Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 
சாதி எம் இன‌த்துக்கு பிடிச்ச‌ ஒரு ச‌ணிய‌ன் என்று தான் சொல்ல‌னும் 😓, ச‌ரி சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லுகிறேன் 🙏


அன்மையில் என‌து ம‌ச்சாள் சாதி ம‌றுப்பு திரும‌ண‌ம் செய்தா , ஆர‌ம்ப‌த்தில் மாமா இந்த‌ திரும‌ண‌த்த‌ ந‌ட‌த்த‌ விட‌ மாட்டேன் என்று வில்ல‌ன் போல் நின்றார் , புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு முடிவு எடுத்தா அதில் பெரிசா மாற்ற‌ம் செய்ய‌ மாட்டின‌ம் , என்ர‌ ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்தா அந்த‌ பெடிய‌னை தான் செய்வேன் என்று விடா பிடியில் நின்றா , அத்தையும் மாமாவும் எவ‌ள‌வு சொல்லியும் ம‌ச்சாள் பெற்றோரின் சொல்ல‌ கேக்கிற‌ மாதிரி இல்ல‌ ,  ப‌ல‌ பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு அத்தையும் மாமாவும் திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திச்சு ம‌க‌ளின் திரும‌ண‌த்த‌ த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில்  கோயிலில் வைத்து தாலி க‌ட்டி வைத்தார்க‌ள்  ,

அடுத்த‌ நாள் ம‌ண்ட‌ப‌த்தில் ம‌ன‌ ம‌க்க‌ள் இருக்க‌ உற‌வின‌ர்க‌ள் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ள் திரும‌ண‌ த‌ம்ப‌திக‌ளை வாழ்த்தி விட்டு புகைப் ப‌ட‌ம் வீடியோ எடுத்து சாப்பிட்டு ஆட்ட‌ம் பாட்ட‌ம் போட்டு அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு ந‌ல்ல‌ மாதிரி முடிஞ்சுது 💏🙏,


ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விட‌ வில்லை என்ற‌ மாதிரி , திரும‌ண‌ம் முடிந்தாப் பிற‌க்கு ஒரு  சில‌ சொந்த‌ங்க‌ள் அத்தையையும் மாமாவையும் ந‌க்க‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கிட்டின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் இருந்து  ( எப்ப‌ மீன் பிடிக்க‌ போவிங்க‌ள் என்று  😓)
இத‌ கேக்க‌ என‌க்கு கெட்ட‌ கோவ‌ம் வ‌ந்திச்சு , ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்த‌ பெடிய‌னின் பெற்றோர்  ஊரில் மீன் பிடிக்கும் தொழில் செய்தார்க‌ள்  , அத‌ வைச்சு ஒரு சில‌ சொந்த‌ங்க‌ள் ந‌க்க‌ல் நையாண்டியில் இற‌ங்கிட்டின‌ம் , அவ‌ர்க‌ளின் ந‌க்க‌ல் நையாண்டி உண்மையில் ம‌ன‌ உளைச்ச‌ல‌ அத்தைக்கும் மாமாவுக்கு குடுத்து இருக்க‌ கூடும்  , 

நான் உற‌வுகளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌து இல்லை , அத்தை என்னையும் திரும‌ண‌த்துக்கு அழைத்தா நான் போக‌ வில்லை , ஒரு சொந்த‌ங்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு போய் விட்டு ம‌ற்ற‌வையின் நிக‌ழ்வுக்கு போகாம‌ல் விட்டால் என்னை அதிக‌மாய் க‌ழுவி ஊத்துங்க‌ள் , 

என‌க்கு உந்த‌ ஒன்றுக்கும்  உத‌வாத‌ சாதிய‌ தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , சொந்த‌ங்க‌ள் எல்லாரும் என் ம‌ச்சாளின் திரும‌ண‌த்துக்கு எதிரா நின்று இருந்தாலும் நான் த‌னி ஒருவ‌னாய் அவ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டுக்கு கூட்டிட்டு போய் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌த்தை ஜாம் ஜாம் என்று  செய்து வைத்து இருப்பேன் ,  பின் விலைவுக‌ளை ப‌ற்றி நான் பெரிசா யோசிக்க‌ மாட்டேன் ,  

என‌க்கு இங்கை ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ள் என்று இருக்கின‌ம் , இதுவ‌ரை நாங்க‌ள் சாதிய‌ ப‌ற்றி க‌தைச்ச‌து இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் எந்த‌ ஊர் என்று கேட்டு இருக்கிறோம் எந்த‌ சாதி என்ற‌ வார்த்தை எங்க‌ள் வாயில் இருந்து வெளியில் வ‌ந்த‌து இல்ல‌ 🤞😍

