Jump to content

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ)

July 5, 2020

%E0%AE%A4%E0%AF%80-05-768x1024.jpgகொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன.

WhatsApp-Image-2020-07-05-at-12.31.17-PM

 

 

போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள்.

 

அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.

%E0%AE%A4%E0%AF%80-07-1024x576.jpg%E0%AE%A4%E0%AF%80-04.jpeg%E0%AE%A4%E0%AF%80-02-768x1024.jpg

 

http://thinakkural.lk/article/51870

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி வீதிக்கு பூட்டு

வெள்ளவத்தை பகுதியிலுள்ள புடவை நிலையமொன்றில் இடம்பெற்ற தீ பரவல் காரணமாக, குறித்த வீதியிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

xxz.jpg

வெள்ளவத்தை, புடவை வர்த்தக நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதி, ராமகிருஷ்ண மிஷன் சந்தியுடன் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

83537671_200640711286429_676862584260544

 

https://www.virakesari.lk/article/85154

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை தீ : 4 வர்த்தக நிலையங்கள் நாசம் - முழு விபரம் இதோ !

(எம்.எப்.எம்.பஸீர்)

வௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலைய தொடரொன்றில்  இன்று பரவிய தீயினால் நான்கு வர்த்தக நிலையங்கள் முற்றாக தீக்கிரையகையுள்ளன. டப்ளியூ. ஏ. சில்வா மாவத்தைச் சந்திக்கு அருகே உள்ள துணிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ, அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் பரவியதால் இவ்வனர்த்தம் சம்பவித்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் கூறினார்.  துணி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வி ற்பனைச்செய்யும் வர்த்தக நிலையங்களே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகவும்,  இதன்போது  உயிர்ச் சேதங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

DSC_0019.jpg

 எவ்வாறாயினும் பாரிய தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர், இதன்போது காயமடைந்து கொழும்பு   தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில போதன அவைத்தியசாலை) சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தீயணைப்பு படையின் இயந்திர சேவைகள் பிரிவின் வீரர் ஒருவரே இவ்வாறு  சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

DSC_0064.jpg

 இன்று  முற்பகல் 11.45 மணியளவில், வெள்ளவத்தை, டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை சந்திக்கருகில் உள்ள  துணிக் கடை ஒன்றில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.  இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு அரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக, தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின்  5 தீயணைப்பு வாகனங்கள், தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் அகியன  இதன்போது ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

DSC_0070.jpg

 இந்த நடவடிக்கைகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிக நேரம் நீடித்தது.

 இதன்போது ஸ்தலத்துக்கு இரானுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வ உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின்  உயர் அதிகாரிகளும் பொலிஸ்  திணைக்கள உயர் அதிகாரிகளும்  சென்று நிலைமைகளை அவதானித்தனர். 

DSC_0061.jpg

தீபரவலையடுத்து, தெஹிவளை திசையில்  இருந்து கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியானது, இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை சந்தி வரை மூடப்பட்டது. இதனால் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களை கரையோர வீதி ஊடாக கொழும்பை நோக்கி பயணிக்க தேவையான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த தீ விபத்து காரணமாக காலி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.

DSC_0055.jpg

 இந் நிலையில் இன்று மாலை வரை, தீ பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், வெள்ளவத்தை பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் நாளை குறித்த பகுதிக்கு சென்று தீக்கிரையான வர்த்தக நிலையங்களை பார்வையிட்டு காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

DSC_0016.jpg

 அத்துடன் குறித்த நான்கு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையானமையினால் ஏற்பட்ட நட்டம், துல்லியமாக கணக்கிடப்படாத நிலையில்,  பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

 

