Jump to content

ஃபின்லாந்து மீதான சோவியத் படையெடுப்பும் ஸ்கன்ரிநேவியா மீது ஜேர்மனி படையெடுப்பும் – உலகப்போர் 2 – பகுதி 6


Recommended Posts

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று  நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கினார். நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த  பிரிட்டன் முனைந்த போதும்  ஜேர்மனி முந்திக்கொண்டது.

 

தெற்கு பால்டிக் பிரதேசத்தை பலப்படுத்தியாகிவிட்டது என்னும் நிலையில் அடுத்து ஃபின்லாந்து மீது தனது கவனத்தை திருப்பியது சோவியத்யூனியன்.

ரஷியப் பேரரசின் ஒரு பகுதியாக நீடித்த ஃபின்லாந்து அக்ரோபர் புரட்சிக்கு பிறகே சுதந்திரத்தை அனுபவித்தது என்றாலும் அச்சமயம் கலவரமும் கலகமும் ஃபின்லாந்தை மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஜனநாயக நாடாக இருந்த அந்த தேசத்தை குட்டிச்சுவராக்கியவர் Baron Mannerheim. ஸார்  மன்னரிடம் (ரஷ்ய முடியாட்சியில் அதன் மன்னரை Tsar  என அழைப்பது வழக்கம்.) ஜெனரலாக இருந்தவர். இவர் வருகைக்கு பிறகு, ஃபின்லாந்து சோவியத் எதிர்ப்புக்கான அடித்தளமாக மாறியது. யார் சோவியத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, யார் ஸ்ராலினுக்கு எதிராக சதி செய்ய வேண்டுமானாலும் சரி, இங்கே இடம் உண்டு. வரவேற்பு உண்டு.

பிரிட்டனின் மேற்பார்வையில் இங்கு வரிசையாக பல பாதுகாப்பு கோட்டைகள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி தன் பங்கிற்கு விமானத்தளங்களை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 2000 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவுக்குப் பெரிய தளம் அது. ஃபின்லாந்திடம் அப்போது இருந்ததோ வெறும் 150 விமானங்கள் மட்டுமே. இந்த 150 விமானங்களுக்கு இத்தனை பெரிய தளம் அங்கே அமைக்கப்பட்டதற்குக் காரணம் சோவியத்திற்கு எதிரான தளமாக  அதை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே.

 

பின்லாந்தின் எல்லைகளை குறித்த சோவியத்தின் கவலை

ஃபின்லாந்தை பலப்படுத்தவேண்டிய, தனது எல்லைகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் சோவியத்திற்கு இருந்தது. எதிரி தேசங்கள் வந்து கூடாரம் அமைத்து தாக்குதல் தொடுக்கும் வரை சும்மா இருப்பதற்கில்லை. போலந்து வரை வந்துவிட்ட நாசிகளால் ஃபின்லாந்தை ஆக்கிரமிக்க எத்தனை நாள் பிடிக்கும்? பிரிட்டனும் பிரான்ஸும் கூட ஜேர்மனி பக்கம் இருப்பது போல அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியம் சோவியத்திற்கு.

பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தது சோவியத். ஃபின்லாந்துக்கு சோவியத்திடம் பெறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார உதவி. ஃபின்லாந்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சிதைந்து போயிருந்தது. எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் சோவியத் உதவிக்கரம் நீட்டினால் பற்றிக்கொள்ளும். இரண்டாவது, Leningrad Murmansk ரயில்வே பாதையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி. வெளியுலகத்தோடு  தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஃபின்லாந்துக்கு இந்த ரயில் தடம் அவசியம். சோவியத்தின் உதவி இல்லாமல் இந்தப் பாதையைப் பயன்படுத்தமுடியாது. இந்த இரு உதவிகளையும் ஃபின்லாந்துக்கு அளித்து அவர்கள் ஒப்புதலுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாமா என்று யோசித்தது சோவியத்.

ஒக்ரோபர் 5, 1939 அன்று ஃபின்லாந்தை தொடர்பு கொண்டது சோவியத். உங்கள் பிரதிநிதி யாரையாவது அனுப்பி வையுங்கள். தொங்கலில் இருக்கும் சில விஷயங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஃபின்லாந்தின் எதிர்வினை விசித்திரமாக இருந்தது. உடனடியாக தனது எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. தலைநகரம் ஹெல்ஸின்கியில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் துரிதமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது. பங்கு சந்தையை இழுத்து மூடியது, கையோடு அமெரிக்காவையும் தொடர்பு கொண்டது. ஆபத்தில் இருக்கிறோம், உதவி தேவை.

