Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 
சாதி எம் இன‌த்துக்கு பிடிச்ச‌ ஒரு ச‌ணிய‌ன் என்று தான் சொல்ல‌னும் 😓, ச‌ரி சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லுகிறேன் 🙏


அன்மையில் என‌து ம‌ச்சாள் சாதி ம‌றுப்பு திரும‌ண‌ம் செய்தா , ஆர‌ம்ப‌த்தில் மாமா இந்த‌ திரும‌ண‌த்த‌ ந‌ட‌த்த‌ விட‌ மாட்டேன் என்று வில்ல‌ன் போல் நின்றார் , புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு முடிவு எடுத்தா அதில் பெரிசா மாற்ற‌ம் செய்ய‌ மாட்டின‌ம் , என்ர‌ ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்தா அந்த‌ பெடிய‌னை தான் செய்வேன் என்று விடா பிடியில் நின்றா , அத்தையும் மாமாவும் எவ‌ள‌வு சொல்லியும் ம‌ச்சாள் பெற்றோரின் சொல்ல‌ கேக்கிற‌ மாதிரி இல்ல‌ ,  ப‌ல‌ பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு அத்தையும் மாமாவும் திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திச்சு ம‌க‌ளின் திரும‌ண‌த்த‌ த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில்  கோயிலில் வைத்து தாலி க‌ட்டி வைத்தார்க‌ள்  ,

அடுத்த‌ நாள் ம‌ண்ட‌ப‌த்தில் ம‌ன‌ ம‌க்க‌ள் இருக்க‌ உற‌வின‌ர்க‌ள் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ள் திரும‌ண‌ த‌ம்ப‌திக‌ளை வாழ்த்தி விட்டு புகைப் ப‌ட‌ம் வீடியோ எடுத்து சாப்பிட்டு ஆட்ட‌ம் பாட்ட‌ம் போட்டு அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு ந‌ல்ல‌ மாதிரி முடிஞ்சுது 💏🙏,


ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விட‌ வில்லை என்ற‌ மாதிரி , திரும‌ண‌ம் முடிந்தாப் பிற‌க்கு ஒரு  சில‌ சொந்த‌ங்க‌ள் அத்தையையும் மாமாவையும் ந‌க்க‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கிட்டின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் இருந்து  ( எப்ப‌ மீன் பிடிக்க‌ போவிங்க‌ள் என்று  😓)
இத‌ கேக்க‌ என‌க்கு கெட்ட‌ கோவ‌ம் வ‌ந்திச்சு , ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்த‌ பெடிய‌னின் பெற்றோர்  ஊரில் மீன் பிடிக்கும் தொழில் செய்தார்க‌ள்  , அத‌ வைச்சு ஒரு சில‌ சொந்த‌ங்க‌ள் ந‌க்க‌ல் நையாண்டியில் இற‌ங்கிட்டின‌ம் , அவ‌ர்க‌ளின் ந‌க்க‌ல் நையாண்டி உண்மையில் ம‌ன‌ உளைச்ச‌ல‌ அத்தைக்கும் மாமாவுக்கு குடுத்து இருக்க‌ கூடும்  , 

நான் உற‌வுகளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌து இல்லை , அத்தை என்னையும் திரும‌ண‌த்துக்கு அழைத்தா நான் போக‌ வில்லை , ஒரு சொந்த‌ங்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு போய் விட்டு ம‌ற்ற‌வையின் நிக‌ழ்வுக்கு போகாம‌ல் விட்டால் என்னை அதிக‌மாய் க‌ழுவி ஊத்துங்க‌ள் , 

என‌க்கு உந்த‌ ஒன்றுக்கும்  உத‌வாத‌ சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , சொந்த‌ங்க‌ள் எல்லாரும் என் ம‌ச்சாளின் திரும‌ண‌த்துக்கு எதிரா நின்று இருந்தாலும் நான் த‌னி ஒருவ‌னாய் அவ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டுக்கு கூட்டிட்டு போய் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌த்தை ஜாம் ஜாம் என்று  செய்து வைத்து இருப்பேன் ,  பின் விலைவுக‌ளை ப‌ற்றி நான் பெரிசா யோசிக்க‌ மாட்டேன் ,  

என‌க்கு இங்கை ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ள் என்று இருக்கின‌ம் , இதுவ‌ரை நாங்க‌ள் சாதிய‌ ப‌ற்றி க‌தைச்ச‌து இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் எந்த‌ ஊர் என்று கேட்டு இருக்கிறோம் எந்த‌ சாதி என்ற‌ வார்த்தை எங்க‌ள் வாயில் இருந்து வெளியில் வ‌ந்த‌து இல்ல‌ 🤞😍

