Jump to content

சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்..

1-15-_1080.jpg

அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர்.

மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பணி நிமிர்த்தம் இரு மருத்துவர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.

இதன்போது  வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.

இச்சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதியில் ஒரு மருத்துவரும்,

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மற்றுமொரு மருத்துவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://jaffnazone.com/news/19151

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பணி நிமிர்த்தம் இரு மருத்துவர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.

இதன்போது  வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.

அட.... காலமை வேலை ஆரம்பிக்க முதல், சண்டை ஆரம்பித்திருக்கின்றது. 😄

Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர்.

சொறிலங்கா பாராளுமன்ற சிங்கள கட்சிகளின் எம்பி ஆக தகுதி பெற்றுள்ளனர்.

சொறிலங்கா பாராளுமன்ற சம்சுமின் கூட்டமைப்பு எம்பி ஆக வேணுமென்டால் உதவுற ஆக்களை ஏமாத்தி உதவுற ஆக்களை நொறுக்கும் சண்டியர்களுக்கு வால் பிடிக்கும் திறமை வேணும். .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.