சோவியத்திற்கு புரியவில்லை. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டோம்? ஏன் இந்த அநாவசிய பீதியும் குழப்பமும்? உட்கார்ந்து பேசலாம் என்று மட்டுமே சொன்னோம். பிறகு , புரியவைத்தார்கள். உங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து லெனின்கிராட் (தற்போதைய பெயர் சென்ற் பீற்றர்ஸ்பேர்க்) தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. அரசியல் குழப்படியும் பொருளாதாரக் குழப்படியும் அதிகம் இருக்கும் உங்கள் தேசத்தால் உங்கள் எல்லைகளை பாதுகாகமுடியாது. நீங்கள் அவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் எல்லைகள் எதிரிகளால் கைப்பற்றப்படும். இது சோவியத்தில் நலன்களுக்கு அச்சுறுத்தலானது.

நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவொன்றுதான். லெனின்கிறராடில் இருந்து உங்கள் எல்லையை பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள். கடல்புறத்தில் உள்ள சில சிறிய தீவுகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். பதிலுக்கு இதைவிட கூடுதல் நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதல் என்றால் கிட்டத்தட்ட இரட்டிப்பு. தற்போதைய நிலபரப்பைப் போலவே வளமானதாக அந்தப் பிரதேசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறோம்.

இன்னொரு உதவியும் வேண்டும். லெனின்கிராடோடு இணைக்கும் Hangoe அல்லது வேறு ஏதேனும் ஒரு நுழைவாயிலை எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு கொடுங்கள். பாதுகாப்புக்காக கடல்படை தளத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆரம்பத்தில் அதற்கு இணங்குவதை போல் காட்டிக்கொண்டாலும்,  ஃபின்லாந்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளைத்தான் சோவியத் எழுப்பியுள்ளது என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் கஜன்டேர்.

பிறகுதான் பின்வாங்க ஆரம்பித்தது ஃபின்லாந்து. தருகிறோம் ஆனால் இப்போது இல்லை. முப்பது வருடம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் ஒரு சில ஆண்டுகள் போட்டுக்கொள்ளலாம். இரு மடங்கு பிரதேசம் போதாது. கூடுதல் பிரதேசம் தேவை. ஒரு மாதத்திற்கு இழுத்தடித்தார்கள். ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். நியூயோர்க் ரைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. ஃபின்லாந்து சோவியத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காரணம் அமெரிக்காவின் ராஜதந்திரம். சோவியத்தோடு சேராமல் ஃபின்லாந்திடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன.

சோவியத்திற்கு புரிந்துவிட்டது. இனி ஃபின்லாந்து பயன்படாது. எதிரணியில் சிக்கிவிட்டது. சோவியத்தின் யூகம் சரிதான் என்பது நவம்பர் இறுதியில் தெளிவானது.

 

சோவியத் – பின்லாந்து யுத்தம் – Winter war

 

large.Winterkrieg.jpg.1fc487a91c2cea474b66b24f39351885.jpg

நவம்பர் 30,1939 அன்று சோவியத் படைகள் ஃபின்லாந்துக்குள் நுழைந்தன. ஃபின்லாந்து போர்பிரகடனம் செய்தது. பனிக்கால போர் (Winter war) என்று இந்த யுத்தம் அழைக்கபட்டது. இந்த யுத்தம் நடைபெற்ற போது வெப்பநிலை கிட்டத்தட்ட -45 பாகையாக இருந்தது.  

 கையோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவியையும் கோரியது. ஐரோப்பிய நாடுகள் ஃபின்லாந்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சோவியத் செய்தது  தவறுதான். என்ன இருந்தாலும் சிறிய நாடான ஃபின்லாந்தின் மீது  சோவியத் போர் தொடுத்தது முறைகேடான செயல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலை. சோவியத்தால் ஐரோப்பா போர்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்நிய நாடுகள் மீது தலையிடுவதே அதன் வேலையாகப் போய்விட்டது.

