Jump to content

தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை!

IMG_20200707_164555-960x530.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த 9 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ளது.

இன்று (07) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 9 ஆடுகள் கொல்லப்பட்டதுடன் ஐந்து ஆடுகள் காயமடைந்துள்ளது.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சருகுபுலி வட பகுதியில் இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சருகுபுலி வட பகுதியில் இருக்கா?

தென்பகுதிலே, ஆக்கினை தாங்க ஏலாம  வெடி வைச்சு கொல்லுறாங்கள்.

அறுந்து போவார்.... கொண்டுவந்து உங்க விட்டுடாங்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் மரநாய் தான் கோழி ஆட்டைக் கடிப்பது. இப்ப புதிசா சருகுப்புலி எங்கிருந்து வந்தது..??!

Link to comment
Share on other sites

14 minutes ago, nedukkalapoovan said:

ஊரில் மரநாய் தான் கோழி ஆட்டைக் கடிப்பது. இப்ப புதிசா சருகுப்புலி எங்கிருந்து வந்தது..??!

உண்மையாகவே ஊரில் சருகுப்புலி என்று ஒன்று இருக்கின்றதா? ஓம் எனில் சருகுப் புலி என்றால் எப்படி இருக்கும்? ஆங்கிலத்தில் இதனை எப்படி அழைப்பர்?

ஊரில் நான் வளர்த்த புறாக்களில் பத்து பதினைந்து புறாக்களை நெடுக்கு குறிப்பிட்டு இருக்கும் மரநாய் ஒரே இரவில் வேட்டையாடி கொன்றது நினைவுக்கு வருகுது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புதுசா இருக்குது.சந்தேகம் என்னவென்டால் உந்த புலிக்கு நாலு காலா அல்லது இரன்டு காலா என்பது தான்.
பி.கு-நான் வீடியோ பாக்கவில்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

ஊரில் மரநாய் தான் கோழி ஆட்டைக் கடிப்பது. இப்ப புதிசா சருகுப்புலி எங்கிருந்து வந்தது..??!

எங்காவது இருந்து வந்திருக்கலாம்.. கூகிளில் போய் பாருங்கள் வேறு,வேறு செய்திகளில் கடந்த காலங்களில் நடந்தவை பற்றி..என் அறிவுக்கு எட்டியவரை தேடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரநாயின்  வேலை  அதுகளுக்கு வெறி பிடிப்பது ஆக்கும் தமது உணவுதேவைக்கு அதிகமாக கோழி புறா ஆடுகளை கொல்லும்  மற்றைய மிருகங்கள் வரைமுறையுடன் நிக்கும் வீடியோவில் அதிகாரிகள் தான் சொன்னவை சருகு புலி என்று சொல்கிறார் .

நாங்கள் இருக்கும் காலத்தில் கோழிபண்ணைக்குள்  இறங்கி ஒரு இரவில் 400 கோழிக்கு மேல் போட்டு தள்ளி விட்டுதுகள் இதே போல் முழுமையாக உண்ணாமல் விட்டிருக்கும் வீடியோவில் உள்ளது போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இது புதுசா இருக்குது.சந்தேகம் என்னவென்டால் உந்த புலிக்கு நாலு காலா அல்லது இரன்டு காலா என்பது தான்.
பி.கு-நான் வீடியோ பாக்கவில்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.

சுவைப்பிரியன்,  காணொளியை.... கட்டாயம் பாருங்கள்.

ஒரு பெரிய மிருகம் தான்.... அந்த ஆடுகளை கடித்து உள்ளது போல் தெரிகிறது.

நிச்சயம் அது, மரநாய் கடித்து வந்த காயம் போல் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இது தெற்கில இருந்து பலாலி ஊடாக இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேணும்!

இதுவரை குடா நாட்டில் இல்லாத ஒன்று திடீரென வர சாத்தியம் இல்லை.
சொறிலங்கா அரசின் இனவழிப்பு யுக்திகளில் ஒன்டு.

புதுக்குடியிருப்பில் கொண்டைனரில் குரங்குகளை கொண்டுவந்து இறக்கினத்தை நேரில் கண்டது முன்னர் வந்த செய்தி.

வன்னி காட்டுல யானைகளையும், முதலைகளையும் இறக்கினத்தை நேரில் கண்டதும் முன்னர் வந்த செய்தி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

உண்மையாகவே ஊரில் சருகுப்புலி என்று ஒன்று இருக்கின்றதா? ஓம் எனில் சருகுப் புலி என்றால் எப்படி இருக்கும்? ஆங்கிலத்தில் இதனை எப்படி அழைப்பர்?

ஊரில் நான் வளர்த்த புறாக்களில் பத்து பதினைந்து புறாக்களை நெடுக்கு குறிப்பிட்டு இருக்கும் மரநாய் ஒரே இரவில் வேட்டையாடி கொன்றது நினைவுக்கு வருகுது,

சருகுபுலி என்று எதை அழைப்பர் என்று தெரியவில்லை! ஆனால், இலங்கையில் இருக்கும் ஒரேயொரு பெரிய வேட்டையாடும் பூனையினமென்றால் அது சிறுத்தைப் புலி தான் (சிங்களத்தில் "கொட்டி" அல்லது "திவிய" என்று அழைப்பர்). 

இலங்கையைப் பொறுத்தவரை சிறுத்தைகள் வறள்வலயத்தில் அதிகம் காணப்படுகின்றன. யாழில் இருப்பதற்கு சாத்தியங்கள் இல்லாமலில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.