Jump to content

லெப்.கேணல் ரமணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன்

மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது , அவனுடைய சிறு வயது கருதி படைத்துறைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அங்கே பொதுக்கல்வியும் படைத்துறை சார்ந்த கல்வியும் சில வருடங்கள் பயின்ற கோணேஸ்வரன், அடிப்படை பயிற்சி பெற்று ரமணன் என்ற போராளியாக செயற்படத் துவங்கினான். 1993 ல் சிறுத்தைப் படையணியில் இணைக்கப்பட்டு ஆங்கே நீண்ட கால பயிற்சியில் ஈடுபட்டு தேர்ந்த போராளியாக தாக்குதலணியில் இணைந்தான் . மணலாற்றுக் காடுகளில் ரமணனுடைய பாதங்கள் வேவு நடவடிக்கைகளிலும் களச் செயற்பாடுகளிலும் ஓய்வின்றி நடந்தன. பல இராணுவ முகாம்கள் மீதான அதிரடித் தாக்குதல்களில் மிகு‌ந்த ஊக்கத்துடன் றமணன் களமாடி ஆர்வத்துடன் களத் திறன்களை வளர்த்துக் கொண்டான்.

1995 ல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்ட பொழுது ரமணனும் இளம் அணித் தலைவராக படையணியில் இணைந்தான் .வேவு நடவடிக்கைகளிலும் பயிற்சித் தளங்களிலும் ரமணன்திறமுடன் செயற்பட்டான் . ஓயாத அலைகள் – 1 சமரில் ரமணன் தாக்குதலணியில் சிறப்பாக செயற்பட்டான் . 1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர்களில் இளம் தளபதி ராகவனின் பொறுப்பின் கீழ் செக்சன் லீடராகவும் வேவுப் போராளியாகவும் ஓய்வின்றி செயற்பட்டான் . 1998 துவக்கத்தில் படையணி உருத்திரபுரம் முன்னரண் வரிசையில் கடமையிலிருந்த போது, கனரக ஆயுதங்கள் அணி லீடர் இராசநாயகத்துடன் நின்று செக்சன் லீடராக செயற்பட்டான் . உருத்திரபுரம் சண்டையில் ரமணன்செக்சன் லீடராக திறமுடன் களமாடி திறமுடன் களமாடி தளபதிகளின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டான்.

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.%E0ஓயாத அலைகள்-2 கிளிநொச்சி மீட்புச் சமரில் ரமணன் செக்சன் லீடராக களமிறங்கினார். மூர்க்கமான தாக்குதல்களால் எதிரியின் பாதுகாப்பு நிலைகளைத் தகர்த்து, தொடர் காவலரண்களை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்த ரமணன் தவறுதலாக எதிரியின் நிலக் கண்ணிவெடிகளுக்குள் இறங்கி விட்டார். ‘ தளபதிகள் மன்னிப்பர் , ஆனால் வெடிகுண்டு மன்னிக்காது ‘ என்ற உண்மையின்படி அவனுடைய காலடியில் நிலக் கண்ணியொன்று வெடித்தது. இதனால் பாதத்திற்கு மேலே கால் துண்டாகி இரத்த வெள்ளத்தில் விழுந்தான் றமணன். உடனடியாக சக போராளிகள் அவனை மீட்டு களமருத்துவ நிலையத்தில் சேர்த்து அவனுடைய உயிரைக் காப்பாற்றினர்.
சில மாதங்கள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பிறகு, செயற்கை கால் பொருத்திக் கொண்ட ரமணன் , 1999 ம் ஆண்டு ராகவன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றபோது மீண்டும் களமுனைக்கு திரும்பினார். ராகவன் அவர்களின் கட்டளை மையத்தில் கடமையேற்ற றமணன் தொலைத்தொடர்பு, பாதுகாப்பு முதலான கடமைகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டார். முதுநிலை அணித்தலைவர் சாரங்கனை லீடராகக் கொண்டு ராகவன் உருவாக்கிய விசேட கொமாண்டோ அணியில் ரமணன்ஒரு செக்சன் கொமாண்டராக நியமிக்கப்பட்டார். ராகவனின் அடியொற்றி முரசுமோட்டை , ஊரியான் , பரந்தன், கிளிநொச்சி, உருத்திரபுரம், சுட்டத்தீவு , அம்பகாமம், ஒட்டுசுட்டான் என அனைத்து பகுதிகளிலும் ஓய்வின்றி நடந்து பல்வேறு கடமைகளில் செயற்பட்டார்.

