Jump to content

பொட்டம்மான்' வருவாரா?


Recommended Posts

பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும் இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். அவர் மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்!  இந்த நேரத்தில் அவர் வந்துவிடக் கூடாது.இறந்தவராகவே இருக்கட்டும் என்று சிந்திப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கலாம்.  ஏனெனில்  இயக்கத்தின் சொத்துக்கள் இன்னார் இன்னாரிடம் இருக்கின்றன என்ற விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலும் வெளிவருகின்றது. நிச்சியமாக இயக்கத்தின் சொத்துக்கள் பலரிடம் இருக்க வேண்டும்.அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, "அம்மான் வந்தால் கொடுப்பம்".அவர் வந்து கணக்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றொரு புருடா, கதையை அவிழ்ப்பார்கள்.


எதிர்காலத்தில் ஏதாவது தேவைகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தேசியத் தலைவர் அவர்களும், சில பொறுப்பாளர்களநம்பிக்கைக்கு உரியவர்கள் என்றெண்ணி பெருந்தொகைப் பணத்தையும், சொத்துக் களையும் ஒப்படைத்திருக்க வேண்டும்.  அந்தச் சொத்துக்களை இவ்வளவுகாலமும் நீங்கள் வைத்து ஆண்டது போதும், அனுபவித்தது போதும்! தமிழீழ மண்ணில் மாவீரர் குடும்பங்களும்,சிறை மீண்டு வந்த போராளிகளும் அவர்கள் குடும்பங்களும் இவ்வளவு காலமும் அவல வாழ்வையேவாழ்ந்து கொண்டிருந்தார்கள்.கூலி வேலை செய்தாவது காலம் கழித்து வந்தார்கள்.


சொல்லாமல் கொள்ளாமல் வந்த இந்த கொடிய கொரோனா அவர்களின் வாழ்க்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கிவிட்டது. ஒரு நேரக் கஞ்சிக்கே அல்லல்படும் நிலையில் அவர்கள் அன்றாடம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  இந்த நேரத்திலாவது உங்கள் இதயக்கதவுகள்  திறக்கட்டும். நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் அவர்களை நோக்கி உங்கள் கரங்கள் நீளட்டும். இந்த நேரத்திலாவது நீங்கள் உதவிகள் செய்யாவிடின் இனி எப்போ செய்யப் போகின்றீர்கள்?  அள்ளிக் கொடுக்க வேண்டாம்.  கிள்ளியாவது போடுங்கள்! இதுதான் நீங்கள் தேசியத்தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் காட்டும் விசுவாசமாக இருக்கும். நன்றிக்கடனாக இருக்கும்.

தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பொறுத்தவரையில் 'அண்ணை' என்ற வார்த்தை தேசியத் தலைவர் அவர்களையே குறிக்கும். அனைத்துப் போராளிகளும் அவரைப்  பாசத்தோடு 'அண்ணை ' என்றுதான் அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் அவரோடு வாழ்ந்தவர்கள் 'தம்பி' என்று அழைப்பார்கள். இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன் பெரிய சோதி, சின்ன சோதி, தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர்களுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து இயங்கிய காலங்களில் வயதில் குறைந்தவராக இவர் இருந்தமையால் அனைவரும் இவரைத்  'தம்பி' என்றே அழைத்தார்கள். பின்பு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது.


 'கரிகாலன்' என்றும் இவருக்கு இன்னொரு பெயர் உண்டு.அது காரணப் பெயர். வல்வை ஊரிக்காடு நெற்கொழு வைரவர் கோவில் பகுதியில் இவர்கள் வெடிகுண்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை தற்செயலாக அது வெடித்து தலைவரின் காலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காயத்தின் தழும்பு அவரது குதிக்காலில் இருந்தமையால் கரிகாலன் என்றும் அழைக்கப்பட்டார்.சோழ மன்னனின் பெயராக இருந்ததும் இப்பெயர் நிலைத்ததற்கு காரணமாக இருக்கலாம். சோழ மன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையை ஆட்சி புரிந்திருக்கின்றார். அதை நினைவுகூர்ந்தே எமது இயக்கத்தின் புலிக்கொடியையும் தலைவர் அவர்கள் வடிவமைத்தார்.
 

