Jump to content

தேர்தல் களத்தில் பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் களத்தில் பெண்கள்

-கௌரி நித்தியானந்தம்  

இலங்கை சட்டமன்றத்துக்காக 1931இலிருந்து இதுவரை அறுபது பெண்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கடந்த மூன்று நாடாளுமன்றங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 பெண்கள் மாத்திரமே அங்கம் வகித்திருந்தனர். 

image_b607f910ad.jpg

 

 

இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையில் வெறும் 5.7 சதவீதம் மாத்திரமே ஆகும்.  உலக அரங்கில் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகளாக தற்போது இருபதுக்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. அதிலும் கியூபா, பொலிவியா, உகண்டா போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால், ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சனத்தொகை விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் இலங்கையானது 192 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் 182ஆவது இடத்தையே பெற்றிருப்பது வேதனைக்குரிய விடயம்.  

உலகில் முதலாவது பெண் பிரதமரை மட்டுமன்றி, ஒரு பெண் பிரதமரைத் தொடர்ந்து நேரடியாக மற்றொரு பெண் பிரதமரைப் பெற்றிருந்ததும், மேலும் ஒரு பெண் பிரதமரையும் ஒரு பெண் ஜனாதிபதியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்ததுமான முதல் நாடாகவும் இலங்கை இருந்து வருகிறது.

நாட்டின் தலைமைப் பொறுப்புத் தவிர, இதுவரை பல பெண் அமைச்சர்களைக் கண்ட அமைச்சுகளாக சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மட்டுமன்றி கல்வி அமைச்சு, மீன்வள அமைச்சு, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு, கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு போன்றவையும் உள்ளடங்குகின்றன.  

இவை தவிர நாட்டின் மிக முக்கிய கட்டமைப்புகளான பாதுகாப்பு அமைச்சு, பெற்றோலிய வளங்கள் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அமைச்சு போன்றவற்றிலும் கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தவிர்த்து பவித்திரா வன்னியாராச்சி, ஐரீன் விமலா கண்ணங்கரா போன்ற பெண்கள் பலமுறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.  

இவை நாடளுமன்றத்தில் சொற்ப ஆசனங்களையே பெற்றிருப்பினும் தமக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கக்கூடிய திறமை மிக்க பெண்களை இந்த நாடாளுமன்றங்கள் கொண்டிருந்தமையை நிரூபணம் செய்கின்றது.  

எனினும் இந்தப் பட்டியலில், நாட்டின் சனத்தொகையின் கால்வாசி அளவைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிடையே பெண் அமைச்சுப் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

2000ஆம் ஆண்டில் கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு அமைச்சராகப் பதவிக்கு வந்த சிறுபான்மையின பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் அவர்கள், தொடந்து 2004இல் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் தொழிலமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். சமீபகாலங்களில் தேசிய கட்சிகள் மூலமாகவே வடக்கில் விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்றிருந்தது.  

வடக்கின் தமிழ் அரசியல் தலைமைகள்  அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுப்பதை சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுப்பதாகக் கருதிப் புறக்கணிப்பதாக இருப்பினும் ஒருவேளை அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியேற்கவேண்டி ஏற்படின் கூட பெண்களை முன்னிலைப் படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே.  

முப்பது வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்துடனேயே தொடந்து பயணித்து வரும் சில மலையக அரசியல் தலைமைகள் கூட பெண்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துவதில் அசமந்தப் போக்கையே இன்றுவரை காண்பித்து வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இம்முறை தேர்தலில் நிற்பதற்கான சகல தகுதிகள் இருந்தும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகளுமாகிய சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனைக் குறிப்பிட முடியும்.  

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரான சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டமைக்குக் காரணமாக, குறித்த கட்சி இம்முறை தேசிய கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிடுவதால் ஆசனப் பகிர்வு சிக்கல்களால் இவரை, வரும் மாகாண சபைத்தேர்தலில் நிற்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.  