https://www.virakesari.lk/article/85207

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த Chinese gift palace  80 வருடங்களாக பரம்பரை வியாபாரமாக Hong kong  குடும்பத்தால் நடத்தப்பட்டு வந்தது. எமது வீட்டுக்கு மிக அருகில் தான். பள்ளித்தோழிகளோடு birthday பார்ட்டிகளுக்கு ப்ரெசென்ட் வேண்ட அங்குதான் செல்வேன். நிறைய கலைப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருள்களும் இருக்கும். காலையில் செய்தி கேள்விப்பட்டதும் அந்தக்கடை தப்பவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டேன். அது, Royal பேக்கரி , Gayalords , Bombay sweet house , Seequeens என்று ஒருசில கடைகள் மட்டுமே 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.  அநேகமா கடை உரிமையாளர்கள் தான் நடத்துகிறார்கள். நான் இப்பொழுது போகும்போது சிலர் மிகவும் வயசாகி இன்னும் கடையில் இருக்கிறார்கள். Royal பேக்கரி உரிமையாளர்கள் அண்ணன் , தம்பி இருவரும் 1970 இல் இருந்து பார்த்துவருகிறேன். 1983 கலவரத்தின் போது BBC இங்கு அளித்த பேட்டியில் துணிவாக சிங்களவராக இருந்தும் சிங்களவர்களை எதிர்த்து பேட்டி கொடுத்தவர்கள். அரசாங்கம் மக்களை தூண்டிவிட்டு தமது சிறுபான்மை இனத்தை கொன்று குவிப்பது தம்போன்ற சிங்கள மக்களுக்கு ஒருபோதும் சம்மதம் இல்லையென்று நல்ல ஒரு பேட்டி கொடுத்திருந்தார்கள். அந்தப்பேட்டியை save பண்ணி வைத்திருந்தேன். பிறகு காணாமல் போய்விட்டது. 

Link to comment
Share on other sites

25 minutes ago, nilmini said:

அந்த Chinese gift palace  80 வருடங்களாக பரம்பரை வியாபாரமாக Hong kong  குடும்பத்தால் நடத்தப்பட்டு வந்தது. எமது வீட்டுக்கு மிக அருகில் தான். பள்ளித்தோழிகளோடு birthday பார்ட்டிகளுக்கு ப்ரெசென்ட் வேண்ட அங்குதான் செல்வேன். நிறைய கலைப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருள்களும் இருக்கும். காலையில் செய்தி கேள்விப்பட்டதும் அந்தக்கடை தப்பவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டேன். அது, Royal பேக்கரி , Gayalords , Bombay sweet house , Seequeens என்று ஒருசில கடைகள் மட்டுமே 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.  அநேகமா கடை உரிமையாளர்கள் தான் நடத்துகிறார்கள். நான் இப்பொழுது போகும்போது சிலர் மிகவும் வயசாகி இன்னும் கடையில் இருக்கிறார்கள். Royal பேக்கரி உரிமையாளர்கள் அண்ணன் , தம்பி இருவரும் 1970 இல் இருந்து பார்த்துவருகிறேன். 1983 கலவரத்தின் போது BBC இங்கு அளித்த பேட்டியில் துணிவாக சிங்களவராக இருந்தும் சிங்களவர்களை எதிர்த்து பேட்டி கொடுத்தவர்கள். அரசாங்கம் மக்களை தூண்டிவிட்டு தமது சிறுபான்மை இனத்தை கொன்று குவிப்பது தம்போன்ற சிங்கள மக்களுக்கு ஒருபோதும் சம்மதம் இல்லையென்று நல்ல ஒரு பேட்டி கொடுத்திருந்தார்கள். அந்தப்பேட்டியை save பண்ணி வைத்திருந்தேன். பிறகு காணாமல் போய்விட்டது. 

வெள்ளவத்தை ஒரு மறக்க முடியத ஒரு பிரதேசம்.... குறிப்பாக 70கள் தொடக்கம் 2000ம் ஆண்டு வரை.  அதற்கென தனி மதிப்பு உள்ளது. பல கடைகள் இப்பொழுது இல்லாவிட்டாலும் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் வெள்ளவத்தையின் அடிப்படை பண்புகள் மாறாமல் இருப்பது சிறப்பு. நீங்கள் முன்னர் இருந்த Zellers , Mangala,  Omega in, Sappaire என்பவற்றை மறந்து விட்டிர்கள். இதில் Omega Inn உரிமையாளர்கள் சிங்கள அடிப்படைவாத கட்சிகளுடன் தொடர்பை பேணுவதால் இனவாதம் பிடித்தவர்கள் என நினைக்கிறேன். Gaylord இப்பொழுது மூடி விட்டார்கள் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

வெள்ளவத்தை ஒரு மறக்க முடியத ஒரு பிரதேசம்.... குறிப்பாக 70கள் தொடக்கம் 2000ம் ஆண்டு வரை.  அதற்கென தனி மதிப்பு உள்ளது. பல கடைகள் இப்பொழுது இல்லாவிட்டாலும் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் வெள்ளவத்தையின் அடிப்படை பண்புகள் மாறாமல் இருப்பது சிறப்பு. நீங்கள் முன்னர் இருந்த Zellers , Mangala,  Omega in, Sappaire என்பவற்றை மறந்து விட்டிர்கள். இதில் Omega Inn உரிமையாளர்கள் சிங்கள அடிப்படைவாத கட்சிகளுடன் தொடர்பை பேணுவதால் இனவாதம் பிடித்தவர்கள் என நினைக்கிறேன். Gaylord இப்பொழுது மூடி விட்டார்கள் என நினைக்கிறன்.