பின்நாட்களில் பாலா அண்ணர் தலைவரை சோழர் என்றும் அழைப்பது வழமை. மணி என்றொரு பெயரும் தலைவருக்கு உண்டு. கிட்டு போன்றவர்கள் தலைவர் தொலைவில் வருகின்றார் என்றால் "டேய் முழியன் வாறான்டா" என்று கூறி மற்றவர்களை உசார்ப்படுத்துவதும் உண்டு.  காந்தக் கண்கள் தலைவருடையது. அவருடைய அந்தக் கண்களை வைத்தே அவர் என்ன மனநிலையில் இருக்கின் றார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் சொல்லிவிடுவார்கள். வாகனங்களில் அவர் செல்லும்போதுகூட ஆசனத்தின் நடுவில் துப்பாக்கியோடு தயார் நிலையில் இருக்கும்போதும் அவரது கண்கள் இரண்டும் முன்புறமும் இரு பக்கங்களிலுமாக அவதானித்துக் கொண்டே இருக்கும். இயக்கத்தின் மூத்த போராளிகளை மற்றையவர்கள் அவர்களின் பெயர்களோடு சேர்த்துப் பால்ராஜ் அண்ணை, பாலா அண்ணை, யோகி அண்ணை, நடேசன் அண்ணை  என்று அழைப்பார்கள். குமரப்பா, ரஞ்சித் அப்பா, ரகுவப்பா என அப்பாவையும் சேர்த்து சிலர் அழைக்கப்பட்டதுண்டு. மாதவன் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், மனோ மாஸ்டர், இந்திரன் மாஸ்டர், விவேகன் மாஸ்டர், அன்ரன் மாஸ்டர் என சிலர் அழைக்கப்பட்டார்கள். செல்லக்கிளி அம்மான், பொன்னம்மான், புலேந்தி அம்மான், கபிலம்மான் வரிசையில் பொட்டு அம்மானும் வந்து சேர்கின்றார்.
 

77 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் திரு.வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்கள் வெற்றிபெற்றபோது அவரது நெற்றியில் தனது விரலை பிளேட்டினால் கீறி இரத்தப் பொட்டு வைத்து தனது உணர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார் பொட்டு அம்மான். பின்பு இவர் இயக்கத்தில் இணைந்த போது இவ்விடயம் தெரியவர இவர் பொட்டு என்று அழைக்கப்பட்டார். காலக்கிரமத்தில் அது பொட்டு அம்மானாக நிலைத்துவிட்டது. இன்று சர்வதேச காவல் துறையினரால் (Interpol, International Criminal Police Organization) தேடப்படும் அளவிற்கு முக்கிய நபராக பொட்டு அம்மான் விளங்குகின்றார்.

சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில்  ஒருவர். புலனாய்வுத்துறை பொறுப்பாளர். யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே தமிழீழ விடுதலையை இலட்சியமாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக விளங்கியுள்ளார். பொட்டு அம்மான் குடும்பத்திற்குச் சொந்தமான நாயன்மார்கட்டிலுள்ள பழைய வீடொன்றில் தேசியத்தலைவர், சீலன், புலேந்தி, ரகுவப்பா, நான் உட்பட சிலர் 1981 மே மாத காலப்பகுதியில் தலைமறைவாக வாழ்ந்திருக்கின்றோம். தங்கத்துரை, குட்டிமணி  ஆகியோரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து  நாங்கள் அங்கு வாழ்ந்தோம். அந்த வீட்டை ஒழுங்கு பண்ணிக் கொடுத்ததோடு அக்காலப் பகுதியில் இயக்கத்தோடு இணைந்து எம்மோடு தங்கியிருந்தார் பசீர் காக்கா.