அரசியலுக்குள் நுளைய நினைக்கும் பெண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக அவர்கள் சாதாரண உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர், பின்னர் மாகாண சபை என்று படிப்படியாக முன்னேறாமல் எடுத்தவுடனேயே நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வேண்டும் என ஆசைப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால், இதுவரை பிரதேச சபை, மாகாண சபை என்று படிப்படியாக வளர்ந்து வரும் எத்தனை பெண்களுக்கு வடக்கில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது?  

அங்கே ஒவ்வொருமுறையும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்றுவிட்டு சாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படும் பெண்கள் எல்லோருமே தேர்தல் காலத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் திடீரென இறக்குமதி செய்யப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் ஏதோ பேருக்கு நாலு பிரசாரங்களைச் செய்துவிட்டு தம்மைப் பரிந்துரைசெய்து, அரசியலுக்குக் கொண்டு வந்தவர்களுக்கான விருப்புவாக்குகளை மாட்டும் பெற்றுக்கொடுத்துவிட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடுகிறார்கள்.  

இதில் சென்றமுறை வட மாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றிருந்த அனந்தி சசிதரன், கூட்டமைப்பானது தன்னை வெறும் வாக்குச் சேர்ப்பதற்காக மட்டுமே பாவித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் இவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சி கூட பெண்களை தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்த மட்டுமே பாவிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.  

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றக் கட்சி வேட்பாளர்களை விடவும் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான உமா சந்திரபிரகாஷ், தான் யாழ். மண்ணின் புதல்வி என்பதை நிரூபிக்கவும் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. இருப்பினும் வடக்கில் வேறெந்த புதுமுக பெண் வேட்பாளர்களை விடவும் சிறந்த திட்டமிடல்களையும் ஆணாதிக்க அரசியலை கேள்விக்குட்படுத்தக்கூடிய சிறந்த ஆளுமையையும் கொண்டிருப்பதாகவே உமா சந்திரபிரகாஷ் தெரிகிறார்.  

காலாகாலமாக தமிழர்கள் மத்தியில் அரசியல் என்பது ஆண்களுக்கே வரிந்துவிடப்பட்டதாகக் கருதப்படும் சூழ்நிலையில் துணிந்து களமிறங்கும் பெண்களின் மீது அவர்களது நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் முகமாகச் சேற்றை வாரியிறைக்கும் செயல்கள் தொடர்ந்தும் அரங்கேறுவதும் வேதனைக்குரிய விடயம்.

இத்தகைய சேறுபூசல் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ் தொடக்கம் வேட்பாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் சமர்ப்பித்திருந்த மட்டக்களப்பின் நளினி இரட்ணராஜா வரை நீண்டு செல்கிறது.  

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் துணைவியாகிய சசிகலா ரவிராஜ் தனது பிரசாரங்களில் புலிகளால் ரவிராஜுக்கு வழங்கப்பட்ட ‘மாமனிதர்’ பட்டத்தைப் பயன்படுத்தினார் என்பதற்காக மாற்றுக் கட்சி உறுப்பினர் ஒருவரால் “அரசியலில் இறங்க முதல் உங்கள் கணவரின் நினைவுச் சிலையில் மாமனிதர் என்ற கௌரவத்தினை பொறியுங்கள். அது செய்ய வக்கில்லை. தூ.. பிறகு அரசியல் கதைக்கிறாவாம். இதைவிட உடுப்பில்லாமல் திரியலாம். அதுமேலானது” என்றவாறாக மிகவும் கீழ்த்தரமாக, விமர்சிக்கப்பட்டிருக்கிறார். 

இதேபோலவே நளினி இரட்ணராஜாவின் நடத்தையும் இன்றுவரை மிகவும் கீழ்த்தரமான முறையிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னாலிருக்கும் ஆணாதிக்க மனோ நிலையானது பெண்கள் எவரையும் தேர்தல் களத்துக்கு வரவிடாமல் செய்வதனையே பிரதான குறிக்கோளாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதனாலேயே சில ஆளுமை மிக்க பெண்கள் கூட தேர்தல் களத்துக்கு வர அஞ்சி, தேசியப்பட்டியலை விரும்பிச் செல்வதற்குக் காரணமாகிறது.  