பெரியார் சாதிய‌ ஒழித்தாரோ இல்லையோ , எங்க‌ட‌ த‌லைவர் சாதிய‌ இல்லாம‌ல் செய்த‌வ‌ர் , அவ‌ரின் கொள்கையை பார்த்து வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் சாதிய‌ ஒரு பொருட்டாக‌வே க‌ருத‌ மாட்டார்க‌ள் 😘🤞


யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ஆகிய‌ நீங்க‌ள் சாதிய‌ தூக்கி எறிந்த‌  உற‌வுக‌ளாய் இருந்தா உங்க‌ளின் அனுப‌வ‌ங்க‌ளை இந்த‌ திரியில் ப‌கிர்ந்து கொள்ளுங்கோ 🤞

அன்புட‌ன் பைய‌ன்26 😘🤞

 

 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விட‌ வில்லை என்ற‌ மாதிரி , திரும‌ண‌ம் முடிந்தாப் பிற‌க்கு ஒரு  சில‌ சொந்த‌ங்க‌ள் அத்தையையும் மாமாவையும் ந‌க்க‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கிட்டின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் இருந்து  ( எப்ப‌ மீன் பிடிக்க‌ போவிங்க‌ள் என்று  😓)
இத‌ கேக்க‌ என‌க்கு கெட்ட‌ கோவ‌ம் வ‌ந்திச்சு , ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்த‌ பெடிய‌னின் பெற்றோர்  ஊரில் மீன் பிடிக்கும் தொழில் செய்தார்க‌ள்  , அத‌ வைச்சு ஒரு சில‌ சொந்த‌ங்க‌ள் ந‌க்க‌ல் நையாண்டியில் இற‌ங்கிட்டின‌ம் , அவ‌ர்க‌ளின் ந‌க்க‌ல் நையாண்டி உண்மையில் ம‌ன‌ உளைச்ச‌ல‌ அத்தைக்கும் மாமாவுக்கு குடுத்து இருக்க‌ கூடும்

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

வெள்ளைக்காரரெண்டா வெள்ளைச் சாதி. தமிழரெண்டா என்னென்று ஏற்கமுடியும்? பிறகு கெளரவம் என்னாகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார்.

பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே.

நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ....

இதுதான் நிலைமை பையா...

உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.

Link to comment
Share on other sites

2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்தவுடன் நாங்கள் வாழ்கிற நாடுகளில் எமது மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பும் பணியில் இறங்கினோம். 2005 சித்திரை அளவில் எமது பணிகள் உடனடி நிவாரணம் என்ற நிலையில் இருந்து தட்காலிக்க தங்குமிடம் மற்றும் மருத்துவமி தாய் சேய் நல திட்டங்களுக்கு உதவுதல் என விரிவடைந்தது. அதனால் உடனடி நிவாரணத்துக்காக சேர்த்த உடைகள் காலணிகளின் ஒரு பகுதி எமது மக்களுக்கு இனி தேவை வராது என்ற காரணத்தால் உள்நாடு தொண்டமைப்புக்கு கொடுக்க வழிசெய்தோம். சக தொண்டர் தனது வானில் பொருட்களை கொண்டுசெல்ல முன்வந்தார். எல்லோரும் சேர்ந்து பொருட்களை வானில் ஏற்றினோம். ஏற்றிய பின்னர் பொருட்களை இறக்க உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வந்த தொண்டர் ஒவொருவரும் ஒவொரு சாட்டு சொன்னார்கள். நான் உள்ளே அடுத்த தடவை கொண்டு செல்லவேண்டிய பொருட்களை பொதிசெய்து அடுக்குவதில் மும்மரமாக இருந்தேன். நான் அந்த வேலையை விட்டுவிட்டு வானில் ஏறி சென்று பொருட்களை இறக்குவத்திட்கு உதவினேன். இவ்வாறு  இருமுறை செய்து அன்றைய வேலையை முடித்தோம். 

சில வாரங்கள் கடந்து எங்களுக்கு  அயராது உதவுகிற ஒரு அம்மாவுடன் நான் கதைத்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வான் தந்து உதவிய தொண்டர் தனக்கு செய்த உதவிகள் பற்றி கூறி நீங்கள் வானிலை போய் அவருக்கு உதவி செய்ததுக்கு எவ்ளவு நல்லது. மற்றவை அப்படி செய்ய மாட்டினம் என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. மேலும் வினவிய பொழுது சொன்னார் "அவர் தாழ்ந்த சாதி" என்று சொல்லி அவருடன் போக பலர் தயங்குகிறார்கள் என்றார். அவரை எப்படி எங்கள்  சமூகம் தமது தேவைக்கு பாவித்துவிட்டு பின்னர் இப்படி செய்கிறார்கள் என்று மனம் நொந்தார். 