82 காலப்பகுதியிலும் அந்த வீட்டிலேயே எம்மவர்கள் தங்கியிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.அப்போது ஒரு நாள் தங்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறிய பொட்டு அம்மானுக்கு அந்தப் பழைய வீட்டின் ஜன்னலூடாக ஒரு காட்சி தென்பட்டுள்ளது.அங்கு அறையில் இருந்தவர்கள் துப்பாக்கிகளை கழற்றி சுத்தம் செய்யும் காட்சி தென்பட்டுள்ளது. பல நாட்களாகவே தங்கள் பழைய வீட்டில் தங்கியிருப்பவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? என்ற வினாக்கள் அவர் மனதில் இருந்து வந்துள்ளது. அந்தக் காலப்பகுதியில் பொட்டு அம்மான் அருகாமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கராத்தே வகுப்புக்குச் சென்று கராத்தே பயின்று வந்துள்ளார். அந்த வகுப்புக்கு அந்த இளைஞர்களில் சிலரும் வந்து கராத்தே பயின்று வந்துள்ளனர்.அவர்களோடு சிறிது சிறிதாக அறிமுகமாகிக் கொண்டார்  பொட்டு அம்மான்.பின் ஒரு நாள் இவர் அந்த வீட்டுக்குச் சென்றபோது அங்கு சங்கர் (சத்தியநாதன்) இருந்துள்ளார். அம்மான் சங்கரிடம் தானும் அவர்களது அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து அவர்களோடு இணைந்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது செயற்பாடுகளில் பங்கேற்று வந்த அம்மான் விசுவமடுக் காட்டில் நடைபெற்ற புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளார்.

83 ஆடிக் கலவரத்தைத் தொடர்ந்து தலைவர் அவர்களோடு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்களில் ஒருவரான பொட்டு அம்மான் நவம்பரில் ஆரம்பமான இந்தியா வழங்கிய முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுத் திரும்பினார்.  லெப்டினன்ட் கேணல் குமரப்பா  மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகச்  செயற்பட்ட காலத்தில் அவருக்கு உற்ற துணைவனாக இருந்து செயற்பட்டவர் பொட்டு அம்மான்.

1987 செப்டெம்பர் 26 திலீபனின் தியாக மரணம், ஒக்டோபர் 5இல் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் தியாகச் சாவுகளைத் தொடர்ந்து ஒக்டோபர் இந்திய விமானங்களின் குண்டுவீச்சுக்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக ஒக்டோபர் 12ஆம் நாளன்று, யாழ் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் தேசியத்தலைவர் வசிப்பதாக இலங்கை உளவுப்பிரிவு வழங்கிய தகவலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைது செய்யும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில், நள்ளிரவு வேளையில் சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்திகள் சூட்டாதரவு வழங்க இந்திய இராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவு ஒன்று
உலங்குவானூர்தி மூலம் தரையிறக்கப் பட்டது.அங்கு விடுதலைப்புலி வீரர்கள் மேற்கொண்ட உக்கிரமான தாக்குதலில் தரையிறக்கப்பட்ட 30 சீக்கியர்களின் 29 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிரோடு கைது செய்யப்பட்டார்.  இந்த தாக்குதலின்போது பொட்டு அம்மானுக்கு வயிற்றில் குண்டு பாய்ந்ததோடு கை ஒன்றிலும் காயம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழிமறிப்புச் சமர்களில் மேஜர் ஜேம்ஸ் உட்பட சிலர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப் படைகள் வடமராட்சிப் பகுதிக்குள் முன்னேறும் முயற்சியை மேற்கொண்டன. முன்னேறி வரும் அவர்களின் முதல் இலக்கு மருத்துவ மனைகளாக இருக்கும் என்பதனால் பொட்டு அம்மானும் சில போராளிகளும் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு வல்வையில் வாழ்ந்து கொண்டிருந்த கிட்டம்மாவின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டனர்.
 

கிட்டம்மா அவர்கள் காயப்பட்டவர்களை குளிப்பாட்டி சிகிச்சை செய்து
பராமரித்து வந்தார். ஒரு நாள் பொட்டு அம்மானை கிட்டம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்த வேளையில், அந்த வீட்டை இந்தியப்படை சுற்றி வளைத்துக் கொண்டது. வீட்டினுள் நுழைந்த படையினரில் சிலர் கிணற்றடிப் பக்கம் வருவதை அவதானித்த கிட்டம்மா  பலத்த குரலில் "ஆரடா பெண்கள் குளிக்கிற இடத்துக்கு வாறது? என்று சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியப்படைகள் அங்கிருந்து அகன்று சென்றன. தொடர்ந்து பொட்டு அம்மானை அங்கு வைத்து சிகிச்சை வழங்குவது ஆபத்தானது, எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதனால் அவர் தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டு இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பூரண குணமடைந்தபின் நாடு திரும்பினார்.