இன்னும் சில இடங்களில் பெண்களை வேட்பாளராகக் களமிறக்கினாலும் முன்னிலையில் சென்று பேசுவதற்குத் தடுக்கப்படுகிறார்கள் அல்லது தயக்கம் காட்டுகிறார்கள். அத்தகைய பெண்களின் குரலாக ஆண்களே இவர்களுக்கும் சேர்த்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். இதனை கிழக்கின் ஒரு முன்னிலைக் கட்சியின் கூட்டங்களில் காணமுடிகிறது. ஆனால், ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் மங்களேஸ்வரி சங்கர் ஓரளவு தனித்துவத்துடன் தெரிகிறார்.  

தேர்தல் களத்தில் பெண்கள் மீதான இத்தகைய சவால்களையெல்லாம் துடைத்தெறியக்கூடிய ஆளுமை மிக்க பெண்களாகவும் வெற்றி மீதான ஓர்மமுள்ள பெண்களாகவும் இனி அரசியலுக்கு வரத்துணியும் பெண்களுக்கான சிறந்த வழிகாட்டிகளாக அமையக்கூடிய பெண்களாகவும் இம்முறை தேர்தல் களத்தில் இரு தமிழ்ப் பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒருவர் மலையகத்தின் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் மற்றையவர் வடக்கில் உமா சந்திரபிரகாஷ்.  

இவர்கள் இருவரிடத்திலும் தாம் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புரிகிறது, அவற்றைச் சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்து அவற்றுக்குத் தம்மால் முன்வைக்கப்படும் தீர்வுகளைப் பற்றியே தமது பிரசாரங்களில் அதிகமாகப் பேசுகிறார்கள்.

குறுகியகாலத்தில் அடைய முடியாத தீர்வுத்திட்டங்களையும் பிறர் மீது பழிசுமத்தும் அரசியலையும் மட்டுமே இதுவரைகாலமும் செய்து வந்த பல அரசியல்வாதிகளுக்கு இவர்களின் இந்தப் புதிய அணுகுமுறை மாபெரும் அடியாக இருக்கிறது.  

கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்பதில் அர்த்தமில்லை. ஒரு பெண்ணுக்குத்தான் குடும்பத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியும், சாதாரண மனிதர்களின் அபிலாசைகளைத் தீர்த்துவைக்க முடியும். இந்தவகையில் மேற்குறிப்பிட்ட இரு பெண்கள் முன்மொழியும் திட்டங்களும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதாகச் சொல்லும் பொறிமுறைகளும் செயற்பாடுகளும் எளிதானவையாகவும் மெச்சத்தக்கனவையாகவும் இருக்கின்றன.  

இவ்விரு பெண்களும் இம்முறை தேர்தல் களத்தில் துணிச்சலுடன் எதிர்கொள்வது, பல தாசாப்தங்களாக ஆசனத்தை விட்டகலாத பலம் மிக்க அரசியல் முதலைகளையேயாகும். இருப்பினும் அந்த அரசியல் முதலைகளால் இவர்கள் மீது வைக்கக் கூடிய அதிகபட்ச பழி சுமத்தலே திருமணம் செய்த பின்னரும் தனது கணவனின் பெயரைப் பயன்படுத்தாமல் தந்தையாரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருகிறார் என்பதும், வாக்குகளைப் பிரிப்பதற்காகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுவும் மட்டுமே.  

ஒரு பெண் தனது பெயருடன் தந்தையின் பெயரைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது கணவனின் பெயரைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது தாயின் பெயரைப் பயன்படுத்தவேண்டுமா என்பது அந்தப் பெண்ணின் சுதந்திரம். இந்த அடிப்படைச் சுதந்திரத்தைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தந்து விடுவார்கள் என்று நினைப்பது அடிமுட்டாள்தனம்.  