லீக் ஒஃவ் நேஷன்ஸ் உடனடியாக சோவியத்தை விலக்கிவைத்தது. ஆச்சரியம் என்று தான் சொல்லவண்டும். செக்கோஸ்லவாக்கியா, போலந்து என்று ஹிட்லர் வரிசையாக ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து வந்த போது சும்மா இருந்த லீக், சோவியத் என்றதும் உடனடி நடவடிக்கை எடுத்தது  விநோதம் தான். ஃபின்லாந்து மீதான சோவியத்தின் தாக்குதல் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளர்கள். சில கருத்துக்கள் பின்லாந்து மீது சோவியத் ஆக்கிரமிப்பு என்றும், வேறு சில கருத்துக்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகையில் சோவியத்யூனியன் தனது எல்லைப்பாதுகாப்பிற்காக எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுகின்றன.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மூன்றும் பெரும்குரல் எழுப்பின. ஐயோ நாம் தான் அப்போதே சொன்னோமே. நாம் பயப்படவேண்டியது ஹிட்லரை பார்த்து அல்ல. ஸ்டாலினை பாரத்துதான். எப்படி நம் கண்முன்பாகவே ஃபின்லாந்தை ஆக்கிரமிக்கிறார்கள் பாருங்கள். கம்யூனிசம் எத்தனை ஆபத்தான சித்தாந்தம் என்று படித்து படித்துச் சொன்னோமே, பார்த்தீர்களா? முதலாளிகள் முதலாளித்துவம் என்று நம்மை திட்டிக்கொண்டிருந்தார்களே, பாருங்கள். சோவியத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இப்படித்தான் இருக்கும். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் சோவியத்தை வீழ்த்துவோம். முதலாளித்துவத்தை செழுமைப்படுத்துவோம்.

சோவியத்தை பொறுத்தவரை அது லெனின்கிராட்டை பாதுகாப்பதற்கான போர். ஆகவே தயங்காமல் முன்னேறினார்கள். முதல் கட்டமாக ஃபின்லாந்தின் ஆர்டிக் துறைமுகம் கைப்பற்றபட்டது. லெனின்கிராட்டை நெருங்குவதற்கான மார்க்கமாக அது அமைந்தது என்பதே காரணம். இதற்கு இரு வாரங்கள் பிடித்தன. இரண்டாம் கட்ட போர், ஆமை வேகத்தில் நடந்தது. கடும் குளிர் தொடங்கியிருந்தது. மூன்றவாவது கட்டம், வான்வழித் தாக்குதல். ஃபின்லாந்தின் ராணுவத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு தாக்கியழிக்கபட்டன. ஆயதத் தொழிற்சாலைகள் ரயில்ப் பாதைகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் ஆகியவை மீது குண்டுகள் வீசப்பட்டன.

large.1280px-A_Finnish_Maxim_M-32_machine_gun_nest_during_the_Winter_War.jpg.cd55e512d37dd753fde3abffb9c0f2c6.jpg

நான்காம் கட்ட போர் ஒரு மாத காலும் நீடித்தது. நோக்கம் Mannerheim Line பகுதியை உடைத்து முன்னேறுவது. ஊடுவல் கடினமானது என்று கருதபட்ட இந்தப் பகுதியில் வரிசை வரிசையாக பாதுகாப்பு கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. இதை அகற்ற முடிவு செய்த சோவியத், பலமான பீரங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது. பாதுகாப்பு அரண்களைத்தான் முதலில் தாக்கினார்கள். அரண்கள் அமைக்கப்படிருந்த அடித்தளம் தகர்க்கப்பட்டது, பிறகு கோட்டை விழுந்தது. மார்ச் 12, 1940 அன்று மாஸ்கோவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஃபின்லாந்துக்கும் சோவியத்திற்கும் இடையில் தூதுவர் போல செயற்பட முடியும். என்று கேட்கப்பட்ட போது பிரிட்டன் மறுத்துவிட்டது. பிரான்ஸுக்கும் விருப்பமில்லை. சோவியத் ஃபின்லாந்தை முடியடித்ததையும், கடினமான பாதுகாப்பு அரண்களை தகர்த்ததையும், இறுதியில் சோவியத்திடம் ஃபின்லாந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதையும் இந்த இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ ஏன் சோவியத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சண்டைக்கு வந்தார் டலாடியர். என்னையும் சாம்பரலைனையும் விட ஸ்டாலின் பலம் வாய்ந்தவரா? ஃபின்லாந்தை காரணமாக வைத்து சோவியத் மீது போர் தொடுக்கவேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கணக்கு போட்டு வைத்திருந்தன. ஆனால், அதற்குள் சோவியத்  போரை முடித்து கொண்டுவிட்டது.

