Jump to content

நாம் உண்ணும் உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் - ஓர் எச்சரிக்கை செய்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் உண்ணும் உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் - ஓர் எச்சரிக்கை செய்தி

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்Getty Images

நாகரிக கால சமையல் முறைகள் , நச்சு ரசாயனப் பொருட்களை உருவாக்குவதில் தொடங்கி, புற்றுநோய் ஆபத்து வரை ஏற்படுத்தும், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. அவற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

"நமக்கான உணவை சமைக்கத் தொடங்கியதன் காரணமாகத் தான் நாம் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறோம்," என்று ஜென்னா மெக்கியோச்சி உறுதியாகக் கூறுகிறார்.

"நாம் சமைக்காத சிலவற்றை மட்டும் சாப்பிட்டு வந்த காலத்தில், தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் சமைக்காத உணவுப் பொருட்களிலிருந்து சத்துகளை எடுத்துக் கொள்ள நமது உடல் போராட வேண்டியிருந்தது'' என்கிறார் அவர்.

மெக்கியோச்சி கூறுவதை உயிரியல் நிபுணர்கள் நீண்டகாலமாக ஒப்புக்கொண்டு வருகின்றனர். மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலுடன் அவனுடைய சத்துமிக்க உணவும் வாழ்க்கை முறையும் எப்படி பிணைந்திருக்கின்றன என்பது குறித்து சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கியோச்சி ஆய்வு நடத்தி வருகிறார். 

உண்மையில், நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்த காலத்திற்கும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் நேரடி தொடர்புகள் இருப்பதற்கான முந்தைய காலத்தைச் சேர்ந்த ஆதாரங்கள் கணிசமாக இருக்கின்றன.

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்Getty Images

நமது முன்னோர்கள் தங்கள் உணவை சமைத்து, பதப்படுத்திய காலத்தில், கொழுப்பு மற்றும் கலோரிகளை பிரித்தெடுப்பதை அவை எளிதாக்கின. அதனால் உணவை செரிமாணம் செய்வதற்குப் பயன்படுத்தும் சக்திக்கும், உணவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சக்திக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. அதாவது நாம் குறைந்த அளவு மென்று தின்றால் போதும் என்ற நிலை உருவானது.

நமது சமையல் திறன்கள், நமது தாடைகளின் அளவு குறைவதற்கு உதவியாக இருந்தது மட்டுமின்றி, மூளை பெரிதாவதற்கும் - அதிக சக்தி செலவை தாங்கும் திறன் கொண்டவர்களாக ஆவதற்கும் உதவிகரமாக இருந்தது என்ற எண்ணம் இருந்தது. நம் உணவின் உள்ளும், வெளியிலும் வளரக் கூடிய, ஊறு விளைவிக்கும் பல பாக்டீரியாக்கள் சமையல் மூலம் கொல்லப்படுகின்றன. இதனால் உணவு விஷத்தன்மை கொண்டதாக மாறுவது தடுக்கப்படுகிறது.

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்Getty Images

இருந்தபோதிலும், சமைத்தல் காரணமாக நிறைய பயன்கள் கிடைக்கிற போதிலும், அதிக வெப்ப நிலையில் சமைக்கும்போது, உணவில் ஆரோக்கியத்துக்கான ஆபத்துகள் ஒளிந்திருக்கும் வாய்ப்பு உள்ளதா?

சமைக்காத உணவுப் பழக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமையலில் புதிய முயற்சிக்கான நுட்பங்களை நோக்கி நகரும் நிலையில், சூடான உணவுகளை கவனிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியலில் உலக விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அக்ரிலாமைட்: மிதமிஞ்சி சமைத்தலால் புற்றுநோய் ஆபத்து

