Jump to content

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.
 எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

இந்த‌ நூற்றாண்டில் தான் அதிக‌ த‌மிழர்க‌ள் சீக்கிர‌மே இற‌க்கின‌ம் கூட‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் , போன‌ நூற்றாண்டில் எம் முன்னோர்க‌ள் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 10 பிள்ளைக‌ள் வ‌ர‌ பெத்து வாழ்ந்த‌வ‌ர்க‌ள் ,

இப்ப‌ ஒரு குடும்ப‌த்த‌ எடுத்து கொண்டா , அவைக்கு மிஞ்சி போனால் மூன்று அல்ல‌து நாலு பிள்ளைக‌ள் , எம் முன்னோர்க‌ள் 10 பிள்ளைக‌ளை பெத்து சிர‌ம‌ம் இல்லாம‌ வ‌ள‌த்த‌வை , இந்த‌ நூற்றாண்டில் ?

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.
 எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை.

குமாரசாமி  நான் என்றுமே மற்றவரின் தனிப்பட்ட விடயங்களுக்கும் தலையீடு செய்யவில்லை.

இவை மூடத்தனங்கள் என்று பொது வெளியில் சொல்வது ஒன்றும் தவறல்ல. மூடத்தனங்களை மூடத்தனங்கள் என்று தான் சொல்ல முடியும்.

எனது அப்பாவும், தாத்தாவும்  90 வயதுவரை வாழ்ந்தார்கள். ஆகவே அந்த  ஆதாரத்தின் அடிப்படையில்  இலங்கையின்  முன்னோர்கள் எல்லோருமே 90 வயதுவரை  உயிர் வாழ்ந்தார்கள்  என்று  வடிகட்டின மூடத்தனமான ஒரு கருத்தை ஒருவர் முன் வைக்கும் போது அதை சுட்டிக்காட்டுவது தவறாகாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனது இரத்த அழுத்த வருத்தத்திற்கு முதலில் ஒரு குளிசை தான் எடுத்தேன். அதன் பக்க விளைவு  தசை உளைச்சல். தசை உளைச்சல் வலிக்கு இன்னொரு குளிசை. அந்த இன்னொரு குளிசையால் மலம் இறுக்கப்படுகின்றது.மலம் இலகுவாக போவதற்கு வேறு ஒரு குளிசை.அந்த மலம் இளக்கி குளிசையால் கண்ணெரிவு........ 
இப்படியே  ஆங்கில மருந்துகள் ஒரு தொடர்கதை.
100 வயது வரைக்கும் வலி வன்மத்துடன் வாழ்வதை விட 50 வயதில் வருத்தம் ஏதும் இல்லாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும்/செலவுகள் கொடுக்காமலும் நிம்மதியாய் சாகலாம் ஜஸ்டின் சார்.

அண்ணை, உங்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பின்விளைவுகள் ஏன், ஏனைய மருத்துவத்தில் பின்விளைவுகள் ஏன் இல்லை, இதெல்லாம் நான் திரும்பவும் விளக்கப் போவதில்லை! ஏனெனில் எல்லாம் நான் போன வருடமே விபரமாக எழுதியாகி விட்டது, யாழில் தான் இருக்கிறது! 

எனவே, உங்களுக்கு விளங்கினதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஆனால், மற்றவர்களுக்கு நான் சொல்வது, இந்த மூன்று ஏரியாக்களில் பி.எச்.டி எடுத்ததாக சொல்லும் மலேசிய தமிழ் பரியாரி தாயத்து விற்கிற பேர்வழி! பாவப்பட்டவருக்கு மூன்று பி.எச்.டி எடுத்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனும் போதே அவரது தகுதிகள் விளங்கவேணும்! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அண்ணை, உங்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பின்விளைவுகள் ஏன், ஏனைய மருத்துவத்தில் பின்விளைவுகள் ஏன் இல்லை, இதெல்லாம் நான் திரும்பவும் விளக்கப் போவதில்லை! ஏனெனில் எல்லாம் நான் போன வருடமே விபரமாக எழுதியாகி விட்டது, யாழில் தான் இருக்கிறது! 