சோவித்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட ஸ்வீடன் ஒப்புக்கொண்டபோது பிரிட்டனும் பிரான்ஸும் முகத்தை சுளித்துக்கொண்டன. சோவியத் Mannerheim Line பகுதியை இணைத்துக்கொண்டது. ஹாங்கோ கைப்பற்றப்பட்டது. அதே சமயம், Petsamo என்னும் பகுதியையும் அதிலுள்ள நிக்கல் சுரங்கதையும் ஃபின்லாந்திடமே திருப்பித் தந்தது.

நவம்பர் 30, 1939 தொடக்கிய போர் மார்ச்13, 1940 ல் முடிவடைந்தது. 20, மார்ச் 1940 மாதம் பிரான்ஸ் பிரதமர் டலாடியர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்தை காப்பாற்ற முடியாததால் எழுந்த கடும் விமர்சனங்களால் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் பவ்ல் ரெனாய்ட் (Paul Reynaud) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சோவியத் லெனின்கிராட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகளை மாத்திரம் தேர்வு செய்து அவற்றை மட்டும் இணைத்துக்கொண்டது. இது ஆக்கிரமிப்பு போர் அல்ல, பாதுகாப்பு போர் தான் என்பதை அழுத்தமான பதிவு செய்தது. ஸ்வீடனின் ஆதரவு இதில் சோவியத்திற்கு கிடைக்காமல் விட்டிருந்தால் பிரிட்டனும் பிரான்ஸும் சோவியத்திற்கு எதிராக போரை தொடுக்க கூடி நிலைமை இருந்தது.

போலந்து பிறகு ஃபின்லாந்து. சோவியத்தின் தொடர் வெற்றி பிரிட்டனையும் பிரா்னஸையும் ஆட்டம் காணச் செய்தது. சோவியத்யூனியனுக்கு இத்தனை பலமா? பொதுவுடமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தொழிற்சங்கம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி. ஃபின்லாந்து கோட்டையை தகர்த்து தவிடுபொடியாக்கும் படியான நவீன பீரங்கிகளை இவர்கள் எப்படிப்பெற்றார்கள். ஐயோ, நாம் நினைத்ததை விட அதிக பலமுள்ள தேசமாக அல்லவா இருக்கிறது சோவியத்யூனியன்? இத்தனை அபாகரமானவரா ஸ்ராலின்?  இது நமக்கு அச்சுறுத்தல் தான்.

சோவியத்தின் வெற்றி ரூமேனியாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு வேளை நம்மிடம் திரும்புவார்களோ? ரூமேனியாவின் அச்சத்திற்கு காரணம் பெஸ்ஸராபியா (Bessarabia) முதல் உலகப் போர் முடிவில், அதாவது 1918 ல், சோவியத்யூனியனிடம் இருந்து பெஸ்ஸராபியாவை கைப்பற்றியிருந்தது ரூமேனியா. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற்று, புதிய சோவியத் அரசை கட்டுமானம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. இனியொரு போர் வேண்டாம் என்று போல்ஷ்விக் கட்சி முடிவு செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூமேனியா பெஸ்ஸராபியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது.

சோவியத்தின் பலம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுவிட்டதால், தன் மீது சோவியத் போர் தொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தது ரூமேனியா. சோவியத் போர் தொடுக்கவில்லை. ஆனால் பேசியது. நீங்கள் செய்தது தவறு. திருப்பிக்கொடுத்துவிடுங்கள். ரஷ்ய கப்பல்கள் Danube பகுதிக்குள் நுழைந்தன.  போர் எதுவும் தேவைப்படவில்லை. ரூமேனியா அடிபணிந்தது. பார்டிக் முதல் கருங்கடல் வரை Hangoe   முதல் Danube வரை எல்லைகளைப் பலப்படுத்தி விட்டாயிற்று. ஸ்ராலின் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

ஹிட்லர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேற்குலக நாடுகளிடம் இருந்து எந்தவித தொந்தரவும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அவர்கள் உதவிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே அபாயம் சோவியத்யூனியன். போலந்து, ஃபின்லாந்து என்று அடுத்தடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டியுள்ளது. ஆரம்பிக்கலாம்.