பெரியார் சாதிய‌ ஒழித்தாரோ இல்லையோ , எங்க‌ட‌ த‌லைவர் சாதிய‌ இல்லாம‌ல் செய்த‌வ‌ர் , அவ‌ரின் கொள்கையை பார்த்து வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் சாதிய‌ ஒரு பொருட்டாக‌வே க‌ருத‌ மாட்டார்க‌ள் 😘🤞


யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ஆகிய‌ நீங்க‌ள் சாதிய‌ தூக்கி எறிந்த‌  உற‌வுக‌ளாய் இருந்தா உங்க‌ளின் அனுப‌வ‌ங்க‌ளை இந்த‌ திரியில் ப‌கிர்ந்து கொள்ளுங்கோ 🤞

அன்புட‌ன் பைய‌ன்26 😘🤞

 

 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விட‌ வில்லை என்ற‌ மாதிரி , திரும‌ண‌ம் முடிந்தாப் பிற‌க்கு ஒரு  சில‌ சொந்த‌ங்க‌ள் அத்தையையும் மாமாவையும் ந‌க்க‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கிட்டின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் இருந்து  ( எப்ப‌ மீன் பிடிக்க‌ போவிங்க‌ள் என்று  😓)
இத‌ கேக்க‌ என‌க்கு கெட்ட‌ கோவ‌ம் வ‌ந்திச்சு , ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்த‌ பெடிய‌னின் பெற்றோர்  ஊரில் மீன் பிடிக்கும் தொழில் செய்தார்க‌ள்  , அத‌ வைச்சு ஒரு சில‌ சொந்த‌ங்க‌ள் ந‌க்க‌ல் நையாண்டியில் இற‌ங்கிட்டின‌ம் , அவ‌ர்க‌ளின் ந‌க்க‌ல் நையாண்டி உண்மையில் ம‌ன‌ உளைச்ச‌ல‌ அத்தைக்கும் மாமாவுக்கு குடுத்து இருக்க‌ கூடும்

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

வெள்ளைக்காரரெண்டா வெள்ளைச் சாதி. தமிழரெண்டா என்னென்று ஏற்கமுடியும்? பிறகு கெளரவம் என்னாகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார்.

பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே.

நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ....

இதுதான் நிலைமை பையா...

உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.

Link to comment
Share on other sites

2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்தவுடன் நாங்கள் வாழ்கிற நாடுகளில் எமது மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பும் பணியில் இறங்கினோம். 2005 சித்திரை அளவில் எமது பணிகள் உடனடி நிவாரணம் என்ற நிலையில் இருந்து தட்காலிக்க தங்குமிடம் மற்றும் மருத்துவமி தாய் சேய் நல திட்டங்களுக்கு உதவுதல் என விரிவடைந்தது. அதனால் உடனடி நிவாரணத்துக்காக சேர்த்த உடைகள் காலணிகளின் ஒரு பகுதி எமது மக்களுக்கு இனி தேவை வராது என்ற காரணத்தால் உள்நாடு தொண்டமைப்புக்கு கொடுக்க வழிசெய்தோம். சக தொண்டர் தனது வானில் பொருட்களை கொண்டுசெல்ல முன்வந்தார். எல்லோரும் சேர்ந்து பொருட்களை வானில் ஏற்றினோம். ஏற்றிய பின்னர் பொருட்களை இறக்க உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வந்த தொண்டர் ஒவொருவரும் ஒவொரு சாட்டு சொன்னார்கள். நான் உள்ளே அடுத்த தடவை கொண்டு செல்லவேண்டிய பொருட்களை பொதிசெய்து அடுக்குவதில் மும்மரமாக இருந்தேன். நான் அந்த வேலையை விட்டுவிட்டு வானில் ஏறி சென்று பொருட்களை இறக்குவத்திட்கு உதவினேன். இவ்வாறு  இருமுறை செய்து அன்றைய வேலையை முடித்தோம். 

சில வாரங்கள் கடந்து எங்களுக்கு  அயராது உதவுகிற ஒரு அம்மாவுடன் நான் கதைத்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வான் தந்து உதவிய தொண்டர் தனக்கு செய்த உதவிகள் பற்றி கூறி நீங்கள் வானிலை போய் அவருக்கு உதவி செய்ததுக்கு எவ்ளவு நல்லது. மற்றவை அப்படி செய்ய மாட்டினம் என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. மேலும் வினவிய பொழுது சொன்னார் "அவர் தாழ்ந்த சாதி" என்று சொல்லி அவருடன் போக பலர் தயங்குகிறார்கள் என்றார். அவரை எப்படி எங்கள்  சமூகம் தமது தேவைக்கு பாவித்துவிட்டு பின்னர் இப்படி செய்கிறார்கள் என்று மனம் நொந்தார். 