 நாடு திரும்பிய அவர் 89 கால கட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு  பணியாற்றிக் கொண்டிருந்தார்.89 இன் இறுதியில் அப்பொறுப்பில் இருந்து பொட்டம்மான் நீக்கப்பட்டு பானு அவர்கள் யாழ் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பொட்டு அம்மான் தேசியத்தலைவர் அவர்களால் பாலமோட்டைக் காட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தார். தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலனாய்வுக்கான திறமையையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி செயற்பட்டு வந்த பொட்டு அம்மான் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களால் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். லெப்டினன்ட் கேணல் சூட்டி, லெப்டினன்ட் கேணல் மாதகல் ராஜன், மாதவன் மாஸ்டர், கபிலம்மான் ஆகியோர்களைக் கொடுத்த தலைவர் அவர்கள் புலனாய்வுத் துறையைக் கட்டியெழுப்ப வேண்டிய மாபெரும் பணியை பொட்டு அம்மானிடம் ஒப்படைத்தார் தேசியத்தலைவர்.

1990 பெப்ரவரி மாத இறுதி நாட்களில் தேசியத்தலைவரின் அழைப்பின் பேரில் மணலாற்றுக் காட்டுக்கு வந்து சில நாட்கள் தங்கி தலைவரோடு வாழ்ந்திருந்த திரு.கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திற்கு வருவதற்காக புறப்பட்ட வேளையில் தலைவர் அவர்கள் என்னை அழைத்தார். " அண்ணா ராமகிருஷ்ணன் அண்ணை தமிழ்நாட்டுக்கும் திரும்பிறார். நீங்களும் போங்கோ. ஒரு மாதம் லீவு தாறன்.அங்கை போய் அக்கா பிள்ளைகளோடை தங்கி இருந்திட்டு திரும்பி வந்திடுங்கோ.அதுக்குப் பிறகு எங்களுக்கு நிறைய வேலையள் இருக்கு" என்று கூறியவர் முன்பே தயார் பண்ணி வைத்திருந்த ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்து "பிள்ளையளுக்கு யாழ்ப்பாணத்தில ஏதாவது வாங்கிக்கொண்டு போங்கோ" என்று கூறி என்னை அனுப்பி வைத்தார். அதன்படி கோவை ராமகிருஷ்ணன்
அவர்களோடு புறப்பட்டு வந்த நான் சென்னையில் மனைவி, பிள்ளைகளோடு தங்கிவிட்டு மீண்டும் ஈழத்திற்குச் சென்றேன்.

