Jump to content

மாபெரும் திட்டத்துடன் வருவோம்


Recommended Posts

‘மாபெரும் திட்டத்துடன் வருவோம்’

 

காரை துர்க்கா   / 2020 ஜூலை 07 , பி.ப. 01:45 - 0     - 9

image_3811833d01.jpgவடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற பின்னர், மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் அண்மையில், ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில், “முப்பது ஆண்டு காலப் போருக்குப் பின்னர், அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சிமுறைமையின் பலாபலன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் மக்களைச் சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்தக் கேள்வியை எழுப்பும் போது, அந்தந்தக் கட்சிகளில் உள்ளவர்களே, திருப்தி அடைய முடியாத அளவுக்குத்தான் நிலைமை உள்ளது. எனவே, முட்டி மோதும் அரசியலைக் கைவிட்டு, போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனவும் கலாநிதி சுரேன் ராகவன் கூறினார்.  

“கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, மக்களுக்காக என்ன செய்துள்ளது?” 10 ஆண்டுகளாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி எனத் தமிழ்த் தேசிய  கூட்டமைப்பையே சாடுகின்றார் போலும்.   
இந்தக் கேள்வியையும் சாடலையும் உருவகித்தே, பலரும் பலவிதத்திலும் கேள்விகளைக் கேட்டும் விவாதித்தும் கூட்டமைப்பை விமர்சித்து வருகிறார்கள். இது, ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே உள்ளது.  உண்மையில், குற்றங்களைச் சுமத்த வேண்டும் என்பதற்காகவோ, அறியாமையாலோ இதுபோன்ற எழுந்தமானமாகக் கதைக்கின்ற கதைகள் தோற்றம் பெறுகின்றன. இவை அர்த்தமற்றவை; காகிதப் பூக்கள் போன்றவை. 

ஏனெனில், 2009ஆம் ஆண்டு, ஆயுதப் போராட்டம் மௌனம் கண்டது. அதையடுத்து, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கூட்டமைப்பு, 18 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால், உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை; செயற்படுத்தப்படவில்லை. போர் வெற்றியும் தாம் பெரும்பான்மையினம் என்ற மமதையும் அனைத்தையும் கெடுத்தன; தடுத்தன.  

அடுத்து, 2015ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களினது உச்சப்படியான பங்களிப்புக் காரணமாகவே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனார். 

தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் தங்களது வாக்குகளை அள்ளி வழங்கி இருந்தார்கள். அத்துடன், எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து, ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ஆட்சி அமைத்தார்கள்.  

இதில் கூட, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களது அதிகப்படியான ஆசனங்களை வென்ற (16) கூட்டமைப்பு, புதிய அரசமைப்பு உருவாகுவதன் ஊடாக, இனப்பிணக்கைத் தீர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தனது உச்சபட்ச ஆதரவை, நிபந்தனைகள் இன்றி வழங்கி வந்தது.  

ஏனெனில், தமிழ் மக்கள் இன்று அனுபவித்து வருகின்ற அனைத்துப் பிரச்சினைகளுமே, இனப்பிணக்கு என்ற ஒற்றைப் பிரச்சினையுடனேயே பின்னிப்பிணைந்து உள்ளன.  

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நல்லாட்சி அரசாங்கத்தை ஒருபடி மேலாகவே நம்பினார். காலம் காலமாகத் தமிழ் மக்களால், ‘கறுப்பு நாள்’ ஆகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்விலும் பங்குபற்றினார்.  

அடுத்து, நம்பிக்கையின் உச்சக்கட்டமாக, பல பண்டிகைகளை கால எல்லையாக முன்வைத்து, அதற்கு முன்னதாக அரசியல் தீர்வு கிடைக்கும் எனத் தமிழ் மக்களுக்கு வாக்குக் கொடுத்தார். ஆனால், வழமை போன்றே அவை பொய்ப்பிக்கப்பட்டு விட்டன.  இவ்வாறாக, நல்லாட்சிக் காலத்தில் அரசியல், இராஜதந்திர ரீதியில் விட்டுக் கொடுப்புகளைச் செய்து, தீர்வைப் பெற்றுக் கொள்ளக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால், அந்த விட்டுக்கொடுப்புகள் எதுவும் பிரயோசனமற்றுப் போனதால், அல்லது அந்த விட்டுக்கொடுப்புகளின் பெறுமதியை, ஆட்சித்தரப்பு உணர மறுத்ததால், தமிழ் மக்கள் மத்தியில் இன்று, கூட்டமைப்பு நலிவுற்ற நிலைக்குச் சென்றுள்ளது.   

ஆனால், சம்பந்தன் முழுமையாக நம்பிய புதிய அரசமைப்பு வருகைக்கு ஈற்றில் என்ன நடந்தது? பெரும் ஏமாற்றம் மட்டுமே மி(எ)‍ஞ்சியது. கடந்த நல்லாட்சிக் காலத்தில், புதிய அரசமைப்பு வருகைக்கு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்போ, கலாநிதி சுரேன் ராகவன் சார்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்போ இருக்கவில்லை; அப்படி இருந்தாலும், அது என்னவென்றே தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை.   