இதை போல பல நிகழ்வுகளை நான் கண்டிருந்தாலும்  இந்த ஒரு நிகழ்வு எனது சக தொண்டர்கள் மீதும் எமது சமூகம் மீதும்  பெரும் வெறுப்பை கொண்டுவந்தது. எனது சக தொண்டர்கள் பலர் என்னை விட வயதில் கூடியவர்கள். பெரிய பதவிகளி பட்டம்  பெற்றவர்கள். நாங்களோ பல்கலைகழகம் முடித்திவிடு அப்போதான் வேலை வாழ்கையை தொடங்கின காலம். நாங்கள் எல்லோரும்  வாழ்த்த நாட்டில் இருந்து கலைக்கப்பட்டு வேறு நாட்டில் வேரூன்றி வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் சாதியை மட்டும் இழக்கவில்லை. கடல் கடந்து வந்தாலும் சாதி மட்டும் எமக்கு பெரிதாக தெரிகிறது. எமது சமூகத்தில் ஒருபகுதியை சாதி அடிப்படையில் ஒடுக்கிக்கொண்டு நாங்கள் வாழும் நாடுகளில் இனத்துவேசம் இருப்பதாக  அதே கூட்டம் அலறுவது நகைப்பிட்குரியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு.  ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல்.

அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல்.

விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும்.

சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. 

ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார்.

பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே.

நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ....

இதுதான் நிலைமை பையா...

உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.

குஜாரத்து பிள்ளையள் நன்றாக படித்தும் 
உயர் வேலையிலும் இங்கு பலபேர் இருக்கிறார்கள் 
கூடுதலாக (பிரமணரோ தெரியவில்லை) அசைவம் உண்பதில்லை 
பலருடன் நெருங்கி பழகி வந்தேன் .... 
இப்போ இந்த மோடி ஆதரவு ..அதனால் கோமாளி ட்ரம்முக்கு ஆதரவு 
என்று அவர்களை பற்றி நான் வைத்த்திருந்த நல்ல மதிப்புகளை 
அவர்களாகவே கெடுத்துவிட்டார்கள். 
இப்போ ஏனோ தானோ என்றுதன பழகிறது ...மனசு இடம்தருகுதில்லை 

அநீதிகளை அங்கீகரிப்பவர்களுடன் 
அண்டி பழகுவது கொஞ்சம் சஞ்சாரமக இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

hqdefault.jpg

அதை போன மாசம் தெரியாம சொல்லிட்டேன்.. போவீயா..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பன் உது எந்த நாட்டிலை நடந்தது?
எங்கடை சனங்களை திருத்தேலாது. வெள்ளைக்காரங்களை கட்டினால் பேசாமல் இருக்குங்கள். ஆனால் தமிழருக்கை கட்டினால் இல்லாத நுணுக்கம் எல்லாம் பாக்குங்கள்.tw_rage:

germanyயில்  munster என்ற‌ இட‌த்தில் ,  நீங்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் இருந்து 250கிலோ மீற்ற‌ர் என்று நினைக்கிறேன் தாத்தா , 

போக‌ விட்டு குறை சொல்லி க‌தைப்ப‌தில் சாதிய‌‌  தூக்கி பிடிப்ப‌தில் எங்க‌டைய‌ல‌ மிஞ்ச‌ இந்த‌ உல‌கில் ஆட்க‌ள் இல்ல‌ தாத்தா ,

ஊரில் பெடிய‌ங்க‌ள் போராடி உயிர் நீக்க‌ அத‌ சாட்டி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து செட்டில் ஆகிட்டு எம்ம‌வ‌ர்க‌ள் சாதிய‌ ப‌ற்றி க‌தைப்ப‌து வெக்க‌க் கேடு , 

நாட்டுக்காக‌ இன‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ள் கூட‌ ஜாதிய‌ ப‌ற்றி க‌தைச்ச‌து இல்ல ‌ அவ‌ர்க‌ளின் விருப்ப‌ம் த‌மிழீழ‌ ம‌ண்ணில்  சாதி இருக்க‌ கூடாது , த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி‌ இல்ல‌ த‌மிழீழ‌த்தில் இத‌ என் க‌ண்ணால் பார்த்து இருக்கிறேன் சிறு வ‌ய‌தில் , 

எல்லா புக‌ழும் த‌லைவ‌ர் ஒருவ‌ருக்கே 🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மற்றவர்களின் பிள்ளைகள் சாதிமறுப்பு/காதல் திருமணம் செய்தால் எள்ளி நகைப்பவர்களின் பிள்ளைகள் அவ்வாறு செய்தால் என்ன செய்வார்கள்?

அதுவும் இஞ்சை ஜேர்மனியிலை நடந்திருக்கு.
அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமாயின், ஊரில் தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள், சாப்பாட்டு கடை திறந்தால், அங்கே கொத்து ரொட்டியும்.... ஆட்டிறைச்சி கறியும்... அந்தமாதிரி என்று அனைவரும் அலை மோதுவர். இது பொருளாதாரம்உடைத்த சாதீயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

உண்மை.  

