Jump to content

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

spacer.png

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர் என்றும் எனவே, சாதாரண மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் என்றும் குறிப்பிட்ட ஞானசார தேரர்இதற்காக நாமும் குரல் எழுப்புவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எத்தனை வருடங்கள் இதற்கான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என கேள்வியெழுப்பிய அவர், இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துவந்தபோதும் அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டனர் என்றும் எனவே, இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, 13 அல்லது 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல என குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து, இதோ, இந்தத் தீர்வைத்தான் எம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்களின்-பிரச்சின-15/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது முகப்புத்தக கணக்கினை, அந்நிறுவனம் மூடி விட்டது.

இது குறித்து, இரத்தின தேரர் தலைமையிலான குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

Link to comment
Share on other sites

கோத்தாவின் கணக்கு கொஞ்சம் தப்பு கணக்கா போகிறது அதானால் தான் இப்ப வந்து கெஞ்சிரார். 2/3 ஆவது எடுக்க வேணும் அல்லது அதற்கு எடுக்க வேணும் இல்லாவிட்டால்  எதிர்கட்சியும் கட்சி தாவுகிரவர்களும் சேர்ந்து 2/3 எடுத்து கோத்தாவை பதவி நீக்கம் செய்தாலும் செயலா அதற்கு தான் இப்பவே நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

கோத்தாவின் கணக்கு கொஞ்சம் தப்பு கணக்கா போகிறது அதானால் தான் இப்ப வந்து கெஞ்சிரார். 2/3 ஆவது எடுக்க வேணும் அல்லது அதற்கு எடுக்க வேணும் இல்லாவிட்டால்  எதிர்கட்சியும் கட்சி தாவுகிரவர்களும் சேர்ந்து 2/3 எடுத்து கோத்தாவை பதவி நீக்கம் செய்தாலும் செயலா அதற்கு தான் இப்பவே நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மகிந்தாவின் கணக்கு தான் 2/3. அதன் முலம் அரசியல் அமைப்பினை மாத்தி, தம்பியை ராஜினாமா செய்ய வைத்து, பிரதமர் ஜனாதிபதியாகலாம் என்ற சட்டப்படி, தேர்தல் இல்லாமல், மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக கனவு காண்கிறார். இதன்மூலம், கோத்தாவின் மகன் இல்லை, மகிந்தா மகன் நாமல் 2025 தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யமுடியும் என்பது அம்மணி, சிராணி ராஜபக்சேவின் வியூகம்.

இதுதான் நிலை. கோத்தாவுக்கு 2/3 விருப்பமில்லை அதனால் தான், தனக்கு ஒரு பாதுகாப்புக்காக ராணுவத்தினை கொண்டுவாறார். 

இலங்கையில் பதவிக்காக, மகன்மார் தந்தையும், பின்னர் அந்த சகோதரர்கள் ஒருவரை ஒருவர் அழித்ததையும் வரலாறு சொல்கிறது.

இந்த சகோதரர்களுக்கு போனமுறை பொது எதிரியாக புலிகள் இருந்தார்கள். இம்முறை தமக்குள் அடிபடபோகின்றனர்.

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

மகிந்தாவின் கணக்கு தான் 2/3. அதன் முலம் அரசியல் அமைப்பினை மாத்தி, தம்பியை ராஜினாமா செய்ய வைத்து, பிரதமர் ஜனாதிபதியாகலாம் என்ற சட்டப்படி, தேர்தல் இல்லாமல், மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக கனவு காண்கிறார். இதன்மூலம், கோத்தாவின் மகன் இல்லை, மகிந்தா மகன் நாமல் 2025 தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யமுடியும் என்பது அம்மணி, சிராணி ராஜபக்சேவின் வியூகம்.

இதுதான் நிலை. கோத்தாவுக்கு 2/3 விருப்பமில்லை அதனால் தான், தனக்கு ஒரு பாதுகாப்புக்காக ராணுவத்தினை கொண்டுவாறார். 

இலங்கையில் பதவிக்காக, மகன்மார் தந்தையும், பின்னர் அந்த சகோதரர்கள் ஒருவரை ஒருவர் அழித்ததையும் வரலாறு சொல்கிறது.

இந்த சகோதரர்களுக்கு போனமுறை பொது எதிரியாக புலிகள் இருந்தார்கள். இம்முறை தமக்குள் அடிபடபோகின்றனர்.

எமது இனத்தின் விடுவிக்கும் இதுவே வழி சமைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொட்டை! அண்ணனுக்கா தம்பிக்கா வேலை செய்வது என்று தெரியாமல் முழிக்குது. மலிந்தால் சந்தைக்கு வருந்தானே, பொறுத்திருந்து பாப்போம். மஹிந்தர் எத்தனை கூத்தாடினாலும் நாமலுக்கு அந்த அதிஷ்டம் இல்லை என்றே நான் நினைக்கிறன். தமிழர் வாக்கு இல்லாமலே, எம்மால் அரசியலில்  எதுவும் செய்யலாம். என்று சவால் விட்டவர்கள் குழைவதன் காரணம்? தமிழர் இல்லாமல், வெற்றியாய் அரசியல் நகராது. இதுதான் யதார்த்தம் இலங்கையில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.