நான் செல்லும்போது சிறுவயதில் இருந்து தலைவர் அவர்களின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த எங்கள் மூத்த மகளையும் இயக்கத்தில் இணைப்பதற்காக கூட்டிச் சென்றேன். அப்போது அவளுக்கு வயது பதினாறு. நான் 90 மார்ச் பிற்பகுதியில் ஈழத்திற்குச் சென்றபோது தலைவர் அவர்கள் நன்கு பயிற்சிகள் பெற்ற ஆயிரக்கணக்கான போராளிகளோடு யாழ் மண்ணில் பாதம் பதித்திருந்தார். நான் சென்றபோது தலைவர் அவர்கள் சாவகச்சேரிப் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு சென்று அவரைச் சந்தித்து மகளை அவரிடம் கையளித்தேன். மகளை சுகம் விசாரித்த பின், "அண்ணா இவவைக் கொண்டு போய் காட்டுக்குள்ளை செஞ்சோலை முகாமிலை ஜனனியிடம் ஒப்படைச்சிட்டு வாங்கோ" என்று கூறி எங்களை அனுப்பி வைத்தார். நான் அவ்விதம் கானகம் சென்று ஜனனியிடம் மகளை ஒப்படைத்துவிட்டுத் திரும்பினேன். தலைவர் அவர்களின் பணிமனை அப்போது சங்கத்தானை முருகன் கோவிலுக்குச் சமீபமாக செயற்படத் தொடங்கியிருந்தது.   அங்கு சென்ற நான் எனக்கான அலுவலகப் பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டேன். தலைவர் அவர்களின் தட்டச்சு வேலைகள் உட்பட அலுவலகச் செயலராகவும் நான் என் பணிகளைச் செய்ய ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் முதன் முதலில் பொட்டு அம்மானுக்கும் எனக்குமான நெருங்கிய பழக்கம் ஆரம்பமானது. அங்கு தலைவர் அவர்களைச் சந்திக்க வரும் தளபதிகள் முதலில் என்னிடம் கேட்பது, "அண்ணா நாடு குழம்பியிருக்கோ... என்ன மாதிரி?" என்றுதான். எனது பதிலை அறிந்து அதற்கேற்ற விதமாக ஒருவித தயார்படுத்தலுடன் அவர்கள் தலைவரின் அறைக்குள் செல்வார்கள்.

தேனிசை செல்லப்பா அவர்கள் இயக்கத்தின் அழைப்பின் பேரில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக  ஈழம் வந்திருந்த சமயத்தில் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்த கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்கள் தலைவரிடம் என்னை தனக்கு உதவியாக தந்துதவுமாறு கேட்டுக் கொண்டார். செல்லப்பா அண்ணர் அவர்கள் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகப் போகின்ற சூழ்நிலையில் சாவகச்சேரிப் பணிமனைக்கு தலைவர் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தார். செல்லப்பா அண்ணர் அவர்களுக்கும், அவரது குழுவினர்க்கும் விருந்துபசாரம் வழங்கப்பட்டதோடு தலைவர் அவர்களால் அவர்கள் அனைவர்க்கும் கௌரவம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு அவர்களை அழைத்துச் சென்று வல்வை ரேவடிக் கடற்கரையில் படகேற்றிவிட்டுத் திரும்பினோம்.

யுத்தம் ஆரம்பமாகிய காலகட்டத்தில் கலை, பண்பாட்டுக் கழகத்தின் துணைப் பொறுப்பாளராக பணியாற்றும்படி தலைவர் அவர்கள் என்னை அனுப்பி வைத்தார். தலைவரின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்த பொட்டம்மானுக்கும் எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டே இருந்தது. கலைபண்பாட்டுக் கழகத்திற்கு வருகை தரும் பொட்டு அம்மான் அவர்கள் என்னோடும் உரையாடிவிட்டே செல்வார். புலனாய்வுத்துறையில் மட்டுமன்றி பன்முக ஆற்றல்களைக் கொண்டிருந்த பொட்டு அம்மான் அவர்கள் சிறந்த கலாரசிகரும்கூட. அக்காலகட்டத்தில் புலிகளின் குரல் வானொலிக்கென மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் எழுதி
என்னால் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து 53 வாரங்கள் ஒலிபரப்பான 'இலங்கைமண்' நாடகம் பொட்டு அம்மானின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. தொடர்ந்து வாராவாரம் அதனைச் செவிமடுத்து ரசித்து வந்த பொட்டு அம்மான் அவர்கள் அந்நாடகம் பற்றி அதன் சிறப்புக்கள் பற்றி கலைஞர்களின் திறமை பற்றி என்னைச் சந்திக்கும் வேளைகளில் எல்லாம் எம்மைப் பாராட்டத் தவறுவதில்லை. 'இலங்கை மண்'  நாடகம் வெற்றிகரமாக ஒலிபரப்புக் செய்யப்பட்டு முடிந்தபின் அதில் பங்கேற்று நடித்த கலைஞர்கள் உட்பட திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கும் சிறப்புச் செய்ய வேண்டும் என நான் தீர்மானித்தேன். அந்நாடகத்தை கேட்டு ரசித்து வந்த சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதனை சிறப்பாக நடத்தும்படியும் அதற்கான முழுச் செலவையும் தான் பொறுப்பெடுக்க முன்வந்தார். அதற்கான முன்னெடுப்புக்களை கலை, பண்பாட்டுக் கழகத்தினராகிய நாம் முன்னெடுத்தோம். நல்லூர்  இளங்கலைஞர்மன்ற கலாமண்டபத்தில் அதனை நடாத்துவதென முடிவு செய்தோம். அவ்விழாவின் சிறப்புப் பேச்சாளர்களாக திரு.பொன். கணேசமூர்த்தி மற்றும் இலங்கை கம்பன் கழகத்தின் நிறுவனர் கம்பவாருதி இ.ஜெயராஜ் ஆகியோர் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தனர்.அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பொட்டு அம்மான் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பிய நான் அதற்கான அனுமதி கேட்டு அவருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.