அரசியலரங்குமுதல் அனைத்துத் தளங்களிலும் சாதீயம் கோலோச்சி வருகிறதென்பதை சரியாகச் சுட்டியுள்ளீர்கள். புலத்திலே இடத்துக்கிடமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் கடைப்பித்தலும் அனுசரித்தலுமாக நகர்கிறது. நீங்கள் சுட்டியுள்ளதுபோன்று  'பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்'  என்ற இலக்கைத் தமிழீழம் அடையச் சரியானதொரு அரசியல் இலக்கு எட்டப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைத்து, முழுமையான அறிவுப்பரப்புடைய ஒரு குமுகாயமாகும்போது பொருளாதார சமத்துவம் மலரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை எமதினம் தொட இன்னும் இரண்டு தலைமுறைகளையாவது கடக்கவேண்டிவரலாம். ஆனால் புலத்திலே பொருளாதார சமநிலையிலும் சாதி பார்க்கப்படுகிறதே. நானறிந்த ஒரு பொதுத் தளத்திலே நகரமட்டத்திலே இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு யார்யார் என்ன என்பதை கூறிவைத்துள்ளதோடு பிள்ளைகள் மிகநெருக்கமாகப் பழகும் நட்புவட்டத்திலே உரையாடிய சம்பவங்களையும் அறிந்துள்ளேன்.எனவே இங்கும் ஒரு இரண்டு தலைமுறைகளைக் கடக்கும்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து சாதியென்பது தேய்நிலைக்குச் சென்றுவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு.  ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல்.

அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல்.

விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும்.

சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. 

ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் . 

யாழ்ப்பாண‌த்தை சிங்க‌ள‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்ற‌ மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , 

மீசாலையில் 4வீடு இருந்த‌து சொந்த‌ங்க‌ள் ம‌ற்றும் ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலைக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளை எங்க‌ளுட‌ன் தான் த‌ங்க‌ வைச்சோம் ,  என‌க்கு என்ர‌ சொந்த‌த்த‌ த‌விற‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளைத் தெரியாது , கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ ஏதோ நெருங்கிய‌ சொந்த‌ங்க‌ள் போல் ஆகி விட்டோம் , 
ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் எல்லாரும் ஒன்னாத்தான் விளையாடுவோம்  , ஊரில் நாங்க‌ள் சாதி பார்த்த‌து இல்ல‌ , அப்ப‌டி இருந்த‌ ப‌டியால் தான் அந்தப்‌  பெரிய‌ வீடுக‌ளில்   ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள் ஒற்றுமையா த‌ங்கி இருந்தார்க‌ள் 🙏🤞😘

இட‌ம்பெய‌ர்ந்து இருந்தாலும் அந்த‌ வாழ்க்கைய‌ நினைக்கையில் மிக‌வும் ம‌கிழ்ச்சியாய் இருக்கு உடையார் ஜ‌யா , 

நாங்க‌ள் என்ன‌ தான் செய்தாலும் எங்க‌ளை எங்க‌ட‌ பாட்டில் விளையாட‌ விடுவின‌ம்  ,

வெளி நாட்டில் இருக்கும் சொந்த‌ங்க‌ள் தான் சாதி பாப்பின‌ம் , ஊரில் சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ ,  ஊர் சொந்த‌ங்க‌ளுட‌ன் புல‌ம் பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ளை ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது உடையார் ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

நான் யாழ் திருநெல்வேலியில் இருந்த பரமேசுவராக் கல்லுாரியில் படித்தவன். இன்று கல்லூரி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிக்கு திரு. சிவபாதசு்தரம் அவர்கள் அதிபராக இருந்தார். அங்கு சாதி பார்க்கும் பழக்கம் எதுவும் புகுந்துவிடாது கல்லுரியைத் திறம்பட அவர் நிர்வகித்தும் வந்தார். எங்கள் வகுப்பிலும் நாங்கள் அனைவரும் மாணவ மாணவிகளாகவே இணைந்திருந்தோம். அந்த அனுபவம்.... அனைவரும் மனிதர்களே என்ற உணர்வை எங்களுள் வளர்த்துவிட்டிருந்தது.

