Jump to content

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக்கில் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக்கில் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?

அனந்த் ப்ரகாஷ் பிபிசி இந்தி
லடாக் செல்லும தேசிய நெடுஞ்சாலை அருகே கண்காணிப்பில் ஒரு இந்திய ராணுவ சிப்பாய்.Getty Images

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.

திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், "சீன மற்றும் இந்திய துருப்புக்கள் ஜூன் 30 அன்று தளபதிகள் அளவிலான 3 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைகளின் கடைசி இரண்டு சுற்றுகளில் உடன்பாடு இருந்த விஷயங்களை அவர்கள் செயல்படுத்துவதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும் எல்லையில் பதற்றத்தை குறைப்பதில் நாங்கள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்." என்று கூறினார்

இருப்பினும், இதற்குப் பிறகும், பல கேள்விகள் எழுகின்றன. முதல் முக்கியமான கேள்வி, இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் தான் இருந்தது என்றால், அது பின் வாங்க வேண்டிய காரணம் என்ன?

நடந்தது என்ன?

கால்வன், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீன துருப்புக்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் திங்களன்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

இந்திய - சீன மெய்யான கட்டுப்பாட்டுக்கோட்டுக்கு அருகே லேவை நோக்கிச் செல்லும் இந்திய ராணுவ வாகன அணி ஒன்று.Getty Images

நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருந்த இரு நாட்டு வீரர்களும் இப்பொழுது அப்படி இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, 'ஐ பால் டு ஐ பால்' என்று சொல்லப்பட்ட நிலை இல்லை. ஆனால் பதற்றத்தை குறைக்கும் பணி இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள், கால்வன், கோகரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற மூன்று இடங்களில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிபிசிக்கு தகவல் கொடுத்த அதிகாரி, டெப்சாங் அல்லது பாங்காங் சோ ஏரி பற்றி எதுவுக் பேசப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். மற்றொரு அதிகாரி, "கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகள் இரண்டும் அகற்றப்பட்டு, வீரர்கள் பின்வாங்குகிறார்கள்" என்று கூறினார்.

"ஜூன் 30 அன்று இரு தரப்பு தளபதிகள் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்ட ஒரு செயல்முறையின் ஆரம்பம் இது" என்று அவர் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் திங்களன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரு தரப்பினரும் எல்லையில் பதட்டங்களைக் குறைக்கவும், தங்கள் துருப்புக்களை எல்லையிலிருந்து திரும்பப் பெறவும் ஒப்புக் கொண்டனர்" என்று செய்தி நிறுவனம் ஏ.எஃப்.பி கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு மந்திரி வாங் யிக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இதன் பின்னர், இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வைடோங் இந்த உரையாடலின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பேச்சு வார்த்தையில் குறிப்பாக நான்கு விஷயங்கள் குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. -

1. இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் செயல்படுத்தப்படும். எல்லைப் பகுதிகளில் அமைதியுடன் அபிவிருத்திக்காக நீண்ட காலமாக ஒன்றிணைந்து பணியாற்ற இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

2. பரஸ்பர ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் கூட்டாக எல்லையில் பதற்றத்தை குறைக்க முயற்சிக்கும்.

3. சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான தொடர்பு மூலம், இரு தரப்பினரும் பரஸ்பர உரையாடலை மேம்படுத்துவார்கள். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு முறைமை மேம்படுத்தப்படும். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தும்.

4. சமீபத்தில் நடைபெற்ற தளபதி மட்டக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட விஷயங்களை இரு தரப்பினரும் வரவேற்றனர். ஜூலை 1 ம் தேதி நடந்த தளபதிகள் அளவிலான கூட்டத்தில், இரு தரப்பினரும் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் இரு தரப்பினரும் எல்.ஏ.சி -யில் படை விலக்க நடவடிக்கைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆனால், அமைதியை நோக்கி நகர்வதற்கான அறிவிப்புகள் மற்றும் நேர்மறையான செய்திகளுக்கு மத்தியில், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வீரர்களும் பின்வாங்குகிறார்களா என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தெளிவான பதில் இல்லை.