இதை போல பல நிகழ்வுகளை நான் கண்டிருந்தாலும்  இந்த ஒரு நிகழ்வு எனது சக தொண்டர்கள் மீதும் எமது சமூகம் மீதும்  பெரும் வெறுப்பை கொண்டுவந்தது. எனது சக தொண்டர்கள் பலர் என்னை விட வயதில் கூடியவர்கள். பெரிய பதவிகளி பட்டம்  பெற்றவர்கள். நாங்களோ பல்கலைகழகம் முடித்திவிடு அப்போதான் வேலை வாழ்கையை தொடங்கின காலம். நாங்கள் எல்லோரும்  வாழ்த்த நாட்டில் இருந்து கலைக்கப்பட்டு வேறு நாட்டில் வேரூன்றி வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் சாதியை மட்டும் இழக்கவில்லை. கடல் கடந்து வந்தாலும் சாதி மட்டும் எமக்கு பெரிதாக தெரிகிறது. எமது சமூகத்தில் ஒருபகுதியை சாதி அடிப்படையில் ஒடுக்கிக்கொண்டு நாங்கள் வாழும் நாடுகளில் இனத்துவேசம் இருப்பதாக  அதே கூட்டம் அலறுவது நகைப்பிட்குரியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு.  ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல்.

அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல்.

விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும்.

சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. 

ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார்.

பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே.

நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ....

இதுதான் நிலைமை பையா...

உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.

குஜாரத்து பிள்ளையள் நன்றாக படித்தும் 
உயர் வேலையிலும் இங்கு பலபேர் இருக்கிறார்கள் 
கூடுதலாக (பிரமணரோ தெரியவில்லை) அசைவம் உண்பதில்லை 
பலருடன் நெருங்கி பழகி வந்தேன் .... 
இப்போ இந்த மோடி ஆதரவு ..அதனால் கோமாளி ட்ரம்முக்கு ஆதரவு 
என்று அவர்களை பற்றி நான் வைத்த்திருந்த நல்ல மதிப்புகளை 
அவர்களாகவே கெடுத்துவிட்டார்கள். 
இப்போ ஏனோ தானோ என்றுதன பழகிறது ...மனசு இடம்தருகுதில்லை 

அநீதிகளை அங்கீகரிப்பவர்களுடன் 
அண்டி பழகுவது கொஞ்சம் சஞ்சாரமக இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

hqdefault.jpg

அதை போன மாசம் தெரியாம சொல்லிட்டேன்.. போவீயா..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

germanyயில்  munster என்ற‌ இட‌த்தில் ,  நீங்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் இருந்து 250கிலோ மீற்ற‌ர் என்று நினைக்கிறேன் தாத்தா , 

போக‌ விட்டு குறை சொல்லி க‌தைப்ப‌தில் சாதிய‌‌  தூக்கி பிடிப்ப‌தில் எங்க‌டைய‌ல‌ மிஞ்ச‌ இந்த‌ உல‌கில் ஆட்க‌ள் இல்ல‌ தாத்தா ,

ஊரில் பெடிய‌ங்க‌ள் போராடி உயிர் நீக்க‌ அத‌ சாட்டி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து செட்டில் ஆகிட்டு எம்ம‌வ‌ர்க‌ள் சாதிய‌ ப‌ற்றி க‌தைப்ப‌து வெக்க‌க் கேடு , 

நாட்டுக்காக‌ இன‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ள் கூட‌ ஜாதிய‌ ப‌ற்றி க‌தைச்ச‌து இல்ல ‌ அவ‌ர்க‌ளின் விருப்ப‌ம் த‌மிழீழ‌ ம‌ண்ணில்  சாதி இருக்க‌ கூடாது , த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி‌ இல்ல‌ த‌மிழீழ‌த்தில் இத‌ என் க‌ண்ணால் பார்த்து இருக்கிறேன் சிறு வ‌ய‌தில் , 

எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

அதுவும் இஞ்சை ஜேர்மனியிலை நடந்திருக்கு.
அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமாயின், ஊரில் தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள், சாப்பாட்டு கடை திறந்தால், அங்கே கொத்து ரொட்டியும்.... ஆட்டிறைச்சி கறியும்... அந்தமாதிரி என்று அனைவரும் அலை மோதுவர். இது பொருளாதாரம்உடைத்த சாதீயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

உண்மை.  

