Jump to content

தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்ற, இந்தியாவின் பங்களிப்பு அவசியம்..!- சத்தியலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்ற, இந்தியாவின் பங்களிப்பு அவசியம்..!- சத்தியலிங்கம்

Sathiyaligam-1.jpg?189db0&189db0

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட.மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய் நாடாக இருக்கும் பாராத தேசம் தலையீடு செய்ய வேண்டும்” – என்றுள்ளது.

https://newuthayan.com/தமிழர்களின்-அடையாளங்களை/

Link to comment
Share on other sites

இந்தியா  நேர்மையாக செயற்பட்டிருந்தால் தமிழர் பிரச்சனையயும் தீர்த்து சிங்களவர்களின் கொட்டத்தையும் அடக்கி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட.மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் அடையாளங்களை அழிப்பதற்கு துணை போகும் இந்தியாவிடம் தேர்தல் நேரத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்துவது தகுமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உதவியுடன்தான் எனது அடையாளம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், நான் அழிந்து போவதே மேல்.  😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இயலாமையா? அறியாமையா இவர்ளை இப்படிப் பேச வைக்குது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, satan said:

 இயலாமையா? அறியாமையா இவர்ளை இப்படிப் பேச வைக்குது? 

சட்ட அறிவுடைய அரசியல்வாதிகளின் கூடாரமான தமிழர்தரப்பிடம் அரசியலறிவு இருந்திருந்தால் எமதினம் எப்போது விடியலைக் கடந்திருக்கும்.

இந்தியாவிலேயே தமிழின அடையளங்களைச் சிதைப்பதில் முன்னிற்கும் இந்தியாவிடம்  இவர்கள் உதவிகோருவது  குரங்கின் கையிற் பூமாலையைக் கொடுப்பதற்கு ஒப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

 இயலாமையா? அறியாமையா இவர்ளை இப்படிப் பேச வைக்குது? 

சூழ்னிலைக் கைதி 🤥

Link to comment
Share on other sites

On 10/7/2020 at 15:28, nochchi said:

சட்ட அறிவுடைய அரசியல்வாதிகளின் கூடாரமான தமிழர்தரப்பிடம் அரசியலறிவு இருந்திருந்தால் எமதினம் எப்போது விடியலைக் கடந்திருக்கும்.

இந்தியாவிலேயே தமிழின அடையளங்களைச் சிதைப்பதில் முன்னிற்கும் இந்தியாவிடம்  இவர்கள் உதவிகோருவது  குரங்கின் கையிற் பூமாலையைக் கொடுப்பதற்கு ஒப்பானது.

இவர்கள் தமிழின விரோத இந்தியாவின் கைக்கூலிகளாகாவே அறிக்கைகளை விடுகிறார்கள்!

Link to comment
Share on other sites

On 10/7/2020 at 15:28, nochchi said:

சட்ட அறிவுடைய அரசியல்வாதிகளின் கூடாரமான தமிழர்தரப்பிடம் அரசியலறிவு இருந்திருந்தால் எமதினம் எப்போது விடியலைக் கடந்திருக்கும்.

இந்தியாவிலேயே தமிழின அடையளங்களைச் சிதைப்பதில் முன்னிற்கும் இந்தியாவிடம்  இவர்கள் உதவிகோருவது  குரங்கின் கையிற் பூமாலையைக் கொடுப்பதற்கு ஒப்பானது.

8 hours ago, போல் said:

இவர்கள் தமிழின விரோத இந்தியாவின் கைக்கூலிகளாகாவே அறிக்கைகளை விடுகிறார்கள்!

கைகட்டி சேவகம் செய்து கொண்டு கொள்ளையடிக்கிறதை அடிப்பம் என நினைச்சிருக்கார்!

 

Link to comment
Share on other sites

On 9/7/2020 at 17:26, உடையார் said:

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட.மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தூதரக படலைக்க மோடியை சந்திச்சு போட்டு இந்தா மோடியை சந்திக்க போறம் என்டு சொல்லி 1 வருஷத்துக்கு மேல ஓடிப்போச்சு.

இப்பிடி எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாத்தி அரசியல் நடத்துற பிளான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பின்னாலை  நிக்கிறார் என்று அறிக்கை விட்டவரை  தேடுகிறம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.