் வேலைப்பளுவின், ஊழலின் காரணமாக, தப்பிய கொலைகளும் அதிகம்.

அதுக்காக இதுவும் அந்த வகை என்று சொல்லவில்லை. ஆனால், இதுவும் ஒரு option என்கிறேன்.
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

இதற்குள் ஏன் யாழ்களத்தை இழுக்கின்றீர்கள். இது முழுக்க முழுக்க உங்களை பின் தொடருபவர்களின் முடிவு, உங்கள் பதிவுகளை பார்த்து. கிருபன் சொன்னார் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படவில்லை என, எனவே அவர்கள் உங்கள் கருத்தை வேத வாக்காக எடுத்து பின் தொடர்கின்றார்கள் உங்கள் கருத்தின் படி😎 , எங்களுக்கு இப்படி ஒரு கூட்டமில்லையே🤔

மனைவி சொல்வது கூட உண்மையில்லை என்றால் வேறு யார் கூறுவது உண்மை😡, இதையும் விஞ்ஞான ரீதியாக நிருபிக்க வேண்டுமா?

 பிள்ளைகள் மனைவிமாரின் அன்புகளையும் விஞ்ஞான ரீதியாக நிருபித்துவிட்டுதான் அவர்கள் உங்களில் அன்பு செலுத்துகின்றார்கள் என ஏற்பீர்களா? 🙃

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் சாமியோ. எல்லாத்துக்கும் விஞ்ஞான ரீதியாகதான் நிருபிக்க வேண்டுமா? அத்துடன் கலாச்சாரமே அற்றவர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

 

 

என்னை யாரும் பின்தொடர்வதை நான் விரும்புவதில்லை, அழகான பெண்களைத் தவிர😍

மரண விசாரணை அறிக்கை இல்லாமல், மரணத்தின் காரணத்தை coroners report இல்லாமல் மனைவி சொன்னதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கண்மூடித்தனமாக  உண்மையென்று நம்புவதற்கு நான் தயாரில்லை. இப்படித்தான் புனைவுச் செய்திகள் பரவுகின்றன. மரண விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் காட்டினால் நம்பலாம். அவ்வளவுதான்.

மனைவியே கணவனைத் தீர்த்துக்கட்டும் காலத்தில் அன்பு, பாசம் என்பதற்குள் ஒளிந்துகொண்டால், நம்பும் அளவிற்கு நான் சின்னத்திரை பார்க்கும் ஆளல்ல😊

மேலும் கலாச்சாரம் அற்றவர்களைப் பற்றிக் கருத்துக் கேட்டிருந்தீர்கள். அவர்கள் கட்டாயம் காட்டுமிராண்டிகள்தான். ஏனெனில் சமூகத்துடன் சேர்ந்து சமூகத்தை முன்நோக்கி செலுத்த சிந்திக்கும் சுயபுத்தி உள்ள எவரும் கலாச்சாரம் ஒன்றை எதுவித விட்டுக்கொடுப்புமில்லாமல் பின்பற்றுவார்கள். காட்டுமிராண்டிகளுக்கு கலாச்சாரம் என்றாலே என்னவென்று தெரியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

என்னை யாரும் பின்தொடர்வதை நான் விரும்புவதில்லை, அழகான பெண்களைத் தவிர😍

மரண விசாரணை அறிக்கை இல்லாமல், மரணத்தின் காரணத்தை coroners report இல்லாமல் மனைவி சொன்னதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கண்மூடித்தனமாக  உண்மையென்று நம்புவதற்கு நான் தயாரில்லை. இப்படித்தான் புனைவுச் செய்திகள் பரவுகின்றன. மரண விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் காட்டினால் நம்பலாம். அவ்வளவுதான்.

மனைவியே கணவனைத் தீர்த்துக்கட்டும் காலத்தில் அன்பு, பாசம் என்பதற்குள் ஒளிந்துகொண்டால், நம்பும் அளவிற்கு நான் சின்னத்திரை பார்க்கும் ஆளல்ல😊

மேலும் கலாச்சாரம் அற்றவர்களைப் பற்றிக் கருத்துக் கேட்டிருந்தீர்கள். அவர்கள் கட்டாயம் காட்டுமிராண்டிகள்தான். ஏனெனில் சமூகத்துடன் சேர்ந்து சமூகத்தை முன்நோக்கி செலுத்த சிந்திக்கும் சுயபுத்தி உள்ள எவரும் கலாச்சாரம் ஒன்றை எதுவித விட்டுக்கொடுப்புமில்லாமல் பின்பற்றுவார்கள். காட்டுமிராண்டிகளுக்கு கலாச்சாரம் என்றாலே என்னவென்று தெரியாது.