அரசியலரங்குமுதல் அனைத்துத் தளங்களிலும் சாதீயம் கோலோச்சி வருகிறதென்பதை சரியாகச் சுட்டியுள்ளீர்கள். புலத்திலே இடத்துக்கிடமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் கடைப்பித்தலும் அனுசரித்தலுமாக நகர்கிறது. நீங்கள் சுட்டியுள்ளதுபோன்று  'பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்'  என்ற இலக்கைத் தமிழீழம் அடையச் சரியானதொரு அரசியல் இலக்கு எட்டப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைத்து, முழுமையான அறிவுப்பரப்புடைய ஒரு குமுகாயமாகும்போது பொருளாதார சமத்துவம் மலரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை எமதினம் தொட இன்னும் இரண்டு தலைமுறைகளையாவது கடக்கவேண்டிவரலாம். ஆனால் புலத்திலே பொருளாதார சமநிலையிலும் சாதி பார்க்கப்படுகிறதே. நானறிந்த ஒரு பொதுத் தளத்திலே நகரமட்டத்திலே இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு யார்யார் என்ன என்பதை கூறிவைத்துள்ளதோடு பிள்ளைகள் மிகநெருக்கமாகப் பழகும் நட்புவட்டத்திலே உரையாடிய சம்பவங்களையும் அறிந்துள்ளேன்.எனவே இங்கும் ஒரு இரண்டு தலைமுறைகளைக் கடக்கும்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து சாதியென்பது தேய்நிலைக்குச் சென்றுவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு.  ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல்.

அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல்.

விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும்.

சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. 

ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் . 

யாழ்ப்பாண‌த்தை சிங்க‌ள‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்ற‌ மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , 

மீசாலையில் 4வீடு இருந்த‌து சொந்த‌ங்க‌ள் ம‌ற்றும் ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலைக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளை எங்க‌ளுட‌ன் தான் த‌ங்க‌ வைச்சோம் ,  என‌க்கு என்ர‌ சொந்த‌த்த‌ த‌விற‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளைத் தெரியாது , கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ ஏதோ நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் போல் ஆகி விட்டோம் , 
ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் எல்லாரும் ஒன்னாத்தான் விளையாடுவோம்  , ஊரில் நாங்க‌ள் சாதி பார்த்த‌து இல்ல‌ , அப்ப‌டி இருந்த‌ ப‌டியால் தான் அந்தப்‌  பெரிய‌ வீடுக‌ளில்   ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள் ஒற்றுமையா த‌ங்கி இருந்தார்க‌ள் 🙏🤞😘

இட‌ம்பெய‌ர்ந்து இருந்தாலும் அந்த‌ வாழ்க்கைய‌ நினைக்கையில் மிக‌வும் ம‌கிழ்ச்சியாய் இருக்கு உடையார் ஜ‌யா , 

நாங்க‌ள் என்ன‌ தான் செய்தாலும் எங்க‌ளை எங்க‌ட‌ பாட்டில் விளையாட‌ விடுவின‌ம்  ,

வெளி நாட்டில் இருக்கும் சொந்த‌ங்க‌ள் தான் சாதி பாப்பின‌ம் , ஊரில் சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ ,  ஊர் சொந்த‌ங்க‌ளுட‌ன் புல‌ம் பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ளை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது உடையார் ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

நான் யாழ் திருநெல்வேலியில் இருந்த பரமேசுவராக் கல்லுாரியில் படித்தவன். இன்று கல்லூரி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிக்கு திரு. சிவபாதசு்தரம் அவர்கள் அதிபராக இருந்தார். அங்கு சாதி பார்க்கும் பழக்கம் எதுவும் புகுந்துவிடாது கல்லுரியைத் திறம்பட அவர் நிர்வகித்தும் வந்தார். எங்கள் வகுப்பிலும் நாங்கள் அனைவரும் மாணவ மாணவிகளாகவே இணைந்திருந்தோம். அந்த அனுபவம்.... அனைவரும் மனிதர்களே என்ற உணர்வை எங்களுள் வளர்த்துவிட்டிருந்தது.

நல்லூர்த் திருவிழாவிற்குப் போடும் தண்ணீர்ப்பந்தலில் தொண்டு செய்யும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று வேறாக வைக்கப்டிருக்கும் கறள்பிடித்த மூக்குப் பேணிமுறைமையை மாற்ற எங்களால் முடியவில்லை. ஆனாலும் அந்தப் பேணிகளையே நாங்கள் பாவித்து மோர், ஊறுகாய், சக்கரைத்தண்ணிர் என்று அருந்திப் பெரிசுகளிடம் எதிர்ப்பும், சிலரிடம் பாராட்டும் பெற்றுள்ளோம். பிற்பட்ட நாட்களில் சாதி அடிப்படையில் சிறுபான்மைத் தமிழரென்று கட்சி தொடங்கப்பட்டதும், எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்களும் அதற்கு ஆதரவுநல்க முற்பட்டதும் கண்டு எங்கள் ஆர்வம் குறைந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எங்கள் சொந்தங்களில் பலர் குலம் கோத்திரம் பாராது காதலித்தும், பேசியும் கல்யாணம் செய்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக நன்றாகவே வாழ்கின்றனர்.

