Jump to content

'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை

புத்தர் சிலை (சித்தரிப்புப் படம்)Getty Images சித்தரிப்புப் படம்

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். 

மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த விகாரை இருந்தமைக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். 

அந்த இடத்தில் அமைந்திருந்த பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேச்சரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். 

இலங்கையில் இரண்டாவது இராசதானி இருந்த காலப் பகுதியிலேயே இந்த விகாரை அமைந்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார். 

இந்த காலப் பகுதியில் போர்த்துகேயர் திருகோணமலையில் கோகண்ண விகாரையை உடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இவ்வாறு உடைக்கப்பட்ட கோயிலின் சிதைவுகளை எடுத்து, அந்த இடத்தில் திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

 

திருகோணேஸ்வரம் கோயில், பாடல்பெற்ற திருத்தலம் என இந்துக்களின் பழைமை வாய்ந்த புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரரிடம் பிபிசி தமிழ் வினவியது.

பிற்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றி அமைத்துகொண்டதாக அவர் பதிலளித்தார். 

இந்த இடத்தில் பௌத்த விகாரை இருந்தமைக்கான ஆதாரங்கள் என்னவெனவும் பிபிசி தமிழ் வினவியது.

குறித்த பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள், விகாரை உடைக்கப்பட்டமைக்கான சிதைவுகள், சந்திரவட்டகல் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறான சில சிதைவுகள் கடலுக்குள் வீசப்பட்டுள்ளதாகவும், சில சிதைவுகள் மலைக்கு மேல் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். 

பொலன்னறுவை யுகத்திலிருந்த மன்னன் ஒருவரின் கல்வெட்டொன்றில், கோகண்ண விகாரை என வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். 

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்

கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இல்லாமையினாலேயே இவ்வாறான கருத்து வெளியிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்தும் பிபிசி தமிழ், எல்லாவல மேதானந்த தேரரிடம் வினவியது.

நாட்டிலுள்ள அனைத்து விடயங்களுக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை நியமித்து பணியாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார். 

இலங்கையின் பல்வேறு விடயங்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனவாத விடயங்களை வெளியிட்டு அரசியல் லாபம் தேடி வருவதாகவும் அவர் கூறினார். 

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்தச் செயலணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

சிங்கள மக்களிடமோ அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இனவாத கருத்துகள் கிடையாது என மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். 

இலங்கையிலுள்ள தொல்பொருட்களை பாதுகாக்கும் நோக்குடனேயே ஜனாதிபதியினால் இந்த ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், அதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் கூறினார். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதற்காகவே இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதைவிடுத்து, கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களை உடைப்பதற்காக இந்த செயலணி உருவாக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பௌத்த விகாரைகளை உடைத்து, கோயில்கள் கட்டப்பட்டுள்ளதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். 

விகாரைகளை உடைத்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் ஆலயங்களின் பெயர்களை அவர் பட்டியலிட்டார். 

01. திருகோணமலை திருகோணேஸ்வரம் கோயில்

02. ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வரம் கோயில் 

03. கனகராயன்குளம் கோயில்

04. வவுனிகுளம் கோயில்

05. திருகேதீஸ்வரம் கோயில்

06. தொப்பிகல கோயில்

07. வவுனியா - மருதநாயகன் குளம் கோயில் 

இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயங்களில் பெரும்பாலானவை விகாரைகளை உடைத்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். 

இந்து அமைப்புகள் எதிர்ப்பு 

SACHITHANANTHAN

புத்த பெருமானின் போதனைகளுக்கு எதிராகவே எல்லாவல மேதானந்த தேரர் செயற்பட்டு வருவதாக சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார். 

அறிக்கையொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

வெறுப்பையும், வேற்றுமையையும், பழிவாங்கல்களையும் புத்த பெருமான் போதிக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். 

ஆனால் எல்லாவல மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறுகின்றார். 

இலங்கை தீவில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்றால், எல்லாவல மேதானந்த தேரரின் கருத்து புறக்கணிக்கப்பட வேண்டும் என மறவன் புலவு க சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார். 

'திருகோணேஸ்வரம் ஆலயத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை'

பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார். 

புஷ்பரத்தினம்UMA CHANDRA PRAGASH

பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்னர் தென்னிந்தியாவை ஒத்ததான ஒரு கலாசாரம் இங்கு நிலவியதாக அவர் கூறுகின்றார். 

இந்த கலாசார பண்பாட்டின் ஊடாக இலங்கையில் இந்து மதத்திற்கான ஆரம்பம் தென்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். 

இலங்கையில் இந்துக்கள் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே இருப்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் கிழக்கு இலங்கையும் ஒன்று என அவர் கூறுகின்றார். 

நாயன்மார் பாடல்களில் திருகோணேஸ்வரம் தொடர்பில் பாடப்பட்டுள்ளதையும் அவர் இதன்போது நினைவூட்டினார். 

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சிவ வழிபாடு இலங்கையின் திருகோணேஸ்வரம் மற்றும் திருகோதீஸ்வரம் ஆகிய ஆலயங்களில் இடம்பெற்றதாக வரலாற்று சான்றுகள் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார். 