 

ஆகா உங்கள் போலி வாழ்கையை அப்படியே உரித்துவைத்துவிட்டீர்கள்.👏

கலாச்சாரமற்றவர்களுக்கு உங்கள் பதில்👍

12 hours ago, Justin said:

மூக்கு வாயில் இரத்தம் என்றால் அனேகமாக உயர் குருதி அழுத்தத்தினால் ஏற்பட்ட அறி குறி தான்! ஆனால், கேம் விளையாடியதால் ஏற்பட்டதா எனக் கூற முடியாது! அப்படியெல்லாம் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிட மாட்டார்கள் என நினைக்கிறேன்! 

மேலே வேறெதுவோ விவாதம் போய் கொண்டிருக்குப் போல! விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படும் விடயங்கள் தான் அதிகம் மனிதர்களுக்குப் பயன்படுகின்றன! இந்த கொரனாவைரஸ் பரவும் காலத்திலும் விஞ்ஞான தரவுக்கும் வெற்று நம்பிக்கைகளுக்கும் இடையேயான வேறு பாட்டை விளங்க முடியாவிட்டால், இனி எப்போதுமே விளங்காது என நினைக்கிறேன்!

அட ட டா கொரோணா வந்து விஞ்ஞானத்தை நம்ப சொல்லிவிட்டுது, கிழிச்சுது போ, இன்னுமே மருந்தே கண்டுபிடிக்க முடியலை அதுக்க வந்து  விஞ்ஞானத்தை நம்பு என்று.  போய் மருந்தை கண்டு பிடிக்க பாருங்க. 

விஞ்ஞானத்தால்தான் இந்த உலகமே அழித்துகொண்டிருக்கு. எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

நீங்க அதி மேதாவி, நல்லா விளங்கிடுவீர்கள்  விஞ்ஞான நம்பிகைகளுடன், இந்த அற்பனுக்கு கலாச்சார நம்பிக்கைதான் முக்கியம் நிம்மதியா வாழ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

ஆகா உங்கள் போலி வாழ்கையை அப்படியே உரித்துவைத்துவிட்டீர்கள்.👏

கலாச்சாரமற்றவர்களுக்கு உங்கள் பதில்👍

அட ட டா கொரோணா வந்து விஞ்ஞானத்தை நம்ப சொல்லிவிட்டுது, கிழிச்சுது போ, இன்னுமே மருந்தே கண்டுபிடிக்க முடியலை அதுக்க வந்து  விஞ்ஞானத்தை நம்பு என்று.  போய் மருந்தை கண்டு பிடிக்க பாருங்க. 

விஞ்ஞானத்தால்தான் இந்த உலகமே அழித்துகொண்டிருக்கு. எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

நீங்க அதி மேதாவி, நல்லா விளங்கிடுவீர்கள்  விஞ்ஞான நம்பிகைகளுடன், இந்த அற்பனுக்கு கலாச்சார நம்பிக்கைதான் முக்கியம் நிம்மதியா வாழ

உடையார்,

விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁

எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள்.

டொட்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

உடையார்,

விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁

எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள்.

டொட்.

 

 

16 hours ago, Justin said:

...... , இனி எப்போதுமே விளங்காது என நினைக்கிறேன்!

கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏

மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை. 

13 minutes ago, கிருபன் said:

விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁

சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல

இப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது? நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள்.

ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

 

சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏

 

ஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁

நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

ஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁

நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀

மாட்டையும் மரத்தையும் கதைக்கதானே பலர் இருக்கின்றார்கள் 

சொன்னதை மாற்றி பல்டி அடிப்பதில் வல்லவர்

29 minutes ago, கிருபன் said:

இப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது? நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள்.

ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம். 