இதில் இன்னொரு விடயமும் கூடவே உள்ளது. கலாநிதி சுரேன் ராகவன் கூறுவது போல, கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சிகள், மக்களுக்காக என்ன செய்தன என்பதற்கு அப்பால், இனப்பிணக்கைத் தீர்த்து, அதன் ஊடாகத் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர, கடந்த 70 ஆண்டுகளாகத் தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகள், பல ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஆட்சியாளர்களுடன் மேற்கொண்டார்கள். ஆனால், அதன் வழியே தமிழ் மக்கள் அமைதியைக் கண்டார்களா?  

இவ்வாறான ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் சமாதான சக வாழ்வை உண்டாக்கும் எனத் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட தருணங்கள் யாவும், சிங்கள இனவாத அரசியல்வாதிகளால், மிகக் கடுமையாக மறுக்கப்பட்ட தருணங்களாகவே வரலாற்றில் பதியப்பட்டு உள்ளன.  

இவை இரகசியமோ, இல்லாதவற்றை இட்டுக்கட்டியவைகளோ அல்ல. இலங்கையின் கடந்த 70 ஆண்டு கால அரசியல் தடங்களை, மிகவும் எளிய அவதானிப்புகளூடாகக் கண்டு கொள்வதன் ஊடாக, இலகுவாக அறிந்து கொள்ளலாம்.  

உண்மையில், தமிழ் மக்களது உளப்பூர்வமான உணர்வுகள் தொடர்பில் நினைப்பதற்கு மறுக்கும் மக்கள் கூட்டமாக, சிங்கள மக்கள் உருவாக்கப்பட்டு விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமிழ் மக்கள், ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற விடயம், சராசரி சிங்கள மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை.  

மாறாகத் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மை இனம் எனச் சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக, வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, அவர்களுக்காக என்ன செய்துள்ளது எனக் கேட்பதை, என்னவென்று சொல்வது?  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அன்று பிரகடனப்படுத்திய சிங்கள மொழி மட்டும் சட்டமே (1956) தமிழ் மக்களை இருட்டுக்குள் தள்ளியது. ஒரு மொழி மட்டும் சட்டமே, இரு நாடு என்ற கருவைத் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு பண்ணியது. அதையடுத்து, 1958ஆம் ஆண்டு இனக்கலவரம், தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் ஆகும்.  

நிலைமைகள் இவ்வாறிருக்கையில், என்ன நியாயத்தின் அடிப்படையில் தமிழ்க் கட்சி(கள்) மீது குண்டைப் போடுகின்றார்கள். மற்றவர்கள் எல்லோரும், முதலில் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்ட பூமியில், இன்று நாம் வாழ்கின்றோம். 

மற்றவர்களைக் குறை கூறுதல் என்பது, எ(ம்)ன் மீது தவறில்லை என்று, சாக்குப் போக்குக் கூறித் தப்பித்துக் கொள்வதற்கான சுலபமான வழி ஆகும்.  

ஒரு விடயத்தைச் செய்யவோ, ஒரு பொருளைக் கொடுக்கவோ அடிப்படையில் விருப்பம் இருந்தாலன்றி, அதைப் பிடுங்கி எடுக்க முடியாது. இது போலவே, சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுக்கு அடிப்படையில், இனப்பிணக்குக்கு இணக்கப்பாடான தீர்வைக் காண வேண்டும் என்ற மன(மாற்றம்)நிலை வர வேண்டும்.  

இலங்கைத் தீவில் 70 ஆண்டு காலமாகத் தொடர்ந்து வருகின்ற அரசாங்கங்கள், உதட்டளவில் மாத்திரமே இனப்பிணக்குத் தொடர்பில் உறவாடி, உரையாடி வருவதே, தீர்வு இன்னமும் பின்நோக்கிச் செல்வதற்கான ஒரேயொரு காரணம் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்?  

மேலும், “தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என, அங்கு தெரிவித்திருந்த கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே, நான் சுதந்திரக் கட்சியில் இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

இதில் கூட, கலாநிதி ராகவன் மூன்று விடயங்களைக் கவனிக்கத் தவறி விட்டார் என்றே கூற வேண்டும். 

முதலாவது, தமிழ் மக்கள் 70 ஆண்டு காலமாக, வேண்டி நிற்பது சாதாரண உரிமைகள் அல்ல; மாறாக, தனது இனத்தின் சுயநிர்ணய உரிமையையே ஆகும். சுயநிர்ணய உரிமையைக் கோருவது, தனிநாடு கோருவது என்று அர்த்தப்படாது.  

இரண்டாவதாக, இனப்பிணக்குக்குத் தீர்வாகக் கொண்டு வரப்பட்ட அரை குறைத் தீர்வான மாகாண சபை முறைமையையே, இல்லாது ஒழிக்க வேண்டும் எனப் பேரினவாதம் சன்னதம் ஆடுகையில், உரிமைகள் என்ன உரிமைகள்?  

மூன்றாவதாக, இலங்கையின் அரசியலிலும் வருகின்ற தேர்தலிலும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து, சுதந்திரக் கட்சி பயணித்தாலும் சுதந்திரக் கட்சியின் குரல் அங்கு அடங்(க்)கியே வாசிக்கப்படுகின்றது.   

இந்நிலையில், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு, மறதியின் பிரமாண்டமான வாசல் வழியே சுலபமாக வெளியேறிச் செல்லலாம் என்ற நிலை தொடரும் வரை, இவ்வாறான உரையாடல்களும் தொடரவே போகின்றன.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாபெரும்-திட்டத்துடன்-வருவோம்/91-252891

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.