ஐம்பத்தியாறு சதவீதத்துக்கு மேற்பட்ட பெண் வாக்காளர்களை இலங்கை கொண்டிருக்கூடியபோதிலும், இன்றுவரை ஆறு சதவீதத்துக்கும் குறைவான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மட்டுமே பெண்கள் கொண்டிருப்பதற்கு நிச்சயமாக பெண் வாக்காளர்களைத் தான் குறைசொல்ல வேண்டியிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டபோதிலும், அரசியலில் பெண்களின் பங்களிப்பு தேக்கமடைந்துள்ளமைக்கான காரணமாகவும் பெண் வாக்காளர்களே இருக்கிறார்கள்.

எனவே இம்முறை ‘குறிப்பிடத்தக்களவு விகிதாசாரத்தில் பெண்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பெண் வாக்காளர்களாகிய எமக்குப் புரிகிறது’ என்பதையும் அனைவருக்கும் உரத்துச் சொல்வதற்காகவேனும் ஒரு பெண் வேட்பாளருக்கு தமது வாக்கைக் கட்டாயம் அளித்தே தீரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.  

புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக இதுநாள்வரை ஒரு கட்சிக்கு வாக்குப் போட்டுக்கொண்டிருந்த மக்களுக்குத் தற்போது அதனைக் கூட ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று குறித்த தலைமைகள் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தாம் காலம் காலமாக ஆசனத்தில் இருப்பதற்காக வெளியே ஒன்றையும் பின்னர் தேர்தல் காலத்தில் மக்களுக்கேற்றவாறு இன்னொன்றையும் திரித்துக் கூறக் கூடியவர்களை மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி ஏதாவது கிடைத்துவிடும் என்று காத்திருப்பதை விடுத்து மக்களது அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு புதிய தலைமுறையை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.  

தமிழர்களின் ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது. எனவே, இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் பெண் வேட்பாளர்களை, ஆண் பிரதிநிதிகளால் வசைபாடப்படுவதைப்போல, மக்களின் வாக்குகளைப் பிரிக்க வந்தவர்களாகப் பார்க்காமல், இவர்கள் அனைவரும் ஆணாதிக்க அரசியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்பதைத் தெளிவுறப் புரிந்துகொண்டு, தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் இம்முறை பெண்களுக்கு வழங்கி வெற்றிபெறச் செய்வதே இனிவரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் பெண் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவமளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும்.  

தவிர, இம்முறை களமிறங்கியிருக்கும் பெண் பிரதிநிதிகளும் சிறந்த ஆளுமை கொண்டவர்களாகவும் தாம் செய்வோம் என வாக்குக் கொடுப்பதைச் செய்யக்கூடிய தற்றுணிவுடையவர்களாகவும் தெரிகிறார்கள். இவர்கள் வேறுவேறு கட்சிகளிலும் சுயேட்சையாகவுமே தேர்தல் களத்தில் இறங்கியிருந்தாலுமே தமக்கான வாக்காளர் பகுதிகளை ஒருவருக்கொருவர் பாதிப்பேற்படுத்தாத வகையில்தான் தேர்வு செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவருகிறார்கள் என்பது கவனத்துக்குரியது.  

எனவே, மக்கள் நினைத்தால் இம்முறை வழமையைவிட அதிக பெண் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இது வருங்காலங்களில் பிரதான தமிழ்க் கட்சிகளில் அனுமதி மறுக்கப்பட்டாலும் தனித்துக் களத்தில் இறங்கக் கூடிய உத்வேகத்தைப் பெண்களுக்கு வழங்கும். இல்லாதுவிடின் சிறுபான்மையினரின் அரசியலில் பெண் தலைமைத்துவம் என்பதும் சிறந்த பெண் ஆளுமைகளது உருவாக்கம் என்பதும் இனிவரும் கால் நூற்றாண்டுக்குக் கூட சாத்தியப்படாத ஒன்றாகவே ஆகிவிடும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-களத்தில்-பெண்கள்/91-252770

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி யாழ் இணைய உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவல்.