படையணியில் சிறப்பு மிக்க மோட்டார் அணி லீடர்களான தென்னரசன் , செங்கோலன் , நாகதேவன் , முதலானோருடன் ரமணன் இணைந்து மோட்டார் பீரங்கி பயிற்சிகள் பெற்று சிறந்த மோட்டார் சூட்டாளனாகத் தேறினான் . படையணியின் கனரக ஆயுதங்கள் பொறுப்பாளர் மதன் அவர்கள் றமணனை ஊக்கப்படுத்தி வழிநடத்தினார்.

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் றமணன் அம்பகாமம் பகுதியில் இராசநாயகம், வீரமணியுடன் நின்று கடுஞ்சமர் புரிந்தார். பரந்தன் மீட்புச் சமரில் றமணனும் பிரபல்யனும் 60 மி. மீ மோட்டார்களுடன் தீவிரமாக களமாடினர் . இவர்கள் இருவரும் பரந்தன் இராசாயனத் தொழிற்சாலையிலிருந்த இராணுவ முகாம் மீது தொடுத்த செறிவான எறிகணைத் தாக்குதல்களால் அம் முகாம் தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக அழிந்தது. இதனால் பரந்தன் பகுதி முழுவதும் எம்மால் மீட்கப்பட்டது. இதன் பின்னர் படையணி மன்னார் பகுதியில் பாதுகாப்பு கடமையிலிருந்த போது ரமணன் கோபித்துடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் படையணி முகாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த போது, ரமணன்வீரமணியுடனும் ஐயனுடனும் இணைந்து, எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் சினைப்பர் தாக்குதல்களுக்கு நடுவில் பாதுகாப்பு கடமைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் திறமுடன் செயற்பட்டார்.

2000 ம் ஆண்டு ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறக்க சமரின் போது ரமணன் வீரமணியுடன் இயக்கச்சி பகுதியில் நின்று, தடையுடைப்பு அணியில் தீவிரமாக செயற்பட்டார். வீரமணி மாலதி. படையணி யைக் கொண்டு இயக்கச்சி சந்தியில் தடைகளைத் தகர்த்தெறிந்து மின்னல் வேகத்தில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்த வரலாற்று சமரில் றமணனுடைய பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. இதன்பிறகு படையணி இரணைமடு போர்ப்பயிற்சி கல்லூரியில் இருந்தபோது துணைத் தளபதி கோபித்துடன் நின்று பல்வேறு கடமைகளில் ஈடுபட்டார். பின்னர் நாகர்கோவிலை கைப்பற்றிய சமரில் ரமணன்கோபித்துடன் நின்று திறமுடன் களமாடினார்.