1 hour ago, Nathamuni said:

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

உண்மைதான் என்றாலும், ஒரு நல்ல தலைவனாலும் இதனைத் துடைத்தெறிய முடியும். ஒரு தலைவன், அவன் பிரபாகரன், செய்தும் காட்டினான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் இருந்தே சாதீயம் பற்றி பெரியவர்கள் கதைப்பதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.அதிலும்  சில நெருங்கிய சொந்தங்கள் கொஞ்சம் அதிகமாகவே அதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததயும் கவனித்தேன். எனெக்கென்று ஒரு கொள்கை தோன்றும் வரை, சாதி பாகுபாடு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது ஒன்று என்றே நினைத்தேன். அதிலும் பக்கத்துக்கு வீட்டு மனிசி அவர்களை இழிவாக நடத்துவதை பார்க்கும்போது எங்கட அப்பம்மா, அம்மம்மா அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தும் போது அதுவே பெரிய விசயம் என்று நினைத்தேன். வளர்ந்தபிறகு என்னுள் நிறைய கேள்விகள். பெரியவர்கள் எல்லோரையும் நிறைய கேள்வி கேட்டுருக்கிறேன்.

ஆதி காலத்தில் தொழில் நிமித்தம் வந்த பிரிவுகள் பிற்காலத்தில் எப்படியோ மருவி இப்படி ஒரு கேவலமான நிலைக்கு வந்திட்டுது. இது எமது மண்ணில் எப்ப தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காரரிடம் 700 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது என்று அறிந்தேன். 1950 களில் இருந்து அந்த முறை ஒழிக்கப்பட்டாலும்  மறைமுகமாக இப்பவும் பல பிரிட்டிஷ் குடும்பங்களில் சாதி முறைகள் மிகவும் உக்கிரமாக கடைபிடிக்கிறார்கள். 1994 களில் என்னுடன் மாலைதீவில் படிப்பித்த ஒரு வெள்ளைக்காரி இதைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவரது அம்மா பக்கம் யாருமே அவவின் குடும்பத்துடன் சேர்வதில்லை அன்றும் அதற்கு அவவின் அப்பாவின் கிளாஸ் குறைவு என்பதே காரணம் என்றும் கூறினா. அண்மையில் J K Rawling ஹரி பொட்டெர் புத்தகம் எழுதிய பில்லியனரயும்  எல்லா உயர் மட்ட வெள்ளைகார்களும் அவ்வளவு மதிப்பதில்லை என்று வாசித்தேன். 


நானாக ஒருபோதும் இவர் என்ன சாதியாக இருக்கும் என்று  ஒருநாளும் நினைப்பதில்லை. ஆனால் என்னுடைய நிறைய தோழிகள் அப்படியான ஒரு மன நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள்.  அவர்களுடன் இந்தியாவில் ஹொஸ்டலில் இருக்கும்போது  அவர்கள் சில சக யாழ்ப்பாண மாணவிகளை நடத்திய விதமும் அதனால் அவர்கள் மனம் உடைந்து போய் " ஊரில் தான் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை, படிக்க வந்த இடத்திலுமா" என்று  சொல்லி வேதனை பட்டார்கள். நான் மாத்தளை, கொழும்பில் படித்ததால் இந்த பேச்சு அவ்வளவும் வருவதில்லை. அப்படி இருந்தும் ஒரு மாணவிக்கு வேலையே எவர் என்ன சாதி என்று கண்டறிந்து அவர்கள் முன்னாலேயே சாதியம் பற்றி கதைத்து அவர்கள் மனதை நோகடிப்பார். 

கொழும்பு பாடசாலைகளில் நிறய இந்திய செட்டி மாணவிகள், மலையக  மாணவிகள் படித்தார்கள். அவர்களையும் விட்டு வைத்ததாக இல்லை. நீங்கள் இந்த ஊர் இல்லை, உங்கள் தமிழ் சரியில்லை என்று தாழ்த்தி கதைப்பார்கள். நானும் ஆரம்பத்தில் இந்த கதையில்  ஈடுபட்ட ஆள்தான். ஆனால் மிக விரைவில் அது தவறு என்று உணர்ந்து விட்டேன். 

