Jump to content

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை

கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.

 
இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.

இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும் அமைகின்றன.

ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது.

இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/07/07144950/1682270/Kalyana-Murungai-Tree-benefits.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண முருங்கையின் மகத்துவம் « Siragu ...

முள் முருக்கு மரத்தில்... முட்கள் அதிகமாக இருந்தாலும்,
இளம் பச்சை நிறத்தில்,   கவர்ச்சியான இலைகளை கொண்டதால்.. 
அந்த மரத்தில்... எனக்கு ஒரு ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பிலுள்ள நீரை Toxic water வெளியேற்றுவதற்கு முள் முருங்கை மிகச் சிறந்த மருந்து. சாதாரணமாக வறை அல்லது சுண்டல் செய்து உண்ணலாம். 24 மணித்தியாலத்தில் நல்ல பலனைத் தரும்.. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உடம்பிலுள்ள நீரை Toxic water வெளியேற்றுவதற்கு முள் முருங்கை மிகச் சிறந்த மருந்து. சாதாரணமாக வறை அல்லது சுண்டல் செய்து உண்ணலாம். 24 மணித்தியாலத்தில் நல்ல பலனைத் தரும்.. 👍

இப்படியென்றால் என்ன கபிதான்? கேள்விப்பட்டதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

கல்யாண முருங்கையின் மகத்துவம் « Siragu ...

முள் முருக்கு மரத்தில்... முட்கள் அதிகமாக இருந்தாலும்,
இளம் பச்சை நிறத்தில்,   கவர்ச்சியான இலைகளை கொண்டதால்.. 
அந்த மரத்தில்... எனக்கு ஒரு ஆசை.

ஊரில் எதோ நோய்  பரவி இந்த மரமெல்லாம் அழிந்துவிட்டனவாம் என்று இங்குதான் முதல் யாரோ எழுதினவையல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

இப்படியென்றால் என்ன கபிதான்? கேள்விப்பட்டதில்லை!

நீர் - Toxic water

உடம்பிலுள்ள நீர்(ரை) தண்ணீர் என்று கூறுவதில்லை. 

சொறி, சிரங்கு, படை, eczema உள்ளவர்களின் உடம்பில் (பாதிக்கப்பட்ட இடங்களில்) இருந்து வடியும் திரவம். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

நீர் - Toxic water

உடம்பிலுள்ள நீர்(ரை) தண்ணீர் என்று கூறுவதில்லை. 

சொறி, சிரங்கு, படை, eczema உள்ளவர்களின் உடம்பில் (பாதிக்கப்பட்ட இடங்களில்) இருந்து வடியும் திரவம். 👍

ஓ! exudate என்பார்கள், அழற்சியினால் ஏற்படும் சுரப்புகள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

ஊரில் எதோ நோய்  பரவி இந்த மரமெல்லாம் அழிந்துவிட்டனவாம் என்று இங்குதான் முதல் யாரோ எழுதினவையல் .

கன்னிக்கால் நட தேடினாலும் கிடைக்காதாம், சிறுவயதில் வடை தட்ட இதன் அகன்ற இலையை அம்மா பாவிக்கிறவ. கறி முருங்கை மட்டும் இருக்கு. மயிர்கொட்டி தொல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஓ! exudate என்பார்கள், அழற்சியினால் ஏற்படும் சுரப்புகள்! 

அதே அதே. 👍

Link to comment
Share on other sites

  • 10 months later...

கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது. கல்யாண முருங்கையானது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிறப்
பூக்களையும்கொண்டது. கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண முருங்கை. பெண்களுக்கு பெண்தன்மையை அளிக்கும் ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் மிக சிறப்பான கீரை. ஏனேனில் அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் இவர்களை அண்டாது. அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த கல்யாண முருங்கை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.