நல்லூர்த் திருவிழாவிற்குப் போடும் தண்ணீர்ப்பந்தலில் தொண்டு செய்யும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று வேறாக வைக்கப்டிருக்கும் கறள்பிடித்த மூக்குப் பேணிமுறைமையை மாற்ற எங்களால் முடியவில்லை. ஆனாலும் அந்தப் பேணிகளையே நாங்கள் பாவித்து மோர், ஊறுகாய், சக்கரைத்தண்ணிர் என்று அருந்திப் பெரிசுகளிடம் எதிர்ப்பும், சிலரிடம் பாராட்டும் பெற்றுள்ளோம். பிற்பட்ட நாட்களில் சாதி அடிப்படையில் சிறுபான்மைத் தமிழரென்று கட்சி தொடங்கப்பட்டதும், எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்களும் அதற்கு ஆதரவுநல்க முற்பட்டதும் கண்டு எங்கள் ஆர்வம் குறைந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எங்கள் சொந்தங்களில் பலர் குலம் கோத்திரம் பாராது காதலித்தும், பேசியும் கல்யாணம் செய்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக நன்றாகவே வாழ்கின்றனர்.

1 hour ago, Nathamuni said:

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

உண்மைதான் என்றாலும், ஒரு நல்ல தலைவனாலும் இதனைத் துடைத்தெறிய முடியும். ஒரு தலைவன், அவன் பிரபாகரன், செய்தும் காட்டினான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் இருந்தே சாதீயம் பற்றி பெரியவர்கள் கதைப்பதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.அதிலும்  சில நெருங்கிய சொந்தங்கள் கொஞ்சம் அதிகமாகவே அதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததயும் கவனித்தேன். எனெக்கென்று ஒரு கொள்கை தோன்றும் வரை, சாதி பாகுபாடு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது ஒன்று என்றே நினைத்தேன். அதிலும் பக்கத்துக்கு வீட்டு மனிசி அவர்களை இழிவாக நடத்துவதை பார்க்கும்போது எங்கட அப்பம்மா, அம்மம்மா அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தும் போது அதுவே பெரிய விசயம் என்று நினைத்தேன். வளர்ந்தபிறகு என்னுள் நிறைய கேள்விகள். பெரியவர்கள் எல்லோரையும் நிறைய கேள்வி கேட்டுருக்கிறேன்.

ஆதி காலத்தில் தொழில் நிமித்தம் வந்த பிரிவுகள் பிற்காலத்தில் எப்படியோ மருவி இப்படி ஒரு கேவலமான நிலைக்கு வந்திட்டுது. இது எமது மண்ணில் எப்ப தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காரரிடம் 700 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது என்று அறிந்தேன். 1950 களில் இருந்து அந்த முறை ஒழிக்கப்பட்டாலும்  மறைமுகமாக இப்பவும் பல பிரிட்டிஷ் குடும்பங்களில் சாதி முறைகள் மிகவும் உக்கிரமாக கடைபிடிக்கிறார்கள். 1994 களில் என்னுடன் மாலைதீவில் படிப்பித்த ஒரு வெள்ளைக்காரி இதைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவரது அம்மா பக்கம் யாருமே அவவின் குடும்பத்துடன் சேர்வதில்லை அன்றும் அதற்கு அவவின் அப்பாவின் கிளாஸ் குறைவு என்பதே காரணம் என்றும் கூறினா. அண்மையில் J K Rawling ஹரி பொட்டெர் புத்தகம் எழுதிய பில்லியனரயும்  எல்லா உயர் மட்ட வெள்ளைகார்களும் அவ்வளவு மதிப்பதில்லை என்று வாசித்தேன். 


நானாக ஒருபோதும் இவர் என்ன சாதியாக இருக்கும் என்று  ஒருநாளும் நினைப்பதில்லை. ஆனால் என்னுடைய நிறைய தோழிகள் அப்படியான ஒரு மன நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள்.  அவர்களுடன் இந்தியாவில் ஹொஸ்டலில் இருக்கும்போது  அவர்கள் சில சக யாழ்ப்பாண மாணவிகளை நடத்திய விதமும் அதனால் அவர்கள் மனம் உடைந்து போய் " ஊரில் தான் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை, படிக்க வந்த இடத்திலுமா" என்று  சொல்லி வேதனை பட்டார்கள். நான் மாத்தளை, கொழும்பில் படித்ததால் இந்த பேச்சு அவ்வளவும் வருவதில்லை. அப்படி இருந்தும் ஒரு மாணவிக்கு வேலையே எவர் என்ன சாதி என்று கண்டறிந்து அவர்கள் முன்னாலேயே சாதியம் பற்றி கதைத்து அவர்கள் மனதை நோகடிப்பார். 

கொழும்பு பாடசாலைகளில் நிறய இந்திய செட்டி மாணவிகள், மலையக  மாணவிகள் படித்தார்கள். அவர்களையும் விட்டு வைத்ததாக இல்லை. நீங்கள் இந்த ஊர் இல்லை, உங்கள் தமிழ் சரியில்லை என்று தாழ்த்தி கதைப்பார்கள். நானும் ஆரம்பத்தில் இந்த கதையில்  ஈடுபட்ட ஆள்தான். ஆனால் மிக விரைவில் அது தவறு என்று உணர்ந்து விட்டேன். 

