Jump to content

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!


Recommended Posts

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

முள்ளியவளைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போதே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் பேசிய அவர்,

போராட்ட கால கட்டத்தில் என்னை மக்கள் ஆதரித்து எனக்காக வாக்களித்தார்கள். அன்று இருந்த சந்தர்ப்பத்தினை மறக்க முடியாது.

இதனை மனதில் வைத்துத் தான் அரசுடன் சேர்ந்தேன். அந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக பணி செய்தேன். அவர்கள் பாதுகாப்பில் இருந்து எல்லாம் செய்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் கொஞ்ச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம்.

எங்கோ போன வேலைவாய்ப்பினை நான் தட்டிப்பறித்து எடுத்து கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று அமைச்சராக றிஷாட் பதியூதீன் இருந்தார்.

அவர் அரசாங்கத்தின் அமைச்சர் நான் அரசாங்கத்தின் பிரதிநிதி நான் சண்டைபிடித்து தான் சமுர்த்தி,கிராமசேவை,பட்டதாரிகள் உத்தியோகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் சிலருக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க முடியாமல் போனது. எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பினை குறைத்து தங்கள் இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க செயற்பட்டார்கள். இதனால் எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டது.

அன்று நான் முடிவெடுத்தேன் தனியாக நின்று அரசியலுக்குள் சென்றுதான் எங்கள் மக்களை காப்பாற்றவேண்டும் அது இன்று பலித்துள்ளது இதற்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும்.

வன்னி மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் அவர் அரசுடன் நிற்கும் தமிழராக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

போராட்டத்திற்கு பின்னர் வன்னி மக்கள் கடும் வறுமையில் இருக்கின்றார்கள். வறுமையினை போக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி எடுத்து காட்டுங்கள்.

வன்னிமாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் காணிப்பிரசனை, வீட்டுப்பிரச்சனை, போரால் வலுஇழந்தவர்கள், முன்னால் போராளிகள் என்று வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.

இறுதிவரையும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்ளோடு வெளியேறி எட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன் நான் செய்த தவறு மக்களோடு மக்களாக நின்றது தான்.

கடந்த பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்து என்ன செய்வார்கள் என்று யார் நம்புவது. இருக்கின்ற அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியினை செய்வதை தவிர வேறு யாருக்கும் சந்தர்பம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/146441

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசைக்காக எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள். சீ... மானங்கெட்ட பிழைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு நாதாரி தமிழ்  வேட்பாளர். இறுதி யுத்தகாலத்தில் புலி தலைவர்கள் இப்படி சொன்னதாக கற்பனை செய்கிறார். இவர் அரசுடன் நின்று சேவைசெய்ய புறப்பட்டதாக தெரியவில்லை ராஜபக்ச கோஷ்டிக்கு சேவகம் செய்ய புறப்பட்டதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

முள்ளியவளைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போதே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் பேசிய அவர்,

போராட்ட கால கட்டத்தில் என்னை மக்கள் ஆதரித்து எனக்காக வாக்களித்தார்கள். அன்று இருந்த சந்தர்ப்பத்தினை மறக்க முடியாது.

இதனை மனதில் வைத்துத் தான் அரசுடன் சேர்ந்தேன். அந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக பணி செய்தேன். அவர்கள் பாதுகாப்பில் இருந்து எல்லாம் செய்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் கொஞ்ச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம்.

எங்கோ போன வேலைவாய்ப்பினை நான் தட்டிப்பறித்து எடுத்து கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று அமைச்சராக றிஷாட் பதியூதீன் இருந்தார்.

அவர் அரசாங்கத்தின் அமைச்சர் நான் அரசாங்கத்தின் பிரதிநிதி நான் சண்டைபிடித்து தான் சமுர்த்தி,கிராமசேவை,பட்டதாரிகள் உத்தியோகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் சிலருக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க முடியாமல் போனது. எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பினை குறைத்து தங்கள் இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க செயற்பட்டார்கள். இதனால் எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டது.

அன்று நான் முடிவெடுத்தேன் தனியாக நின்று அரசியலுக்குள் சென்றுதான் எங்கள் மக்களை காப்பாற்றவேண்டும் அது இன்று பலித்துள்ளது இதற்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும்.

வன்னி மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் அவர் அரசுடன் நிற்கும் தமிழராக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

போராட்டத்திற்கு பின்னர் வன்னி மக்கள் கடும் வறுமையில் இருக்கின்றார்கள். வறுமையினை போக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி எடுத்து காட்டுங்கள்.

வன்னிமாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் காணிப்பிரசனை, வீட்டுப்பிரச்சனை, போரால் வலுஇழந்தவர்கள், முன்னால் போராளிகள் என்று வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.

இறுதிவரையும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்ளோடு வெளியேறி எட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன் நான் செய்த தவறு மக்களோடு மக்களாக நின்றது தான்.

கடந்த பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்து என்ன செய்வார்கள் என்று யார் நம்புவது. இருக்கின்ற அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியினை செய்வதை தவிர வேறு யாருக்கும் சந்தர்பம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/146441

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனகரத்த்தினம் அண்ணை.... இதை கற்பூரத்திலை அடித்து, சத்தியம் பண்ணினால் தான்.... நான் நம்புவன். 😜

Link to comment
Share on other sites

20 minutes ago, தமிழ் சிறி said:

கனகரத்த்தினம் அண்ணை.... இதை கற்பூரத்திலை அடித்து, சத்தியம் பண்ணினால் தான்.... நான் நம்புவன். 😜

அடிச்சு சத்தியம் பண்ணேக்க கற்பூரம் அணையக் கூடாது! 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.