2001 சனவரியில் நாகர்கோவில் எழுதுமட்டுவாள் பகுதியில் சிறப்புத் தளபதி வீரமணியுடன் நின்ற எமது அணியினர் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய முற்றுகைக்குள் அகப்பட்ட போது, ரமணன் அவருடனிருந்து , தீவிரமாக களமாடி னார். பின்னர் படையணி முகமாலை களமுனையில் பாதுகாப்பு கடமையிலிருந்த போது றமணன் துணைத் தளபதி கோபித்துடன் நின்று, 60 மி. மீ மோட்டார் அணிகளுக்கு லீடராக செயற்பட்டார். கோபித்தின் கட்டளை மையத்தில் மதுரன் , பாவலன் , அகமன்னன் , முருகேசன், சாந்தீபன் முதலானோருடன் இணைந்து பாதுகாப்பு கடமைகளிலும் முன்னரண் வேலைகளிலும் சிறப்பாக செயற்பட்டார். எதிரி பளையைக் கைப்பற்ற மேற்கொண்ட ” தீச்சுவாலை ” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்களில் றமணன் 60 மி. மீ மோட்டார் சூட்டாளனாகத் திறமுடன் போரிட்டார் . கோபித்தின் கட்டளை மையத்தை சுற்றி நடைபெற்ற கடும் சமரில் றமணன் மதுரன் ,பாவலன் ,வெற்றிநிலவன் முதலானோருடன் இணைந்து தீவிரமாக களமாடினார் . மேலும் நாகதேவன், வைத்தி முதலானோருடன் 81. மி. மீ மோட்டார் அணியில் நின்று சூட்டாளனாகத் திறமுடன் செயற்பட்டார் . இச் சமருக்கு பின்னர் படையணியின் ஒரு பகுதி சிறப்புப் பயிற்சிக்காக கல்லூரிக்கு சென்றபோது ரமணன் அங்கு கடமையாற்றினார் .

 

2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் இருந்த போது ரமணன் சிறப்பு அரசியல் வேலைத் திட்டங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் பின்னர் மன்னார் வவுனியா நகரங்களிலும் செயற்பட்டார்.

குழப்படிகளிலும் பகிடிக் கதைகளிலும் வல்லவராக இருந்த ரமணன் சண்டை செய்வதில் மட்டுமின்றி விளையாட்டிலும் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். செயற்கை காலுடன் நடமாடிய போதிலும் வலைப்பந்து , கால்பந்து விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் தொடர்ந்து விளையாடி வந்தார். மேலும் சதுரங்க விளையாட்டிலும் ரமணன் திறமுடன் விளையாடினார். போர்ப்பயிற்சி கல்லூரியில் எமது அனைத்து படைப் பிரிவுகளுக்குமிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ரமணன்முதலாவது இடத்தில் வெற்றி பெற்று, தேசியத் தலைவரிடம் பாராட்டையும் அழகிய மாபில் காய்களைக் கொண்ட சதுரங்கப் பலகையையும் பரிசாகப் பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தார். மேலும் தமிழீழ திரைப்படத் துறையினர் தயாரித்த ஒரு குறும்படத்திற்கு களமுனை படப்பிடிப்பு ஆலோசகராக சிறப்புடன் செயற்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றார். இவருடைய இணைபிரியா தோழன் மேஜர் இராசநாயகம் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையில், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தயாரித்த துயிலறைக் காவியம் நிகழ்ச்சியில் இவர்களுடைய தோழன் வைத்தியுடன் இணைந்து ,இராசநாயகத்தின் களச் செயற்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை பதிவு செய்தார்.

போர்க்களத்தில் உறுதியும் விடாமுயற்சியும் கொண்ட ரமணன்இளகிய மனமும் போராளிகள்யிடையே சகோரத்துவ உணர்வும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கினார். சமையற்கலையிலும் ரமணன் தேர்ந்த வராக இருந்தார். தனது சக போராளிகளுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து தருவதில் ஆர்வத்துடன் செயற்படுவார் . ரமணன்இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படும். இவருடைய குழப்படிகளுக்காக இடையிடையே சிறு தண்டணைகளையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்வார்.

2004 ம் ஆண்டு எமது தாயகத்தை சுனாமிப் பேரலைகள் தாக்கிய போது, போர்ப்பயிற்சி கல்லூரியில் கடமைகளில் இருந்த றமணன் உடனடியாக சக போராளிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். இந் நாட்களில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, உடுத்துறை, தாழையடி ஆகிய பகுதிகளில் ரமணன்ஓய்வொழிச்சலின்றி செயற்பட்டார்.

போர்ப்பயிற்சி கல்லூரியில் ரமணன்கிளைமோரை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்று தேர்ந்த நிபுணனாக விளங்கியதோடு , மாஸ்டரின் வழிநடத்தலில் புதிய போராளிகளுக்கு அப் பயிற்சிகளை வழங்கி அவர்களை சிறந்த செயற்பட்டாளர்களாக உருவாக்கினார். மேலும் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சியையும் மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பாளர் பயிற்சியையும் திறமுடன் நிறைவு செய்தார்.