எனது மகன்மாருக்கு சாதியம் பற்றி நல்லா தெரியும். அதை அவர்கள் ஒரு சமூக குற்றம், கேலிக்கு உரிய பாகுபாடு அது என்று சொல்வார்கள். அண்மையில் தங்கையின் மகளுடன் கதைக்கும்போது கனடா பள்ளிக்கூட எமது ஊர் பிள்ளைகள் சாதியம் பற்றி கதைப்பதாகவும் பிரித்து  வைத்து கூட்டம் கூடுவதாகவும் சொல்லக்கேட்டு மிகவும் ஆத்திரம் அடைந்தேன். இப்படி எனது இளைய தலைமுறை வரை இந்த இழிவான பாகுபாடு சென்றைந்து விட்டதே என்று தங்கையிடம் சொல்லி கவலை பட்டேன் . வெளிநாடுகளில் யாரவது உழைத்தோ படித்தோ நல்லா வந்துவிட்டால் , அவர் பின்புலம் பற்றி அறிந்து அவர்களை விழுத்துவதிலே  சிலருக்கு ஒரு சிற்றின்பம். 

இப்படியான ஒரு சமுதாயத்தில் பிறந்து வளர்ந்ததால், எமக்கென்று ஒரு கொள்கை இருந்தாலும் நானோ அல்லது எனது உறவினர்களோ எமது சமுதாயத்தை விட வேறு வேறு ஒரு சமுதாயத்தில் உள்ளவரை கலியாணம் செய்யும்போது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைப்பது தான் முன்னுக்கு நிக்கிறதே ஒழிய எனது கொள்கை அல்ல என்பதுதான் உண்மை. இந்தியர்கள், வெள்ளைக்காரர் மற்றும் ஊரவரை செய்தால் ஒன்றும் சொல்லாத எமது சமூகம் எமது மக்களை மற்றும் கூறு போட்டு பிரிப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 

பிகு : மற்ற சமுதாயங்கள், நாட்டவர்களை இழிவு படுத்தி கதைத்த எனது சொந்தங்கள், நற்புகள் எல்லாம் தமது பிள்ளைகள் அப்படி செய்தவுடன் பேச்சை மாற்றி கதைக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது.

சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை.

ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது.

அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது.

அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள்.

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமாயின், ஊரில் தாழ்த்தப்பட்டவர் என்று ஒதுக்கி வைத்தவர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள், சாப்பாட்டு கடை திறந்தால், அங்கே கொத்து ரொட்டியும்.... ஆட்டிறைச்சி கறியும்... அந்தமாதிரி என்று அனைவரும் அலை மோதுவர். இது பொருளாதாரம்உடைத்த சாதீயம்.

ஊரில் மேட்டுக்குடி திமிரில் இருந்தவர்கள்,கோட்டு சூட்டு அணிவதை மேன்மையாக நினைத்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வந்து பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணத்துக்காக எந்த வேலையும் செய்தார்கள். பணத்தின் முன் அவர்களின் ஊர் வரட்டுக் கௌரவங்கள் கரைந்து போயின.தினசரி துப்பவரவு தொழில்   செய்கின்றனர்.உணவு விடுதிகளில் கோப்பை கழுவுகின்றனர்.வீதி துப்பரவாக்கும் தொழில்கூட செய்கின்றனர். இருந்தாலும் சாதி எனும் கையாலாக தனத்தை இன்னும் விடவேயில்லை.

இவர்களுக்கு   சாதி குறைந்தவர்கள் என கருதப்படும் வீடுகளில் வயிறு புடைக்க உண்டு விட்டு  புறம் சொல்லும் திமிர்பழக்கமும் இன்றும் குறையவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பகிடி என்ன என்றால் .... பார்ப்பான் ஒட்டுமொத்தமாக 
எல்லோரையும் கழுவி ஊத்துகிறான் என்பது கூட தெரியாமல் இருப்பதுதான்.

மேலே சிலர் பொருளாதார மேம்பாடு பற்றி எழுதுகிறார்கள் 
அது ஒரு சிலரை மீட்க்கும் ஒரு சமூக இடைவெளியை நிரப்பாது 
ஒரு சமூகமே பொருளாதார வளர்ச்சி  கண்டால்? கூட நிற வேற்றுமை 
போல இதுவும் தொடரும். 

அறிவு வளர்ச்சி ஒன்றுதான் எல்லா மனித அவலத்தையும் மீட்க்கும் 
எல்லா முடாள்தனமும் அறிவின்மையில் இருந்துதான் உருவாக்குகிறது 
ஒரு சக மனிதனை தாழ்த்துவதில் தொடங்கி சாயிபாபா நித்தியானந்தாவை போன்ற 
பொறுக்கிகளி தொழுவது வரை அறிவீனம்தான் அடிப்படை காரணம். 