ஏன் இலங்கை அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவு? அல்லது சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை? பெண் வாக்காளர்களை அவர்களால் ஏன் கவரமுடியாது உள்ளது?

விதாண்டவாத கருத்துகள் இல்லாமல், ஆக்கபூர்வமான கருத்துகளை அறிய ஆவல்.. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்துப் படி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் "கலாச்சாரம்" என்ற பெயர் கொண்ட நடைமுறைகள் தான் பெண்கள் அரசியலில் முன்வராமல் இருக்கக் காரணம். பொதுவாகவே அரசியலில் அறம் என்பது மிகக் குறைவாக இருக்கிறது. இந்த சூழலில் எந்த அரசியல் வாதிக்கும் வித்தியாசமான ஒரு மன அமைப்பு வெற்றிபெறத் தேவையாக இருக்கிறது! கீழைத்தேய ஆசிய நாடுகளில் வாழும் பெண்களுக்கு நாம் நம்பிக்கைகளை ஊட்டும் விதமாக எம் சமூக அமைப்பை முன்னேற்றவில்லை! இதனால் அவர்கள் spotlight இற்குள் வராமல் பின் புலத்திலேயே பணியாற்றிய படி இருப்பர்! யாராவது முன்னே வர முனைந்தால், சாதாரண அரசியல் சித்து விளையாட்டுகளோடு சேர்ந்து மேலதிகமாக ஆணாதிக்க வாதம் நிறைந்த தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டி வரும்!

பி.கு: உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமா வந்ததும், இந்தியாவில் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பட்டேல் வந்ததும் அந்த நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் ஒரு விடயமாக நான் கருதுவதில்லை! அந்த நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையே இதற்குச் சான்று! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழத்தைய நாடுகளில் பெண்கள் தலமைப் பொறுப்புக்கு வந்தாலும் கணவன் இறந்தபின் அல்லது தந்தை இறந்த பின் வந்தவர்கள் தான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியபடி பொதுவாக அரசியலில் அறம் என்பது குறைவாக உள்ள நிலையில் இலங்கையில் இந்தியாவில் பெண்கள் அரசியலில்/ சமூக பொருளாதார முன்னேற்றங்களில் ஈடுபடும் போது நிறைய சவால்களை எதிர்நோக்குகிறார்கள். சவால்களை மீறி முன்னேறுவதற்கு வித்தியாசமான மன உறுதியும் தேவை. அந்த தன்னம்பிக்கை பெண்களிடம் குறைவாக உள்ளது அல்லது அப்படி வளர்க்கப்படுகிறார்கள். 

சம்பளம் பெறுவதால் அரசியலும் ஒரு தொழில், அரசியல்வாதியும் ஒரு ஊழியன் என நினைத்துகொண்டு மேலே முன்னேறுவதற்கான mindset என்பதும் இல்லைதான். இளவயதினர் கூட படிப்படியாக மேலே வரமுடியாதளவிற்கு எங்களது சமூக கட்டமைப்பு உள்ளது. 

இந்தியா, ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும்  பெண்களுக்கெதிரான வன்முறைகளைவிட இலங்கை பரவாயில்லை என்றும் இலங்கையில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள் எனகூறிகொண்டாலும் இன்னமும் கலாச்சாரம் என்ற பெயரில் தடையை போடுகிறார்கள் என்பதும், பெண்களின் விகிதசாரம் சற்றுக்கூட இருந்தும் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதும், மாற்றங்களைப்பற்றி சிந்திப்பதும் இல்லை என்பதும் உண்மை

On 7/7/2020 at 01:05, சுவைப்பிரியன் said:

கீழத்தைய நாடுகளில் பெண்கள் தலமைப் பொறுப்புக்கு வந்தாலும் கணவன் இறந்தபின் அல்லது தந்தை இறந்த பின் வந்தவர்கள் தான் அதிகம்.