ஒருவேளை அப்படி நடந்தால், அது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் சீனப் படைகள் பைகோங்க் ஸோ ஏரியிலிருந்தும் தெப்சாங்க் பகுதியிலிருந்தும் இன்னும் படைகளை விலக்கிக் கொள்ளவில்லை

கல்வானில் சீனப்படைகள் ஏன் பின்வாங்குகின்றன?

முதலில் எழும் கேள்வி, கல்வான் பிராந்தியத்தில் சீன வீரர்கள் ஏன் பின்வாங்குகிறார்கள் என்பதுதான். இந்த கேள்விக்கான பதில் பிரதமர் மோடியின் லே பயணத்தில் தான் மறைந்துள்ளது என்று, சீனா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பிரேம்ஷங்கர் ஜா கூறுகிறார்.

இந்திய ராணுவ வாகனங்கள்.Getty Images

"சீனாவைப் பற்றி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் சமிக்ஞ்சைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோதி லே சென்று நமது துருப்புக்களை ஊக்குவித்தார், ஆனால் அவர் சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதன் பொருள் இந்தியா போரை விரும்பவில்லை என்பது தான் என்று சீனா புரிந்து கொண்டது. ராஜதந்திரத்தில், சிறிய சமிக்ஞைகள் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சீனா இந்த சமிக்ஞையைப் புரிந்து கொண்டது. ஆனால், இது ஒரு பிரச்சனையின் முடிவு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஆரம்பம்." என்று அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், சீன-இந்தியா உறவுகள் குறித்து கவனித்துவரும் ஜே.என்.யூ பேராசிரியர் ஸ்வர்ன் சிங், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதைக் காட்டுகிறார்கள் என்று கூறலாம், இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கருத்து தெரிவிக்கிறார். 

மேலும் ஸ்வர்ன் சிங் கூறுகிறார், "இரு நாடுகளின் பிரதிநிதிகள் மூலமாக லடாக் எல்லையில் உள்ள படைப்பிரிவு தளபதி மற்றும் கார்ப்ஸ் தளபதி வரை பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. உரையாடலில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று இரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் இந்த முழு உரையாடலின் போதும் இராணுவ மற்றும் இராணுவ உபகரணங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே அரசாங்கம் அறிக்கை வெளியிடும் வரை நிலைமை குழப்பமாகவும் பதட்டமாகவும் தான் இருக்கும். இப்போது, நிலைமை என்னவென்றால், டாக்டர்கள் சொல்வது போல் ஸ்டேபிள் பட் க்ரிடிக்கல். நிலைமை சீராக உள்ளது. ஆனால் ஆபத்து நிறைந்தது."

பைகோங்க் ஸோ மற்றும் தெப்சாங்க் -ல் இருந்து சீனப் படைகள் இன்னும் ஏன் விலகவில்லை?

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன துருப்புக்களுக்கு இடையிலான தூரம் அதிகரிக்கும் செய்தி வந்தபிறகு, சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிலும் ஒரு நேர்மறையான எண்ணம் நிலவுகிறது. ஆனால் சீன வீரர்கள் இன்னும் தெப்சாங் மற்றும் பைகோங் பகுதியில் இருந்து பின்வாங்கவில்லை என்பதால் இது பிரச்சினையின் முடிவாக கருதப்படக்கூடாது என்று பிரேம் சங்கர் ஜா எச்சரிக்கிறார்.

"தெப்சாங்கில் அவர்கள் இருப்பது அவர்கள் கரகோரம் பகுதியில் கவனம் செலுத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது. சீனா இதுவரை உரிமை கோரி வந்துள்ள பைகோங்க் ஏரி பகுதியில் தனது நிலையை பலப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் ஒரு புதிய புரிதல் உருவாகும் வரை அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள்." என்று அவர் கூறுகிறார்.

'இந்தியா மற்றும் சீனா' என்ற நூலின் ஆசிரியர் பிரேம் சங்கர் ஜா கூறுகையில், "சீன ராணுவம் தாங்கள் உரிமை கோரிய பைகோங்க் ஏரி பகுதியில் ஃபிங்கர் 4 ஐ கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது ஃபிங்கர் 8 வரை உரிமை கோருகிறது. இதுவரை சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்த நான்கு மலைத்தொடர்களில் சீனா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், சீனர்கள் இந்திய எல்லைக்குள் வரவில்லை என்று மோதி சரியாகக் கூறியிருந்தார், ஏனெனில் அவர்கள் வந்தது சர்ச்சைக்குரிய ஒரு இடம் தான். " என்று கூறினார்.