மேலே நடந்த சம்பவங்களை வாசித்து சிலர் கோபம் கொண்டிருக்கலாம் 
எனக்கு அவர்கள் மேல் பரிதாபம் மட்டுமே வருகிறது அதுக்கு காரணம் 
அவர்கள் முன்னேறிய நாடுகளுக்கு வந்தும் அறிவு ரீதியாக எந்த முன்னேற்றமும் 
காண கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான்.
அறிவு என்பதை சிலர் தப்பாக படித்து பட்டம் பெறுவதை எண்ணாதீர்கள் 
மனித அறிவு என்பது ஆறாம் அறிவின் செயல்பாடு பற்றியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.

 

ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுகம் ஒன்றை சேந்தவர்கள் சிங்கப்புர் பென்சனியர் பரம்பரையை சேர்ந்தவர்கள்.அழகான இளம் பெண்கள்.அதே சமுகத்ததை சேர்ந்தவர்கள் கோவிலில் வெளியே நிக்க இவர்கள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உள் போவார்கள்.யாரும் தடுப்பிதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகள் நீர்த்துப்போக  வேண்டும் என்றால்(அழிந்துபோக என்று சொல்லவில்லை, அது முடியாது). இதுபோல்  சாதியின் பேரால் கலந்துரையாடுவதே தப்பு என்றுதான் நினைக்கின்றேன்.பொதுவாக யாழ் நகரத்துக்குள் மிக மிக சொற்பமாகவே இருந்தது. அதற்கு காரணம் அரசாங்க வேலைகள், கராஜ்சுகள், பட்டறைகள், மற்றும் தொழிற்சாலைகள்.இவைகளில் எல்லாப் பொடியன்களும் பரவலாக வந்து வேலைகள் செய்வதுடன், சேர்ந்தே சினிமாவுக்கு, கடைகளுக்கு, நண்பர்களின் வீடுகளுக்கு என்று சகஜமாகப் போய் வருவதுண்டு.....!

காதல்தான் முக்கியமாக சாதிகளை உடைத்து கலியாணமும் கடந்து சென்றது. ஆனால் இங்கேயும் ஒரு தூரதிஷ்ட்டம் யாதெனில் அவர்களது பிள்ளைகள் பெரியவர்களாகி பேசிச்செய்யும் கலியாணம் என்னும்போது (எல்லாப்பிள்ளைகளாலும் காதலிக்க முடிவதில்லை பறக்கத் தெரியாத குஞ்சசுகள்போல்)புருஷன் பெஞ்சாதி புடுங்குப் படுவினம் யாருடைய சாதிக்குள்ள செய்வதென்று......!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிய நச்சு தமிழரின் நாடி நரம்பு என எல்லாவற்றிலும்  ஊறிய பெரும் தலையிடி

அதை முற்றாக  ஒழிக்கணும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை

ஆனால் அது உடன் சாத்தியமில்லை

மாற்றுத்திருமணம் செய்தனர் என  நீங்கள்  குறிப்பிடுபவர்களே 

எவ்வளவு  காலத்துக்கு இதற்கு  முகம்  கொடுத்தபடி வாழ்வார்கள்  என்பதே கேள்விக்குறி  தான்

நக்கல்  நளினம்  வம்புக்கிழுத்தல் 

ஏன்  பொடியனின்  பக்கமும் கிளறி  கிளறி பதம்  பார்ப்பார்கள்

முடிவு??????

நீங்கள்  என்ன செய்திருக்கிறீர்கள் என்ற  கேள்விக்கு

எனக்கிருக்கும்  அதிகாரத்தை  வைத்து

கனக்க  செய்திருக்கின்றேன்

அதை  நான்  பகிரங்கப்படுத்தினால்

சம்பந்தப்பட்டவர்களை வம்பிழுக்க எம்  சமூகம்  தேடுதலை தொடங்கிவிடும்😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

1950 களில் இருந்து அந்த முறை ஒழிக்கப்பட்டாலும்  மறைமுகமாக இப்பவும் பல பிரிட்டிஷ் குடும்பங்களில் சாதி முறைகள் மிகவும் உக்கிரமாக கடைபிடிக்கிறார்கள். 1994 களில் என்னுடன் மாலைதீவில் படிப்பித்த ஒரு வெள்ளைக்காரி இதைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவரது அம்மா பக்கம் யாருமே அவவின் குடும்பத்துடன் சேர்வதில்லை அன்றும் அதற்கு அவவின் அப்பாவின் கிளாஸ் குறைவு என்பதே காரணம் என்றும் கூறினா

 

Class (வர்க்கம்) உம் Caste (தென்னாசியர்களுக்கே உரித்தானது) உம் ஒன்றல்ல. 