நீங்கள் கூறுவது தலமைப்பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு பொருந்தும் ஆனால் இங்கே சாதாரண உறுப்பினர்/ மாநகர சபை/ மாகான சபை என படிப்படியாக முன்னேறுவதே மிகவும் கடினமாக உள்ளதே ஏன்?

Link to comment
Share on other sites

On 6/7/2020 at 14:11, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்பற்றி யாழ் இணைய உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவல்.

ஏன் இலங்கை அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவு? அல்லது சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை? பெண் வாக்காளர்களை அவர்களால் ஏன் கவரமுடியாது உள்ளது?

விதாண்டவாத கருத்துகள் இல்லாமல், ஆக்கபூர்வமான கருத்துகளை அறிய ஆவல்.. நன்றி.

தமிழ்ச்சூழலில் அரசியலுக்கு பெண்கள் நெடுங்காலமாகவே வரவேற்கப்படவில்லை என்பதே உண்மை. பெண்களுக்கான கலாச்சார அழுத்தம் என்பது மறைமுகமாக  சமூகத்தால் குடும்ப வளர்ப்பு முறையிலேயே விதைக்கப்பட்டு விடுவதால் அவர்களாகவே தயங்கி கூனிக்குறுகி  நிற்பவர்களாகவே இருந்தனர். 

ஆயுதப்போராட்டம் ஆரம்பிகப்பட்ட போது போராளிகள் தேவைகருதி பெண்பிள்ளைகளை உள்வாங்க வேண்டிய கட்டாயம்  வந்தது.  இதுவரை கலாச்சார பழமைவாதத்துக்குள் பொத்தி வைத்து  அவர்களின் திறமைகளை மழுங்கடித்த  தமிழ்சமூகம் பலம்மிகு  புலிகளை பகைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில்  பெண்பிள்ளைகள் ஆண்களுக்கு சமமாக நின்று போராடுவதை மனதுக்குள் விருப்பமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.   

அவ்வாறு போராளிகளாக உள்ளே கொண்டு வரப்பட்ட பெண பிள்ளைகள் ஆண்போரளிகளுக்கு நிகராக சிலவேளைகளில் அதற்கு மேலாகவே தமது திறமையை நிரூபித்தனர். பெண்கள் கலாச்சார பழமைவாதங்களுக்குள் இருந்து வெளியே வர வேண்டும் என்ற  முற்போக்கு சிந்தனை கொண்ட பலர் விடுதலைப்புலிகளுக்குள் இருந்த போதிலும் அவர்களின் போராட்ட நெருக்கடி காரணமாக இதனை சரியான சமூக விழிப்புணர்வாக தமிழ் சமூகம் சார்ந்த ரீதியில்  செய்யமுடியவில்லை. அதனால் தற்போதைய நிலையில் தீவிர புலிகள் ஆதரவு தமிழ் தேசியம் பேசும் பலரும் பெண்கள் தொடர்பாக  பழைய பத்தாம்பசலி  அணுகுமுறையை நடைமுறையில் ஆதரிப்பதை காணலாம். இருப்பினும் இவர்களை மீறி பெண் பிள்ளைகள் தமது அசாத்திய திறமையினால் வளர்ந்துவருகின்றனர் என்பது மகிழ்சசிக்குரிய விடயம். 

கடந்த வருடம்  பெண்களுக்கான கோலோற்றி பாய்தல் விளையாட்டில் தேசியரீதியில் சாதனை நிகழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தன்னை தயாராகி வரும் தமிழ் வீராங்கனை அனிதா ஜெகதீசனின் பேட்டி கேட்டேன். வயதில் இளையவரான அவர் சார்ந்த தமிழ் சமூகம்  பெரியளவில் தன்னை ஊக்குவிக்காததையும் பொம்பிளைப் பிள்ளைக்கு இப்படியான விளையாட்டுகள் தேவையில்லை என்ற ரீதியிலான மனதை புண்படுத்தும் விமர்சனங்களால் தன்னை  demotivation பண்ணியிருந்ததை வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை விளையாட்டு போட்டிகளுக்கு சென்ற போது தன்னுடன் பழக்கத்தை ஏற்படுத்திய சிங்கள இனத்தை சேர்ந்த பல தனது பெண் தோழிகள் இனபேதத்தை கடந்து தனக்கு மிகுந்த  ஊக்கம் கொடுத்திருந்ததையும் அவர்   தெரிவித்திருந்தார்.   