மூன்று மாதங்களில் கள நிலவரத்தில் என்ன மாற்றம் வந்தது?

புவியியல் ரீதியாகப் பார்த்தால், தெப்சாங் சமவெளி மற்றும் பைங்கோங்க் ஏரி பகுதியில் சீனத் துருப்புக்களின் இருப்பு முன்பை விட வலுவாகிவிட்டது, ஆனால் இதை நில விரிவாக்கம் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது என்று பிரேம் சங்கர் ஜா கூறுகிறார்.

இந்திய சிப்பாய். இந்திய - சீன எல்லைப் பகுதியில்.Getty Images

அவர் கூறுகிறார், "இரு நாடுகளுக்கும் நில பற்றாக்குறை இல்லை. இந்த நிலையில், யார் எவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்ற கோணத்தில் இதைப் பார்க்கக்கூடாது. மூலோபாய நடவடிக்கையாகத் தான் இதைப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு 2014 க்கு முன்னர் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சீனாவை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியிருக்கிறது."

தனது கருத்தை விளக்கி, பிரேம் சங்கர் ஜா கூறுகையில், "அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்கி, லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி, அக்சாய் சின்னை உள்ளடக்கிய ஒரு ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, இந்த முடிவுகளின் மூலம் இந்திய அரசு சீனாவைச் சீண்டியது. இதனால், சீனா தனது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (சிபெக்) பாதுகாப்பு குறித்து சந்தேகம் அடைந்துள்ளது, ஏனெனில் இவ்வளவு முதலீடு செய்து இந்தத் திட்டத்தை சீனா செயல்படுத்துவது, ஒரு வேளை மேற்கு நாடுகள் கடல் வர்த்தக பாதையில் அதன் வர்த்தக பொருட்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால், இந்த பாதை வழியாக தனது சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான்." என்கிறார்.

"ஆனால் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளால், சீனாவின் இந்த லட்சிய திட்டத்தின் எதிர்காலம் நெருக்கடியில் காணப்பட்டது. அதனால்தான் முதலில் சீனா பேச்சு வார்த்தை மூலமாக சமிக்ஞை அனுப்பியது. இப்போது ராணுவ ரீதியில் சமிக்ஞை அனுப்புகிறது ".

இந்தியா பின் வாங்கக் காரணம் என்ன?

இந்திய ராணுவம் பின்வாங்கியிருந்தால், சர்வதேச அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்களில் அறிவும் உள்ள புஷ்ப் அதிகாரி நம்புகிறார்.

மேலும் அதிகாரி கூறுகிறார், "கல்வான் குறித்து ஊடக அறிக்கைகளில் வருவது முற்றிலும் உண்மை என்று நான் முதலில் நம்பவில்லை. அப்படியே அது உண்மை என்று கொண்டாலும் என்னைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கு ஒரு காரணம், இந்தியா அதன் மூலோபாய திறன் எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறது, இதன் காரணமாக இந்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது."

அவர் மேலும் கூறுகிறார், "இந்த நேரத்தில் துணைக் கண்டத்தில் முடக்கமான சூழல் உருவாகி வருகிறது. இது யாருக்கும் பயனளிக்காது. மேலும் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள், வளரும் வல்லரசுகள் தங்களுக்குள் மோதிக்கொள்வது கூடாது என்பதும் இரு நாடுகளுக்கும் தெரியும்."

"தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, இந்தியா-சீனா உறவுகள் விஷயத்தில் ஒரு முற்றுப்பெறாத நிலையே காணப்படுகிறது. வருங்காலத்தில் அது பல மாற்றங்களைக் காணலாம்."

 

https://www.bbc.com/tamil/india-53341071

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரிதான்

என்ன காரணத்திற்காக சீன இராணுவம் இந்திய இராணுவத்தினரை உருட்டுக் கட்டையால்(😂) அடித்துக்  கொன்றார்கள் என்று முதலில் சொல்லுங்கள் 🤔

இதனூடாக சீனா இந்தியாவுக்கு சொல்லி அனுப்பியது என்ன ? 🤔

(என்றாலும் எனக்குச் சிறிய ஏமாற்றம்தான் 😂)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.