Jump to content

சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி

சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி

நேபாளத்தின் அரசியல் நெருக்கடியை தீரவிடாமல் கையாளும் சீனாவின் பெண் தூதர்.
பதிவு: ஜூலை 09,  2020 14:15 PM
காட்மாண்டு

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது.


மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்மா ஒலி கூறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் சக்திவாய்ந்த 45 உறுப்பினர் நிலைக்குழுவில் பெரும்பாலானோர் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராகவே உள்ளனர். அவர் கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டபோது, பிரச்சினை மேலும் தீவிரமானது.

சர்மா ஒலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்டு கட்சி நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளை தீர்க்க தலைமைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இக்கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் அது கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடததப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை சந்திக்க திட்டமிடப்பட்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால்  பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் பிரசாந்தா தலைமையிலான இரு அணிகளின் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை இது மங்கச் செய்து உள்ளது. 

கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர்களாக இருக்கும் பிரதமர் ஓலி மற்றும் பிரச்சந்தா ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்து பேசினர். அப்போது  ஓலி, தனது கட்சி பதவியை அல்லது பிரதமர் பதவியை கைவிட மறுத்துவிட்டார்.

இரண்டு மணி நேர சந்திப்பின் முடிவில் இரு தலைவர்களும் புதன்கிழமை நிலைக்குழு கூட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர். 44 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவை எதிர்கொள்ள பிரதமர் ஓலி தயாராக இருக்கிறார்  என்விளக்கம் அளிக்கப்பட்டது. நிலைக்குழு உறுப்பினர்களின் கிட்டத்தட்ட 30 பேர் அவர் பதவி விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

பிரதமர் ஓலிக்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்களுடன் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் நாளை கூட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற  தலைவர்கள் இருவரின் கையொப்பங்களும் தேவை.

தீர்மானம் நிலைக்குழு வழியாக மத்திய குழுவுக்கு செல்கிறது, அங்கு பிரதமர் ஓலி ஆதரவாளர்கள் குறைவாகவே உள்ளனர்.

சீனாவின் அதிகார நாடகம் மற்றும் பிரதமர் ஓலியின் அரசியல் அபிலாஷைகள் காரணமாக, நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தொடருகிறது. 

நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தொடர்ந்து வருகிறது. பிரதமர் கே.பி. சர்மா ஓலி கொரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டில் சுகாதார அவசரநிலை அமல்படுத்தப்படுவது குறித்து ஜனாதிபதி ப்பி.டி.பண்டாரியுடன் விவாதித்தார். ஆனால் சுகாதார அவசரகால அறிவிப்புக்கு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலையை உருவாக்கி உள்ளது.

ஆதாரங்களின்படி, ஜனாதிபதி பண்டாரிக்கு சுகாதார அவசர நிலையை கொண்டுவருதில் உடன்பாடில்லை. அதற்கு பதிலாக தலைவர்களிடையேயான அரசியல் வேறுபாடுகள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமரிடம் கேட்டார். சக்திவாய்ந்த நேபாள இராணுவமும் சுகாதார அவசரநிலைக்கு ராணுவத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக இல்லை.

நேபாள அரசியல்  விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்கையில், நெருப்பிற்கு எரிபொருளைச் சேர்ப்பது நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கி என்பவர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய அழுத்தம் கொடுக்கிறார். 

ஹூவுடனான ஒரு சந்திப்பில் மூத்த என்சிபி தலைவர்களில் ஒருவர் அவரிடம் பிரதமர் ஓலி இல்லாமல் கூட நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் என்பதை அவருக்கு  மிகத் தெளிவுபடுத்தி உள்ளார்.

நேபாளத்தில் தூதர் ஹூவின் நடவடிக்கைகள், தூதரக செயல்பாட்டிற்கு அப்பாற்பட்டவை, நேபாளத்தில் சீன ஊடுருவலின் ஆழத்தை தெளிவாகக் காண்பித்தன. இது நேபாள ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பின.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09141549/In-Nepals-political-crisis-Chinese-envoy-holds-all.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் தற்போது இருக்கும், சீனப் பெண் தூதுவர்,
முன்பு பாகிஸ்தானில்... தூதுவராக இருந்தவராம்.

இந்தியாவுக்கு... நேபாளத்தின் மூலம், அலுப்பு கொடுக்க...
சில மாதங்களுக்கு முன்பு தான்... நேபாளத்திற்கு,  அவரை சீனா அனுப்பி வைத்ததாம். 

இப்படியான விடயங்களில், இவர் திறமைசாலி என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.