எனவே, உங்களுக்கு விளங்கினதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஆனால், மற்றவர்களுக்கு நான் சொல்வது, இந்த மூன்று ஏரியாக்களில் பி.எச்.டி எடுத்ததாக சொல்லும் மலேசிய தமிழ் பரியாரி தாயத்து விற்கிற பேர்வழி! பாவப்பட்டவருக்கு மூன்று பி.எச்.டி எடுத்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனும் போதே அவரது தகுதிகள் விளங்கவேணும்! 😎

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

4 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

 

2 hours ago, பையன்26 said:

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் , 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் ,

பையன், கணிதத்தில ஒரு சின்னக் கேள்வி! 1950 இல சராசரி வாழ்வுக் காலம் 54 வயது, உங்களுக்கு தெரிய நாலு பேர் 70 தாண்டியிருக்கினம்! அப்ப அதிகமானோர் எந்த வயது மட்டும் வாழ்ந்திருப்பீனம் என்று ஊகிக்கிறீர்கள்? 

கணக்கு பொய் சொல்லாது பையா, என்னையும் நம்ப வேணாம், ருல்பெனையும் நம்ப வேணாம், இந்த கேள்விக்கு என்ன பதில்?

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

அண்ணை, 40 , 50 இல் சாவோம் எண்டு தெரிந்தால் 15 இல் கலியாணம் கட்டி 20 இல் பத்தைப் பெறத்தானே வேணும் (அப்ப தான் பத்தில் ஐந்து பிழைத்து வளரும்!).

 செத்த போதும் தாங்களே நடந்து போய் சமாதியில் அமர்ந்தார்களா? இன்றைக்கு அம்புலன்சில் வந்து சிகிச்சை அழிப்பது போல அன்றில்லை, இதயநோயில் பொட்டென்று போனார்கள்! 

இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆரோக்கியம் உயர்வென்பதன் அறிகுறியா? அப்படி நினைத்தால் பரவாயில்லை, ஆனால் இதை ஒரு கண்டு பிடிப்பாகச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கால கட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோரை பூமிக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமாகவே கருதுகின்றார்கள். வயோதிபர்களுக்குரிய மருத்துவ செலவும் விண்ணை முட்டுகின்றதாம்.
ஏன் கொரோனாவில் கூட முதியவர்களை மரணிக்க விட்டுவிட்டார்கள். அக்கறை கூட எடுக்கவில்லை. வயோதிப வயதில் முதியவர் இல்லத்திற்கு போவதை விட  ஒரு வயதில் மரணிப்பதே மேல்

சேகுவாராவின் கொள்கையில்  60 வயதுக்கு மேல் இருந்து என்ன் பயன்...இளையவர்களுக்கு வழி விட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎07‎-‎2020 at 06:56, தமிழ் சிறி said:

phone.jpg

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை.

கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன்.

எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/

இவர் வியாபாரி என்று கேள்விப் பட்டேன் ...கடையிலும் கல்லா பெட்டியோடு இருந்திருப்பார் ...வீட்ட வந்தும் ஒரே இடத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்திருப்பார்...தொடர்ச்சியாகவே செய்திருப்பார் என்று நினைக்கிறேன்...பட்டென்று போயிட்டார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

 செத்த போதும் தாங்களே நடந்து போய் சமாதியில் அமர்ந்தார்களா? இன்றைக்கு அம்புலன்சில் வந்து சிகிச்சை அழிப்பது போல அன்றில்லை, இதயநோயில் பொட்டென்று போனார்கள்! 

இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆரோக்கியம் உயர்வென்பதன் அறிகுறியா? அப்படி நினைத்தால் பரவாயில்லை, ஆனால் இதை ஒரு கண்டு பிடிப்பாகச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். 

இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய்.
இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

இது பற்றி திரி எதற்கு, பல தடவை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது! நீங்கள் சனத்தொகையின் நாட்டின், சராசரி வாழ்வு காலத்தைத் தான் பார்க்கலாமேயொழிய என் தாத்தா எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்துக் கொண்டு முன்னோரின் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்ய முடியாது! 

உதாரணம்: இந்த மாநிலத்தில் கொரனா வந்து ஒரே குடும்பத்தில் ஐவரில் மூவர் இறந்தனர்! இதை வைத்துப் பார்த்தால் கொரனா ஏற்பட்டால் 60 வீதமானோர் இறப்பர் என்று கொள்ள வேண்டும்! ஆனால், உண்மையில் 5 வீதமானோர் தான் அமெரிக்காவில் இறக்கின்றனர்!

