Jump to content

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..

sampanthan-mavai-sumanthiran-38.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக் காலத்தில், சுமந்திரனுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அற்கு மேலதிகமாக பத்து விசேட அதிரடிப்படையினர்

சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது பதினாறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக சுமந்திரன் கலந்துகொள்ளும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில்

பாதுகாப்புப் பிரிவினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதால் அப்பிரதேசமே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது.இதுகுறித்துப் பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

https://jaffnazone.com/news/19206

 

Link to comment
Share on other sites

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

16 அதிரடிப்படையினர் பாதுகாக்கும் அளவிற்கு அப்படி என்னதான் சுமந்திரனிடம் இருக்கிறது....??  தமிழுக்குத் தெரியாதது சிங்களத்துக்கு தெரிந்திருக்கிறதே. 🤔

ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள்.

பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....!
முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

ராயபச்ச அன்ட் ரணில் கொம்பனி திரைமறைவுத்திட்டத்தோடு நகர்கிறது. அதனை நகர்த்த சுமந்திரன் போன்றவர் தேவை. அதுவரை பாதுகாப்பார்கள்.

பொன். இராமநாதனின் தொடர்ச்சியே....!
முரளிதரனை கேப்பீயை இறுதியாக சுமந்திரனையும் பாதுகாத்தல் என்பது சிங்களத்தைப் பாதுகாக்கும் தமிழர்களை பாதுகாத்தல் கடன்தானே. 

என்ன பாடுபட்டாவது சுமத்திரனை  பதவிக்கு கொண்டுவரனும் என்பதில் தீவிரமாக உள்ளனர் இனவாத சிங்களவர்கள் சிறிதரன் கள்ளவோட்டு சம்பந்தமாக உளறி அதுக்கும் ஆப்பு குடுத்துவிட்டார் இந்த முறை கொரனோ  பிரச்சனையில் சமூக ஊடகங்களில் மற்றவர்கள் போல் தானும் வெளிக்கிட்டார் போதாக்குறைக்கு தன்  தம்பிமாரையும் அங்கு கொண்டுவர நடந்த சமூக ஊடக கலவரத்தில் அவரின் முடிவு அவருக்கே தெரிந்துவிட்டது படுதோல்வி என்று உடனே ஐந்து நாட்களில் 80 க்கு மேட்பட்ட கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்து கடைசியாக நெல்லியடி கூட்டத்தில் காய்ச்சல் பிடித்த முகத்துடன் தனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று முனகுவதை பார்க்க எனக்கு மேலேயுள்ள மாவீரர்கள் சிரிப்பது போல் இருந்தது .தமிழ் தேசியத்தை சிதைக்க முட்படும்  எவருமே நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

என்ன பாடுபட்டாவது சுமத்திரனை  பதவிக்கு கொண்டுவரனும் என்பதில் தீவிரமாக உள்ளனர் இனவாத சிங்களவர்கள் சிறிதரன் கள்ளவோட்டு சம்பந்தமாக உளறி அதுக்கும் ஆப்பு குடுத்துவிட்டார் இந்த முறை கொரனோ  பிரச்சனையில் சமூக ஊடகங்களில் மற்றவர்கள் போல் தானும் வெளிக்கிட்டார் போதாக்குறைக்கு தன்  தம்பிமாரையும் அங்கு கொண்டுவர நடந்த சமூக ஊடக கலவரத்தில் அவரின் முடிவு அவருக்கே தெரிந்துவிட்டது படுதோல்வி என்று உடனே ஐந்து நாட்களில் 80 க்கு மேட்பட்ட கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்து கடைசியாக நெல்லியடி கூட்டத்தில் காய்ச்சல் பிடித்த முகத்துடன் தனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று முனகுவதை பார்க்க எனக்கு மேலேயுள்ள மாவீரர்கள் சிரிப்பது போல் இருந்தது .தமிழ் தேசியத்தை சிதைக்க முட்படும்  எவருமே நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை .

 

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

Link to comment
Share on other sites

வரணிக்குள் ஓடித்திரிய ஒரு ஆமட் ட்றக்கும் கொடுத்தால் அவருக்கு  எவ்வளவு வசதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கத்துக்கு எதிரா வழக்குகள், சுமந்திரனுக்கு பாதுகாப்பு. 