உண்மைதான் வெள்ளவத்தைக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. மங்கள ரெக்கோர்டிங் பார் என்றுதான் 1980 களில் திறந்தார்கள். Zellers ice-cream மற்றும் biscuits மறக்கமுடியாது. Elephant  house இல் தான் நெக்டோ , ஒரேஞ் பார்லி , லெமனேட் , கிரீம் சோடா , இஞ்சி சோடா வேண்டுறது.ஆரம்பித்தில்  Fussles லேனில் இருந்து St .Lawrence இல் படித்தேன். அப்போதிருந்த தமிழ் பலசரக்கு கடைகள் பெயர் ஒன்றும் நினைவுக்கு வருகுதில்லை . Milk board , Maaning place உடன் இருந்த நிறையக்கடைகள் ஒன்றுமே இப்ப இல்லை . பின்னர் 1980 இல் இருந்து Arethusa லைனில் Sapphire ஹொட்டேலுக்கு அடுத்த வீடு. அவர்களுக்குத்தான் வீடு வித்தது . இப்ப வீடெல்லாம் உடைத்து வேறு  என்னவோ கட்டி இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2020 at 05:36, nilmini said:

உண்மைதான் வெள்ளவத்தைக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. மங்கள ரெக்கோர்டிங் பார் என்றுதான் 1980 களில் திறந்தார்கள். Zellers ice-cream மற்றும் biscuits மறக்கமுடியாது. Elephant  house இல் தான் நெக்டோ , ஒரேஞ் பார்லி , லெமனேட் , கிரீம் சோடா , இஞ்சி சோடா வேண்டுறது.ஆரம்பித்தில்  Fussles லேனில் இருந்து St .Lawrence இல் படித்தேன். அப்போதிருந்த தமிழ் பலசரக்கு கடைகள் பெயர் ஒன்றும் நினைவுக்கு வருகுதில்லை . Milk board , Maaning place உடன் இருந்த நிறையக்கடைகள் ஒன்றுமே இப்ப இல்லை . பின்னர் 1980 இல் இருந்து Arethusa லைனில் Sapphire ஹொட்டேலுக்கு அடுத்த வீடு. அவர்களுக்குத்தான் வீடு வித்தது . இப்ப வீடெல்லாம் உடைத்து வேறு  என்னவோ கட்டி இருக்கிறார்கள். 

நில்மினி.... உங்களுக்கு  வெள்ளவத்தையில், காலி வீதியில் உள்ள...
 "மயூரி" உணவகத்தை தெரியுமா?

பத்மினி சிதம்பரநாதன் தான்... அந்தக் கடை உணவுகள் சுவையாக இருக்கும் என்று சொன்னார்.
இலங்கைக்கு செல்லும் போது...அங்கு தான், கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடுவேன்.

திரும்பி வரும் போது... வெளிநாட்டுக்கு, கொண்டு செல்லக் கூடிய....   
இறால் பொரியல், நண்டுப் பொரியல், கணவாய் பொரியல், மீன் / சுறா  பொரியல்,
கொத்து ரொட்டி எல்லாவற்றையும்... விசேடமாக தயாரித்து... 
காற்றுப் புகாத பைகளில் அடைத்து... தருவார்கள்.
இப்ப அதை நினைக்க வாயூறுது.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2020 at 22:34, தமிழ் சிறி said:

நில்மினி.... உங்களுக்கு  வெள்ளவத்தையில், காலி வீதியில் உள்ள...
 "மயூரி" உணவகத்தை தெரியுமா?

பத்மினி சிதம்பரநாதன் தான்... அந்தக் கடை உணவுகள் சுவையாக இருக்கும் என்று சொன்னார்.
இலங்கைக்கு செல்லும் போது...அங்கு தான், கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடுவேன்.

திரும்பி வரும் போது... வெளிநாட்டுக்கு, கொண்டு செல்லக் கூடிய....   
இறால் பொரியல், நண்டுப் பொரியல், கணவாய் பொரியல், மீன் / சுறா  பொரியல்,
கொத்து ரொட்டி எல்லாவற்றையும்... விசேடமாக தயாரித்து... 
காற்றுப் புகாத பைகளில் அடைத்து... தருவார்கள்.
இப்ப அதை நினைக்க வாயூறுது.   :)

மயூரி கடை தெரியும் சிறி. றஞ்சு மாமா வேண்டித்தந்து இங்கயும் கொண்டு வந்தனான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.