Jump to content

அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

07072020_melbourne-bestpic_064056-2040x1360-1-720x450.jpg

அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை!

கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது.

ஆம்! மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர்.

விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும்.

முந்தைய நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் கொவிட்-19 தொற்று பரவல் அச்சம் இருந்ததன் காரணமாக, புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை நள்ளிரவில் அமுல்படுத்தப்பட்டன. கொள்முதல் வரம்புகள் விதிக்கப்பட்டன.

நியூசவுத் வேல்ஸில் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், எல்லைக் கடப்புகளின் விளைவாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆல்பரிக்கு வடக்கே இரண்டாவது எல்லையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

https://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-ஐந்து-மி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தப்பிவிட்டோம் என ஒரு சிறு நினைப்பு🤔

இது ஒரு கொரோணா தடுப்பு நிலைய காவல் அதிகாரியால் வந்த வினை. தடுத்து வைத்திருவர்களுடன் பழகி, ஊரொல்லாம் சுத்தியதின் வினை, யார் யாருக்கு கொரோணா என தெரியவில்லை இப்ப. சோதனை செய்யவும் சிலர் மறுக்கின்றார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா எடுத்துள்ள திடீர் முடிவு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப அனுமதிக்கப்பட்ட பிரஜைகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 288 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எந்தப் பகுதியிலும் பதிவாகாத அதிகளவான ஒரே நாள் எண்ணிக்கையாகும்.

இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோட் மோரிசன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் அவுஸ்திரேலிய பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே நாட்டிற்குள் நுழைய அந் நாட்டு அரசாங்கம் அனுமதித்தது. அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் ஹோட்டல்களில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதற்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவுஸ்திரேலியா ஒவ்வொருவாரமும் நாடு திரும்பும் பிரஜைகள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் தொகையை சரி பாதியாக குறைக்கவுள்ளது.

அத்துடன் நாடு திரும்பும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளையும் அவர்களே பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

https://www.virakesari.lk/article/85535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/7NEWSBrisbane/videos/685469312210299/

ஆரம்பத்தில் கொரோனா அவுஸ்திரேலியாவில் பரவுவதற்கு முன் இந்த அவுஸ்திரேலியர் ஆசிய பின்புலம் கொண்ட மக்களிடம் நடந்து கொண்டதை இந்த ஒளிப்பதிவில் காணலாம், 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.