ஒரு பதார்த்தத்தை தயாரிக்கும்போது, அனைத்து சமையல் முறைகளும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்துவதாக இருப்பதில்லை. சில வகையான சமையல்களுக்கு - மிக அதிகமான சூடு தேவைப்படுகிறது. சமைக்கப்படும் உணவு இதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக மாவுச்சத்து மிகுந்த உணவுகளுக்கு, அக்ரிலாமைட் குறித்து பிரிட்டனில் உணவுத் தரநிலைகள் ஏஜென்சி (FSA) எச்சரிக்கைகள் விடுத்துள்ளன. இந்த வேதிப்பொருள், காகிதம், நிறமிகள் மற்றும் நெகிழிகள் தயாரிக்க தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உணவை ரோஸ்ட் செய்தல், வறுத்தல் அல்லது கிரில் செய்யும் போது நீண்ட நேரத்துக்கு மிக அதிகமான சூட்டில் வைத்திருக்கும் போதும் இந்த வேதிப் பொருள் பயன்படுத்தப் படுகிறது..

புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்து கொண்டதாக அக்ரிலாமைட் கருதப்படுகிறது. இப்போதைக்கு விலங்குகளிடம் இருந்து தான் இதற்கான ஆபத்து உள்ளதாக பெரும்பாலும் கருதப்படுகிறது.

கார்போஹைட்ரேட் மிகுந்த உட்பொருட்கள், உருளைக் கிழங்குகள் மற்றும் வேரில் கிடைக்கும் காய்கறிகள் போன்றவை, தணலில் வாட்டியவை, தானியங்கள், காபி, கேக்குகள் மற்றும் பிஸ்கட்கள் போன்றவை நோயை உருவாக்க அதிக வாய்ப்பு கொண்டவை. அவற்றில் உள்ள மாவுச்சத்து கறுப்பாகும் போது அதன் மாற்றத்தை நாம் அறியலாம். அவை பொன்னிறத்துக்கு மாறும் அல்லது எரிந்து போனது போன்ற தோற்றத்தைத் தரும்.

அக்ரிலாமைட் புற்றுநோய் ஆபத்தை உருவாக்கக் கூடியது என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. இப்போதைய பெரும்பாலான ஆபத்துகள் விலங்குகளிடம் இருந்து வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது என்றாலும், இந்த அக்ரிலாமைட் வேதிப் பொருள் இந்த ஆபத்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வேதிப் பொருள் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடாமல் தடுத்தல் நல்லது என்று மெக்கியோச்சி, சத்துணவு நிபுணர்கள் மற்றும் உணவு ஏஜென்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் நல்லதாக இருக்கும்.

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்Getty Images

``பெரும்பாலான பரிசோதனைகள், ஆய்வகங்களில் விலங்குகளின் மீது செய்யப்படுகின்றன. ஆனால் அக்ரிலாமைட் மனிதர்களிடம் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது, எனவே இதுகுறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். நாம் வாங்கும் உணவுகள் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப் படுவதால், அவற்றில் அதிக அளவில் அக்ரிலாமைட் இருக்கலாம் என்றும் நாம் நினைக்கிறோம்'' என்று அவர் கூறுகிறார்.

அக்ரிலாமைட் அளவு அதிகமாவதைத் தவிர்ப்பதற்கு, சமையலின் போது பொன்னிறம் வருவதைக் கவனிக்கும்படியும், அதிக சூட்டில் சமைத்த உருளைக்கிழங்காக இருந்தால், அவற்றை குளிர்பதனப் பெட்டிகளில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் (உருளைக் கிழங்குகளைக் குளிர்விப்பதால் சர்க்கரைச் சத்து விடுபடுகிறது, அது அமினோ அமிலங்களுடன் இணைந்து சமையலின் போது அக்ரிலாமைட் ஆக மாறுகிறது) என்று FSA பரிந்துரைக்கிறது. பொதுவாக, இந்த உட்பொருட்களை மிதமிஞ்சிய அளவுக்கு சமைக்கும் போது, அக்ரிலாமைட் உருவாகும் என்பதால், அந்த அளவுக்கு சமைத்தலைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் விஷயம்.

எப்படி இருந்தாலும், கிரில் செய்வதுடன் ஆபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதில்லை.

``உணவில் அக்ரிலாமைட் போன்றவை இருப்பது, நவீனக்கால உணவுப் பழக்கத்தின் பல ஆபத்துகளில் ஒன்று மட்டுமே'' என்று மெக்கியோச்சி எச்சரிக்கிறார். ``அது தானாக உங்களுக்குப் புற்றுநோய் ஆபத்தை உருவாக்குவதில்லை. ஆனால், மிக மோசமான உணவுப் பழக்கம் இருந்தால், ஆபத்துகளைக் குறைக்க நாம் ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்'' என்கிறார் அவர்.

