Jump to content

கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று

கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று

 

கொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது.
பதிவு: ஜூலை 06,  2020 04:48 AM
புதுடெல்லி,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் படி, கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா நெருங்கி உள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷியாவை தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது போலவே குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதுவரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். இது 60.77 சதவீதம் ஆகும்.

தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 ஆக இருக்கிறது. நேற்று முன்தினம் வரையில் இந்தியாவில் மொத்தம் 97 லட்சத்து 89 ஆயிரத்து 66 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 613 ஆகும். இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 295 பேர் இறந்துள்ளனர்.

டெல்லியில் 81, தமிழகத்தில் 65, கர்நாடகத்தில் 42, உத்தரபிரதேசத்தில் 24, குஜராத்தில் 21, மேற்கு வங்காளத்தில் 19, ஆந்திராவில் 12, பீகாரில் 9, ஜம்மு காஷ்மீரில் 8, ராஜஸ்தானில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

அரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் தலா 5 பேரும், கோவா, ஜார்கண்ட் மாநிலங்களில் தலா 2 பேரும், இமாசலபிரதேசத்தில் ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

கொரோனாவுக்கு நாடு முழுவதும் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 268 ஆக உள்ளது. முதல் 5 இடங்களில் மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழகம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் 8,671 பேருடன் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,004 பேரும், குஜராத்தில் 1,925 பேரும், தமிழகத்தில் 1,450 பேரும், உத்தரபிரதேசத்தில் 773 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/06044853/Corona-half-approaching-Russia-India.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Total
Tests
Tests/
1M pop
Population
  World 11,549,438 +174,395 536,441 +3,568 6,529,585 4,483,412 58,509 1,482 68.8      
1 USA 2,981,824 +43,426 132,565  +247 1,288,042 1,561,217 16,009 9,008 400 37,586,867 113,546 331,028,744
2 Brazil 1,604,585 +26,209 64,900  +535 978,615 561,070 8,318 7,548 305 3,330,562 15,667 212,578,788
3 India 697,836 +23,932 19,700  +421 424,891 253,245 8,944 506 14 9,789,066 7,093 1,380,159,707
4 Russia 681,251 +6,736 10,161  +134 450,750 220,340 2,300 4,668 70 21,069,457 144,375 145,935,471
5 Peru 302,718 +3,638 10,589  +177 193,957 98,172 1,210 9,180 321 1,782,846 54,065 32,976,151
6 Spain 297,625   28,385    N/A N/A 617 6,366 607 5,448,984 116,543 46,755,070
7 Chile 295,532 +3,685 6,308  +116 261,032 28,192 2,078 15,458 330 1,181,884 61,820 19,118,183
8 UK 285,416 +516 44,220  +22 N/A N/A 231 4,204 651 10,505,758 154,745 67,890,913

ரசியாவை முந்தி 3 வது இடத்துக்கு வந்துவிட்டது.

Link to comment
Share on other sites

ஆம் தற்போது பிபிசியில் சொன்னார்கள் இந்தியா 3 இடத்தை பிடித்துள்ளது என்று. அத்தோடு மிக அதிகமானவர்கள்(பாதிக்கப்பட்டவர்கள்) இன்னும் பரிட்சித்து கொள்ளவில்லை என்றும்  ஒரு நாளைக்கு 200 000 அளவில் தான் பரீட்சிப்பதாகவும் இது நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மிக சிறிய அளவு என்றும் சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.