 

 

 

 

மரண சன்றிதழில் எப்படிவருமென்று எல்லோருக்கும் தெரியும். மனைவி அவர் என்ன செய்தார் என்று சொன்னதை கூட உங்களால்  நம்ப முடியவில்லையென்றால் நீங்கள் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Emotional symptoms

  • Restlessness: the addict may find it impossible to remain still and calm for any length of time whilst not gaming; fidgeting, pacing, constantly getting up and down, and being unable to participate in any task for more than a few minutes may all indicate frustration at not being able to game.
  • Irritability: an addict may be quick to lose their temper and/or to snap at others if they are kept away from gaming for a protracted period – or if they are in a bad mood from a recent unsuccessful gaming bout.
  • Preoccupation with thoughts of previous or next gaming activity: gaming may entirely capture the addict’s thought processes, leaving them unable to think about anything else and possibly visibly distracted from important activities.
  • Lying about the amount of time spent playing: many gaming addicts feel shame at the amount of time they spend feeding their addictions, and/or recognise that in many people’s eyes they are engaging in an unhealthy activity, and so deceive others about how long they actually spend gaming.
  • Isolation from others to spend more time gaming: as noted above, withdrawing from social circles and previously enjoyed activities is a very common sign that something is wrong.

Physical symptoms of video game addiction

  • Fatigue: many people play computer games for very long periods of time – indeed, as noted above gaming-related fatigue has been a factor in numerous deaths in recent years – and often sacrifice sleep for the sake of continuing to play. This is especially common amongst those who work or attend college or university and who are therefore unable to play during working hours.
  • Migraines: prolonged gaming has been known to spark off migraines even in those who have previously not suffered from them.
  • Carpal tunnel syndrome: repeated, very protracted bouts of gaming using manual controls such as drawing pads, keyboards or mice can lead to the wrist condition known as carpal tunnel syndrome, causing pain and tingling in the fingers and hands.
  • Poor personal hygiene: some gamers allow their levels of hygiene to slip significantly as a result of their protracted gaming – and/or because their isolation leaves them feeling that they do not need to make any effort in this regard. Some e-sports competitions have been obliged to post notices warning that gamers exhibiting poor levels of hygiene will be disqualified and removed from the venue.

https://www.uk-rehab.com/behavioural-addictions/gaming/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

ஆகா உங்கள் போலி வாழ்கையை அப்படியே உரித்துவைத்துவிட்டீர்கள்.👏

கலாச்சாரமற்றவர்களுக்கு உங்கள் பதில்👍

அட ட டா கொரோணா வந்து விஞ்ஞானத்தை நம்ப சொல்லிவிட்டுது, கிழிச்சுது போ, இன்னுமே மருந்தே கண்டுபிடிக்க முடியலை அதுக்க வந்து  விஞ்ஞானத்தை நம்பு என்று.  போய் மருந்தை கண்டு பிடிக்க பாருங்க. 

விஞ்ஞானத்தால்தான் இந்த உலகமே அழித்துகொண்டிருக்கு. எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

நீங்க அதி மேதாவி, நல்லா விளங்கிடுவீர்கள்  விஞ்ஞான நம்பிகைகளுடன், இந்த அற்பனுக்கு கலாச்சார நம்பிக்கைதான் முக்கியம் நிம்மதியா வாழ

உங்கள் ஏனைய பதிவுகளைப் பார்த்த பின்னும் உங்களுக்கு விஞ்ஞானத்தின் பயன்பாடுகளை எடுத்துச் சொல்ல முனைந்தமைக்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்!

கொரனாவுக்கு வேலை செய்யக் கூடிய மருந்தைக் கண்டு பிடிக்கத் தான் காலம் செல்லும்! நீங்கள் தாராளமாக மஞ்சள் வேப்பிலை கோமியம் என்று "உடனே பயன் தரும்" தீர்வுகளைப் பின்பற்றிப் பயன் பெற வேண்டும்!😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

உங்கள் ஏனைய பதிவுகளைப் பார்த்த பின்னும் உங்களுக்கு விஞ்ஞானத்தின் பயன்பாடுகளை எடுத்துச் சொல்ல முனைந்தமைக்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்!