 

நோர்வே மீது ஹிட்லரின் பார்வை

நோர்வேயை தேர்வு செய்திருந்தார் ஹிட்லர். ஜேர்மனிக்கு பிரிட்டன் வைத்திருந்த செக்மேட் நோர்வே. முதல் உலகப்போர் சமயத்தில் வைத்த செக்மேட் அது. ஜேர்மனியின் தொழில் உற்பத்திக்கு(எனவே ஆயுத உற்பத்திக்கும்) இரும்பு இறக்குமதி அவசியம். ஜேர்மனி தனது இரும்பு தேவைகளுக்கு நோர்வே துறைமுகத்தைத்தான் சார்ந்திருந்தது. வடக்கு ஸ்வீடனில் உள்ள சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படும் இரும்பு நோர்வே துறைமுகம் வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். முதல் உலகப்போருக்கு பிறகு ஜேர்மனியின் இரும்பு போக்குவரதைக் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டன் தனது ராணுவத்தளத்தை நோர்வேயில் அமைந்திருந்தது. நோர்விக் என்னும் துறைமுகத்திற்கு அருகில்.

ஒக்ரோபர் 1939 ல் இது குறித்து ஹிட்லரிடம் தெரிவிக்கபட்டது நோர்வே நமக்கு முக்கியம். ஒரு வேளை பிரிட்டன் கைப்பற்றிவிட்டால் நாம் முடங்கிவிடுவோம். ஆயுதத் தொழிற்சாலை முடங்கிப்போகும். பிரிட்டனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் போர்த் திட்டத்தில்  நோர்வே இருக்கட்டும். அதெற்கென்ன ஆகட்டும் என்றார் ஹிட்லர். திட்டத்தை விரிவாக்குபவர்களை அவர் எப்போதும் கடிந்து கொண்டதில்லை.

பிரிட்டனும் நோர்வே குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் போர் கபினெட்டில் அப்போது புதிதாக இணைந்து கொண்டிருந்த சேர்ச்சில், நோர்வே மீது தீவிர ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். சாம்பர்லைனிடம் விரிவாக பேசினார். நோர்வே நமக்கு அவசியம். நோர்வே துறைமுகத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயம் ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். இதையே சாக்காக வைத்து நோர்வேயை நாம் கைப்பற்றிவிடலாம். என்ன சொல்கின்றீர்கள். பின்னால் இது தான் நடந்தது என்றாலும் அப்போதைக்கு சாம்பர்லைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தயங்கினார்.

ஹிட்லர் இன்னொரு காரியம் செய்தார். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் அமைதி ஒப்பந்தக் கோரிக்கை அனுப்பிப்பார்த்தார். ஒக்ரோபர் 10 ம் திகதி பிரிட்டன் ஜேர்மனியின் அமைதிக் கோரிக்கையை நிராகரித்தது. இரு தினங்களை கழித்து பிரான்ஸும் அதையே செய்தது.

சரி போ என்று விட்டுவிட்டார் ஹிட்லர். திட்டத்ததை முன்னெடுத்து செல்வதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டிசம்பர் 19, 1939 ல் இருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு ராணுவ டிவிசன் போதும் முடித்துவிடலாம் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டனர். பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியம் என்று கணித்தனர். ஒன்று, அச்சமூட்டுவது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும். நோர்வேயை ஆச்சரியத்திலும் ரத்தத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கடிக்கவேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்கிறதே என்று சாம்பரலைன் திரும்பி பார்ப்பதற்குள் இந்த பிரதேசம் ஜேர்மனிக்கு சொந்தமானது என்னும் பலகையை மாட்டி நம் ஆட்களை நிறுத்திவிடவேண்டும்.

இரண்டாவது அம்சம், ராணுவ பலம். நவீன அதிவேக ஜேர்மன் போர்க்கப்பல்களை இந்த தாக்குதலின் போது நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கேற்றாற்போல விரிவாகத் திட்டமிடவேண்டும். துரிதமாக தாக்குதலை ஆரம்பித்து ஒவ்வொரு பிரதேசமாக கைப்பற்றிக்கொண்டே செல்லவேண்டும். சுதாகரிப்பதற்கு அவகாசம் கொடுத்துவிடக்கூடாது. போர்கப்பல்கள் மட்டுல்லாமல், விமானப்படை, ரைஃபிள் பிரிகேட், காலாட்படை அனைத்தும் தயாராகவேண்டும். 