எனது மகன்மாருக்கு சாதியம் பற்றி நல்லா தெரியும். அதை அவர்கள் ஒரு சமூக குற்றம், கேலிக்கு உரிய பாகுபாடு அது என்று சொல்வார்கள். அண்மையில் தங்கையின் மகளுடன் கதைக்கும்போது கனடா பள்ளிக்கூட எமது ஊர் பிள்ளைகள் சாதியம் பற்றி கதைப்பதாகவும் பிரித்து  வைத்து கூட்டம் கூடுவதாகவும் சொல்லக்கேட்டு மிகவும் ஆத்திரம் அடைந்தேன். இப்படி எனது இளைய தலைமுறை வரை இந்த இழிவான பாகுபாடு சென்றைந்து விட்டதே என்று தங்கையிடம் சொல்லி கவலை பட்டேன் . வெளிநாடுகளில் யாரவது உழைத்தோ படித்தோ நல்லா வந்துவிட்டால் , அவர் பின்புலம் பற்றி அறிந்து அவர்களை விழுத்துவதிலே  சிலருக்கு ஒரு சிற்றின்பம். 

இப்படியான ஒரு சமுதாயத்தில் பிறந்து வளர்ந்ததால், எமக்கென்று ஒரு கொள்கை இருந்தாலும் நானோ அல்லது எனது உறவினர்களோ எமது சமுதாயத்தை விட வேறு வேறு ஒரு சமுதாயத்தில் உள்ளவரை கலியாணம் செய்யும்போது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைப்பது தான் முன்னுக்கு நிக்கிறதே ஒழிய எனது கொள்கை அல்ல என்பதுதான் உண்மை. இந்தியர்கள், வெள்ளைக்காரர் மற்றும் ஊரவரை செய்தால் ஒன்றும் சொல்லாத எமது சமூகம் எமது மக்களை மற்றும் கூறு போட்டு பிரிப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 

பிகு : மற்ற சமுதாயங்கள், நாட்டவர்களை இழிவு படுத்தி கதைத்த எனது சொந்தங்கள், நற்புகள் எல்லாம் தமது பிள்ளைகள் அப்படி செய்தவுடன் பேச்சை மாற்றி கதைக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமாயின், ஊரில் தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள், சாப்பாட்டு கடை திறந்தால், அங்கே கொத்து ரொட்டியும்.... ஆட்டிறைச்சி கறியும்... அந்தமாதிரி என்று அனைவரும் அலை மோதுவர். இது பொருளாதாரம்உடைத்த சாதீயம்.

ஊரில் மேட்டுக்குடி திமிரில் இருந்தவர்கள்,கோட்டு சூட்டு அணிவதை மேன்மையாக நினைத்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வந்து பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணத்துக்காக எந்த வேலையும் செய்தார்கள். பணத்தின் முன் அவர்களின் ஊர் வரட்டுக் கௌரவங்கள் கரைந்து போயின.தினசரி துப்பவரவு தொழில்   செய்கின்றனர்.உணவு விடுதிகளில் கோப்பை கழுவுகின்றனர்.வீதி துப்பரவாக்கும் தொழில்கூட செய்கின்றனர். இருந்தாலும் சாதி எனும் கையாலாக தனத்தை இன்னும் விடவேயில்லை.

இவர்களுக்கு   சாதி குறைந்தவர்கள் என கருதப்படும் வீடுகளில் வயிறு புடைக்க உண்டு விட்டு  புறம் சொல்லும் திமிர்பழக்கமும் இன்றும் குறையவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பகிடி என்ன என்றால் .... பார்ப்பான் ஒட்டுமொத்தமாக 
எல்லோரையும் கழுவி ஊத்துகிறான் என்பது கூட தெரியாமல் இருப்பதுதான்.

மேலே சிலர் பொருளாதார மேம்பாடு பற்றி எழுதுகிறார்கள் 
அது ஒரு சிலரை மீட்க்கும் ஒரு சமூக இடைவெளியை நிரப்பாது 
ஒரு சமூகமே பொருளாதார வளர்ச்சி  கண்டால்? கூட நிற வேற்றுமை 
போல இதுவும் தொடரும். 

அறிவு வளர்ச்சி ஒன்றுதான் எல்லா மனித அவலத்தையும் மீட்க்கும் 
எல்லா முடாள்தனமும் அறிவின்மையில் இருந்துதான் உருவாக்குகிறது 
ஒரு சக மனிதனை தாழ்த்துவதில் தொடங்கி சாயிபாபா நித்தியானந்தாவை போன்ற 
பொறுக்கிகளி தொழுவது வரை அறிவீனம்தான் அடிப்படை காரணம். 