இதிலிருந்து தமிழர்களின் உரிமைகளுக்கு உண்மையா குரல் கொடுப்பவர்கள் யார் என்பது புரியவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் தமிழர் பிரச்சனையே இல்லாமல் எல்லாம் பூட்டி மூட சுமந்திரன் வேலை செய்கிறார் என்பது அவர்க்கு கொடுக்கப்படும் பாதுகாப்பிலும், அது தொடர்பான விளக்கத்திலும் இருந்து தெரிகிறது. அவரின் கூட்டங்களை விமர்சிக்காது மக்கள் புறக்கணித்தால் பிரச்சனை முடிந்தது. பாதுகாப்போடு தன் வீட்டில் முடங்கியிருந்து முகநூலில் பிரச்சாரம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பெருமாள்7 July 23:39

சுமத்திரன் முகநூலில் தனது பரப்புரைகளை வைக்க எட்டுப்பக்கத்தாலையும் கல்லெறி வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
 
பாவம் சுமந்திரன், அவர் எவ்வளவைத்தான் சுமப்பார்...? தன்னைச் சுமக்கவேண்டும், சம்பந்தரையும் கட்சியையும் சுமக்கவேண்டும், தனது மதத்தைச் சுமக்க வேண்டும், முசுவீம்களையும் சிங்களத்தையும சுமக்க வேண்டும்,
பாரச் சுமைநீங்க திண்ணையில் கொஞ்சம் இடம்கொடுப்போம் என்றால் அங்கேயும் கல்லெறி விழுகிறதே..... 😲
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

தனது மதத்தைச் சுமக்க வேண்டும்

இவர் தான் மதத்துக்கு சுமை. மதம் யாரையும் வஞ்சிக்க சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

அமோக வெற்றி என்பதெல்லாம் நம்புவதுக்கு  ஒரு காலம் இருந்தது இம்முறை யார் வந்தாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் கூத்தமைப்புக்குள்  ஒருத்தரை ஒருத்தர் இழுத்து விழுத்தும்  நிலைதான் தொடர்கிறது இந்த நிலையில் சுமத்திரன் அமோக வெற்றி  என்பது பகல் கனவே  அந்த படு தோல்விக்கு பின் உண்ணிகள் கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் வாயை மூடிவிடுவினம் அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

அமோக வெற்றி என்பதெல்லாம் நம்புவதுக்கு  ஒரு காலம் இருந்தது இம்முறை யார் வந்தாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் கூத்தமைப்புக்குள்  ஒருத்தரை ஒருத்தர் இழுத்து விழுத்தும்  நிலைதான் தொடர்கிறது இந்த நிலையில் சுமத்திரன் அமோக வெற்றி  என்பது பகல் கனவே  அந்த படு தோல்விக்கு பின் உண்ணிகள் கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் வாயை மூடிவிடுவினம் அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம் .

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

சரிப்படுத்த முடியாத அளவுக்கு பதவி வெறியும் குத்துப்பாடும் கொள்ளுப்பாடும் நிறைந்த அரசியல் சாக்கடையாகி விட்டது . புதியவர்கள் நிறைந்த சிரமத்தை எதிர்நோக்குவார்கள் அங்கிருப்பவர்கள் யார் என்றாலும் புலம்பெயர் என்றால் பணத்தை மாத்திரம் அனுப்புங்கள் அத்துடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்ற வகையில்தான் கதைபேச்சு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம்

அதன்பின் சிங்களம் இவரை சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் என்று நம்புகிறீர்களா? தமிழ்த் தலைமை என்கிற தகுதி இருக்கும்வரை தான் இவர்களுக்கு மதிப்பும், வரவேற்பும் சிங்களத்திடமிருந்து   வரும். அது தோல்வி என்றால்; இவர்களை கணக்கெடுக்கவே மாட்டார்கள். அதனாற்தான் எங்களை தொடர்ந்து  ஏமாற்றிக்கொண்டு இருக்குது இந்தக்கூட்டம்.

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்

அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை  கார்டலியில் படித்த நபர்களை  சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..

Link to comment
Share on other sites

On 9/7/2020 at 17:09, உடையார் said:

நாடகம் நன்றாக போகின்றது; கிளைமக்ஸ் - சுமத்திரன் அமோக வெற்றி; 

சுமத்திரனை ஆட்டுவிக்கும் பின்புலம் நன்றாக திட்டமிட்டு வேலை செய்கின்றது 

இந்தியர்கள் குடுத்த டிப்ஸ் வேலை செய்யுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை  கார்டலியில் படித்த நபர்களை  சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..

