Jump to content

கோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..? கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு


Recommended Posts

அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும்.

போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம்.

வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.

எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது அரசிடம் அமைச்சர்களை கூட எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா வேட்பாளர்களுக்கு, மக்கள் அதிருப்தி வெளியிடும் வகையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சுமந்திரன் வெளியிட்டு வரும் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய மக்கள் சந்திப்பில் அமைச்சுப் பதவி எதிர் காலத்தில் பெறுவது கட்டாயம் என்பதை மிகவும் லோஜிக்காக சுமந்திரன் கூறுவதற்கான காரணம் இவை தொடர்பில் ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தத்தை அப்படியே மற்றி கூறுவதற்கு ஏதுவாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வருகின்ற அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழர்களின் எதிர்கால நிரந்தரத்த தீர்வு குறித்த மாத்திரமே நாங்கள் பேச்சுவார்த்தைகளை

கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாம் கண்காணிப்பதாகவும், மேலும் சுமந்திரன் தீர்வு வருவதற்கு இடையில் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளை பெறலாம் எனும் கருத்துப் பட கருத்துக்ககை வெளியிட்டுள்ளமைக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/250691?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Rajesh said:

அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும்.

போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம்.

வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.

எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது அரசிடம் அமைச்சர்களை கூட எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா வேட்பாளர்களுக்கு, மக்கள் அதிருப்தி வெளியிடும் வகையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சுமந்திரன் வெளியிட்டு வரும் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய மக்கள் சந்திப்பில் அமைச்சுப் பதவி எதிர் காலத்தில் பெறுவது கட்டாயம் என்பதை மிகவும் லோஜிக்காக சுமந்திரன் கூறுவதற்கான காரணம் இவை தொடர்பில் ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தத்தை அப்படியே மற்றி கூறுவதற்கு ஏதுவாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வருகின்ற அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழர்களின் எதிர்கால நிரந்தரத்த தீர்வு குறித்த மாத்திரமே நாங்கள் பேச்சுவார்த்தைகளை

கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாம் கண்காணிப்பதாகவும், மேலும் சுமந்திரன் தீர்வு வருவதற்கு இடையில் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளை பெறலாம் எனும் கருத்துப் பட கருத்துக்ககை வெளியிட்டுள்ளமைக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/250691?ref=imp-news

குருவை மிஞ்சிய... சிஷ்யன் தான், சுமந்திரன்.
சம்பந்தனுக்கும், மாவைக்கும்... 
"அல்வா"  கொடுத்த, சுமந்திரன் கெட்டிக்காரன். 👿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுப்பணி துறை நல்ல வளமான துறை ஒரு வேளை வீதி அபிவிருத்தி , நீர் வழங்கல் , நெடுஞ்சாலை...  என்டு தனி தனியாக பிரித்து கொத்து ரொட்டி போட்டு இருந்தால் நெடுஞ்சாலை துறை கேட்டு வாங்குவது நலம் பயக்கும்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும்.

சர்வதேசத்துடன் பேரம்பேசும் சக்தியாக எங்களை உங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்யுங்கள் என்கிறார் சம்பந்தர். நாங்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்திடம் கோரிக்கை எதுவும்  வைக்கப்போவதில்லை என்கிறார் மற்றவர். அப்படி என்றால்; சர்வதேசத்திடம்:  இலங்கைக்கு முண்டு கொடுப்பதற்காக இவர்களை நாங்கள் தெரிவு செய்து இவர்களை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு, நாங்கள் தேய்ந்து போகவேண்டும். கொலை செய்தவன் தலைநிமிர்ந்து நிக்கிறான். இழப்புகளின்  இனத்தின் தலைவன் கேள்வி கேட்க நாதியற்று கூனிக்குறுகி, சிரம் தாழ்த்தி, யாசகம் எடுக்கிறார். ஏன்? இத்தனை கோடி தமிழர் உலகமெல்லாம் பரந்து கைகொடுக்க காத்திருக்க, இத்துணை ஒண்டு நாட்டுக்காரன் எவ்வளவு திமிராய் செய்த தவறெல்லாம் சரியென குதர்க்கம் பண்ணுறான். எப்படி? எவ்வளவு குட்டினாலும் நிலத்தை குடைஞ்சும் குனிந்து வணங்குவார் சம்பந்தன், பின் எழுந்து தன் மக்களிடம் சிங்கம் போல் கர்சிப்பார் சம்பந்தன் என்று எதிரிக்கு நல்லாவே தெரியும். சாதாரண பேட்டி எடுக்கும் நபர் மீதே எப்படி காய்ந்து விழுகிறார். ஏன்? "முதுகில் புண்ணுள்ளவனுக்கு காடு நுழைய பயம்." முதுகில வாங்கிச் சேர்த்த சொத்தெல்லாம் விழுந்து விடும் என்கிற பயமே அப்படிச் செய்கிறார். தன்ர பாய்ச்சலில் ஒருவரும் தன்னை கேள்வி கேட்க மாடடார்கள். தலைவனையும், இரகசிய ஒப்பந்தங்களையும், அதற்காக வாங்கிச் சேர்த்த சொத்துக்களையும் காப்பாற்றி விடுவேன் என்கிற நப்பாசை..

விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற பண்பு, தவறுகளை தட்டிகேட்கும் திருத்திக்கொள்ளும்  பண்பு,  பொறுமையாக விளக்கம் கொடுக்கும் பண்பு, நம்பிக்கையை கட்டி எழுப்பும் பண்பு எதுவும் இல்லாத சோரம் போன, தோல்வியடைந்த சம்பந்தனும், அவர் கூட்டமும் ஒழிக!!!

Link to comment
Share on other sites

தலைப்புக்கும், அதன் உள்ளடக்கத்திக்கும், சுமந்த்திரன் பேசிய காணொளிக்கும் எவ்வித தொடர்புமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடு: ஐங்கரநேசன்

July 11, 2020

iynkaran-300x199.jpg

 

மைத்திரி – ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முண்டு கொடுத்து நின்றார்கள். அப்போது இனத்தின் நலனுக்காகப் பேரம்பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாவதற்குப் பேரம்பேசத் தங்களுக்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும்; வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இது தொடர்பான தெருமுனைத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று இரவு யாழ்ப்பாணம் பிறவுண் வீதிப் பகுதியில் நடைபெற்றபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வடமராட்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் புதிய ஆட்சியில் கூட்டுப்பொறுப்புடன் அமைச்சரவையில் இணைவது குறித்துப் பேசியுள்ளார். மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பானவர்களின் பிரச்சினை போன்றவை தொடர்பாகவேனும் நிபந்தனைகளை விதித்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றிருக்கமுடியும். ஆனால், அவர்கள் அங்கஜன் அவர்களுக்குப் பிரதி சபாநாயகர் பதவி வழங்கக்கூடாது, டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துத் தாங்கள் நிழல் அமைச்சர்களாகப் பதவி வகிக்க விரும்பினார்களே அல்லாது இனத்தின் நலன் சார்ந்து எதனையும் செயற்படுத்தவில்லை.

சுயேச்சைக் குழுக்கள் தங்களது வாக்குகளைப் பிரிப்பதற்காகக் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பேசிவருகின்றனர். நாங்கள் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டாலும் தேர்தலின்போது மாத்திரம் தோன்றி மறையும் மழைக்காளான்கள் போன்றவர்களல்லர். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கி வலுவான ஒரு அரசியல் கட்சியாகப் பரிணாமித்திருக்கின்றது. தேர்தல் ஆணையத்தில் கட்சிப்பதிவுக்காக விண்ணப்பித்திருக்கிறோம். தேர்தல் உரிய காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால் கட்சிப்பதிவு தாமதப்பட சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளோம். இயற்கையை நீயழித்தால் இயற்கையால் நீயழிவாய் என்று கொரோனா உலகத்திற்கு உரத்துப் போதித்திருக்கும் நிலையில் கொரோனாவிற்குப் பின்னரான அரசியல் இயற்கைக்கான தருணமாகவே இருக்கப்போகின்றது. அந்தவகையில் சூழலியத்தை முன்னிறுத்தியுள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அரசியலில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/53676

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.