சமையலறை புகையும் நுரையீரல் புற்றுநோயும்

சமையலால் ஏற்படும் பாதிப்புகள் என்பவை நாம் சாப்பிடும் உணவால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆனால் நாம் எதை சுவாசிக்கிறோம் என்பதாலும் அது அமையும். முதலில், வளரும் நாடுகளில் சமையல் அடுப்புகளும் நோய்களுக்கு பெரிய காரணியாக உள்ளன. மரக்கட்டை, தாவரக் கழிவுகள் மற்றும் கரி போன்ற திட எரிபொருள் பயன்படுத்தினால், அறைக்குள் புகை அதிகமாகும். இதன் காரணமாக ஆண்டுதோறும் 3.8 மில்லியன் பேர் முன்கூட்டியே (மரண வயதுக்கு முன்னதாகவே) மரணத்தைத் தழுவுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் உணவில் நாம் பயன்படுத்தும் சில உட்பொருட்களும் அறைக்குள் காற்று மாசு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்.

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்Getty Images

சமைக்கும் எண்ணெயில் இருந்து உருவாகும் புகை நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆதாரம் இருப்பதாக 2017ஆம் ஆண்டில் Journal of Cancer Research and Clinical Oncology-யில் வெளியான ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

சீனாவில் 9,411 புற்றுநோயாளிகளைக் கொண்ட 23 ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு, சரியான காற்றோட்டம் இல்லாமல் வீட்டு சமையலறையில் சமைப்பது மட்டுமின்றி, வெவ்வேறு வகையான சமையல் முறைகளும் வெவ்வேறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அதில் கண்டறியப்பட்டது. உதாரணமாக, பொரிப்பதைக் காட்டிலும், வறுப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்து அதிகம் என அதில் தெரிய வந்தது.

தாய்வானில், சமையல் எண்ணெயில் இருந்து உருவாகும் புகையில், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்ட ஆல்டிஹைட் வேதிப்பொருள் உருவாகிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கர்ப்ப காலத்தில் சமையல் எண்ணெய் புகைக்கு ஆட்பட நேரிட்டால், பிறக்கும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும், பிரசவத்தின் போது குழந்தையின் எடை குறையலாம் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக மற்ற ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில், வெவ்வேறு சமையல் நடைமுறைகள் காரணமாக, மனிதனுக்கு நஞ்சாக இருக்கும் பல கூட்டுப் பொருட்களில் ஒன்றான ஆல்டிஹைட்கள் உருவாதல் பற்றி தாய்வானில் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பீடு செய்தனர். சூரியகாந்தி எண்ணெய் புகைகள் மற்றும் பொரித்தல் வகைகள் மற்றும் தோசைக்கல்லில் வறுத்தல் போன்றவற்றால், ஆல்டிஹைட்கள் உற்பத்திக்கு அதிக ஆபத்து வாய்ப்பு உள்ளது என்றும், பாமாயில் அல்லது ரேப்சீட் எண்ணெய், அதேபோல வறுத்தல் போன்ற மென்மையான சமையல் முறைகளால் அதிக அளவிலான, அல்லது ஊறு விளைவிப்பவை என நாம் நினைத்த அளவுக்கான வேதிப் பொருட்களை உருவாக்குவதில்லை என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. 

சமைத்த இறைச்சியும் நீரிழிவு நோயும்

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்getty images

அசைவ உணவர்கள், தங்களது இறைச்சியை எப்படி சமைக்கிறோம் என்பதிலும், எவ்வளவு இடைவெளியில் அதை சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிவப்பு இறைச்சியை சமைப்பதற்கு, நேரடியாக தணலை பயன்படுத்தும் முறைகள், குறிப்பாக பிராய்லிங் செய்தல் மற்றும் பார்பேக்கிங் செய்தலில், அதிக சூடு மிகுந்த முறைகளில் சமைத்தல், ஓவன்களில் ரோஸ்ட் செய்தல், ஆகியவை, அமெரிக்காவில் சிவப்பு இறைச்சி சாப்பிடும் பெண்களிடம் நீரிழிவுக்கான ஆபத்தை அதிகரிக்கலாம் என வெவ்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்பு ஆண்களுக்கு ஏற்படாமல், பெண்களுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை.