அண்ணா, வணக்கம். 'இலங்கை மண்'  நாடக கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் என்னை சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டிருந்தீர்கள். நன்றி. அந்த நாடகத்தை தொடர்ந்து நான் கேட்டு வந்துள்ளேன். அதன் சிறப்புக்கள் பற்றி உங்களை சந்திக்கும் வேளைகளில் தெரிவித்தும் உள்ளேன். முதலில் அதில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவர்க்கும் எனது பாராட்டுக்கள். நான் செய்யும் பணியைப் பொறுத்து அது போன்ற நிகழ்வில் மேடையில் கலந்து கொள்வது சிறப்புடையது அல்ல. அதனால் அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். ஆயினும் அந்த நிகழ்வில் சாதாரண ஒரு பார்வை மாற்றாக நான் கலந்து கொள்வேன் என அறியத் தருகின்றேன் நன்றி. என எனக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடன் நின்றுவிடவில்லை அவர்.விழாவின்போது  நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பே தனது பிரிவு உறுப்பினர்களோடு வந்து சேர்ந்த அவர், நிகழ்வுகள் ஆரம்பமாகி முடியும்வரை பார்வை யாளர்கள் போன்று ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்து பார்த்துவிட்டே சென்றார். அங்கிருந்து செல்வதற்கு முன் வானொலி நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரையும் பாராட்டிவிட்டே சென்றார். நிகழ்வு சிறப்புற நடந்தேறிய மகிழ்ச்சியை விட பொட்டு அம்மான் வருகை தந்து இறுதிவரை உட்கார்ந்து இருந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்ததோடு கலைஞர்கள் எம்மைப் பாராட்டிச் சென்றமை எமக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.

94 ஏப்ரலில் எனது வானொலி  நாடகம் 'மண்ணுக்காக'  கதையை வீடியோ படமாக தயாரித்திருந்தோம். அதனையும் பார்த்துவிட்டு எமக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிறகு ஒரு நாள் பொட்டு அம்மானின் பிரிவைச் சேர்ந்த ஒரு தம்பி என்னைத் தேடி வந்தார்.  "அம்மான் உங்களிடம் சொல்லி புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு பட்டதாக ஒரு குறும்படம் செய்யச் சொல்லி இருக்கின்றார்" என்றார். "கதைக்கரு எப்படி அமைய வேண்டும்?" என அவரிடம் வினவினேன். "புலனாய்வுத்துறையில் இரகசியம் காத்தல் முக்கியமானது.அதை அடிப்படை யாக வைத்துச் செய்யுங்கள்" என்று கூறி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.  உடனடியாக அதற்கான திரைக்கதைப் பிரதியைத் தயார் செய்து அம்மானுக்கு அனுப்பினேன். அதனைப்  படமாக்கலாம் என சம்மதம் தெரிவித்தார். புலனாய்வுத் துறையின் வெளியக புலனாய்வு நடவடிக்கைகளுக்காக கொழும்பு போன்ற ஈழத்திற்கு வெளியே இரகசிய நடவடிக்கைகளுக்குப் செல்லும் ஒரு போராளியை மையமாக வைத்து கதையை அமைத்திருந்தேன். அதனை இயக்கும் பொறுப்பை எனது நண்பரும் மாமனிதருமான பொன்.கணேசமூர்த்தி அவர்களிடமே ஒப்படைத்திருந்தேன். அதில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக நான் நடித்திருந்தேன்.