நாகர்கோவில் களமுனையில் வீரமணி பகுதிப் பொறுப்பாளராக இருந்த போது, ரமணன்இணைந்து பல்வேறு பாதுகாப்பு கடமைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் திறமுடன் செயற்பட்டார். 2006 ம் ஆண்டு மே மாதத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த வெடிவிபத்தில் வீரமணி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போது மிகு‌ந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். வீரமணியை இழந்த தாக்கத்திலிருந்து விரைவில் மீண்ட ரமணன்மன்னார் களமுனையில் தீவிர செயற்பாடுகளில் இறங்கினார்.

மன்னார் மாவட்டத்தில் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள் நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தல்களில் புலனாய்வுத் துறை மற்றும் அரசியறதுறை போராளிகளுடன் இணைந்து ஓய்வின்றி செயற்பட்டார். உள் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட தேசியத் தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொண்ட ரமணன் எதிரியின் முன்னரண் வரிசையை ஊடறுத்து தான் தெரிவு செய்த பாதையூடாக தனது அணியுடன் மன்னார் நகருக்குள் சென்றார். அங்கு இராணுவத்தினரின் வாகனங்கள் மீது பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினமேலும் பல மன்னாரைக் கைப்பற்றுவதற்கான வேவு நடவடிக்கைகளிலும் றமணன் தனது அணியை சிறப்புடன் ஈடுபடுத்தினார்.

 

இந்நிலையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேஜர் கிண்ணி அவர்களின் நினைவு நாளான யூலை 10 அன்று எதிரியின் மீது ஒரு அதிரடித் தாக்குதலை நடத்த வேண்டுமென தீர்மானித்த ரமணன் எதிரியின் சிறு முகாம் ஒன்றை தெரிவு செய்து தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தார். அதன்படி 2006 ம் ஆண்டு யூலை மாதம் 10 ம் நாள் அதிகாலையில் ரமணன் புலனாய்வுத் துறை போராளி ஒருவரும் எதிரியின் முகாம் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தனர் . சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந் நேரடிச் சமரில் ரமணன் அவருடைய சக தோழனும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் .

அப்பொழுது படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த கோபித் அவர்களும் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லக்ஸ்மன் அவர்களும் எடுத்த பெருமுயற்சியால் இருவருடைய வித்துடல்களும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக எமது பகுதிக்கு எடுத்து வரப்பட்டு கிளிநொச்சி துயிலுமில்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. துயிலுமில்லத்தில் கூடிய பொதுமக்கள் மற்றும் போராளிகளின் பெருங்கூட்டம் ரமணனுடைய அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளையும் மக்கள் பற்றையும் எடுத்துக் காட்டுவனவாக விளங்கின.

மிக இளம் வயதிலேயே தமிழரின் தாயக விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உணர்வோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ரமணன் மிகுந்த அர்ப்பணிப்போடும் விடாமுயற்சியோடும் தொடர்ந்து களமாடி, விடுதலைப் போரை வீச்சாக்கிய பல்லாயிரம் மாவீரர்களுடன் இணைந்து கொண்டார். படையணியின் தாக்குதல் தளபதிகளுள் ஒருவராக விளங்கிய லெப். கேணல் ரமணன்அவர்களின் போராட்ட வாழ்க்கை இளம் போராளிகளுக்கு ஊக்கமூட்டுவதாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். ரமணன்காலடிகள் பதிந்த படைத்துறைப் பள்ளியும் புலிகளின் பாசறைகளும் களமாடி வாகை சூடிய களங்களும் அவருடைய உணர்வை எடுத்தியம்பிக் கொண்டேயிருக்கும் .

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

லெப். சாள்ஸ் அன்ரனி முகநூல் பதிவிலிருந்து …….

Like this:

Edited by நந்தன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.