Jump to content

யாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீசப்பட்டது! - சந்திரிகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். 147 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் அப்போதைய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் சாவடைந்திருந்தனர்.

அவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலை கடைப்பிடிப்பதற்குத் தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இது தொடர்பில் சந்திரிகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை.

அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/250551?ref=home-top-trending

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொலைகாரியின் நியாயம் பேசுகிறது
அப்பாவிகளின் நியாயத்துக்கு இடமில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலைகளைப் பற்றியும் பாடசாலை மாணவியான கிருசாந்தி மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் யார் யார் தவறுதலாக செய்தார்கள் என்று சொன்னால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. தேவாலயத்தை நோக்கி குண்டுகள் வீசப்படவில்லை. 

தேவாலயத்தையும் அதனை அண்டிய சூழலில் இடம் பெயர்ந்திருந்த மக்களையும் இலக்கு வைத்தே குண்டு வீசப்பட்டது. 

இந்த குண்டு வீச்சில் எனது நண்பரின் தம்பி ஒருவரும் கொல்லப்பட்டார். இடம் பெயர்ந்தவர்களுக்கு தாக சாந்தி வழங்கியவர்கள்.

அந்தக் குண்டு வெடிப்பின் சத்தம் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது.

😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த நியாயம் (அரசியல் தோல்வி தந்த ஞானம்)அவரை அப்படி பேச வைக்குது. ஆனால் இராணுவம் எனும் பூதத்தை இனி யாராலும் பூட்டி வைக்க முடியாது இலங்கையில். அது ஆடும் நரகாட்டத்துக்கு தலையாட்டுவதை தவிர. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.ஆனால் எம் தமிழ் தலைமைகள்  சிங்களத்திற்கு எதுவுமே சம்பந்தமில்லை என ஐ நா வரைக்கும் வாதிட்டுக்கொண்டிருப்பர். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.

 

 சில சிங்கள கட்சிகள் கடந்த காலங்களில் அரசியலில் மிளிர, ஏமாந்த தமிழரே காரணமானார்கள். இன்றும் நிலைக்க சுயநல தமிழர் காரணம்.  பவுத்த சிங்களம் போதும் தாம் அரசியல் அமைக்க, என்று சிங்களம் எவ்வளவுதான்  எகத்தாளம் போட்டாலும், உண்மை அதுவல்ல. சிங்களம் அரசியல் செய்ய,அசைக்க முடியாத வலு தமிழரே. அல்லாவிடின் சிங்களம் ஏன் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டி இடுகிறது? ஏன் தலைமைகளை விலை கொடுத்து இழுக்கிறது? ஏன் நம்மை தனித்து விட மறுக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.ஆனால் எம் தமிழ் தலைமைகள்  சிங்களத்திற்கு எதுவுமே சம்பந்தமில்லை என ஐ நா வரைக்கும் வாதிட்டுக்கொண்டிருப்பர். :cool:

அவர்கள் செய்வார்கள் காரணம் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லா நடவடிக்கைகள் ஐந்து நாளில் 80 கூட்டம்களுக்கு சென்ற சுமத்திரனால் நவாலி படுகொலை நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்க போக முடியவில்லையாம் நம்புங்கள் மக்களே இவர்தான் ஜனநாயகவழியில்  போராடி தீர்வு பெற்றுத்தர போகிறாராம் அப்ப  கடந்த பத்து வருடமாய் என்ன செய்தவர் என்று கேட்க்க கூடாது  கேட்டால் செம்புத்தவளைகளுக்கு கோபம் வந்துவிடும் ஒருவேளை 2010 தொடக்கம் 2020 வரை  வன்னி காட்டில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்தவரோ ?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அவர்கள் செய்வார்கள் காரணம் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லா நடவடிக்கைகள் ஐந்து நாளில் 80 கூட்டம்களுக்கு சென்ற சுமத்திரனால் நவாலி படுகொலை நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்க போக முடியவில்லையாம் நம்புங்கள் மக்களே இவர்தான் ஜனநாயகவழியில்  போராடி தீர்வு பெற்றுத்தர போகிறாராம் அப்ப  கடந்த பத்து வருடமாய் என்ன செய்தவர் என்று கேட்க்க கூடாது  கேட்டால் செம்புத்தவளைகளுக்கு கோபம் வந்துவிடும் ஒருவேளை 2010 தொடக்கம் 2020 வரை  வன்னி காட்டில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்தவரோ ?😁

கூத்தமைப்பு தமிழினத்திற்க்காக செய்த சாதனைகள் பல.....

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு  நடந்தவுடன் அதை  மக்களுக்கு அறிவித்து

தவறான போரை  நிறுத்தியிருக்கணும்

தற்பொழுது அதிகாரமற்ற நிலையில்???

இனி கிருசாந்திக்கும் ?????

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

தவறு  நடந்தவுடன் அதை  மக்களுக்கு அறிவித்து

தவறான போரை  நிறுத்தியிருக்கணும்

தற்பொழுது அதிகாரமற்ற நிலையில்???

இனி கிருசாந்திக்கும் ?????


 



உந்த சுத்துமாத்து அம்மா  நல்லதொரு  தீர்வுபொதி தமிழர்களுக்காக வைத்திருந்தவர் என்றும் புலிகள் தான் குழப்பி போட்டாங்கள்  என்று சொல்கிறவர்கள் இருக்கும் வரை அவர் நிறைய புழுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டே இருப்பார்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.