வெளியக புலனாய்வு வேலைகளுக்காக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொறுப்பாளர் திட்டங்களை விளக்கி எந்தக் கட்டத்திலும் இரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் மிகப்பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்பதையும் எடுத்துச் சொல்லிய பின் ஒரு போராளி முக்கிய நடவடிக்கை ஒன்றிற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கு அந்தப் போராளி முன்பு இயக்கத்தில் இருந்து விலத்திச்சென்ற இவரின் நண்பர் ஒருவரைச் சந்திக்கின்றார். அவர்கள் இருவரும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் சாப்பிடு கின்றனர். நண்பன் போராளியை தன்னோடு வருமாறு அழைக்க மறுக்கும் போராளி தான் வந்த காரணத்தை வெளிப்படையாக, வெகுளித்தனமாக  நண்பனிடம் கூறிவிடுகின்றான். அவர்களுக்குப் பின்புற மேசையில் அமர்ந்திருந்த சிங்களவன் ஒருவன் கண்காணித்துள்ளான். சாப்பிட்டு முடிந்து நண்பர்கள் இருவரும் வெளியேறும்போது வாசலில் நின்றிருந்த இருவர் இவர்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளி பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர். இரகசிய இடம் ஒன்றில் இவர்களுக்கு நடைபெற்ற சித்திரவதைகளின்போது போராளி சயனைட் குப்பியைக் கடித்து மரணம் அடைகின்றான்.

'படிப்பினை' என்ற பெயரில் ஏழு நிமிடங்கள் கொண்ட குறும்படமாக தயாரித்திருந்தேன். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்திலும், புலனாய்வுப் பிரிவிலும் வேலை செய்த கிருபா படப்பிடிப்பு, படத்தொகுப்பு என்பனவற்றை சிறப்பாகச் செய்திருந்தார்.  ஒரு வார காலத்திற்குள் பொட்டு அம்மானின் 'படிப்பினை' குறும்படப் பிரதி கையளிக்கப்பட்டது. அந்த குறும்படம் பொட்டு அம்மான் அவர்களுக்கு நன்கு பிடித்திருந்தது. எங்களை அழைத்துப் பாராட்டுவதற்கு அவர் மறக்கவில்லை.அது மாத்திரமன்றி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் அது தொடர்ந்து காண்பிக்கப்பட்டது வந்தது.

இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின் மல்லாவியில் வசித்து வந்தோம். 2001 ஆம் ஆண்டு நான் கொழும்புக்குச் செல்வதற்காக போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவுக்கு விண்ணப்பம் கொடுத்திருந் தேன். சில நாட்களில் புலனாய்வுத் துறையின் வெளியகப் புலனாய்வு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த துரோணர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்.  "இப்ப நிலைமை சரியில்லை. தேவர் அண்ணாவை அவசரப்பட வேண்டாம். நிலைமை சரியானதும் அனுப்பலாம் என அண்ணை அறிவிச்சவர் எண்டு அம்மான் சொல்லிட்டு வரச்சொன்னார்" என்றார். துரோணர். அப்புறம் 2002ஆம் ஆண்டளவில் துரோணரே மீண்டும் வீட்டுக்கு வந்து பயணத்திற்கான அனுமதிப்பத்திரத்தை  தந்து சென்றார்.

கொழும்பில் ஒரு மகளும் மனைவியும் இருந்தார்கள். நானும் ஒரு மகளும் மகனும் மல்லாவியில் வசித்து வந்தோம். நான் கொழும்புக்கும் வன்னிக்குமாக போய் வந்து கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் துரோணரே வீட்டுக்கு வந்தார்." அம்மான் உங்களட்டை ஒரு பொறுப்பைக் கொடுத்து செய்ய முடியுமோ என்று கேட்கச் சொன்னவர்" என்றார். நான் எதுவித தயக்கமும் இன்றி " அம்மானுக்கோ,  புலனாய்வுத்துறைக்கோ எதையும், எப்பவும் செய்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன்" என்றேன். தங்களது போராளிகள் சிலருக்கு சிங்களம் கற்பிக்க வேண்டும் என்றார் , நான் "எப்போ ஆரம்பிக்கலாம்? "என்றேன். "உடனடியாக செய்தால் நல்லம்" என்றார் அவர்.  நான் சிலரது எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது மல்லாவி, பாலிநகர், பாண்டியன் குளம் போன்ற பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களில் சிங்களம் கற்பித்த அனுபவமும், புத்தகங்களும் கைவசம் இருந்த காரணத்தினால் அடுத்த நாளே ஆரம்பிக்கலாம் என்று கூறி துரோணரை அனுப்பி வைத்தேன்.  