நேரடியாக தீயில் வாட்டுவது அல்லது அதிக சூட்டில் சமைக்கும் முறைகளுக்கும் நீரிழிவு 2 ஆம் வகை நோய்க்கும் இடையில் தொடர்பு இருப்பதாக வேறொரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் சாப்பிடுபவர்களுக்கு, ஆண், பெண் என்ற பாரபட்சமின்றி அல்லது சாப்பிடும் அளவில் பாரபட்சமின்றி இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உடற்பயிற்சி அல்லது அவர்கள் சாப்பிடும் சர்க்கரையின் அளவு போன்ற ஒருவரின் உணவுப் பழக்கத்தின் இதர அம்சங்கள் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் என்ற கட்டுப்பாட்டு குழுவினராக இந்த இரு ஆய்வுகளிலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம். எனவே, இவையெல்லாம் இந்தத் தொடர்பின் பின்னணி காரணிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. வேக வைத்தல் மற்றும் நீராவியில் வேக வைத்தல் போன்றவற்றில், ஒருவருடைய நீரிழிவு ஆபத்து தொடர்பான அம்சங்கள் இல்லை என்பதால், சமையலுக்கான மாற்று வழிமுறைகளாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சமையலில் மாற்று முறைகள்

கடந்த நூற்றாண்டில், சமையல் முறைகள் மாறி வந்துள்ளன. சூடு செய்வதற்கு ஆரம்பக்கட்ட ஆதாரங்களை சார்ந்திருக்கும் நிலை மாறிவிட்டது. மைக்ரோவேவ்கள், மின்சார அடுப்புகள், மின்சார டோஸ்ட்டர்கள் போன்றவை இப்போது ஏறத்தாழ எல்லா வீடுகளுக்கும் வந்துவிட்டன. எரியும் நெருப்புக்கு மாற்றாக இவை வெப்பத்தை அளிக்கும் ஆதாரங்களாக மாறிவிட்டன.

மைக்ரோவேவில் சமைப்பது ஆரோக்கியமான சமையல் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அதில் எதை சமைக்கப் போகிறோம் என்பதைப் பொருத்து அது அமையும்.

உதாரணமாக, காளான்களை சமைக்க மைக்ரோவேவ் மிகவும் ஆரோக்கியமானது என்று ஸ்பெயினில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நடைமுறையால் அதில், செல்கள் சேதம் அடையாமல் தடுக்க உதவும் ஆன்டிஆக்சிடன்ட்களின் அளவு அதிகரிக்கிறது. மாறாக, காளான்களை வேக வைத்தால் அல்லது வறுத்தால் அந்தத் தன்மை குறைந்து விடுகிறது.

நீங்கள் சமைக்கும் உணவில் மறைந்திருக்கும் ஆபத்துகள்Getty Images

உண்மையில், காய்கறிகளைச் சமைக்கும்போது உயிர்ச்சத்துகள் மற்றும் சத்துகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், குறுகிய நேரத்தில் சமைப்பது மற்றும் முடிந்த வரையில் குறைவான திரவத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை தான் சிறந்த சமையல் முறையாக இருக்கும் என்று அறிவியல்பூர்வ ஆதாரங்கள் காட்டுகின்றன. அதாவது மைக்ரோவேவில் சமைப்பது நல்ல சமையல் முறை, நல்ல விஷயங்களை இழப்பது குறைவாக உள்ளது - வேக வைக்கும் போது நீரில் சமைப்பதால் இந்த ஆதாயம் கிடைப்பதில்லை.