ஆங்கிலேயர்களில் elite,  middle class, working class என்ற வேறுபாடுகள் பொருளாதார அடிப்படையில் இருக்கின்றது. 
ஆனால் பொருளாதாரத்தில் சமமாக இருந்தாலும் பிறப்பால் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்பது வருணாசிரமத்தின் வழிவந்த கலாச்சாரத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் ஊறிப்போயிருக்கின்றது. 

 

போராட்டத்தாலும், புலம்பெயர்வாலும் சாதீய வேறுபாடுகள், திருமணம் தவிர்ந்து, குறைந்து போயிருந்தன. தாயகத்தில் எப்படி நிலைமை என்று சொல்லமுடியாது. ஆனால் இளம் தலைமுறை இப்படியான வேறுபாடுகளைப் பற்றி இப்போது அலட்டிக்கொள்வதில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

80 - 90 களில் புலம்பெயர்ந்த தமிழர் சாதியையும் மேற்குநாடுகளில் காவிவந்தாலும், பையன் சொன்னது மாதிரி கலப்புத் திருமணங்கள் நடக்கும்போது நக்கல் அடித்தது ஆச்சரியமாக இருக்கின்றது. இவர்களின் மேற்குநாடுகளில்  வசித்தாலும் ஒரு வளர்ச்சியையும் கலாச்சாரத்திலோ பண்பாட்டிலோ காட்டாமல் தாங்கள் வந்த காலத்திலேயே உறைந்து நிற்பவர்கள்.

 

இலண்டனில் சாதிகளைப் பற்றி அலட்டுபவர்களை நான் இதுவரை காணவில்லை. ஆனால் ஐரோப்பாவுக்குள் 90 களில் சகஜமாக சாதி சொல்லிக் கதைப்பதைப் பார்த்து அருவருப்படைந்திருக்கின்றேன்.   சுவிஸில் ஒரு முழு இரவு (நித்திரை கொள்ளாமல்!) பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றேன். ஆனால் இப்போது அங்கும் சாதி ரீதியான கதைகளைக் காணவில்லை. எனவே இது தமிழரிடம் இருந்து காணாமல் போகும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

 

ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்.

இது முற்றிலும் உண்மை , சும்மா வாய் சொல் அள‌வில் தான் பெரியார் பெண்ணிய‌ விடுத‌லைக்கு போராடினார் , சாதிய‌ ‌ இல்லாம‌ செய்தார் என்று பொய் வின்ப‌த்த‌ இப்ப‌வும் திராவிட‌ க‌ட்சிக‌ள் சொல்லிட்டுத் தான் இருக்கின‌ம் , 

தேர்த‌ல் நேர‌ம் பெரியாரை ம‌ற‌ந்து எந்த‌ தொகுதிக்கு எந்த‌ சாதி வேட்பாள‌ர‌ நிறுத்தினால் கூடுத‌ல் வெற்றியை ஈட்ட‌லாம் என்று திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

எங்க‌ட‌ போராட்ட‌மும் த‌லைவ‌ரும் இருந்து இருக்க‌னும் சாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இருந்து இருக்காது ஈழ‌ ம‌ண்ணில் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் மெது மெதுவாய் சாதி த‌லை தூக்குது , என்ர‌ ஈழ‌ அனுப‌வ‌த்தில் என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் ஈழ‌த்தில் சாதி இருந்த‌து இல்ல 💪🤞‌ , 

எங்க‌ட‌ கோயில் திருவிழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் 1994 அந்த‌க் கால‌ப் ப‌குதியில்  , இப்ப‌ ஒரு சில‌ கோயிலுக்கு ஒரு சில‌ சாதிக் கார‌ர் போக‌ முடியாது 😓

என்ன‌ செய்வ‌து பிர‌பாக‌ன் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌ர் பின்னால் ஒரு இன‌மே சாதி ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்து ஒற்றுமையா நின்றார்க‌ள் 🙏

த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் த‌லை கீழா போச்சு 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Oxford Centre For Hindu Studies என்ற ஒரு வெள்ளயள் குரூப் ஒன்று ஒன்லைன் கோர்ஸ் என்று எதையோ போட்டு விக்கினம். இந்த கோர்ஸ் £95.

உதில ஒரு பாடம்: Session Three: The Caste System

பிராமணர்கள் தான் பின்னே இருக்கிறார்கள். அவர்கள் தான் இதனை இங்கே தள்ளிக் கொண்டு வருகின்றார்கள்.

https://ochsonline.org/product/hinduism-ritual-yoga-caste-gender/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுகம் ஒன்றை சேந்தவர்கள் சிங்கப்புர் பென்சனியர் பரம்பரையை சேர்ந்தவர்கள்.அழகான இளம் பெண்கள்.அதே சமுகத்ததை சேர்ந்தவர்கள் கோவிலில் வெளியே நிக்க இவர்கள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உள் போவார்கள்.யாரும் தடுப்பிதில்லை.

காரைநகர்  பக்கம் இப்பிபியிருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.