மறுநாள் காலையிலேயே துரோணரின் முகாமில் போராளி களுக்கான சிங்கள வகுப்பு ஆரம்பமாகியது. எனது மாணவர்கள் என்னைப் பார்க்க முடியும். எனக்கு அவர்களது முகங்களைப் பார்க்க முடியாது. நான் மட்டுமல்ல, போராளிகளும் மற்றைய போராளிகளின் முகங்களைப் பார்க்க முடியாது. ஒரு குடிலில் இருவர் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மட்டும் குடிலின் உள்ளே ஒருவரை ஒருவர் பார்க்க முடியும்.குடிலை விட்டு வெளியே வரும்போது அவர்கள் முகத்திரையை அணிந்தபடியே வருவார்கள். வெளியே புலனாய்வுப் பணிகளுக்காக அவர்கள் அனுப்பப்படுவதன் காரணமாகவே அந்த நடவடிக்கை. கொழும்பு போன்ற இடங்களில் ஒருவர் கைதாகும் சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் காரணமாக மற்றையவர்களைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்தற்காகவே அந்த ஏற்பாடு.

சில மாதங்கள் அந்த வகுப்பு நடைபெற்றது.அந்த வகுப்பு நிறைவடைந்த பின் ஒரு நாள் வீட்டுக்கு வந்த துரோணர் அவர்கள் ஒரு தொகைப் பணத்தை என்னிடம் தருவதற்கு முயற்சி செய்தார். " இல்லைத் தம்பி, எனக்கு இயக்க கொடுப்பனவு மாதாமாதம் தமிழீழ வைப்பகத்தின் மூலம் வந்து கொண்டிருக்கு வேண்டாம்" என்று கூறி வாங்க மறுத்தேன்.  "இல்லையண்ணா, அம்மான் இதை கட்டாயம் உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னவர்" என்று கூறி என்னிடம் அந்தப் பணத்தை தந்துவிட்டுச் சென்றார்.

2004ஆம் ஆண்டளவில் சிறிலங்கா கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தேசிய நாடக சபையில்ஒரு செயற்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின் வன்னிக்கு சென்று வந்து கொண்டுதான் இருந்தேன்.2006 அளவில் வவுனியாவில் ஒட்டுக் குழுக்களின் தொல்லைகள் இருப்பதனால் வன்னிக்கு வரவேண்டாம் என் எனக்கு அறிவித்தல் வந்தது.அதன்பிறகு நான் வன்னிக்கு செல்லவில்லை. இயக்கத்தில் இணைந்த காலம்தொட்டு இறுதி நாட்கள் வரை தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக அவரின் பாதுகாவலனாகவே பொட்டு அம்மான் வாழ்ந்து வந்தார்.

நாம் அனைவரும் அம்மான் வருவாரா என்ற ஏக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றோம். தேசியத்தலைவர் அவர்களின் உடல் என ஒரு உடலை சிறிலங்கா அரசு காட்டியது.அது அவரது உடல்தானா? என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு.தளபதிகள் பலரது உடலைக் காட்டிய சிங்கள அரசு பொட்டம்மானின் உடலைக் காட்டவே இல்லை. அது மட்டுமன்றி காலத்திற்கு காலம்பொட்டு அம்மான் ஹாங்காங்கில் இருக்கிறார்....  இத்தாலியில் இருக்கிறார், எரித்திரியாவில் இருக்கிறார் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

தமிழகத்திலிருந்து தேவர் அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.