Jump to content

இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை

இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை

 

ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
பதிவு: ஜூலை 10,  2020 17:08 PM

சிட்னி

ஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார்.


கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.தொடர்ந்து 7 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கடும் பயிற்சி 
மேற்கொண்டு வந்த அவரால், துரதிர்ஷ்டமாக உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாமல் போனது.இதனால் மனமுடைந்த கார்மென், ஒரு மாறுதல் தேவை என கருதி, தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தொடர்ந்து குறிப்பிட்ட எந்த பயணத் திட்டமும் இன்றி டெல்லிக்கு புறப்பட்டு சென்ற கார்மென், இமையமலைக்குச் செல்ல உள்ளூரில் உதவியை நாடியுள்ளார்.

அப்போது ஒருவர் கார்மெனிடம், தாம் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என கூறி, ஏமாற்றி காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கே அறிமுகமான நபர், தம்முடன் தங்குவது பாதுகாப்பானது என கூறியதுடன், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு பயணப்படுவதற்கு முன்பு தமது படகு வீட்டில் அந்த இரவு தங்க ஏற்பாடு செய்துள்ளார்.ஆனால் அடுத்த சில நாட்களில் தாம் அந்த நபரிடம் சிக்கியுள்ளது கார்மெனுக்கு தெரியவந்தது.அதன் பிறகு 

ஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்துள்ளது கார்மெனுக்கு. அந்த நபர் எத்தனை முறை தம்மிடம் அத்துமீறினார் என்பதை கூட தம்மால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாமல் போனது என்கிறார் கார்மென்.இதனிடையே கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலிய தூதரகத்தை தொடர்புகொண்டு தமது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கார்மெனை மிரட்டி அந்த நபர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள வைத்ததே, பொலிசாருக்கு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட உதவியாக அமைந்துள்ளது.

இரண்டு மாத காலம் அந்த படகு வீட்டில் கார்மென் பட்ட அவஸ்தைகள் முழுவதையும் அவர் தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த நபருக்கு துஷ்பிரயோக வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தாம் அறிந்ததாக கூறும் கார்மென், இன்னொரு முறை இந்தியா செல்வதை தாம் விரும்பவில்லை என்கிறா

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10170854/An-empirical-story-written-by-an-Australian-woman.vpf

 

1 minute ago, உடையார் said:

அந்த நபருக்கு துஷ்பிரயோக வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தாம் அறிந்ததாக கூறும் கார்மென், இன்னொரு முறை இந்தியா செல்வதை தாம் விரும்பவில்லை என்கிறா

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10170854/An-empirical-story-written-by-an-Australian-woman.vpf

 

விளங்கிடும் கிந்தியா😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.