Jump to content

நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பூசகர் ! யாழில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடையேயே விசனத்தை உருவாக்கியுள்ளது.

அது மட்டும் அன்றி இரவு நேரத்தில் ஊராரின் பிரசன்னம் இல்லா நேரத்தில் இவ்வாறு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும் உண்மையான உள்நோக்கம் என்ன என்று ஊரார் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்னர் விபத்தில் தானாகவே சிக்கி கொண்டு தன்னை கொலை செய்ய வந்ததாக கூறிய இந்த பூசகர், தானே உண்டியலை உடைத்து விட்டு ஊராரின் தலையில் அதனை போடும் முற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.

எனினும், உண்டியல் உடைக்கப்பட்டமையை அந்த பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர். இதனால் இந்த பிரச்சினை மக்கள் மீது சுமத்தப்படவில்லை எனவும் அந்த பகுதி பொது மக்கள் கூறியுள்ளனர்.

அது மட்டுமன்றி இந்த பூசகரது இந்த அடாவடி தனமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் குருமார் ஒன்றியம் மீது மக்கள் விசனம் தெரிவித்தனர்.

http://jaffnaboys.com/2020/07/09/16001/

Link to comment
Share on other sites

பூசாரி பூட்டை உடைப்பதும், பிக்கு தண்ணியடிப்பதும், பாதிரியார் பலாத்காரம் செய்வதும் இவை அனைத்தும் கடவுளுடைய திருவிளையாடல்களே. கலி முற்றிய காலத்தின் அறிகுறிகள். பக்தியோடு நோக்கவேண்டும்.  

*சென்னையில் அதிசயம்*        சென்னை,  அமைந்தகரை பகுதியில் நேற்றுக் காலை சாலையில் சென்ற பசு மாடு செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.ஒரு மாடு தனது சொந்த பால் குடிக்க ஆரம்பிக்கும் போது அது கலியுகத்தின் கடைசி கால் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று. இது சாத்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த படம் காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்டது

Link to comment
Share on other sites

கோவில் பூசை செய்பவர்  கடவுளைக் காட்டி மக்களின் கண்களை கட்டி வித்தை காட்டிவிட்டு  மக்களிடம்  கொள்ளையடிப்பது பல ஆண்டுகளாக நடைபெறுவதுதான். இவர் கொஞ்சம் வித்தியாசமான பூசாரி பகல்கொள்ளை அடித்ததது போதாது என்று இரவிலும் கொள்ளையடிக்கிறார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.