திருகோணேஸ்வரம் ஆலயத்தை சூழ தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளதாக அவர் கூறுகின்றார். 

7ஆம் நூற்றாண்டிலேயே திருகோணேஸ்வரம் கோயில் தொடர்பில் பாடல்கள் பாடப்பட்டால், அதற்கு முன்னதாகவே அந்த கோயில்கள் பிரசித்தி பெற்றவையாக இருந்துள்ளது என அவர் தெரிவிக்கின்றார். 

இதனால் குறித்த கோயில் தொடர்பில் பௌத்த தேரர் வெளியிடும் கருத்து முற்றியும் தவறானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-53368642

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மா.... புளிக்கிறது, அப்பத்துக்கு நல்லது"  என்பார்கள்.
இந்தியா... "ப்ளீஸ்,  ஹெல்ப்  அஸ்" 

டிஸ்கி: இந்தப் பதிவை, கபிதன் வாசிக்க வேண்டாம், என வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

"மா.... புளிக்கிறது, அப்பத்துக்கு நல்லது"  என்பார்கள்.
இந்தியா... "ப்ளீஸ்,  ஹெல்ப்  அஸ்" 

டிஸ்கி: இந்தப் பதிவை, கபிதன் வாசிக்க வேண்டாம், என வேண்டுகின்றேன்.

சரி, 

நான் வாசிக்கவில்லை. 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

சரி, 

நான் வாசிக்கவில்லை. 🤐

SACHITHANANTHAN

வெறி குட்...  கபிதன். நீங்கள் சொன்னதை... நாங்கள், நம்பி விட்டோம்  

ஓகே... நாங்கள், இப்ப... தலைப்பு செய்திக்குப் போவோம்.

இப்ப இருக்கும், சூழ் நிலையில்... சம்பந்தனை நம்புவதை விட...
மறவன் புலவு  சச்சிதானந்தன் ஐயா... தான்,
இந்தியாவை... எமக்கு, ஆதரவாக திரட்டக்  கூடிய தகுதியில் இருக்கிறார்,
என்பது... உலகறிந்த உண்மை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

SACHITHANANTHAN

⁂ வெறிரி குட்...  கபிதன். நீங்கள் சொன்னதை... நாங்கள், நம்பி விட்டோம்  

ஓகே... நாங்கள், இப்ப... தலைப்பு செய்திக்குப் போவோம்.

இப்ப இருக்கும், சூழ் நிலையில்... சம்பந்தனை நம்புவதை விட...
மறவன் புலவு  சச்சிதானந்தன் ஐயா... தான்,
இந்தியாவை... எமக்கு, ஆதரவாக திரட்டக்  கூடிய தகுதியில் இருக்கிறார்,
என்பது... உலகறிந்த உண்மை. :)

 எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டுள்ளது.😎

வெள்ளிகிழமை எண்டாலே கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டுள்ளது.😎

வெள்ளிகிழமை எண்டாலே கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு.....

ஆகா..... குமாரசாமி அண்ணா, நல்ல பகிடி. :grin:
*******`*   "மைண்ட் வாய்ஸை"   வெளியே... சொல்லப் படாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

SACHITHANANTHAN

வெறி குட்...  கபிதன். நீங்கள் சொன்னதை... நாங்கள், நம்பி விட்டோம்  

ஓகே... நாங்கள், இப்ப... தலைப்பு செய்திக்குப் போவோம்.

இப்ப இருக்கும், சூழ் நிலையில்... சம்பந்தனை நம்புவதை விட...
மறவன் புலவு  சச்சிதானந்தன் ஐயா... தான்,
இந்தியாவை... எமக்கு, ஆதரவாக திரட்டக்  கூடிய தகுதியில் இருக்கிறார்,
என்பது... உலகறிந்த உண்மை. :)

சத்தியமா நான் ஒண்டையும் வாசிக்கயில்ல. கீழ உளளது என்ர மைய்ன்ற் வொய்ஸ் மட்டுமே🤐

எல்லாவல மேதானந்த தேரரும் நமது சச்சியரும் அண்ணனும் தம்பியும். குடும்பப் பிரச்சனைக்க நாங்க தலை போட ஏலாதுதானே. ☹️

Link to comment
Share on other sites

17 hours ago, தமிழ் சிறி said:

SACHITHANANTHAN

வெறி குட்...  கபிதன். நீங்கள் சொன்னதை... நாங்கள், நம்பி விட்டோம்  

ஓகே... நாங்கள், இப்ப... தலைப்பு செய்திக்குப் போவோம்.

இப்ப இருக்கும், சூழ் நிலையில்... சம்பந்தனை நம்புவதை விட...
மறவன் புலவு  சச்சிதானந்தன் ஐயா... தான்,
இந்தியாவை... எமக்கு, ஆதரவாக திரட்டக்  கூடிய தகுதியில் இருக்கிறார்,
என்பது... உலகறிந்த உண்மை. :)

மறவன்புலவு சச்சிதானத்தின் முத்தைப்  பார்ககும் போது நீங்கள் எழுதிய வெறிகுட் (டி) என்ற வார்ததை சரியாக பொருந்துகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.