கொரனாவுக்கு வேலை செய்யக் கூடிய மருந்தைக் கண்டு பிடிக்கத் தான் காலம் செல்லும்! நீங்கள் தாராளமாக மஞ்சள் வேப்பிலை கோமியம் என்று "உடனே பயன் தரும்" தீர்வுகளைப் பின்பற்றிப் பயன் பெற வேண்டும்!😎 

ஜஸ்டின் சார்! எயிட்சுக்கு மருந்து கண்டு பிடிச்சாச்சா சார்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஜஸ்டின் சார்! எயிட்சுக்கு மருந்து கண்டு பிடிச்சாச்சா சார்? :cool:

கண்டு பிடித்தாயிற்று அண்ணை! எங்கை, குகைக்கேயே இருந்தனீங்கள் இவ்வளவு நாளும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கண்டு பிடித்தாயிற்று அண்ணை! எங்கை, குகைக்கேயே இருந்தனீங்கள் இவ்வளவு நாளும்?

சத்தியமாய் தெரியாத படியாத்தான் கேட்டனான்.
குகைக்கை மனிசன் போவானே.ஒரே வௌவால் கூட்டமாய் கிடக்கு

ஆங்கில மருந்துகள்  நோயை மறைத்து வைக்குமே தவிர மாற்றாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சத்தியமாய் தெரியாத படியாத்தான் கேட்டனான்.
குகைக்கை மனிசன் போவானே.ஒரே வௌவால் கூட்டமாய் கிடக்கு

ஆங்கில மருந்துகள்  நோயை மறைத்து வைக்குமே தவிர மாற்றாது.

"குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்!

இதைப் பல தடவை உங்களுக்கு விளக்கியாகி விட்டது! 

உங்கள் கருத்தில் ஏனைய மருந்துகள் ஆங்கில மருந்துகள் போலல்லாமல் ஒரே அடியில் நோயை இல்லாமல் செய்யக் கூடியவை என்ற தொனி இருக்கிறது! அது உங்கள் நீண்ட கால நம்பிக்கை! என்ன, அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள்  யூரியூப் வீடியோக்கள் தவிர வேறு இடங்களில் காணக் கிடைப்பதில்லை!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

"குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்!

இதைப் பல தடவை உங்களுக்கு விளக்கியாகி விட்டது! 

உங்கள் கருத்தில் ஏனைய மருந்துகள் ஆங்கில மருந்துகள் போலல்லாமல் ஒரே அடியில் நோயை இல்லாமல் செய்யக் கூடியவை என்ற தொனி இருக்கிறது! அது உங்கள் நீண்ட கால நம்பிக்கை! என்ன, அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள்  யூரியூப் வீடியோக்கள் தவிர வேறு இடங்களில் காணக் கிடைப்பதில்லை!
 

நான் தெரியாத விடயங்களைப்பற்றி அலசுவதில்லை. தெரிந்தால் மட்டுமே யாழகளத்திலும் சரி பொது இடங்களிலும் சரி மூக்கை நுழைப்பது.மற்றும் படி யூரியூப்பில் வருவபவை பற்றியும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை.

எனக்கு சிறு வயதில் பீனிசம் இருந்தது.கைதடி ஆயுர்வேதத்தில் மருந்த எடுத்த பின்னரே முற்றுமுழுதாக மாறியது. பீனச விடயத்தில் ஆங்கில மருந்து சிறிது காலம் நிறுத்தி வைத்ததே தவிர முற்று முழுதாக மாற்றவில்லை. இது எனது சொந்த அனுபவம்.
இதுவும் யூரியூப்பில் வந்ததுதான். நாக்கில் உப்பு வைப்பது பற்றி....... செய்து பார்த்தேன் பலன் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

"குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்!

எனது இரத்த அழுத்த வருத்தத்திற்கு முதலில் ஒரு குளிசை தான் எடுத்தேன். அதன் பக்க விளைவு  தசை உளைச்சல். தசை உளைச்சல் வலிக்கு இன்னொரு குளிசை. அந்த இன்னொரு குளிசையால் மலம் இறுக்கப்படுகின்றது.மலம் இலகுவாக போவதற்கு வேறு ஒரு குளிசை.அந்த மலம் இளக்கி குளிசையால் கண்ணெரிவு........ 
இப்படியே  ஆங்கில மருந்துகள் ஒரு தொடர்கதை.
100 வயது வரைக்கும் வலி வன்மத்துடன் வாழ்வதை விட 50 வயதில் வருத்தம் ஏதும் இல்லாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும்/செலவுகள் கொடுக்காமலும் நிம்மதியாய் சாகலாம் ஜஸ்டின் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

Link to comment
Share on other sites

22 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் ,, 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் 

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் , 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ எப்ப‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம்

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.