தலைநகரம் ஒஸ்லோவும் அருகிலுள்ள நகரங்களும் பேர்கன், நார்விக், ற்ரொம்ஸோ, ற்ரொன்ட்ஹைம், ஸ்ரவாங்கர்.

(Oslo, Bergen, Narvik, Tromsö, Trondheim, Stavanger) திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஜெனரல் von Falkenhorst என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் முதல் உலகப்போரின்போது ஃபின்லாந்தில் பணியாற்றியவர். பிரதேச முன் அனுபவம் கொண்டவர். திட்டம் முழுமையடைந்ததும் அதற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டப்பட்டது. – Operation Weserübung.

மார்ச் முதலாம் திகதி ஹிட்லர் திட்டத்தை கொஞ்சம் நீடித்தார். எப்படியும் பெரும்படையுடன் போகப்போகிறோம். நோர்வேயுடன் சேர்ந்து கூடவே டென்மார்க்கையும் கைப்பற்றிவிடலாமே!  இப்போது விட்டால் அதற்கென்று தனியே ஒரு நடை போகவேண்டியிருக்கும். இரண்டையும் முடித்து விட்டு வந்தால் ஒரு வேலை தீர்ந்தது. என்ன சொல்கின்றீர்கள்?

டென்மார்க் முக்கியமான பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிய நாடு. ஆனால் ஜேர்மனியின் எல்லையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டுள்ள நாடு. சோவியத் அதன் எல்லைகளை காத்துக்கொண்டதை போல் நாங்களும் எங்கள் எல்லைகளை காத்துக்கொள்ள வேண்டாமா? நாளையே டென்மார்க்கை நுழைவாயிலாகக் கொண்டு சோவியத்தோ பிரிட்டனோ தாக்காது என்று என்ன நிச்சயம்?  அத்துடன் நோர்வே மீதான தாக்குதலுக்கு டென்மார்க் பின்தளமாக பாவிக்க வேண்டிய அவசியம் உண்டு.

மற்றொரு பக்கம், ஜேர்மனி கைப்பற்றுவதற்குள் நாம் நோர்வேயைச் சுற்றி வளைத்து விட வேண்டும் என்னும் நோக்கில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறியது பிரிட்டன். போரில் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து இருந்த நோர்வேயின் நடுநிலைத் தன்மையை முதலில் குலைத்தது பிரிட்டன் தான். பிரிட்டனின் அத்துமீறல் ஹிட்லரை திருப்திப்படுத்தியது. நாளை யாரும் ஜேர்மனியை குறைகூற முடியாது. அப்படி சொல்வதாக இருந்தாலும் பிரிட்டனைத் தான் முதல் ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்கவேண்டியிருக்கும்.

பிரிட்டன் கடற்படை தயாரானது, ஏப்ரல் 8ம் திகதி நோர்வேக்குள் பிரிட்டன் காலடி எடுத்து வைத்தது. ஜேர்மனி வரும் என்று தெரியும். நோர்வேயை கைப்பற்றும் என்றும் தெரியும். அப்படி நடக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் திட்டமிடவில்லை. வீரர்களும் குழம்பி நின்றனர்,

·        பிரிட்டன் வருவதை நோர்வே விரும்பவில்லை, ஜேர்மனி விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். நாம் என்ன செய்யவேண்டும்?

·        ஜேர்மனியை எதிர்த்து போராடவேண்டுமா அல்லது நோர்வேயை எதிர்த்தா?

·        சுரங்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்? அவற்றை கைப்பற்றுவது மட்டும் தான் நம்முடைய பசியா அல்லது நோர்வேயை பாதுகாக்க வேண்டுமா?

