Jump to content

அதிர்ச்சிதரும் பொலிஸாரின் ட்ரக்ஸ் டீலிங் உண்மைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சிதரும் பொலிஸாரின் ட்ரக்ஸ் டீலிங் உண்மைகள்!

M48QL4Plxj-960x540.jpg?189db0&189db0

 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் குழுவினர் சர்வதேச கடல்வழிப் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். பாரியளவில் போதைப்பொருட்களை பெற்று விற்பனை செய்தனர். அவர்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்தனர்”

இவ்வாறு போதைப்பொருள் ஒழிப்பு பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பான வழக்கில் இன்று (08) நீதிமன்றில் சிஐடி சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸிக்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வௌிப்படுத்தினார்.

மேலும் அவர் நீதிமன்றில்
தெரிவிக்கையில்,

“கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் வீடுகள், சொகுசு வாகனங்களில் போதைப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் அதிகாரிகளிடம் சட்டவிரோத துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. போதைப் பொருள் கடத்தல்காரர்களும் போதைப் பொருளுக்கு மேலதிகமாக சட்டவிரோத ஆயுத வர்த்தக்கத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிகள் பொலிஸ் சந்தேக நபர்களின் மூலமாக குற்றவாளிகளின் கைகளுக்கு செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது. அது குறித்து தனி விசாரணை நடைபெறுகின்றது.

10வது மற்றும் 11வது பொலிஸ் சந்தேக நபர்களிடம் இருந்து 31 போலி 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீட்கப்பட்டது. சட்டவிரோத நோட்டுக்களை அச்சிடுவதிலும் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்று சந்தேகிக்கப்படுகிறது. அது குறித்தும் விரிவான விசாரணை நடைபெறுகிறது.

இந்த பொலிஸ் அதிகாரிகள் தாம் கைப்பற்றிய போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுக்கு மீள விற்றுவிட்டு போலியான சுற்றி வளைப்புக்களை முன்னெடுத்தனர். போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்காக பொலிஸ்மா அதிபரிடமிருந்து விருதுகளையும், பாராட்டு கடிதங்களையும் பெற்றிருக்கின்றனர்.

7வது பொலிஸ் சந்தேக நபரும் இன்னுமொரு பொலிஸ் சந்தேக நபரும் அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் கொட்டாவையில் 17 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு காணிகளை வாங்கியுள்ளனர்.

போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொறுப்பதிகாரி மற்றும் இயக்குனரின் மேற்பார்வை குறைபாடு பொலிஸ் சந்தேக நபர்களின் போதைப் பொருள் கடத்தலுக்கு வழி வகுத்துள்ளது.” – என்றார்

https://newuthayan.com/அதிர்ச்சிதரும்-பொலிஸாரி/

 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொறுப்பதிகாரி மற்றும் இயக்குனரின் மேற்பார்வை குறைபாடு பொலிஸ் சந்தேக நபர்களின் போதைப் பொருள் கடத்தலுக்கு வழி வகுத்துள்ளது.” – என்றார்

சொறிலங்காவின் சிங்கள போலீசார் போதைப் பொருள் கடத்துறதுல என்ன புதுமை.
சட்டவிரோத செயற்பாடுகள் அவங்க உடன் பிறந்த குணமாச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரக்ஸ் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு மரண தண்டனை – பொலிஸார் நம்பிக்கை!.

Ajith.Rohana-800-400-768x384-1.jpg?189db0&189db0

 

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகப் பொலிஸார் குற்றவாளிகளாக காணப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று நம்புகிறோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

1979ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்றபோதிலும் எந்தவொரு பொலிஸாரும் குற்றவாளிகளா காணப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றில் கோருவோம் என்றும் அவர் கூறினார்.

18 பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளின் இழிவான நடத்தை முழு பொலிஸாரையும் தலைகுனிய வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

https://newuthayan.com/ரக்ஸ்-கடத்தலில்-ஈடுபட்ட/

Link to comment
Share on other sites

7 hours ago, உடையார் said:

18 பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளின் இழிவான நடத்தை முழு பொலிஸாரையும் தலைகுனிய வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சொறிலங்காவின் முழு போலீசும் அந்த 18 பேரை விட மோசமான பேர்வழிகள் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.