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

6 minutes ago, குமாரசாமி said:

இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய்.
இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம்.  அவர் தொடர்து சொன்னார்...
மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம்.  அவர் தொடர்து சொன்னார்...
மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்

தெரிவு அவருடையதல்லவா? அவரே நோய்க்குரிய வகையில் குடி சிகரட் உடல் பயிற்சியின்மை என்று நோயை வாங்கியிருக்கக் கூடும்! டாக்டர் தலையில் துவக்கு வைத்தா மருந்தைக் கொடுக்கிறார்? எனவே, மருந்துடன் நூறு வயது வாழ விருப்பமிலையெனில் அதைத் தான் அவரோ யாரோ செய்ய வேண்டும்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

Just now, Justin said:

தெரிவு அவருடையதல்லவா? அவரே நோய்க்குரிய வகையில் குடி சிகரட் உடல் பயிற்சியின்மை என்று நோயை வாங்கியிருக்கக் கூடும்! டாக்டர் தலையில் துவக்கு வைத்தா மருந்தைக் கொடுக்கிறார்? எனவே, மருந்துடன் நூறு வயது வாழ விருப்பமிலையெனில் அதைத் தான் அவரோ யாரோ செய்ய வேண்டும்! 
 

குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

இதே கேள்வியை நீங்கள் ஒரு 10 தடவை கேட்டு நானும் பத்து தடவைகள் எழுதி விட்டேன்! அந்தப் பதிலை யாழில் தேடி வாசிக்கலாம்! அல்லது வெளியில் தேடியும் வாசிக்கலாம்! நீங்களே தேடிப் படித்தால் மறக்காது, மறந்த படியால் தானே மீள மீளக் கேட்கிறீர்கள்?  

4 minutes ago, குமாரசாமி said:

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!

சராசரி, பகுதியெண், தொகுதியெண், இதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! சில தெளிவுகள் கிடைக்கலாம்! இது இல்லாமல் நான் விளக்குவது கடினம், நான் என் நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

இது பற்றி திரி எதற்கு, பல தடவை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது! நீங்கள் சனத்தொகையின் நாட்டின், சராசரி வாழ்வு காலத்தைத் தான் பார்க்கலாமேயொழிய என் தாத்தா எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்துக் கொண்டு முன்னோரின் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்ய முடியாது! 

உதாரணம்: இந்த மாநிலத்தில் கொரனா வந்து ஒரே குடும்பத்தில் ஐவரில் மூவர் இறந்தனர்! இதை வைத்துப் பார்த்தால் கொரனா ஏற்பட்டால் 60 வீதமானோர் இறப்பர் என்று கொள்ள வேண்டும்! ஆனால், உண்மையில் 5 வீதமானோர் தான் அமெரிக்காவில் இறக்கின்றனர்!

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

நேர‌த்தை வீன் ஆக்க‌ வில்லை ,
நான் மேல‌ எழுதின‌து , இப்ப‌த்த‌ சாப்பாட்டுக்குள் அதிக‌ கிமிக்க‌ள் க‌ல‌க்க‌ப் ப‌டுது , எம் முன்னோர்க‌ள் ஆரோக்கிய‌மான‌ சாப்பாடு சாப்பிட்டு நோய் நொடியின்ரி நீண்ட‌ கால‌ம் வாழ்ந்தார்க‌ள் , 


நான் என் ஆச்சி அம்ம‌ம்மாவை மைய‌ப் ப‌டுத்தி எழுத‌ வில்லை , சின்ன‌னில் பார்த்த‌ முதிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் 80வ‌ய‌துக்கு பிற‌க்கு தான் இற‌ந்த‌வை ,

எங்க‌ட‌ ப‌ள்ளி ஆசிரிய‌ர் கூட‌ அன்மையில் தான் இற‌ந்து போனா 85 வ‌ய‌து 

இந்த‌ நூற்றாண்டில் யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது / 

நான் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் பார்த்த‌வைய‌ தான் எழுதினேன் 😉🤞

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.