மேலே நடந்த சம்பவங்களை வாசித்து சிலர் கோபம் கொண்டிருக்கலாம் 
எனக்கு அவர்கள் மேல் பரிதாபம் மட்டுமே வருகிறது அதுக்கு காரணம் 
அவர்கள் முன்னேறிய நாடுகளுக்கு வந்தும் அறிவு ரீதியாக எந்த முன்னேற்றமும் 
காண கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான்.
அறிவு என்பதை சிலர் தப்பாக படித்து பட்டம் பெறுவதை எண்ணாதீர்கள் 
மனித அறிவு என்பது ஆறாம் அறிவின் செயல்பாடு பற்றியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

 

ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுகம் ஒன்றை சேந்தவர்கள் சிங்கப்புர் பென்சனியர் பரம்பரையை சேர்ந்தவர்கள்.அழகான இளம் பெண்கள்.அதே சமுகத்ததை சேர்ந்தவர்கள் கோவிலில் வெளியே நிக்க இவர்கள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உள் போவார்கள்.யாரும் தடுப்பிதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகள் நீர்த்துப்போக  வேண்டும் என்றால்(அழிந்துபோக என்று சொல்லவில்லை, அது முடியாது). இதுபோல்  சாதியின் பேரால் கலந்துரையாடுவதே தப்பு என்றுதான் நினைக்கின்றேன்.பொதுவாக யாழ் நகரத்துக்குள் மிக மிக சொற்பமாகவே இருந்தது. அதற்கு காரணம் அரசாங்க வேலைகள், கராஜ்சுகள், பட்டறைகள், மற்றும் தொழிற்சாலைகள்.இவைகளில் எல்லாப் பொடியன்களும் பரவலாக வந்து வேலைகள் செய்வதுடன், சேர்ந்தே சினிமாவுக்கு, கடைகளுக்கு, நண்பர்களின் வீடுகளுக்கு என்று சகஜமாகப் போய் வருவதுண்டு.....!

காதல்தான் முக்கியமாக சாதிகளை உடைத்து கலியாணமும் கடந்து சென்றது. ஆனால் இங்கேயும் ஒரு தூரதிஷ்ட்டம் யாதெனில் அவர்களது பிள்ளைகள் பெரியவர்களாகி பேசிச்செய்யும் கலியாணம் என்னும்போது (எல்லாப்பிள்ளைகளாலும் காதலிக்க முடிவதில்லை பறக்கத் தெரியாத குஞ்சசுகள்போல்)புருஷன் பெஞ்சாதி புடுங்குப் படுவினம் யாருடைய சாதிக்குள்ள செய்வதென்று......!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிய நச்சு தமிழரின் நாடி நரம்பு என எல்லாவற்றிலும்  ஊறிய பெரும் தலையிடி

அதை முற்றாக  ஒழிக்கணும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை

ஆனால் அது உடன் சாத்தியமில்லை

மாற்றுத்திருமணம் செய்தனர் என  நீங்கள்  குறிப்பிடுபவர்களே 

எவ்வளவு  காலத்துக்கு இதற்கு  முகம்  கொடுத்தபடி வாழ்வார்கள்  என்பதே கேள்விக்குறி  தான்

நக்கல்  நளினம்  வம்புக்கிழுத்தல் 

ஏன்  பொடியனின்  பக்கமும் கிளறி  கிளறி பதம்  பார்ப்பார்கள்

முடிவு??????

நீங்கள்  என்ன செய்திருக்கிறீர்கள் என்ற  கேள்விக்கு

எனக்கிருக்கும்  அதிகாரத்தை  வைத்து

கனக்க  செய்திருக்கின்றேன்

அதை  நான்  பகிரங்கப்படுத்தினால்

சம்பந்தப்பட்டவர்களை வம்பிழுக்க எம்  சமூகம்  தேடுதலை தொடங்கிவிடும்😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

1950 களில் இருந்து அந்த முறை ஒழிக்கப்பட்டாலும்  மறைமுகமாக இப்பவும் பல பிரிட்டிஷ் குடும்பங்களில் சாதி முறைகள் மிகவும் உக்கிரமாக கடைபிடிக்கிறார்கள். 1994 களில் என்னுடன் மாலைதீவில் படிப்பித்த ஒரு வெள்ளைக்காரி இதைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவரது அம்மா பக்கம் யாருமே அவவின் குடும்பத்துடன் சேர்வதில்லை அன்றும் அதற்கு அவவின் அப்பாவின் கிளாஸ் குறைவு என்பதே காரணம் என்றும் கூறினா

 

Class (வர்க்கம்) உம் Caste (தென்னாசியர்களுக்கே உரித்தானது) உம் ஒன்றல்ல. 

ஆங்கிலேயர்களில் elite,  middle class, working class என்ற வேறுபாடுகள் பொருளாதார அடிப்படையில் இருக்கின்றது. 
ஆனால் பொருளாதாரத்தில் சமமாக இருந்தாலும் பிறப்பால் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்பது வருணாசிரமத்தின் வழிவந்த கலாச்சாரத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் ஊறிப்போயிருக்கின்றது. 