தன் உயிர் வெறுத்து, இளமையை தொலைத்து, இன விடுதலைக்காய் புறப்பட்ட உறவு: சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் மாண்டு விட்டது இனத்துக்காய். இருப்பதெல்லாம் ஆவா குழு, வாள்வெட்டுக்குழு, வெட்டிப்பேச்சு குழு, போதைப்பொருள் குழு என்று மாற்றப்பட்டு அதிலேயே கட்டிப்புரளுதுகள், அதுக்காய் அலையுதுகள்.  விடுதலை உணர்வோ, தட்டிகேட்க்கும் மனப்பான்மையோ வரக்கூடாது இளம்சமுதாயத்துக்கு என திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது சிங்களத்தால். இப்படி இந்த சமுதாயம் இருந்தால் தமது தலைமைத்துவத்துக்கு, சந்ததிக்கு பாதிப்பு வராது. காலமெல்லாம் அதிகாரம் செலுத்தும் பரம்பரையாக வலம் வரலாம் என நம் தலைமைகளும் வரவேற்கும். நல்ல தலைமைத்துவம் இல்லை, வழிகாட்டல் இல்லை எத்தனை இருந்தும் சுஜநலப்போக்கு. இங்கிருந்து நல்லது எதுவும் வருமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

அப்படி வரும் புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் ஜதாரத்த‍த்தை உள்வாங்கியதாக இருந்தாலே அது பிரயோசனமாக இருக்கும். பழைய தலைமுறையின் உசுப்பேற்றல்களை உள்வாங்கிய தோல்வியடைந்த அணுகுமுறையை கைக்கொள்ளுவதாக இருந்தால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

மிகவும் பயனுள்ள ஒரு கருத்து.

Link to comment
Share on other sites

யார் வந்தால் நல்லது நடக்கும்?   அது கேள்விதான். யார் வந்தாலும் எதுவும் நடக்காது என்பது விடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 அதிரடிப்படையில்லை ஒரு ரெஜிமெண்டையே அனுப்பி தமிழனின் உதிர்ந்துபோன தலை மயிருக்கும் சிங்கள அரசு பாதுகாப்பு வழங்கும் அதில் தனக்கு நன்மை உண்டு என்றால். அப்படி ஒன்றுதான் இதுவும் என்று கடந்து செல்வோம் ஆனால் சுமந்திரனால்  இன்னும் சில முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

Link to comment
Share on other sites

21.10.2016 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.யாழ் பல்கலையின் கலைபீட மாணவர்களான சுலக்சன் சுகந்தராஜா (கந்தரோடை), கஜன் நடராஜா(கிளிநொச்சி) போன்றவர்களே யாழ் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து சிறிலங்காவின் விசேட அதிரடிப் படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த இரண்டு இளைஞர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைப் படுகொலை செய்த விசேட அதிரடிப் படை வீரர்களே தற்பொழுது சுமந்திரனின் மெய்ப்பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக் கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். எமது சக மாணவர்களை படுகொலை செய்தவர்களையே துணைக்கழைத்துக்கொண்டு ஒரு தமிழ் தலைவர் சுற்றித்திரிவது- அதுவும் யாழ்குடாவிலேயே சுற்றித்திரிவது - தமிழ் இனத்துக்கே அவமானம்' என்று தெரிவித்தார் ஒரு பல்கலைக்கழக மாணவர்.

 Sum-1.jpg

Sum-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vanangaamudi said:

16 அதிரடிப்படையில்லை ஒரு ரெஜிமெண்டையே அனுப்பி தமிழனின் உதிர்ந்துபோன தலை மயிருக்கும் சிங்கள அரசு பாதுகாப்பு வழங்கும் அதில் தனக்கு நன்மை உண்டு என்றால். அப்படி ஒன்றுதான் இதுவும் என்று கடந்து செல்வோம் ஆனால் சுமந்திரனால்  இன்னும் சில முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று எண்ணவும் இடமுண்டு.

சுமந்திரனை வைத்தே,  சிங்களம் விட்ட தொட்ட குறை எல்லாம் நிவர்த்தி செய்யும்.    

Link to comment
Share on other sites

On 9/7/2020 at 15:30, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சுமந்திரன் யாரது கைப்பிள்ளை என்பதற்கான இன்னொரு ஆதாரம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.