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் பழமைவாதங்களிலிருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும் என நினைத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். அவர்கள் மீதான பயத்தினால் பழமைவாதிகளும் அடக்கிவாசித்தார்கள் என்றுதான் நானும் நினைப்பதுண்டு. இப்பொழுது மீண்டும் பழைய அணுகுமுறைகளை தொடங்கிவிட்டார்கள்,

ஆனால், நான் பெண் வாக்காளர்களை நினைத்து பார்க்கிறேன். ஏன் அவர்கள் இந்தப்பெண் வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை?. இப்பொழுது போரினால் குடும்பத்தை தாங்கிய ஆண்களை இழந்த பெண்தலைமைத்துவகுடும்பங்கள் அதிகம்..அவர்கள் நினைத்தால், தங்களது பிரச்சனைகளை அதிகம் யாரால் உணரமுடியும் என்றும், இவ்வளவுகாலமும் வாக்கு போட்டு அனுப்பியவர்கள் என்ன செய்தார்கள் எனவும் சற்று சிந்தித்தால் பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கமுடியும்.. ஆனால் ஏதோ வாக்குபோட்டுவிட்டு வந்தால் போதும் என்றோ. அல்லது தாங்களாக அறியமுற்படாமல் அவர்களை சுற்றியுள்ளவர்களின் வார்த்தைகளை கேட்டு பெண்வேட்பாளர்களை தவிர்த்து வாக்குகளை போடுவார்களாயின் பெண் வேட்பாளர்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை.  
 

Link to comment
Share on other sites

ஒரு அருமையான புள்ளி விபரங்களுடனான அரசியல் அலசல் . பெண்கள்  சாதாரண பொது வெளிகளுக்கே வரத்  தயங்கும் சூழல் தான் புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி தாயகத்திலும் சரி காலம் காலமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் துணிச்சலுடன் அரசியலில் குதித்திருக்கும் பெண்கள் வாழ்த்தப் பட வேண்டியவர்கள்.  ஆனால் வழமை போலவே தூற்றித் தள்ளுவதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக இருப்பது அவர்கள் எவருமே பெண்களின் அரசியல் பங்களிப்பை உள்வாங்க முடியாமல் இருப்பவர்களே.

பெண் தலைமைத்துவத்தை ஏற்க முடியாத தன்மை எமது தற்போதைய கலாச்சாரம் சார்ந்தது. அது மட்டுமல்லாது ஆண்  ஆதிக்கம் மிகுந்த கட்சிகளில் பெண் பிரதிநித்துவம் என்பது வெறும் கண் துடைப்பாகவோ அல்லது தம் கட்சிக்கு வாக்குகளை வாங்கித்தரும் பலியாடுகளாகவோ இருப்பதற்கே பயன் படுத்தப்படுகின்றது.  இந்நிலையில் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமல்லாது தம் சார்ந்த சமூகத்துக்கும் பலம் சேர்க்கவும் பெண்களை பிரதிநிதிப்படுத்தவும் பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இன்றியமையாதது. இதில் நீங்கள் குறிப்பிட்டது  போல ஆண்ஆதிக்கத்தை மட்டுமன்றி, தமது பாதையை ஓர்மத்துடன் நின்று எதிர் கொள்ளக்கூடிய பெண்களும் இங்கு அவசியமாகின்றார்கள்.  

மக்கள், முக்கியமாக பெண்கள்  தம் வாக்குகளை தம் விரும்பும் கட்சிகளிலுள்ள பெண்களுக்கோ அல்லது தம் ஒரு சிறந்த பெண் ஆளுமை என அடையாளம் காணுகின்ற ஒரு பெண் வேட்பாளருக்கோ போட்டு இந்த தேர்தலை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். உலக அரங்கில் பெண் ஆளுமைகள் தலைமை தங்கி செல்லும் நாடுகள் செழிப்புள்ளதாக அமைந்திருப்பது கண்கூடு.