 

large.2081539658_imagesNewspaper1.jpg.a8c1f003b4f66f33ad42d289c80800e2.jpg

பிரிட்டன் குழம்பி தவித்த வேளையில் ஜேர்மனி ஏப்ரல் 9, 1940 அதிகாலை வேளை டென்மார்க்கை தாக்கியது. இது இருமுனை தாக்குதல். ஒரு பக்கம், ஜேர்மானிய தூதர் Renthe Fink  டென்மார்க்கில் அயல் துறை அமைச்சரிடம் பேசிக்கொண்டிந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் உங்களைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். உங்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஜேர்மனி முடிவு செய்துள்ளது. எங்கள் படைகள் வந்துகொண்டிருக்கின்றன.(அவர் பேசிக்கொண்டிருந்தபோது, படைகள் உள்ளே நுழைந்துவிட்டன.) எதிர்ப்பு காட்டவேண்டாம். அநாவசியமாக சங்கடப்படவேண்டாம். சரணடைந்துவிடுங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்தால், உங்கள் தலைநகரம் கோப்பன்ஹேகன் மீது குண்டுகள் வீசப்படும். வேறு வழி தெரியவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்றே மிக குறுகிய நேரத்தில் டென்மார்க் சரணடைந்தது. சண்டை சில மணி நேரங்களே நடைபெற்றதால் இழப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.

 

நோர்வே யுத்தம்.

large.Norway-100910-lg.jpg.cc16c0a69851a4ee567ca009b1d36314.jpgஏப்ரல் 8,1940 ல் நோர்வே தாக்குதல் ஆரம்பித்திருந்தது. வான் வழி, தரை வழி, கடல் வழி மூன்றிலும் தாக்குதல் கொடுத்தது ஜேர்மனி. இரண்டு மாதங்கள் நீடித்த இந்த யுத்தம், ஜுன் 10, 1940 ல் முடிவடைந்தது. நேச நாடுகளின் ஆதரவையும் தாண்டி ஜேர்மனி நோர்வேயை முறியடித்து ஆக்கிரமித்தது. டென்மார்க்கைப் போல் அல்லாமல், நோர்வே எதிர்ப்பு யுத்தத்தை இறுதிவரை நடத்திய பிறகே சரணடைந்தது.

வடக்கு பகுதியில் நார்விக் துறைமுகத்திற்காக மிக கடுமையான யுத்தம் நடைபெற்றது. நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ராணுவத்தின் கூட்டு அணி நார்விக் துறைமுகத்திற்காக கடும் சண்டையிட்டது. Battle of Narvik என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த யுத்தம் பல கட்டங்களாக நடைபெற்றது. மே 28 ம் திகதி, ஜேர்மனியை முறியடிக்கவும் செய்தது. ஆனால் ஜுன் 9 ம் திகதி ஜேர்மனி நார்விக்கை மீண்டும் கைப்பற்றியது.

இத்துடன் முடிந்து விடவில்லை. ஸ்வீடனையும் தொட்டுப் பார்த்தது ஜேர்மனி. நார்வே, டென்மார்க் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளை கைப்பற்றிய பிறகு ஸ்வீடனையும் சுற்றி வளைத்தது. ஸ்வீடன் அவர்களுக்கு தேவையில்லை. தேவை ராணுவத் தளபாடங்களையும் துருப்புக்களையும் ஸ்வீடன் வழியாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி மட்டுமே. ஸ்வீடன் நடுநிலை வகித்த நாடு என்பதால் ராணுவ வழிமுறைகள் பிரயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஜுன் 18, 1940 ல் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டார்கள்.

 large.423379140_Germaninfantry.jpg.ed4c602b7539a884ec7cff9e2cb6d81c.jpg

பிரிட்டனில் அரசியல் குழப்பம்

மே 7 மற்றும் மே 8,1940 ல் பிரிட்டன் கொமன்ஸ் சபையில் சூடான விவாதங்கள் நடைபெற்றன. ஆரம்பித்து வைத்தவர் சேர் ரோஜர் கீஸ். அட்மிரல். (Sir Roger Keyes) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.

ராணுவச் சீருடையை நான் இங்கே அணிந்து வந்ததன் காரணம் என் சக ராணுவத்தின் கவலையை  இங்கே தெரியப்படுத்த தான். என் நண்பர்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். கடல்படையை குறை சொல்லமுடியாது. நாங்கள் முழு பலத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை, தலைமையில் தான்.

 

பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகல் – புதிய பிரதமராக சேர்ச்சில்

சாம்பர்லைன் மீது பரவலாக அதிருப்தி பரவியிருந்ததை அனைவரும் அறிவர் என்றாலும் முதல் முதலாக அதை அழுத்தமாக பதிவு செய்தவர் ரோஜர் கீஸ் தான். இவர் அமர்ந்ததும், சாம்பர்லைன் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) சேர்ந்த லியோ அமரி (Leo Amery) எழுந்தார்.