 

போராட்டத்தாலும், புலம்பெயர்வாலும் சாதீய வேறுபாடுகள், திருமணம் தவிர்ந்து, குறைந்து போயிருந்தன. தாயகத்தில் எப்படி நிலைமை என்று சொல்லமுடியாது. ஆனால் இளம் தலைமுறை இப்படியான வேறுபாடுகளைப் பற்றி இப்போது அலட்டிக்கொள்வதில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

80 - 90 களில் புலம்பெயர்ந்த தமிழர் சாதியையும் மேற்குநாடுகளில் காவிவந்தாலும், பையன் சொன்னது மாதிரி கலப்புத் திருமணங்கள் நடக்கும்போது நக்கல் அடித்தது ஆச்சரியமாக இருக்கின்றது. இவர்களின் மேற்குநாடுகளில்  வசித்தாலும் ஒரு வளர்ச்சியையும் கலாச்சாரத்திலோ பண்பாட்டிலோ காட்டாமல் தாங்கள் வந்த காலத்திலேயே உறைந்து நிற்பவர்கள்.

 

இலண்டனில் சாதிகளைப் பற்றி அலட்டுபவர்களை நான் இதுவரை காணவில்லை. ஆனால் ஐரோப்பாவுக்குள் 90 களில் சகஜமாக சாதி சொல்லிக் கதைப்பதைப் பார்த்து அருவருப்படைந்திருக்கின்றேன்.   சுவிஸில் ஒரு முழு இரவு (நித்திரை கொள்ளாமல்!) பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றேன். ஆனால் இப்போது அங்கும் சாதி ரீதியான கதைகளைக் காணவில்லை. எனவே இது தமிழரிடம் இருந்து காணாமல் போகும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

 

ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்.

இது முற்றிலும் உண்மை , சும்மா வாய் சொல் அள‌வில் தான் பெரியார் பெண்ணிய‌ விடுத‌லைக்கு போராடினார் , சாதிய‌ ‌ இல்லாம‌ செய்தார் என்று பொய் வின்ப‌த்த‌ இப்ப‌வும் திராவிட‌ க‌ட்சிக‌ள் சொல்லிட்டுத் தான் இருக்கின‌ம் , 

தேர்த‌ல் நேர‌ம் பெரியாரை ம‌ற‌ந்து எந்த‌ தொகுதிக்கு எந்த‌ சாதி வேட்பாள‌ர‌ நிறுத்தினால் கூடுத‌ல் வெற்றியை ஈட்ட‌லாம் என்று திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

எங்க‌ட‌ போராட்ட‌மும் த‌லைவ‌ரும் இருந்து இருக்க‌னும் சாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இருந்து இருக்காது ஈழ‌ ம‌ண்ணில் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் மெது மெதுவாய் சாதி த‌லை தூக்குது , என்ர‌ ஈழ‌ அனுப‌வ‌த்தில் என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் ஈழ‌த்தில் சாதி இருந்த‌து இல்ல 💪🤞‌ , 

எங்க‌ட‌ கோயில் திருவிழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் 1994 அந்த‌க் கால‌ப் ப‌குதியில்  , இப்ப‌ ஒரு சில‌ கோயிலுக்கு ஒரு சில‌ சாதிக் கார‌ர் போக‌ முடியாது 😓

என்ன‌ செய்வ‌து பிர‌பாக‌ன் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌ர் பின்னால் ஒரு இன‌மே சாதி ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்து ஒற்றுமையா நின்றார்க‌ள் 🙏

த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் த‌லை கீழா போச்சு 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Oxford Centre For Hindu Studies என்ற ஒரு வெள்ளயள் குரூப் ஒன்று ஒன்லைன் கோர்ஸ் என்று எதையோ போட்டு விக்கினம். இந்த கோர்ஸ் £95.

உதில ஒரு பாடம்: Session Three: The Caste System

பிராமணர்கள் தான் பின்னே இருக்கிறார்கள். அவர்கள் தான் இதனை இங்கே தள்ளிக் கொண்டு வருகின்றார்கள்.

https://ochsonline.org/product/hinduism-ritual-yoga-caste-gender/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுகம் ஒன்றை சேந்தவர்கள் சிங்கப்புர் பென்சனியர் பரம்பரையை சேர்ந்தவர்கள்.அழகான இளம் பெண்கள்.அதே சமுகத்ததை சேர்ந்தவர்கள் கோவிலில் வெளியே நிக்க இவர்கள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உள் போவார்கள்.யாரும் தடுப்பிதில்லை.

காரைநகர்  பக்கம் இப்பிபியிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.