``காய்கறிகளை நீரில் கொதிக்கச் செய்து வேக வைப்பதைவிட, நீராவியில் வேக வைப்பது நல்லது என்றாலும், நீண்ட நேரத்துக்கு அதிகமான சூட்டில் எதை சமைத்தாலும், அது அதிக பிரச்சினைகளைத் தருவதாக இருக்கும், சத்து தன்மைகளைக் குறைக்கும் அல்லது அக்ரிலாமைட் போன்ற பிரச்சினைக்கு உரிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும்'' என்று மெக்கியோச்சி கூறுகிறார்.

எண்ணெய் பயன்படுத்தப்படும் வறுத்தல் அல்லது வேறு வகையிலான சமையல் முறைகளில், சில கொழுப்புகளை சூடு செய்யும் போது பிரச்சினை ஏற்படுகிறது. சூடு காரணமாக எண்ணெய்கள் தொடர்ச்சியான வேதிவினைகளுக்கு உள்ளாகின்றன. அதனால் நீங்கள் அதிக சூட்டில் சமைக்கும்போது, நீங்கள் ஆரம்பத்தில் சேர்த்த பொருளைக் காட்டிலும் மாறுபட்ட ஒன்றை உருவாக்கி முடிப்பதாக அமைந்துவிடுகிறது.

எல்லா எண்ணெய் வகைகளுமே இந்த மாற்றங்களுக்கு ஆட்படக் கூடியவை அல்ல. உதாரணமாக, தேங்காய் எண்ணெய் போன்ற செறிவுற்ற கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, ஆலிவ் எண்ணெய்க்கு ஓரளவுக்குக் குறைவான ``புகை படிமம் உருவாக்கும் நிலை'' உள்ளது. இந்த வெப்ப நிலையில் அந்தப் பொருளின் ஆவியாதல் நிலை தொடங்கி, பயன்தரும் சில சேர்மங்களை அது இழக்கும். அதனால் அழற்சிக்கு எதிரான ஓலியோகாந்தல் போன்றவை இழப்பாகும். மேலும் அந்த நிலையில் தான் ஆல்டிஹைட் போன்ற ஊறு விளைவிக்கும் பொருட்கள் உற்பத்தியாகும். பெரும்பாலான சமையலுக்கு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துமாறு மெக்கியோச்சி பரிந்துரைக்கிறார். ஏனெனில் எவ்வளவு ஆரோக்கியம் என்பது - தொழிற்சாலை சமையலுக்கு மட்டுமின்றி அல்லது நீண்டநேர சமையலுடன் தொடங்குகிறது.

இருந்தபோதிலும், சில வகையான சமையல்களில் ஆபத்து இருந்தாலும், சமைத்த உணவை ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பது, இன்னும் அதிக சேதாரத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அப்படி செய்தால் ஆண்கள் 9 கிலோ வரையிலும், பெண்கள் 12 கிலோ வரையிலும் எடை குறைந்தார்கள் என்று, சமைக்காத உணவைச் சாப்பிடுபவர்களைக் கொண்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஜெர்மன் ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது. ஆய்வின் முடிவில், தேவையானதற்கும் குறைந்த எடையை அவர்கள் எட்டினார்கள், மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு வழக்கமான மாதவிடாய் நின்றுவிட்டது என்று அதில் கண்டறியப்பட்டது. ``நீண்டகால அடிப்படையில், சமைக்காத உணவுகளை மிகவும் தொடர்ச்சியாகச் சாப்பிடுவதற்குப் பரிந்துரைக்க முடியாது'' என்று ஆய்வின் நிறைவுரையில் கூறப்பட்டுள்ளது.

``கார்போஹைட்ரேட்கள் மற்றும் இறைச்சியைச் சமைப்பது அவற்றிலிருந்து கிடைக்கும் சத்துகளை அதிகரிக்கச் செய்வதற்கான நல்ல வழிமுறையாக இருக்கும். அவற்றைச் சமைக்காமல் சாப்பிடுவதைவிடச் சமைத்து சாப்பிடுவது நல்லதாக இருக்கும்'' என்று மெக்கியோச்சி கூறுகிறார். ``ஏனெனில் பச்சை உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சாப்பிடுவது கஷ்டம் என்பதுடன், அதில் உள்ள சத்துகளைப் பெறுவது கஷ்டம்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

https://www.bbc.com/tamil/science-53287132

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.