எனக்கு இந்த ஆட்சியில் சிறிதளவும் திருப்தியில்லை. போர் விவகாரங்களை நம் பிரதம மந்திரி நாம் எதிர்பார்த்தவாறு கையாளவில்லை. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய செயல் இது. புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், முதல் உலகப் போரில் பிரதமர் லாயின் ஜோர்ஜ்க்கு கீழ் ராணுவ கபினெட் ஒன்று செயற்பட்டு வந்ததைப் போல் இப்போதும் ஒரு கபினெட் ஆரம்பிக்கவேண்டும். எதிரிகளோடு மோதி அழிக்கும் வலுவும் தீரமும் கொண்டவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வெற்றிமீது தீரா காதல் கொண்ட ஒருவர் நமக்கு தேவை.

இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தையும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்டார்.

உருப்படியாக ஒன்றையும் செய்யாமல் மிக நீண்ட காலமாக இங்கே அமர்ந்திருக்கிறாய். உடனே வெளியேறு. கடவுளின் பெயரால் சொல்கிறேன் வெளியேறு.

மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் (லேபர் கட்சி) ஹெர்பேர்ட் மாரிஸன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார்.

ஓ செய்யலாம், வாக்கெடுப்பு நடத்தினால்தான் எனக்கு இங்கே எத்தனை நண்பர்கள் என்று தெரியவரும். நான் தயார் என்னை என் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர் சாம்பர்லைன். நிச்சயம் நான் இல்லை என்று தன் கையை உயர்த்தினார் கன்சர்வேடிவ் உறுப்பினர் ராபேர்ட் பூத்பை.

முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமர் லாயிட் ஜோர்ஜ் எழுந்தார்.

நம் பிரதமருக்கு நண்பர்கள் யார் என்பது இங்கே முக்கியமல்ல. அது பிரச்சனையும் அல்ல. தேசம் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று சாம்பர்லைன் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். தியாகம் செய்ய இந்த தேசம் தயாராக இருக்கிறது அதற்கான ஒரு தலைமை உருவானால். என் விண்ணப்பம் இது தான். நம் பிரதமர் முதலில் தன் பதவியை தியாகம் செய்யட்டும்.

இறுதியாக சேர்ச்சில் பேசினார்.

சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும்.

large.1362078482_ChamperleinandChurchill.jpg.29478516807e9039860f88e1c35d9a61.jpg

விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாம்பர்லைன் தோற்றுப்போனார். மே 10 ம் திகதி சாம்பர்லைன் தனது பதவியை துறந்தார். சேர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.(கன்சர்வேடிவ் கட்சி தலைவராக சாம்பர்லைன் நீடித்தார்) கன்சர்வேடிவ்க் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து புதிய கூட்டணியை உருவாக்கினார் சேர்ச்சில்.

நோர்வே டிபேட் அல்லது நார்விக் டிபேட் என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது. ஃபின்லாந்து தாக்குதலின் போதும் சரி, நோர்வே தாக்குதலிலும் சரி பிரிட்டன் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஜேர்மனியை வளரவிட்டது தவறு போன்ற குற்றச்சாட்டுகள் சாம்பர்லைன் மீது சுமத்தப்பட்டன. அதன் விளைவு தான் இந்த சூடான விவாதம். சாம்பர்லைனை ஆதரித்த பலரே அவருக்கு எதிராக திரும்பினர். சாம்பர்லைனின் அரசியல் அணுகுமுறையை தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த சேர்ச்சில், இந்த முறையும் தன் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சோவியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான போரின் போது ஃபிரெஞ்சு பிரதமர் டிலாயர் பதவி விலகியதை போலவே ஜேர்மனி நோர்வே போரின் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகவேண்டிவந்தது.

(தொடரும்)

 

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி Tulpen 
யுத்த வெற்றி  என்பது பல தோல்விகளால் கட்டி எழுப்பப்படுகிறது. முதலில் நல்ல தலைமை தேவை, பின் எமது எதிர்ப்புகளை எமக்கிடையே இல்லாமல் எதிரியிடம்  ஓன்று சேர காட்டுவோம் இந்த வாசகம் எமக்கும் பொருந்தும்.

"இறுதியாக சேர்ச்சில் பேசினார்.

சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.