Link to comment
Share on other sites

On 12/7/2020 at 10:54, பிரபா சிதம்பரநாதன் said:

 விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் பழமைவாதங்களிலிருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும் என நினைத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். அவர்கள் மீதான பயத்தினால் பழமைவாதிகளும் அடக்கிவாசித்தார்கள் என்றுதான் நானும் நினைப்பதுண்டு. இப்பொழுது மீண்டும் பழைய அணுகுமுறைகளை தொடங்கிவிட்டார்கள்,

ஆனால், நான் பெண் வாக்காளர்களை நினைத்து பார்க்கிறேன். ஏன் அவர்கள் இந்தப்பெண் வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை?. இப்பொழுது போரினால் குடும்பத்தை தாங்கிய ஆண்களை இழந்த பெண்தலைமைத்துவகுடும்பங்கள் அதிகம்..அவர்கள் நினைத்தால், தங்களது பிரச்சனைகளை அதிகம் யாரால் உணரமுடியும் என்றும், இவ்வளவுகாலமும் வாக்கு போட்டு அனுப்பியவர்கள் என்ன செய்தார்கள் எனவும் சற்று சிந்தித்தால் பெண் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கமுடியும்.. ஆனால் ஏதோ வாக்குபோட்டுவிட்டு வந்தால் போதும் என்றோ. அல்லது தாங்களாக அறியமுற்படாமல் அவர்களை சுற்றியுள்ளவர்களின் வார்த்தைகளை கேட்டு பெண்வேட்பாளர்களை தவிர்த்து வாக்குகளை போடுவார்களாயின் பெண் வேட்பாளர்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை.  
 

ஒரு அன்பர் ஒருவர் கேட்டார் இவை எல்லாம் போய்  என்ன செய்யப்போகினம் என்று.  அவரை நான் கேட்டாக வேண்டி வந்தது

' தோழரே சில கட்சிகளில் இருக்கும் ஆண்கள் போய் என்ன செய்தார்கள்,  இவ்வளளவு நாளும் இருந்து ஆண்கள் சாதித்ததை விட பெண்கள் கூடுதலாக சாதிக்கக் கூடும், ஒரு சந்தர்ப்பம் கூடக் கொடுக்காமல் கேள்விகளே கேட்பது நல்லதல்ல ' என்று. இப்படியாகத்தான் அரசியல் அவதானிகள் இருக்கிறார்கள் என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தோழி said:

உலக அரங்கில் பெண் ஆளுமைகள் தலைமை தங்கி செல்லும் நாடுகள் செழிப்புள்ளதாக அமைந்திருப்பது கண்கூடு.

யேர்மனி, தய்வான் சுவீடன் என்று நாடுகளை பார்க்கும் போது நீங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் முன்பு ஆசிய நாடுகளில் பண்டாரநாயக்க இந்திராகாந்தி மோசமான ஆட்சிகள் நடத்தியதாக அறிய முடிகிறது.
தமிழ் பெண் வேட்பாளர்களும் வழக்கமான ஆண்கள் மாதிரி உணர்ச்சி உசுப்பேற்று  அரசியல்  பேசாமல் பெண்கள்,மக்கள் செழிப்புற வாழ்வதில் அக்கறை எடுத்து செயல்பட   வேண்டும்.

Link to comment
Share on other sites

உண்மை தான்! வாக்குகளை  மட்டும் கொடுத்து விட்டு வேலை முடிந்தது என்றில்லாமல், வாக்குப் போட்டவர்களும் தம் வாக்குகளை வாங்கியவர்கள் என்ன செய்து தருகிறார்கள், கூறிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துகிறார்களா என ஆர்வமாக இருந்து கவனிப்பதும் அவர்களுடன் ஆதரவாக பயணிப்பதும் இன்றியமையாதது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.